இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வழுக்கையால் அவமானமா? பாலா சொல்லும் பாடம் அதிரடி!

படம்
பாலா இயக்கம் - அமர் கௌசிக் கதை - நீரன் பட், பாவெல் பட்டாச்சார்ஜி இசை சச்சின் ஜிகார், பிராக், ஜானி ஒளிப்பதிவு அனுஜ் ராகேஷ் தவான் இளம் வயதிலிருந்து ஷாருக்கான் ரசிகராக உள்ளவனுக்கு இருபத்தைந்து வயதில் முடியெல்லாம் கொட்டி வழுக்கையாக மாறினால் என்னாகும்? அதேதான். அவமானம், வேலையில் பதவியுயர்வு சிக்கல், குடும்ப உறவுகளிலும் விரிசல். அத்தனையையும் கடந்து அவன் எழுந்து நிற்பதுதான் கதை. அதாவது தன் குறையை தானே உணர்ந்து ஏற்கிறான். பிளஸ் இதுபோன்ற ஸ்கிரிப்டை செலக்ட் செய்து நடித்த ஆயுஷ்மான் குரானா. பிரமாதமாக நடித்திருக்கிறார் என்பதை விட கதையை புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். படம் பார்த்த நண்பர், இறுதியில் தன் விக்கை கழற்றி கண்களைத் துடைக்கும்போது அவரின் கண்களும் கலங்கிவிட்டது. அந்தளவு பார்வையாளர்களை தன் நடிப்போடு இணைய வைத்துவிடுகிறார். பூமி பட்னாகரும் கருப்பு கலரில் சில காட்சிகளில் அய்யே சொல்ல வைத்தாலும் நடிப்பில் திடமாக காலூன்றி நிற்கிறார். மைனஸ் டிக் டொக் பெண்ணாக வரும் யாமி கௌதம். அவரின் குணம், எதிர்பார்ப்பு என்பதை ஆயுஷ்மான் புரிந்துகொண்டாலும் அவர் ஆயுஷ்மானை பிரியும் முட

ரத்தம் தெறிக்கும் புல்லட் பறக்கும் ஆக்சன் ! - வார் படம் எப்படி?

படம்
வார் இயக்கம் - சித்தார்த் ஆனந்த் ஒளிப்பதிவு - பெஞ்சமின் ஜாஸ்பர் இசை - விஷால் - சேகர் பின்னணி - பல்காரா சகோதரர்கள் தேசபக்தி படம். ராணுவ உளவுத்துறையில் பணியாற்றும் கபீர். தனது வேலைக்காக தன்னையே தியாகம் செய்யத் தயங்காதாவர். ஆனால் அவரால் இலியாசி, ஹக்கானி எனும் தீவிரவாதிகளை மட்டும் பிடிக்க முடியவில்லை. உள்ளே இருந்து காட்டிக்கொடுக்கும் துரோகிகள் யாரென்று அவருக்கு தெரியவில்லை. அப்போது பார்த்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவரின் மகன் காலித் அவரின் டீமில் சேர வருகிறார். அவரை சேர்த்துக்கொள்ள கபீர் மறுக்கிறார். அதற்கு என்ன காரணம், இருவரும் இணைந்து தீவிரவாதிகளை புரட்டி எடுத்தார்களா? துரோகி யார்? என்பதைத்தான் படம் பல்வேறு நாடுகளுக்கு பரபரவென சென்ற சேசிங் செய்து சொல்லியிருக்கிறது. தேறியது கட்டுடல் மன்னன் ரோஷன், அதற்கு சளைக்காத டைகர் ஷெரஃப். மற்றபடி பிற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. காதலித்தவன் தன்னை பயன்படுத்திக்கொள்கிறான் என்று தெரிந்தவுடன் வாணி கபூர் சிந்தும் கண்ணீர்த்துளிக்காக அவர் நடிக்கிறார் என்பதை ஏற்கலாம்.  பின்னணியும், பாடல்களும் பரவாயில்லை. சிவசங்கர

கண்களை நீலநிற ஒளி பாதிக்கிறதா?

மிஸ்டர் ரோனி நீல நிற ஒளி தூக்கமின்மைக்கு காரணமா? இன்று போன், கணினி என பல்வேறு டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில்தான் படிக்கிறோம். சிரிக்கிறோம். சம்சாரிக்கிறோம். இதன் பாதிப்புகள் பார்வை இழப்பு, தூக்கமின்மை என்று கூறுகிறார்கள். உண்மையா? நிச்சயம் இல்லை. எலிகளிடம் இதுபற்றி சோதனை நடத்தப்பட்டது. அதிக செறிவிலான நீலநிற ஒளிக்கதிர்கள் அவற்றின் பார்வைத்திறனை பாதித்த து உண்மைதான். ஆனால் மனிதர்களின் விஷயத்தில் இது மாறுபட்டது. உண்மையில் சூரியனிலிருந்து வெளிவரும் நீலநிற ஒளி என்பது மிக அதிகம். அதை எப்போதேனும் பார்த்திருப்பீர்கள். அதைவிட கணினி, டேப்லட், ஸ்மார்ட்போன் ஆகியவை குறைவான ஒளியைக் கொண்டவை.அவை எப்படி உங்கள் பார்வையைப் பாதிக்கும்? இதன் பொருள் அவை பாதிக்காது என்பதல்ல. அதன் அலைநீளம் இதில் முக்கியமானது. கண்களிலுள்ள அமைப்பு இயல்பாகவே நீலநிறத்தை தடுக்கும் திறன் கொண்டது. குளிர்கண்ணாடிகள் கண்களின் பாதிப்பைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். கண்களிலுள்ள ஆர்பிசிசி எனும் செல்கள் கணினியிலுள்ள நீலநிற ஒளியைப் பார்த்து விழித்திருக்கலாம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கிறது. இதனால்தான

ஓகே பூமர் சொல்லலாமா? - பெருசுக்கும் சிறுசுக்கும் லடாய் மூளுகிறது!

படம்
தொண்ணூறுகளுக்குப்பிறகு பிறந்தவர்களுக்கும், அறுபதுகளில், எண்பதுகளில் பிறந்தவர்களுக்கும் சண்டை தொடங்கிவிட்டது. இப்பிரச்னை தலைமுறை சிக்கலாக குடும்பங்களில் முன்னர் இருந்து வந்தது. இன்று தெருவுக்கும் வந்துவிட்டது. சிறிய வார்த்தைதான். ஓகே பூமர் என்ற வார்த்தை நேரடியாக அனைத்து வயதானவர்களுக்கும் எதிராக சொல்லப்பட்டு வருகிறது. பேபி பூமர்கள் இப்படி வார்த்தை ஆயுதம் எடுத்ததால், வயதான ஆட்கள் என்ன சொல்வதென்று பதறி நழுவி வருகிறார்கள். உங்களுக்கு வயசாச்சு என்று கூறுவதை இப்படி சொல்லுகிறார்கள் என மூத்த தலைமுறைக்கும் , நவீன தலைமுறைக்கும் லடாய் நீடிக்கிறது. பொதுஇடங்களில் டிவிகளில் சொல்வது வேறு. அதுவும் ஆபீஸ்களில் சொல்லிவிட்டால் என்னாவது? அண்மையில் நியூசிலாந்து சட்ட வல்லுநர் சூழல் வெப்பமயமாதல் பற்றி மசோதா பற்றி பேசத் தொடங்கினார். ஆனால் அவரது வாதத்தை மூத்த அதிகாரி இடைமறித்து பேசினார். உடனே ஆவேசமான இளையவர் ஓகே பூமர் சொல்லிப்பேச சங்கடம் உருவானது. ஓகே பூமர் என்ற சொல்லைப் பேசினால் சட்டப்படி குற்றம் என்று இன்னும் அரசு கூறவில்லை. வயது ரீதியான தீண்டாமை என்பதைத் தடுக்க வெளிநாடுகளில் சட்டம் உள்ளது. இ

கற்பனையான நண்பர் ஆபத்தை ஏற்படுத்துவாரா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி என் மகன் கற்பனையாக ஓர் நண்பனை உருவாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறான். இது ஆபத்தானதா? அவன் சிறுவனாக இருக்கும்வரையில் அப்படி விளையாடுவது எந்த ஆபத்தையும் தராது. தனக்கான நண்பராக ஒருவரை கற்பனை செய்து விளையாடுவது சிறுவயதில் அவனின் மொழிவளர்ச்சிக்கு உதவும். அதனால் இம்முயற்சிகளை தடுக்காதீர்கள். அதேசமயம் இதே தன்மை வளர்ந்து வரும்போது குறையும். குறைய வேண்டும். அப்படி இல்லாதபோது நீங்கள் கவனிப்பது அவசியம். மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் பெறுமளவு இது முக்கியமான விஷயம் அல்ல. நன்றி - பிபிசி 

ராமர் கோவிலை கட்டுவதே எங்கள் லட்சியம்!

