இடுகைகள்

நுரையீரல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்! - இரையைக் கொல்லும் நேரத்தில் நுரையீரலுக்கு கிடைக்கும் பிராணவாயு!

படம்
  மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்! மலைப்பாம்பு இரையை சாப்பிடும் முறையை அறிந்திருப்பீர்கள். இரையை முழுக்க சுற்றி அதன் எலும்புகளை நொறுக்கி மெல்ல அதனைக் கொன்று உணவாக்கிக்கொள்கிறது. இப்படிக் கொல்லும்போது, இரையின் மீது அழுத்தம் செலுத்துவதோடு, தனது நுரையீரலுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. மலைப்பாம்பு  நுரையீரல் அழுத்தப்படும் நிலையில் எப்படி சுவாசிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.  மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது மார்பு, வயிற்றுக்கு இடையில் உள்ள உதரவிதான தசையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக நீளமான மார்பு பகுதியில் உள்ள தசைகளை சுவாசிக்க பயன்படுத்துகிறது. இரையைக் கொல்லும் செயல்பாட்டில் மலைப்பாம்பின் உடலிலுள்ள இத்தசைகள் இயங்க முடியுமா என ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. தற்போது இதுபற்றிய ஆராய்ச்சி அறிக்கையை ப்ரௌன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜான் கபானோ கண்டறிந்துள்ளார்.  மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது சுவாசிப்பதற்கான காற்றை மார்புத் தசைகளில் இறுக்கமற்றதை தனியாக அசைத்து காற்றை உள்ளிழுக்கின்றன. இப்படி இழுக்கும் காற்று இரையை சுற்றி வளைக்கும் உடல் பகுதிகளுக்கும் சீராக செல்கின்றன. “பாம்

ஒவ்வாமையோடு வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள்- பொருட்களை வாங்கும்போது கவனிங்க!

படம்
              கவனம் கொள்ளாத வேறு சில ஆபத்துகள்! தாலேட்டுகளைப் பற்றி என்னென்ன ஆபத்துகள் என்று பார்த்தோம். அது மட்டும்தானா என்றால் கிடையாது. இது மலையாளப் படம் போல, ஒரே படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் குணச்சித்திர பாத்திரத்தில் நடிப்பார்கள். அதேபோல நிறைய வேதிப்பொருட்கள் உடலை பாதிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். அசிடோன் மூச்சுக்குழல், ரத்தம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், தோல், மூளை, நரம்பியல் அமைப்பு என பாகுபாடில்லாம் நிறைய உறுப்புகளை பாதிக்கிறது. இங்கு குறிப்பிட்ட உறுப்புகள் குறைவுதான். அசிடோன் உள்ளே போகும்போது, உடலிலுள்ள நிறைய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பியூடேன், ஐசோபியூடேன் எடை குறைவான திரவம்தான். ஆனால் மூளையையும், நரம்பு அமைப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது. உடலில் நடக்கும் வேதிவினைகளை மூளைதான் தீர்மானிக்கிறது. அதுவே சீர்குலையும்போது, உடல் தடுமாறி தளரும். திர்வ பெட்ரோலியம். ஏர் ஃப்ரெஷ்னர் வகைகளில், திரவ பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். வண்டிக்கு போடுவதை உடலுக்குள் அனுப்பினால் உறுப்புகள் மைலேஜ் காட்டுமோ என நினைக்காதீர்கள். எல்லாம

காற்றில் மிதக்கும் மகரந்தத்தால் ஏற்படும் ஒவ்வாமை!

படம்
  மகரந்தத்தின் ஆபத்து ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் தாவரங்களின் மகரந்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மகரந்தம் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் ஆகியவற்றுடன் இணைந்து மக்களை பாதிக்கிறது. இது குறிப்பிட்ட பருவத்தில்தான் மக்களை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்கும். பொதுவாக ஒரு பொருளிலுள்ள புரதம்தான் ஒவ்வாமைக்கு முக்கியமான காரணமாக இருக்கும்.  கிராமங்களில்தான் அதிகளவு தாவரங்கள், மரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், நகரத்தினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நகர்ப்புறங்களில் பசுமைப்பரப்பு குறைந்துபோனதும், மாசுபாடு அதிகரித்து வருவதும்தான்.  இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான். சுற்றுப்புறத்தையும் உங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அவ்வளவேதான். மரங்களிலிருந்து மகரந்தம் உருவாகி ஒருவரைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஆப்பிள், பேரிக்காய் செர்ரி, பெர்ரி போன்றவை கூட ஒவ்வாமையைக் கூட்ட வாய்ப்புள்ளது. எனவே இவற்றிலிருந்து சற்றுதள்ளி இ

நுரையீரலும் எலும்பும் உடலுக்கு செய்யும் பணிகள் என்ன?

