இடுகைகள்

வேலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மக்களின் அனுபவம்தான் முக்கியம் - சாம் ஆல்ட்மேன்

படம்
  சாம் ஆல்ட்மேன், ஓப்பன் ஏஐயின் இயக்குநர். இவர் தலைமையிலான குழுதான் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை வெளியிட்டது. ஓப்பன் ஏஐ தொடங்கி ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது. பணியாளர்கள் 500பேர். இவர்கள் செய்துள்ள பணி இணையத்தையே இன்று மாற்றிவிட்டது.  தமிழில் வரும் நாளிதழ்கள் கூட சாட்ஜிபிடி மாடலை தனது நிருபர்களுக்கு வழங்கி அதைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்தளவுக்கு ஜோக் முதல் பாட்டு, ரெஸ்யூம், பள்ளி மாணவனுக்கான கட்டுரை என அனைத்தையும் எழுதி வருகிறது சாட்ஜிபிடி. கேள்விகளை சரியாக கேட்க தெரிந்தால் உங்களுக்கு பதிலும் சிறப்பாக தெளிவாக துல்லியமாக கிடைக்கும்.  சாம் ஆல்ட்மனிடம் பேசினோம்.  சாட்ஜிபிடியை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? எனது மின்னஞ்சலில் உள்ள அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் கடிதங்களை எடுத்து குறிப்புகளாக்கி பார்ப்பேன். முக்கியமானவர்களின் மின்னஞ்சலை தனியாக எடுத்து வைப்பேன். அடுத்து, சந்திக்கவிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை மொழிபெயர்த்து வைத்து படிப்பேன். பிறகு அதன் வழியே சந்திப்புக்கு தயாராவேன். இப்போதைக்கு அவ்வளவுதான்.  அறி

வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஆராய்ந்த பொருளாதார அறிஞர்!

படம்
  கிளாடியா கோல்டின்  claudia goldin கடந்த அக்.9 அன்று அதிகாலை 4.30 இருக்கும். அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவருக்கு பொருளாதார ஆய்வுக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதாக செய்தி கூறப்பட்டது. இந்த வகையில் அப்பரிசை பெறும் மூன்றாவது பெண்மணி கிளாடியா. எழுபத்தேழு வயதாகும் கிளாடியா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். இந்த வகையில் கூட அவர் முதல் பெண்மணி. வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு, பிரச்னைகள், பாலின பாகுபாடு, சம்பளம் ஆகியவற்றை பற்றிய ஏராளமான ஆய்வுகளை கிளாடியா செய்துள்ளார். நாம் எப்போதும் குடும்பத்தில் உள்ள ஆண்கள், ஆண் குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். திருமணமான, விதவையாக உள்ள பெண்களைப் பற்றி, அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைப் பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. வரலாற்றிலும் அவர்களைப் பற்றிய தகவல்களை தேடி அறிய வேண்டும் என்றார் கிளாடியா.  நான் யாருக்கும் எந்த அறிவுரையையும் கூறுவதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் எனது மாணவர்களுக்கு கூறுகிறேன். உங்களுக்கு செலவழிக்க நிறைய நேரம் கையில் இருந்தால், அதை சோதனை செய்ய புதிய விஷயங்களை அறிய பயன்படுத்துங்கள்.  -சா

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்பள பாகுபாடு

படம்
  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பொருளாதார பாகுபாடு ஆண் ஒரு டாலர் சம்பாதிக்கிறான் என்றால் பெண் எழுபத்தேழு சென்டுகள் சம்பாதிக்கிறாள் என உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் சங்கம், சம்பளத்தில் உள்ள பாகுபாடு என்பதே, ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் என கூறியுள்ளது.  மாதம், வாரம், நாள் என பல்வேறுவிதமாக ஒருவர வேலை செய்து சம்பளம் வாங்கலாம். ஆனால், ஒருவரின் பாலினம் சார்ந்து ஆண் என்பதற்காகவே பாரபட்சமாக பார்த்து பெண்ணுக்கு சம்பளவெட்டு செய்வது நேர்மையான செயல் அல்ல. ஆணும், பெண்ணும் ஒரே விதமாக வேலை செய்தாலும் கூட பெண்களை சற்று இளப்பமாக பார்த்து சம்பளக்குறைவு செய்வது உலகநாடுகளில் இயல்பாக உள்ளது.  ஒரே கல்வித்தகுதி, அனுபவம் இருக்கும் ஆண், பெண்ணுக்கு ஒரேவிதமாக சம்பளத்தை வழங்குவதே நேர்மையான செயல்பாடு. அப்படியில்லாமல் பாகுபாடு காட்டுவது சமூகநீதிக்கு புறம்பானது. 2022ஆம் ஆண்டு ப்யூ நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒரு டாலரில் எண்பது சென்டுகள் பெண்களுக்கு செல்கிறது என அளவிட்டு கூறியுள்ளனர். அதாவது, ஆண்களுக்கு ஒரு டாலர் என்றால் பெண்