படம்
நேர்காணல் ரகுபர் தாஸ், ஜார்க்கண்ட் முதல்வர் ராமர் கோவில் கட்டுவதைப் பற்றிய அறிவிப்பை தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசுவாரா? ஏன் கூடாது? ராமர் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கிறார். அயோத்யாவில் வந்த தீர்ப்பை இரு மத த்தினருமே ஏற்றுக்கொண்டனர். பின் ராமர் கோவில் கட்டுவதில் என்ன பிரச்னை இருக்கமுடியும்? தேர்தல் பிரசாரத்திலும் அதைப்பற்றி பேசுவதில் பெரிய மாற்றம் இல்லை. இனி நடக்கும் சம்பவங்களில் ராமர் கோவிலின் தாக்கம் நிறையவே இருக்கும். மாவோயிஸ்டுகளை முற்றிலும் அழிப்பதாக கூறினீர்கள். ஆனால் கடந்த வாரம் கூட அவர்கள் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்களே? எங்களுடைய அரசு மட்டுமே இங்கு அமைந்த வலுவான முதல் அரசு, மாவோயிச தீவிரவாதிகளை அழிப்பதற்கான திட்டங்களை தீட்டி செயற்படுத்தி வருகிறோம். அதில் முற்றிலும் வெற்றி பெறவில்லை. இதற்கு முன்பு இருந்த அரசில், தினசரி நாளிதழ்களில் ஊழல், தீவிரவாதம் பற்றி மட்டுமே செய்தி வந்துகொண்டிருந்தது. இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. எதிர்கட்சிகள் உங்கள் அரசு மீது காடுகள் பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்தல் சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளதாக குற்றம் சாட்டுகிறா

சுகானுபவமான கொலைகள்! - எட்மண்ட் கெம்பரின் கதை!

படம்
எட்மண்ட் கெம்பர் 3 1970களில் பிரபலமாக இருந்த கெம்பருக்கு இன்னொரு பெயர் கோ -எட் கில்லர். கலிஃபோர்னியாவின் பண்ணை வீட்டில் இருந்த தாத்தா பாட்டியை போட்டுத்தள்ளி தன் கொலைவரிசையை தொடங்கினார். ஒன்பது பெண்களை சிறப்பான முறையில் தீர்த்துக்கட்டினார். பின் அவரது பார்வை அவரது அம்மா, நண்பர்கள் பக்கம் திரும்பியது. வாஸ்தவம்தானே தேடிப்போய் கொல்வதை விட அருகிலேயே இருப்பவர்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறார்கள் என்று நினைத்து அவர்களின் மூச்சை நிறுத்தினார். 1948ஆம்ஆண்டு டிச. 18 அன்று, கலிஃபோர்னியாவில் பர்பேங்க் நகரில் பிறந்தார் கெம்பர்.  பிற சீரியல் கொலைகார ர்களை விட புத்திசாலி. ஐக்யூ டெஸ்டில் 136 புள்ளிகள் பெற்றவர். புத்தி கூர்மையாக இருந்தால் துடிப்பும் வேகமும் அதிகமாக இருக்குமே? ஆம் அப்படித்தான் இருந்தார். அறிவுக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பாலியல் உணர்வும் திறனும் சூட்டிப்பாக இருக்கும். கெம்பர் தன் சகோதரிகளின் பொம்மைகளை எடுத்து பாலியல் திருவிழாக்களையே கொண்டாடி வந்தார். கைக்கு சிக்கிய விலங்குகளை அடித்து துவைத்து இடியாப்பமாக்கினார். மேலும் பள்ளி ஆசிரியை மீது காதல் பொங்கியது. அதிரடியாக ஒரே வார்த்

சீனியர்களுக்கான டேட்டிங் ஆப்ஸ்! - காலம் கடந்துபோன 50 பிளஸ்!

படம்
giphy.com காதல் யாருக்குத்தான் வராது? ஆனால் அப்போதுதான் நாம் பிசியான கம்ப்யூட்டரைத் தட்டிக்கொண்டு இருப்போம். காதல் அப்படியே காற்றில் கற்பூரமாக கரைந்துபோயிருக்கும். அப்புறம்  ஜி. சுரேந்தர்நாத் எழுதிய விகடன் கதையைப் போல, நினைத்துப் பார்த்து படித்துப்பார்த்து கண்ணீர் சிந்த வேண்டியதுதான். இன்று மளிகைக்கடை முதல் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டன. அப்புறம் என்ன காதலையும் தள்ளு தள்ளு என்று தள்ளி இணையத்தில் ஏற்ற வேண்டியதுதானே.. ஏற்றி விட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் சீனியர்களுக்கானது. ஆம் 50 பிளஸ் ஆட்களுக்கான ஆப்கள் இது. இதில் அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்வு செய்து பேசலாம். மணம் செய்யலாம். அதற்குப்பிறகு கிடைக்கும் சாத்தியங்களைப் பொறுத்து ஏதாவது முயற்சிக்கலாம். ஆப்களை பார்த்துவிடுவோமா? லூமன் - LUMEN இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லி லெஸ்டர் என்பவர் உருவாக்கிய ஆப் இது. 2018இல் ஆழ்ந்து யோசித்து லூமன் என்ற ஆப்பை உருவாக்கினார். FINALLY ஜெர்மன்கார ர்கள் இயந்திரங்களை மட்டும்தான் செய்வார்களா? காதலையும் செய்வார்கள் என்பதற்கு இந்த ஆப் சாட்சி. ஜாமோ என்பவர் 2017இல் இந்த ஆப்ப

நேர்மையான அதிகாரிகளை பறையர்களைப் போல நடத்துகிறது இந்திய அரசு!