படம்
            மூச்சு அமைப்புகள் காற்றிலுள்ள வாயுக்களை சுத்திகரித்து ரத்தத்தில் தூய ஆக்சிஜனை சேர்க்க உதவுகிறது . இந்த அமைப்பு இல்லாதபோது , ஒருவர் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு் போராடும் நிலை ஏற்படும் . பிறந்த குழந்தை பத்தாவது நொடியில் பூமியில் முதல் மூச்சை இழுக்கத் தொடங்குகிறது . கருப்பையில் இருந்த திரவங்கள் மெல்ல வெளியேற்றப்பட காற்று நுரையீரலில் நிரம்புகிறது . இனிமேல் அந்த குழந்தை வளர்ந்து முதியவராக இறக்கும் வரை நுரையீரல் ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்த்தும் , கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியும் வேலை செய்யும் . இந்த வேலை எப்போதும் நிற்காது . ஒரு நிமிடத்திற்கு இருபது முறை என எண்ணற்ற முறை நுரையீரல் துடிக்கிறது . ஆறு நிமிடங்கள் உடலுக்கு ஆக்சிஜன் போகவில்லையென்றால் உடனே செல்களில் உள்ள நச்சு உடலில் பரவுகிறது . மூளை மற்றும் இதயம் மெல்ல செயலிழக்கத் தொடங்குகிறது . உடலில் நடைபெறும் மூச்சு தொடர்பான பணிகள் அனைத்துமே மூளையால் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகிறது . அதேசமயம் , மூச்சை செய்யும் வேலைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும் . நீச்சலடிக்கும்போது இதனை ஒருவர்

உடற்பயிற்சி எதற்காக?- இதயம், நுரையீரல் செயல்பாடுகளை அறிவோம்.

படம்
                உடலை எப்படி அசைக்க முடிகிறது ? உடலிலுள்ள தசைகள் ஒன்றாக இயங்கினால் மட்டுமே நமது கைகால்களை அசைத்து நகர முடியும் . தசைகள் உள்ளிழுக்கப்படும் தன்மை கொண்டவை . வெளித்தள்ளும் திறன் இல்லாதவை . தசைகள் இழுக்கப்படும்போது உடல் உறுப்பு குறிப்பிட்ட திசையில் நகரும் . இன்னொரு தசை உள்ளிழுக்கப்படும்போது இன்னொரு திசையில் உறுப்புகள் நகரும் . தசைகள் குழுவாக இயங்குவதால் நாம் உடலை அனைத்து திசைகளிலும் நகர்த்திக்கொள்ள முடியும் . வளைக்கலாம் நேராக்கலாம் . முழங்கையின் முன்பகுதி உயர்ம் குறைவாக இருக்கும் பின்பகுதி பைசெப்ஸ் அமைந்துள்ளது . பைசெப்ஸ் தசைகளை ட்ரைசெப்ஸ் தளர்த்துகிறது . முழங்கையை எளிதாக மடக்கும் இணைப்பு எலும்புகளும் இங்குள்ளன . இதனை தெளிவாக பார்க்க கைகளின் அமைப்பு அல்லது பாடி பில்டர்களின் கைகளைப் பார்க்கலாம் . உடற்பயிற்சி காரணமாக அவர்களின் தசை அமைப்புகள் தனியாக தெளிவாக தெரியும் . எதற்காக உடற்பயிற்சி ? உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகள் பெரிதாகவும் வலிமையாகவும் உருவாகும் . புதிய தசை நார்கள் உருவாகும் . எனவே தினசரி நீங்கள் செய்யும் வேலைகளைப் பொறுத்து இருப

இந்தியா மேலும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்!

படம்
பூனம் கேத்ரபால் சிங், உலக சுகாதார நிறுவனம் (கிழக்கு ஆசியா இயக்குநர்) இந்தியாவில் இரண்டுபேர் கோவிட் 19 பாதிப்பால் இறந்துள்ளனர். இதுபற்றி உங்களது கருத்து என்ன? இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இருவரை பலி வாங்கியுள்ளது. பொதுவாகவே வயதான ஆட்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும்  கோவிட் -19 பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு இன்று உலகில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் அதிகம். மத்திய அரசு கோவிட் 19 யை தேசியப் பேரிடர் என்று அறிவித்து, பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடை செய்துள்ளது நோயின் பரவலைத் தடுக்கும். இது நல்ல முயற்சி என்பேன். புதிதாக நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும்? சமூகத்திலிருந்து இனி மக்கள் கொஞ்ச காலத்திற்கு விலகி இருக்கவேண்டும். நுரையீரலை இந்த வைரஸ் பாதிப்பதால், சளி, தும்மல் மூலம் கொரோனா பிறருக்கு எளிதாக பரவும். எனவே மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில்  கூடுவதைத் தவிர்த்தாலே பிரச்னை கிடையாது. வைரஸ் எளிதாக பரவுவதையும் தடுக்க முடியும். உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு நாடுகளுக