இடுகைகள்

சார்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொள்ளைநோய் கோவிட் -19 விதிகள் - சட்டத்தை கடைபிடிக்காத மத்திய அரசு

படம்
newslaundry ஸ்பானிஷ் காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் முதல் ஏராளமான கொள்ளை நோய்களை உலகம் சந்தித்துள்ளது. இதற்கான விதிகளும் இயற்றப்பட்டு அச்சமயங்களில் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் பொதுவாக இப்பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பில்லை. காரணம் காய்ச்சலுக்கு சாகுபவர்களை விட கஞ்சிக்கு செத்தவர்கள் இங்கு அதிகம். அந்தளவு சோற்றுக்காக கஷ்டப்பட்டவர்கள். பசி, பட்டினி பாதிப்பு இந்தியாவில் அதிகம். அதற்காக நோய்களே வரவில்லை என்று கூற முடியாது. அதன் பாதிப்பு மிகவும் குறைவு. பிரிட்டிஷாரின் ஆட்சியில் 1897ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை பிரித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நடைமுறைக்கு வந்தது. 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு பல்லாயிரம் மக்கள் இறந்தபோது இக்கட்டுப்பாடுகளை கடைபிடித்தனர். இன்று இதில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும், 123 ஆண்டுகால சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் அப்படியே கடைபிடித்து வருகின்றன. பொதுமக்களுக்கான சுகாதாரத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு புதிய விதிகள் இயற்றப்பட்டன. இதில் நோய்களின் பாதிப்பு, அவர்களுக்கான சிகிச்சை