படம்
நேர்காணல் தினேஷ் தாக்கூர் அமெரிக்காவில் ரான்பாக்சி மீது குற்றச்சாட்டு எழுப்பி அதனை அபராதம் கட்ட வைத்திருக்கிறீர்கள். இந்தியாவில் இது சாத்தியம் என நினைக்கிறீர்களா? அமெரிக்காவில் உள்ளது போன்ற சட்டங்கள் இந்தியாவில் இருந்தால் சாத்தியமாகலாம். இடுப்பெலும்பு மாற்று சாதனங்களை தரம் குறைந்து ரான்பாக்சி தயாரித்து விற்றது. இது காசு கொடுத்து வாங்கும் மக்களை ஏமாற்றுவதல்லவா? அதற்காகத்தான் நான் அந்த நிறுவனத்தை குற்றம் சாட்டினேன். அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு சட்டங்கள் பற்றி பேசுவது ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசுவது போல. ரான்பாக்சியின் ஊழியர் என்ற லேபிளில் இருந்துகொண்டு எப்படி குற்றச்சாட்டுகளை சுமத்தினீர்கள். அரசின் சட்டப்பாதுகாப்பு எனக்கு கிடைத்தது. குற்றச்சாட்டை எழுப்பியவர் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. அதனால்தான் என்னால் சுதந்திரமாக சில விஷயங்களை பேச முடிந்தது. இந்தியாவில் புகார் கொடுப்பவர்களை காப்பாற்றுவார்கள் என நினைக்கிறீர்களா? அசோக் கெம்கா என்ற ஐஏஎஸ் அதிகாரி (ஹரியானா), உத்தர்காண்டைச் சேர்ந்த சஞ்சய் சதுர்வேதி என்ற அதிகாரிகளை இந்திய அரசு, பறையர்

தவறுகளை தட்டிக்கேட்போம்! -ரான்பாக்சி முதல் இன்போசிஸ் வரை

படம்
இன்போசிஸ் நிறுவனம் அண்மையில் தவறான வணிக நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. இக்குற்றச்சாட்டை முனவைத்தவர் பற்றி பலரும் மறந்திருப்பார்கள். இவர்கள் மீதும் இவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மீண்டிருப்பதோடு பல்வேறு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை இவர்கள் வெளிக்கொண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது பங்குச்சந்தையை முறைப்படுத்தும் செபி, நிறுவனங்களின் தவறான நடவடிக்கையைத் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிலான பரிசை வழங்குகிறது. தவறுகளை வெளிப்படுத்துவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அவர்களின் புகைப்படம், முகவரி ஆகியற்றை ரகசியமாக பாதுகாக்கின்றனர். 2014ஆம் ஆண்டு இதுபோல தவறுகளை கண்டுபிடித்து கூறுகிறவர்களை பாதுகாக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. நிறுவனங்களின் விதிமீறல்களை அரசுக்கு சொல்வது, அமெரிக்காவில் பராக் ஒபாமாவின் ஆட்சியில் 2008ஆம்ஆண்டுதான் தொடங்கியது.அப்போது பொருளாதார சிக்கல்கள் தொடங்கியிருந்தன. எனவே பங்குச்சந்தையைக் காப்பாற்றவே அரசு, வ

மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வளர்ப்பு பிராணிகள்!

படம்
மிஸ்டர் ரோனி நாய், பூனை ஆகியவை உணவுக்காகத்தான் நம்மை சார்ந்துள்ளதா? மனிதர்கள் நாய், பூனைகள் வாழ்வதற்கான இடங்களை அழித்துவிட்டார்கள். பின் அவை எங்கே ஏர்பிஎன்பியில் அறை புக் செய்தா வாழ முடியும்? எனவே அவை மனிதர்களை தாஜா செய்தே சந்தோஷமாக வாழ்கின்றன. இயல்பாகவே வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பவர்கள் மனிதர்கள் மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த வகையில் முதியவர்களுக்கும் சிறிதேனும் வாழ்வு மீது நம்பிக்கை இருக்க வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை ஆகியவை உதவுகின்றன. காவல், பூனையைத்துரத்த என்பதெல்லாம் மாறி அதிக காலமாகிவிட்டது. இன்று நாய்களை தன் நண்பர்கள் போலவே மனிதர்கள் கருதுகிறார்கள். பரிவோடு நடத்துகிறார்கள். இவை மனிதர்களுக்கு மிகச்சிறந்த நண்பன் என்பதோடு, அடிமையாகவும் இருப்பதால் எதையாவது கட்டுப்படுத்த நினைக்கும் மனிதர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதனால் அவர்களின் மன அழுத்தம் குறைகிறது. இந்த தன்மை அவர்களின் வாழ்நாளை அதிகரிக்கவும் உதவும் என்கிறது மேற்குலகின் ஆராய்ச்சி. இயற்கையில் எதையும் தனியுடையாக பார்க்காதீர்கள். இயற்கையிலிருந்து நம்முடைய திறன் மூலம் உணவைப் பெற்றாலும் பகிர

வேலையின்மை சதவீதம் குறைந்துள்ளதா?

படம்
வேலையில்லாதவர்களின் சதவீதம் குறைவு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 9.9 சதவீதம் இருந்த வேலையின்மையின் அளவு 9.3 சதவீதமாக குறைந்துள்ளது. மார்ச் 23.7 லிருந்து 22. 5 சதவீதமாக மாறியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை புள்ளியல் துறை வெளியிட்டுள்ளது. 46.8 சதவீதத்திலிருந்து 46.5 சதவீதமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மாறியுள்ளது. மேலும் இதில் பெண்களின் பங்கும் மிகவும் குறைந்துள்ளது. நகரில் வாழும் 57.5 சதவீதம் பேர் உணவு, சுகாதாரம், நீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் கிராம ப்புறங்களில் இன்றும் 27 சதவீதப்பேருக்கு மட்டுமே இந்த வசதிகள் சென்று சேர்ந்துள்ளன. கல்வி எத்தனை பேருக்கு சென்று சேர்ந்திருக்கிறது? கிராமப்புறங்களில் 73.5 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறங்களில் 87 சதவீதம் பேருக்கும் கல்வியறிவு கிடைத்துள்ளது. நகரங்களில் சுகாதாரச்செலவு தோராயமாக குழந்தை பிறப்பு உட்பட 26,475 எனில், கிராமங்களில் 16, 676 ரூபாய் எனுமளவில் உள்ளது. நன்றி - இடி மேகசின்

கருணையற்ற கொலைகாரன் - பிடிகே

படம்
பள்ளியில் படித்தபோது மிகச்சிறப்பான மாணவர் அல்ல. சுமாராக திரியும் கூட்டத்தில் ஓர் மாணவர் மட்டுமே. பின் கல்லூரியிலும் பெரியளவு பெயர் பெறவில்லை. நாம் எல்லோரும் அப்படித்தான் கடந்து வந்திருப்போம். டென்னிஸ் ரேடாரும் அப்படித்தான் வளர்ந்தார். படித்தார். அவர் 30 ஆண்டுகளாக மறைத்து வந்த ரகசியம் ஒன்று உண்டு. அதுதான் அவர் சீரியல் கொலைகாரன் என்பது. அதனை அவர் தன் மனைவியிடம் கூட வெளிப்படித்தியிருக்கவில்லை. அதற்கான அறிகுறிகளைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. மதிப்பான மனிதர்கள், குடும்பம் இருந்தது. பள்ளி ஸ்கவுட் குழுவில் இடம்பெற்றவர், பின்னர், தேவாலய பிரார்த்தனை குழுவின் தலைவராக இருந்தார். விபத்து, கொலை பற்றிய செய்திகளை கேட்டாலே பதறி வேறுபுறம் செல்பவர் பத்து பேர்களுக்கும் மேற்பட்டவர்களை கொன்று புதைத்தார் என்றால் நம்புவீர்களா? டென்னிஸ் ரேடார் பிடிபட்டபோது, அவரது குடும்பம் பதறியது. அவரது மகள் எனக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுத்தவர் இப்படி செய்திருப்பாரா என்று கேட்டார். பின்னர் போலீஸ் எடுத்துச் சொல்லியதும்,  எனது தந்தை தவறான விஷயங்களிலிருந்து சரியான விஷயங்களுக்கு வழிகாட்டி உள்ளார் என்று கூறி பே

ஆர்சிஇபி ஒப்பந்தம் மூலம் என்ன துறைகள் பாதிக்கப்படும்?