டெக் உலகில் மாற்றுப்பாலினத்தவர்கள் காலூன்ற உதவுபவர்! - ஆஞ்செலிகா ரோஸ்

படம்
  john hope bryant அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காம்டனில் பிறந்தவர். அன்றைய நாளில் அங்கு போதைப்பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறந்தது. அதுதான் பெரும்பான்மையானவர்களுக்கு சம்பாதிக்கும் வழிமுறையும் கூட. ஜானுக்கு பத்து வயதாகும்போது, அவர் படிக்கும் பள்ளிக்கு தொழிலதிபர் ஒருவர் வந்தார். நேர்மையான தொழில் செய்து சம்பாதிப்பதை அவர் மூலமே ஜான் அறிந்து நம்பிக்கை கொண்டார். இன்று 57 வயதானாலும் கூட அந்நாளை நினைவுகூர்ந்து பேசினார். வறுமையான நிலையில் உள்ள மக்கள், தங்களது தொழில் ஐடியாவை நிஜமாக்க நடைமுறையில் சாத்தியப்படுத்த முதலீட்டை ஈர்க்க முடியும். வாய்ப்புகளைப் பெறமுடியும். அதற்கு ஜான் உதவுகிறார்.  1992ஆம் ஆண்டு, ஜான் ஆபரேஷன் ஹோப் என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு, ஏழை மக்களுக்கு நிதி சார்ந்த கல்வியை இலவசமாக வழங்குகிறது. வறுமையில் வாடும் இனக்குழுவுக்கு தொழில் மூலம் முன்னேறுவது எப்படி என வழிமுறைகளை ஹோப் அமைப்பு கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள ஆயிரம் இடங்களில், 300 அலுவலகங்களில் ஹோப் அமைப்பு தனது பயிற்சிகளை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் ஷாப்பிஃபை அமைப்புடன் இணைந்து கருப்பின தொழிலதிபர்கள

கருப்பினத்தவர்களுக்கு மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் மனிதர்கள்!

படம்
  லியாண்ட்ரிஸ் லிபுர்ட் leandris liburd கருப்பினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் மருத்துவ வசதிகள் கிடைக்க சிடிசி அமைப்பில் ஹெல்த் ஈகுவிட்டி என்ற அமைப்பின் இயக்குநராக இருந்து செயல்பட்டு வருகிறார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக பணியில் நிறம், இனம் கடந்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் சார்ந்த புரிதலை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்.  ஆரோக்கியம் என்றவுடன் உணவுமுறை, உடற்பயிற்சியுடன் பலரும் நின்றுவிடுவார்கள், லியாண்ட்ரிஸ், ஒருவர் மருத்துவரைச் சென்று பார்க்க போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பது வரையில் கவனிக்கிறார். அரசின் சக துறைகள், மக்களின் இனக்குழு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு செய்து வருகிறார். அலுவலக பணியில் உள்ளவருக்கு நோய் என்றால் கூட சம்பள வெட்டுடன் விடுமுறை கிடைக்கும். அதை லியாண்ட்ரிஸ் மாற்றி, சம்பளத்துடன் விடுப்பு என்பதை நடைமுறையாக்கியிருக்கிறார். நாம் நமக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்தால்தான் நோய்களை எளிதாக முன்னதாக கண்டறிந்து தடுக்கமுடியும் என்றார் லியாண்ட்ரிஸ்.  -அலைஸ் பார்க் டைம் வார இதழ்  இமானி எல்லிஸ்  imani ellis இமானி, கருப்பின,