படம்
ஆர்சிஇபி ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கின்றன. அவற்றும் முக்கியமான பொருட்களைப் பற்றி பார்ப்போம். சமையல் எண்ணெய் வியாபாரத்திற்கு எதிரியே தன்னிறைவுத்தன்மைதானே. முன்பு சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியா, இன்று 20 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பால் பொருட்கள் நியூசிலாந்து நாடு இந்தியாவிற்கு பால் பவுடரை ஏற்றுமதி செய்ய அறுபது ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. காரணம் அங்கு உற்பத்தி அதிகம். நுகர்வு குறைவு. இந்தியாவில் அமுல், ஹட்சன் அக்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தினால் பதறின. காரணம், நியூசிலாந்து நிறுவனங்களோடு போட்டியிடுவது மிகவும் கடினம். இந்தியாவில்  பால்பவுடர் இன்று கிலோ 280 ரூபாய்க்கு விற்கிறது. நியூசிலாந்து இந்தியாவில் வியாபாரத்தை தொடங்கினால், ஒரு கிலோ பால் பவுடர் வெறும் 180 ரூபாய்க்கு விற்கப்படும். அமுல் கூட்டுறவு நிறுவனம் என்பதால், கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கு செல்கிறது. இனி அந்த வாய்ப்பு

பசுமை சக்தியில் இந்தியாவின் இடம் என்ன?

படம்
பசுமை சக்தி உலகம் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள், மின் வாகனங்கள் என போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலும் அதுதொடர்பான சட்டங்கள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பெட்ரோல் டீசல் என ஊற்றி ஓட்டினாலும் வருங்காலம் என்பது ஹைட்ரஜன், லித்தியன் அயன் பேட்டரி வண்டிகளாகவே இருக்கும் என்பது உறுதி. அத்துறை சார்ந்த நிறுவனங்களும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் சந்தையை விட்டுவிடாது. தற்போது வரை உலகளவில் அதிகளவு கார்பன் வெளியிடும் நாடுகளில் சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 2030க்குள் தனது கார்பன் வெளியீட்டு அளவை பெருமளவு குறைத்துக்கொள்வதாக இந்தியா கூறியுள்ளது. எவ்வளவு தெரியுமா 30-35 சதவீதம். தொண்ணூறுகளிலிருந்து 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வெளியேறிய கார்பன் அளவு 147 சதவீதம் என்கிறது சூழல் அமைப்புகளின் அறிக்கை. உலகளவில் இந்தியா வெளியேற்றும் கார்பன் அளவு 6.55 சதவீதம்தான். தனிநபர் வெளியேற்றும் கார்பன் அளவில் இந்தியா 20 வது இடத்தில் உள்ளது. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் ஆயிரம் ஜிகாவாட் மின்சாரம் மூலம் 250 பே

தங்க ஆராய்ச்சி - நூதன வழியில் தங்கம் தேடும் ஆராய்ச்சியாளர்கள்

படம்
giphy.com தங்கத்தைக் கண்டறிய புதிய ஆராய்ச்சி! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் நிலத்திலுள்ள கனிமங்களை மரங்களின் மூலம் கண்டறியும் முறையைக் கண்டறிந்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் மர்மோட்டா (marmota) என்ற நிறுவனம் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளது. மரங்களின் வேர்கள் நிலத்தடியில் ஊடுருவி கனிமச்சத்துகளை உறிஞ்சுகின்றன. இந்த நிறுவனம் அவற்றின் இலைகள், தண்டுகளை ஆராய்ந்து அதிலுள்ள தங்கத்தின் அளவைக் கணித்துள்ளன. மண்ணில் டன்னுக்கு 3.4 கிராம் தங்கம் உள்ளதை மாதிரிகளிலிருந்து கண்டறிந்துள்ளனர். இச்சோதனை முன்னர் நடத்தப்பட்டபோது, இந்த வெற்றிகரமான முடிவு கிடைக்கவில்லை. மர்மோட்டா நிறுவனம், இலைகளின் மாதிரிகளை சேகரித்து சோதித்தது. அதில் சென்னா வகை மர இலைகளில் அதிகளவு தங்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்குள்ள பகுதிகளை திறம்பட ஆராய உள்ளோம். இங்குள்ள மரங்களின் இலைகள், தண்டுகள், கிளைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள கனிமங்களின் அளவைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார் மர்மோட்டா நிறுவன ஆராய்ச்சியாளர் ஆரோன் ப்ரௌன். பொதுவாக மண்ணிலுள்ள தங்கத்தை எப்படி ஆராய்வார்கள்? மண்ணைத் தோண்டி அத

நேர்கோட்டில் செல்லும் ஆணவக்கொலை படம் - தொரசானி படம் எப்படி?

படம்
தொரசானி  - தெலுங்கு இயக்குநர் கேவிஆர் மகேந்திரா இசை - பிரசாந்த் விகாரி நிலக்கிழாரின் பெண்ணை, அவரின் நிலத்தில் வேலை செய்யும் ஏழை விவசாயி மகன் காதலித்தால்.... அதுதான் படத்தின் கதை. படத்தின் இடத்தை எண்பதுக்கு நகர்த்தி தெலுங்கானாவுக்கு கேமராவை நகர்த்தி விளக்குகளை செட் செய்தால் சூப்பரான விருது கிடைக்கும் ஆணவக்கொலை படம் ரெடி. அப்படித்தான்  நினைத்திருக்கிறார் இயக்குநர். இந்த கதை லைனை சொன்னதும் உங்கள் தலைக்கு மேல் விளக்கு எரிந்து மணிச்சத்தம் கேட்டால் படத்தின் முடிவு உங்களுக்கு தெரிந்துவிட்டது என்று அர்த்தம். பிளஸ் பாய்ன்ட் ஜாதிவெறி, ஆணவக்கொலைக்கு எதிரான படம் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஆனால் படம் முழுக்க முதலாளி, எஜமான் என ஊர் மக்கள் காட்டும் விசுவாசத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த வினய் வர்மாவுக்கு நாமும் வணக்கும் வைக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். தேவகி பாத்திரத்தில் நடித்த சிவாத்மிகா மட்டுமே படத்தில் தேறும்  ஒரே ஆள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காதலித்து காதலின் உயிரைக் காப்பாற்ற அவர் போலீஸ் ஸ்டேஷனில் பதறும் பதற்றம்.. கைதட்ட வைக்கிறது. பிரசாந்த் விகாரியி

2019ஆம் ஆண்டின் ஸ்மார்ட் நகரங்கள் இவைதான்.

படம்
ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க பிரதமர் மோடி திட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவை இன்னும் நடைமுறைக்கு வர பல்லாண்டுகள் ஆகும். அதற்கான நிதித்தேவை அதிகமாக உள்ளது. இப்போது உலகில் உள்ள ஸ்மார்ட் நகரங்களை நாம் பார்ப்போம். அடிஸ் அபாபா, எத்தியோப்பியா எத்தியோப்பிய தலைநகரில் எதிர்காலத்தை நோக்கிய பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் மக்களுக்கான போக்குவரத்தாக ட்ராம்களை அரசு உருவாக்கியது. இதன் விளைவாக, சிறந்த வண்டி நிறுத்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாக நாடெங்கும் செல்ல சிறப்பான போக்குவரத்து சேவைகளை உருவாக்கியுள்ளனர். ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து உலகையே கொள்ளையடித்து செழிப்பான டச்சு நாடு.  இவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பது அமெரிக்கா பணக்கார நாடு என்று சொல்வதைப் போலத்தான். 2009ஆம்ஆண்டு 150 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் தொடங்கினார்கள். அதில் ஏராளமான தொழில் முதலீடுகளும் செய்துள்ளனர். பெரும்பாலும் இங்கு கார், பைக்குகளைவிட சைக்கிள்களையே பெரும்பாலும் போக்குரவத்திற்கு பயன்படுத்துகின்றனர். அதாவது குறைந்த தூர போக்குவரத்திற்காக... அதிக தூரம் என்றால் ரயிலில் ஏறிவிடுவார்கள். ஸ்பெ

வாழ்நாள் சாதனையாளர் - ஷிவ் நாடார், ஹெச்சிஎல்!

படம்
தற்போது 74 வயதாகும் ஷிவ் நாடார் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவரது பெயரை விட ஹெச்சிஎல் கணினிகள் என்றால் உங்களுக்கு எளிதாக விளங்கும். ஹெச்சிஎல் நிறுவனத்தை 1976ஆம் ஆண்டு தொடங்கியவர் ஷிவ் நாடார். இன்று தொழில்நுட்ப நிறுவனங்களோடு பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். ஹெச்சிஎல் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 8.6 பில்லியன் டாலர்கள். அண்மையில் கூட ஆறு மென்பொருட்களுக்கான காப்புரிமையை ஐபிஎம் நிறுவனத்திற்கு விற்று 1.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை முடித்துள்ளார். நொய்டாவில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் 14 மாடி மைய அலுவலகம் உள்ளது. ”நாங்கள் இன்று சாதித்துள்ளதாக நீங்கள் கருதினால் அதற்கு பின்னால் கடுமையான உழைப்பு உள்ளது ” என புன்னகையுடன் பேசினார். வாழ்நாள் சாதனையாளர் விருதை ஃபோர்ப்ஸ் இதழ் தேர்வாளர்கள் மூலம் தேர்ந்தெடுத்து வழங்குகிறது. ஹெச்சிஎல் நிறுவனம் , மேலாண்மை நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று ஆட்களை தேர்ந்தெடுக்கிறது. இதனால் இன்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களாவே இருப்பார்கள். தற்போது கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை ஷிவ் நாடார

காபி குடித்தால் உடலில் நீர்ச்சுருக்கம் ஏற்படுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி  டீ, காபி குடித்தால் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறுமா? சேட்டன் கடை டீ குடித்தாலும் சரி, சாய் கிங்ஸில் போய் டெட்ரா பேக்கில் டீ வாங்கி எலைட்டாக குடித்தாலும் சரி. அதைக்குடித்த சிறிது நேரத்தில் மடியிலிருந்து கனம் இறங்குவதைப் போலத் தோன்றும். தனித்தமிழில் சிறிது நேரம் காத்திருங்கள் தோழா. சிறுநீர் சிந்திவிட்டு வருகிறேன் என்று செல்லவேண்டி வரும். காரணம். அதிலுள்ள காஃபீன். இதனால்தான் உயர்தர சுவையில் கோத்தாஸ் காபி, லியோ காபி குடித்தாலும் மூத்திரம் பிய்த்துக்கொண்டு போகிறது. எனவே டீ குடியுங்கள். கூடவே அம்மா குடிநீரையும் குடியுங்கள். விரைவில் உங்களுக்கே தெரிந்துவிடும் எது சிறந்தது என்று. நன்றி - பிபிசி

திகட்ட திகட்ட கொலை - இரு சகோதரர்களின் அட்டூழியம்!

படம்
அசுரகுலம் கென்னத் பியான்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள மலையில் திடீரென 12 முதல் 28 வயதுள்ள பெண்களின் பிணங்கள் கண்டெடுக்கப்படத் தொடங்கின. இருவர் இக்கொலைகளுக்கு காரணம் என போலீஸ் கண்டுபிடித்தது. அதில் ஒருவர்தான் கென்னத்.  மேற்சொன்ன மலையருகே நிறைய பெண்களின் பிணங்களை காவல்துறை கர்மசிரத்தையாக எடுத்து மார்ச்சுவரியில் அடுக்கியது. பின்னர் கிடைத்த விஷயங்களை வைத்து ஆராய்ந்தபோது, பெண்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு குறிப்பாக வல்லுறவுக்கு பின்னரே கொல்லப்பட்டிருந்தனர்.  அங்கு செய்த கொலைகளைக் காட்டிக் கொடுத்து போலீஸ் விசாரணை செய்ய விசில் ஊதியவன் ஓர் சிறுவன்தான். அவன் அந்த இடத்திற்கு புதையல் கண்டுபிடிப்போம் என்ற விளையாட்டிற்காக வந்தான். அங்கு வந்தபின்தான், அவனது பதினான்கு வயதிற்கு ஒத்த இரு சிறுமிகள் நிர்வாணமாக கட்டிவைக்கப்பட்டிருப்பதை பார்த்தான். அருகில் போய் பார்த்தபோது, இருவரின் உடலின் சதைகளும் கெட்டு புழுக்கள் வெளிவந்துகொண்டிருப்பதை பார்த்து திகைத்துப் போனான். பின்னர் இக்காரியத்தை செய்த இருவரையும் போலீசில் காட்டிக்கொடுத்தான்.  கென்னத், அவரது சகோ

பெண்களுக்கும் வந்துவிட்டது மஜா ஆடியோ போர்னோகிராபி!

படம்
ஆடியோவில் அதிரடி - ஆடியோ போர்னோகிராபி ஆண்கள் தினசரி எப்படியேனும் ஒருமுறையேனும் பாலியல் வலைத்தளங்களை பார்த்துவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் என்ன செய்வார்கள்? பெண்களின் கைப்பையை தேடிப்பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்று அறிவதை விட இது ஆர்வமான கேள்விதானே? இதுபற்றி ஃபினான்சியல் எக்ஸ்பிரசில் எழுதியிருக்கிறார்கள் என்றவுடன் நண்பர்கள் பரவசமாகி விட்டார்கள். அப்படி என்னதான் இருக்கிறது என்று  https://tryquinn.com  என்ற வலைத்தளத்தில் நுழைந்து பார்த்தோம். நீட்டாக ரகசியத்திற்கு ஏற்றாற்போல வலைத்தளம் கருப்பாக இருந்தது. சரி, அதில்தானே ஒளியைத் தேடமுடியும் என வடுகப்பட்டியார் பாட்டு கூட எழுதியிருக்கிறார் என ஆடியோக்களை கேட்டால் ஆஹா... பிரமாதம். காமக்கதைகள், காமலோகம் வலைத்தளங்களை நீங்கள் படித்திருந்தால் அதன் ஆங்கில வலைத்தளம் இது என உடனே நம்புவீர்கள். அப்படியே தலைப்பு வைத்திருக்கிறார்கள். டெய்சி ஸ்கர்ட்டை அணிந்தபோது... என  மொழிபெயர்த்தால் என்ன தோன்றுகிறது? இந்த வலைத்தளத்தில் நீங்கள் பல்வேறு குரல்களில் மஜா கதைகளை கேட்டு மகிழலாம். குயின், டிப்சீ போன்ற வலைத்தளங்கள் இந்த ஆடியோ போர்னோகிராபியில் பிரபல

பால் மனிதர் குரியன்! - வர்க்கீஸ் குரியனின் சாதனை ’அமுல்!’

படம்
வெண்மைப்புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன்  பிறந்த தினம் இன்று. இன்று பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் உள்நாட்டு வேளாண்துறையை, பால்துறையை பாதிக்கும் என்று கூறி அதனை தடுக்கின்றனர். இதேபோன்ற சிக்கலை அன்று அமுலின் தலைவரான வர்க்கீஸ் குரியன் சந்தித்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் பால் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதியாகிக் கொண்டிருந்தன. இவை அரசுக்கு உதவினாலும் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் எந்த ஆதரவையும் வழங்கவில்லை. காங்கிரசின் திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவில் கைரா மாவட்டத்தில் பல்வேறு ஊக்கமூட்டும் செயல்பாடுகளை குரியன் செய்தார். அனைத்தும் தன்னுடைய மேதமையை உலகிற்கு சொல்வது அல்ல. மக்களுக்கு உதவுவதாகவே அமைந்திருந்தன. கைரா பால் உற்பத்தியாளர் சங்கத்தை திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவுடன் வர்கீஸ் குரியன் உருவாக்கினார். இன்று அமுல் உலகின் முக்கியமான பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான உள்ளது. தனியார் நிறுவனம் போல செயல்பட்டாலும் கூட்டுறவு அமைப்பாக மக்களின் நலன்களுக்கானதாக உள்ளது. 1964ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி கை

மன அழுத்தம் போக்கும் விட்டமின்கள்!

படம்
இன்று நோய் பாதிப்பு என்பது உடலுக்கு உள்ளிருந்தே ஏற்படுகிறது. வெளியிலிருந்து வரும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றின் தாக்குதல்களை விட நமது வாழ்வு சார் பிரச்னைகள், பழக்க வழக்கங்கள் ஏராளமான வியாதிகளை உருவாக்குகின்றன. அவற்றிலிருந்து மீள அதற்கான மருந்துகளை விட்டமின்களை சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. உணவு மூலம் எடுத்துக்கொள்வதே சரியானது என்றாலும் சில நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அவற்றை தனியாக சாப்பிடுவதும் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். ரோடியோலா ரோசியா ஆசியா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் விளையும் மூலிகை. உடலில் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறனை வளர்க்கிறது. உறக்கமின்மை பாதிப்பு கொண்ட நூறு பேரிடமும் இரண்டு மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. ரோசியாவின் மூலக்கூறு கொண்ட மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நல்ல பயன் கிடைத்தது. உடலில் ஏற்படும் பதற்றம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றுக்கும் இவை பயன்தருகின்றன. இதனை 400 மி.கி எடுத்துக்கொண்டால் பயன் தெரியும். மெலடோனின் தூக்கம் வருவதற்கான ஹார்மோன். சூரிய வெளிச்ச

சாத்தான் சொல்லித்தான் சுட்டேன்! - டேவிட் பெர்கோவிட்ஸ்

படம்
அசுரகுலம் டேவிட் பெர்கோவிட்ஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள மக்களை கொலை பீதியில் ஆழ்த்தியவர் டேவிட். சன் ஆஃப் சாம் கொலைகாரர், .44 காலிபர் கொலைகாரர் என்று அழைக்கப்பட்ட சீரியல் கொலைகார ர். நியூயார்க்கில் ப்ரூக்ளின் நகரில் 1953ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பிறந்தார். இவரது பெற்றோருக்கு இவர் பிறந்தபோது மணமாகவில்லை. அது அவர்கள் மனமுறிவால் பிரிந்துபோக உதவியது. குழந்தையாக இருந்த டேவிட், தம்பதி ஒருவருக்கு த த்து கொடுக்கப்பட்டார். சிறுவயதில் இருந்தே டேவிட்டுக்கு வன்முறையான எண்ணங்கள் இருந்தன. பெரியளவு யாருடனும் கலந்துபேசாத ஆள். திருட்டில் வல்லவர். ஏதாவது ஓரு இடத்தில் நெருப்பு எரிந்தால் அங்கேயே அதை ரசித்துக் கொண்டு நின்றுவிடுவார். இதனை பைரோமேனியா என்று கூறுகிறார்கள். நெருப்பை ரசிப்பது, ஓர் இடத்தை தீக்கிரையாக்கி மகிழ்வதை உளவியல் மருத்துவர்கள் முக்கியமான சீரியல் கொலைகார ர்களுக்கான அறிகுறியாக சொல்கிறார்கள். அத்தனையும் அப்படியே டேவிட்டுக்கு பொருந்திப்போனது.  பதினான்கு வயதிலேயே பள்ளியில் ஏராளமான ஒழுக்கம், நடத்தை தொடர்பான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டார் டேவிட். அந்நேரத்தில் அவர

ஆல்பெர்டோவின் செக்ஸ் வாழ்க்கை!

படம்
ஆல்பெர்ட் டிசால்வோவின் செக்ஸ் வாழ்க்கை பெண்களை நைலான் கயிற்றில் கட்டி அவர்களை தலையில் பாட்டிலால் அடித்து குற்றுயிராக்குவது முதல் பணி. அதற்குப் பிறகு அவர்கள் வலி, வேதனையில் துடிப்பார்கள். பின்னர் ரத்தப்போக்கினால் இறப்பார்கள். அதெல்லாம் ஆல்பெர்டுக்கு தெரியாது. அவனுக்கு மகிழ்ச்சி வேண்டும். அப்போது வல்லுறவு செய்வதுதான் அவனுக்கு பிடித்தமானது. பின் உடலை குறிப்பிட்ட மாதிரி செட் செய்து விட்டு கிளம்புவான். போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்த சீரியல் சைக்கோ கொலைகாரர் இவர். ஆல்பெர்ட்டின் குற்றச்செயல்கள் பற்றி பிறகு பார்ப்போம். முதலில் அவரது குடும்பம் பற்றி... அவரின் தந்தை குடிபோதையில் அலைபவர். வீட்டிற்கே விலைமாதர்களை கூட்டி வந்து மஜா செய்பவர். இதனால் தெரியவேண்டிய அத்தனையும் சிறுவயதிலேயே ஆல்பெர்டோவுக்கு தெரிந்துவிட்டது. அவரது சகோதர ர்கள் சீர்திருத்த பள்ளிக்கு செல்வதும் வருவதுமாக சாதனை செய்து கொண்டிருந்தனர். ஆல்பெர்டோ டிசால்வோ வளரும்வரை போஸ்டனில் உள்ள மால்டன் நகரில் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை. ஜெர்மன் அகதியான இர்ம்கார்ட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். செக்ஸ் மீது மிக ஆர்வமாக இருந்

பேட்டரிகளின் மறுசுழற்சி!

படம்
மிஸ்டர் ரோனி பேட்டரிகளை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள்? லித்தியம் அயன் பேட்டரிகளை தற்போது மறுசுழற்சி செய்யும் முறை சரியானது அல்ல. இதற்கு ஆகும் செலவு அதிகம். எனவே புதிய பேட்டரிகளை செய்வதே சரியானது. பழைய பேட்டரியில் அதாவது கார்களுக்கு பயன்படும் பேட்டரிகளை உடைத்து, மீண்டும் அதில் புதிய முறையில் தயாரிப்பார்கள். காரீய அமிலம் கொண்ட பேட்டரிகளை இம்முறையில் மறுசுழற்சி செய்கிறார்கள். இதேபோல அல்கலைன் பேட்டரிகளில் ஜிங்க். மாங்கனீசு ஆகியவற்றை இம்முறையில் மாற்றம் செய்து தயாரிக்கின்றனர்.  நன்றி - பிபிசி

ஏழை மக்களின் வாழ்நிலையும், பொருளாதாரமும் - அபிஜித், எஸ்தர் டஃப்லோ

படம்
புத்தக வாசிப்பு புவர் எகனாமிக்ஸ் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ ப.320 வெளியீடு 2011 இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பல்வேறு நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஐந்தாண்டு காலத்திற்குள், சில அரசுகள் மட்டுமே காகிதத்தில் மசோதாவாக இருக்கும் திட்டங்கள் மக்களுக்கு பயன்படும்படி யோசிக்கின்றன. ஏன் சில திட்டங்கள் மட்டும் சிறப்பான பயன்களைத் தருகின்றன, நிலப்பரப்பு ரீதியாக என்ன பிரச்னைகளை இருக்கின்றன, உணவை விட மக்கள் பொழுதுபோக்குக்கு செலவிட தயாராக இருப்பது ஏன்? வறுமை என்ற நிலை தொடர்ச்சியாக மாறாமல் இருப்பது எப்படி, அரசு உண்மையில் இதற்காக உழைக்கிறதா? அரசு அமைப்புகளின் ஊராட்சி பங்களிப்பு மக்களுக்கு உதவுகிறதா என பல்வேறு கேள்விகளை அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ இந்த நூலில் எழுப்பியிருக்கிறார்கள். அரசு வேலைதான் என அலட்சியமாக காலையில் எட்டு மணிக்கு வரவேண்டிய வேலைக்கு பத்து மணிக்கு வருவது என மருத்துவப் பணியாளர்கள்  உதய்பூரில் வேலை செய்கின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் அரசு சுகாதார நிலையத்திற்கு வருவதே இல்லை. பெண் பணியாளர்கள் எப்போது வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாத நில

தலையில் பந்தை முட்டினால் நினைவிழப்பு குறைபாடு ஏற்படுமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கால்பந்தை தலையில் முட்டி விளையாடுவதை பார்த்திருப்பீர்கள். தற்போது ஆராய்ச்சியாளர்கள் அப்படி விளையாடுவதை ஆபத்து என்கிறார்களே? ஸ்காட்லாந்து நாட்டில் பன்னிரண்டுக்கு வயதுக்கு குறைவான சிறுவர்கள் கால்பந்தை தலையில் முட்டி விளையாடக்கூடாது என்று தடை விதிக்கலாமா என யோசித்து வருகின்றனர். காரணம், தலையில் முட்டி விளையாடும்போது, மூளை பாதிக்கப்பட்டு டிமென்ஷியா எனும் நினைவிழப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஆஸ்டில் ஃபிபா கோப்பையில் பங்கேற்றவர். இவர் விளையாட்டில் ஏற்பட்ட காயங்களால், 59 வயதில் தன் மகளின் வீட்டில் இறந்துபோனார். இவரின் தலையை ஆராய்ச்சி செய்தபோது, குத்துச்சண்டை வீர ர்களுக்கு தலையில் ஏற்படும் சிடிஇ எனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். காரணம், கால்பந்து விளையாட்டில் வேகமாக வரும் வந்தை தலையில் முட்டி கோல் அடிப்பதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சாதாரண மக்களை விட கால்பந்து வீரர்கள் 3.5 மடங்கு டிமென்சியா குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. டாக்டர் வில்லி ஸ்டீவர்ட் என்பவர்

வண்டி ஓட்டும்போது ஆவேசம் ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி வண்டி ஓட்டும்போது ஆவேசம் ஏற்படுவது ஏன்? சிக்னலை நான் இன்று இரண்டு நொடி தாமதத்தில் கடந்தபோது, ஆக்டிவா பயனர் எனது தாயைப் பழிக்கும் சொல்லை மிக வேகமாக சொல்லிச்சென்றார். ஹாரிஸின் தொடக்க வரிகளைப் போல நிதானமாக யோசித்தபோதுதான் என்ன சொன்னார் என்றே எனக்கு அர்த்தமானது. வைல்ட் டேல்ஸ் என்ற படத்தில் சொகுசு காரில் செல்பவரை, டிரக் கார் வைத்திருப்பவர் கிண்டல் செய்வார். உடனே அதற்கு சொகுசு கார் வைத்திருப்பவர் டென்ஷன் ஆவார். இருவரும் ஒருவரையொருவர் கொல்லத் துரத்துவார்கள். இறுதியில் இருவரும் விபத்துக்குள்ளாகி இறப்பார்கள். இருவரும் நண்பர்கள் கிடையாது. ஆனால் ஒரு சின்ன சம்பவம். ஈகோவுக்கு ஆபத்தாக, சண்டை தொடங்குகிறது. பைக், கார் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக கிளம்புவதில்லை. காரணம், வண்டி இருக்கிறது. அழுத்திப் பிடித்தால் தாமதமான நேரத்தை எட்டிப்பிடித்துவிடலாம் என்ற பேராசை, மூர்க்கத் துணிச்சல். இதனால்தான். எந்த வண்டியில் பீக் அவரில் கூட வெள்ளைக் கோட்டிற்கு பின்னால் நிற்பதில்லை. அனைத்திலும் முந்தி என தினத்தந்தியின் டேக் லைன் போல அவசரப்படுவதுதான் இதில் பிரச்னையாகிறது

விட்டமின் டி உடலுக்கு அவசியத் தேவையா?

படம்
giphy.com இன்று இங்கிலாந்தில் பாதிக்கும் மேலான மக்கள் விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார்கள். இப்படி சாப்பிடும் மாத்திரைகள் உடலின் இயக்கத்திற்கு உதவுமா? என பல கேள்விகள் சாப்பிடுபவர்களுக்கும் உண்டு. அதனைப் பார்ப்பவர்களுக்கும் உண்டு. ஊட்டச்சத்து சந்தை என்பது 2015 இல் இங்கிலாந்தில் 414 மில்லியன் பௌண்டுகளாக வளர்ந்திருந்தது. கடந்த ஆண்டு உணவு ஏஜென்சி செய்த ஆய்வில் 48 சதவீத வயது வந்தோர் தினசரி விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. அரசு அமைப்பான என்ஹெச்எஸ், மக்கள் பனிக்காலத்தில் விட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்  என்று கூறியது. ஆனாலும் கார்டியன் பத்திரிகை விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடுவது உடலில் பெரியளவு மாற்றங்களை உருவாக்கவில்லை என்று கூறியது. இங்கிலாந்தில் நாற்பது சதவீதம் பேர் விட்டமின் டி பற்றாக்குறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். விட்டமின் டியை சூரிய ஒளி மூலமே நாம் பெறுகிறோம். இச்சத்து உடலில் உணவின் மூலம் பெறும் கால்சியம் சத்தை சரியான முறையில் பெற உதவுகிறது. இச்சத்து அதிகளவில் உடலில் இருந்தால், கால்கேமியா எனும் ரத்தத

செருப்பு, உள்ளாடை, கொலை - முன்னேற்றம் கண்ட ஜெர்ரி!

படம்
ஜெர்ரி ப்ரூடோஸ் சிறுவயதிலிருந்து மனதில் உருவாகும் ஆசைதான் ஒருவரின் ஆளுமையை வளர்க்கிறது. அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்திலுள்ள போர்லாந்தில் வாழ்ந்த ஜெர்ரியின்ஓரே ஆசை செருப்புகளை சேகரிப்பது. அதுவும் ஹைஹீல்ஸ் என்றால் குப்பைத்தொட்டியில் இருந்தாலும் சேகரித்து வைப்பார். எப்போது தொடங்கிய ஆசை தெரியுமா? அவருக்கு ஐந்து வயது இருக்கும். அப்போதே நடந்து செல்பவர்களை விட அவர்களின் கால்களை அலங்கரிக்கும் கால்களிலேயே ஜெர்ரியின் பார்வை நிலைகொண்டிருந்தது. அச்செருப்புகளை தானே வைத்துக்கொள்ள விரும்பினாலும் அதனை எப்படி கேட்டுப் பெறுவது என சிறுவன் ஜெர்ரிக்கு தெரியவில்லை. தனது ஆசையை நிறைவேற்ற குப்பைத்தொட்டியில் தேடினான். ஆச்சரியமாக அவன தேடியது கிடைத்தது. ஆம் செருப்புதான். ஆனால் ஜெர்ரி அதோடு நிற்கவில்லை என்பதுதான் பிரச்னை. செருப்பு, உள்ளாடைகள் எனத் தொடங்கிய பயணம் இறுதியில் அவரின் மரணத்தில் வந்து நின்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வயதாக வயதாக அவரின் செருப்பு தேடும் ஆர்வமும் வளர்ந்தது. இம்முறை அதிகமாக எல்லை மீறியே சென்றுவிட்டது. அருகிலிருந்து குடியிருப்புகளுக்கு சென்று காலிங்பெல் அடித்து, கதவ

பலுசிஸ்தானும் காஷ்மீரும் ஒன்று கிடையாது! - பஹூம்தாக் புக்தி

படம்
நேர்காணல் நவாப் பஹூம்தாக் புக்தி ஸ்வீடனில் உள்ள பலுசிஸ்தான் ரிபப்ளிக் கட்சித் தலைவர். இவர், 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பலுசிஸ்தான் ஆளுநர் நவாப் அக்பர் புக்தியின் பேரன் ஆவார்.  பலுசிஸ்தானில் நிலைமை எப்படியிருக்கிறது? நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. பாக். ராணுவம் அங்கு அரசியல் தலைவர்களை கைது செய்வதும், சித்திரவதை செய்வதும் இயல்பான விஷயங்களாகி உள்ளது. அவர்களையும் மக்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து மனித உரிமை மீறல்களை செய்வது அங்கு புதிய சட்டமாக மாறியிருக்கிறது. அங்கு கொல்லப்பட்ட, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்.  தினசரி காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மேற்குலகைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள எவையும் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் கூறும் தகவல்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களுடைய அமைப்பின் ஆராய்ச்சிப்படி 20 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். அதில் எட்டாயிரம் பேர்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். இது

சீனாவில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்! - சீனாவின் நடவடிக்கை என்ன?

படம்
giphy.com நவ.11 ஆம் தேதி உலக அளவில் சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. தினம் என்று வந்தால் யாருக்கு கொண்டாட்டம்? ஆம். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்குத்தானே? 2009ஆம் ஆண்டிலிருந்து அலிபாபா நிறுவனம், இதனை மிகப்பெரிய விற்பனைக்கான நாளாக பார்க்கிறது. அப்படித்தான் தனது வலைத்தளத்தில் விளம்பரம் செய்கிறது. 2015 ஆம் ஆண்டு 140 மில்லியன் பார்சல்களாக இருந்த விற்பனை, 2017ஆம் ஆண்டு 331  மில்லியன் பார்சல்களாக உயர்ந்துள்ளது. நான்கில் ஒருவர் என ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு கூறியது சீனாவில் மட்டும் என நினைவில் கொள்ளுங்கள். இதனை எப்படி கற்பனை செய்யலாம் தெரியுமா? அமெரிக்க நாட்டிலுள்ள ஒட்டுமொத்த குடிமகன்களும் ஆளுக்கொரு பார்சல் வாங்கியுள்ளதாக கருதலாம். விற்பனை, சாதனை என மார்தட்டிக்கொள்வது சரிதான். ஆனால், இதனால் ஆண்டுதோறும் 9.4 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன என்று க்ரீன்பீஸ் அமைப்பு மற்றும் ஃப்ரீ டு பிளாஸ்டிக் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு சிங்கிள்ஸ் தினத்தில் அலிபாபா நிறுவனம் 22 பில்லியன் டாலர்களுக்கு வணிகம் ச

ஷெட்யூல்டு டிரக் என்றால் என்ன?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி ஷெட்யூல்டு டிரக் என்று சிவப்பு நிறத்தில் ஆயின்மென்டுகளில் பிரின்ட் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கு என்ன பொருள்? ஷெட்யூல்டு டிரக் என்பதற்கு தமிழில் பட்டியலிடப்பட்ட மருந்துகள் என்று பெயர். இதிலுள்ள மருந்துகள் அடிமையாக்கும் தன்மை கொண்டவை, பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவை. தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளவை என அடையாளம் காணப்பட்டு அரசு மூலம் இவை பட்டியலிடப்பட்ட மருந்துகள் என கூறப்படுகின்றன. மருந்துகள் என்றால் அதில் உள்ள வேதிப்பொருட்களின் சேர்மானம் என்று பொருள் கொள்ளுங்கள். அதுவே சரியாக இருக்கும். கீழே கூறுவது அமெரிக்க அரசு விதிமுறைகளின் படி வரும் பட்டியலிடப்பட்ட மருந்துகள் 1 உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகள் இவை. இவற்றை நடப்பு காலத்தில் முறையாக மருத்துவரின் பரிந்துரை இன்றி பயன்படுத்தக்கூடாது என அரசு கூறியுள்ளது. எ.கா - ஹெராயின்,  பியோட்டே , மெத்திலீன் டையாக்சி பீட்டமைன். பட்டியலிடப்பட்ட மருந்துகள் 2 இம்மருந்துகளும் உளவியல் சார்ந்த உடல் சார்ந்த அடிமைத்தனத்தை பாதிப்பை ஏற்படுத்துபவையே. ஆனால் பட்டியல்

தெரிஞ்சுக்கோ! கப்பல் உடைப்பு - டேட்டா

படம்
தெரிஞ்சுக்கோ! உலகில் தொண்ணூறு சதவீத வர்த்தகம் கப்பல் வழியாக நீர்நிலைகளில் நடைபெறுகிறது. பயன்படுத்திய கப்பல்கள்தெற்காசியப் பகுதிகளில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. இத்தொழிற்சாலைகள் இங்கு அதிகமாக உள்ளன. ஒரு கப்பலை முழுமையாக உடைத்து எடுக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகின்றன. கப்பலிலிருந்து பெறும் இரும்பில் 90 சதவீதம் கட்டுமானத்துறையில் பயன்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கப்பலை உடைக்கும் தொழிலாளர் ஒருவருக்கு தரப்பட்ட கூலி ஆறு டாலர். உலகிலுள்ள கப்பல்களில் 33 சதவீத கப்பல்கள் இந்தியாவிலுள்ள ஆலங் பகுதியில் உடைக்கப்படுகின்றன. இப்பகுதியில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம். வங்கதேசத்தில் கப்பல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் அளவு 25 %. ஒரு கப்பலை உடைத்தால் அதிலிருந்து கழிவாக பெறும் ஆஸ்பெஸ்டாசின் அளவு 6,800 கி.கி. வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இறந்த கப்பல் உடைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1200. 1504 அடி நீளம் கொண்ட கப்பல், இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது. நன்றி - க்வார்ட்ஸ் 

க்வெர்ட்டி கீபோர்டு எப்படி சந்தையில் வென்றது?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி க்வெர்ட்டி கீபோர்டை நாம் பயன்படுத்துவது எதற்காக? படத்தில் உள்ள டிசைனைப் போன்ற கீபோர்டைப் பயன்படுத்தித்தான் பல இலக்கியச் செல்வங்களை நவீன எழுத்தாளர்கள் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால் இந்த வடிவம்தான் தட்டச்சுப்பலகையில் உள்ளது. விக்கிப்பீடியா இம்முறை டைப் செய்ய சரியாக உள்ளது என்று கூறமுடியாது. ஆனால் தற்போது கீபோர்டு என்பதே பெரும்பாலும் க்வெர்ட்டி முறையைத் தான் பின்பற்றுகின்றன. 1860 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் லதாம் ஷோல்ஸ் என்ற டெக் மனிதர், இதுபற்றிய ஆராய்ச்சி செய்து வந்தார். ஏராளமான லே அவுட் விஷயங்களை வைத்து, எது அலுவலகத்திற்கு பயன்படும் என்று ஆராய்ச்சிகள் செய்து வந்தார். இறுதியாக 1867ஆம் ஆண்டு தனது லேஅவுட் ஒன்றை உருவாக்கி அதற்கு காப்புரிமையும் பெற்றார். இன்று நாம் பயன்படுத்தும் கீபோர்ட் ஏறத்தாழ ஷோல்ஸின் வடிவத்தை ஒத்ததுதான். அவரின் முதல் கீபோர்ட் அகரவரிசைப்படி உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக டைப் செய்ய பலரும் எழுத்துக்களைத் தேடிக்கொண்டு இருந்தனர். அப்போது மோர்ஸ் கோட் ரகத்திலும் டைப் செய்துகொண்டிருந்தனர். எனவே எஸ், இ, இசட் ஆகிய எழுத்துகள்