வேலைவாய்ப்பை தீர்மானிக்கும் அல்காரித நிறுவனங்கள் - பாதகங்களும் விளைவுகளும் - அல்காரிதம் - நூல் விமர்சனம்

படம்
  அல்காரிதம் ஹில்கே செல்மன் ஹாசெட் புக்ஸ் வங்கிகள், பள்ளிகள், தனியார் டெக் நிறுவனங்கள் ஆகியவற்றில் அல்காரித நிறுவனங்கள் எந்தளவு பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக ஏற்படும் பாதகங்கள் என்னென்ன, அதை வேலை தேடுவோர் எப்படி எதிர்கொள்வது என நூலாசிரியர் விளக்கியுள்ளார்.  இன்று வேலைக்கு அனுப்பும் ரெஸ்யூம்களை அல்காரிதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. அவை தேர்ந்தெடுத்து சில தேர்வுகளை வைக்கின்றன. இதில் ஒருவரின் உடல்மொழி, குரல், செயல்பாடு, நிறம், இனம் என அனைத்தும் பார்க்கப்படுகிறது. பிறகு அவரின் திறன் மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட வேலைவாய்ப்பு தேர்வுகளை பெரு நிறுவனங்கள் நடத்துகின்றன. அமேஸான் ஃபிளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் ஒருவர் அல்காரிதம் மூலம் கண்காணிக்கப்பட்டு, குறைகள் எழுந்தால் பெரிதாக விளக்கங்கள் கேட்காமல் ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் வேலையை விட்டு நீக்கப்பட்டுவிட முடியும். இதற்கான விளக்கங்களை வேலை இழந்தவர் பெற முடியாது. இதற்காகவே தனி ஒப்பந்தங்களை அமேசான் தயாரித்து வைத்து வேலை செய்பவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. வாகனங்களில் உள்ள கேமராக்கள் மூலம் ஓட்டுநர்களை கண்காணிப்பது, அந்த

பணத்தை தேடி ஓடும் மனிதர்களின் வாழ்க்கை அவலத்தைப் பற்றிய பகடி!

படம்
  மணி  தெலுங்கு  இரண்டு இளைஞர்கள் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். சாப்பிடக்கூட காசில்லை. வீட்டு ஓனரின் மகளை இளைஞர்களின் ஒருவனான போஸ் காதலிக்கிறான். இன்னொருவனான சக்ரி, பக்கத்து வீட்டு தொழிலதிபரின் மனைவியை கடத்தி பணம் கேட்டு மிரட்டினால் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என யோசனை சொல்கிறான். இதன்படி மனைவியை கடத்துகிறார்கள். பணம் கேட்டு போன் செய்தால், கணவர், அவளை கொன்றுவிட்டால் ஒரு லட்சம் என்ன இரண்டு லட்சமே தருகிறேன் என பேசுகிறார். இந்த நேரத்தில் கணவரை விசாரிக்க வரும் போலீஸ், தொழிலதிபர் மனைவியைக் கொன்றதாக அவர் மீது சந்தேகப்படுகிறது. அந்த இளைஞர்கள், ஒருகட்டத்தில் வேலையின்மையால் கடத்திவிட்டோம் என தொழிலதிபர் மனைவியிடம் உண்மையைக் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு நிலைமை என்னவானது என்பதே படத்தின் இறுதிக்காட்சி.  இதில் கூறாத கதை. படத்தில் ரவுடியாக வரும் பிரம்மானந்தம் பாத்திரம். இவர் உள்ளூரில் உள்ள கடைகளில் மிரட்டி காசு பிடுங்கி வாழ்கிறார். இவரிடம் பணம் கடன் வாங்க சக்ரி அவர் சினிமாவில் நடிக்கலாம் என ஆசையை தூண்டிவிட்டு காசு வாங்குகிறான். இதற்குப் பிறகு பிரம்மி, நடிப்பு ஆசையில் மூழ்குகிறார்.இதற்கென

செயற்கை நுண்ணறிவு, அதன் ஆபத்துகள் என்ன?

படம்
  செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? 1955ஆம் ஆண்டு கணினி வல்லுநரான மார்வின் மின்ஸ்கி என்பவர் முதல்முறையாக கூறினார். அப்போது அதற்கான தீர்க்கமான வரையறை ஏதும் இல்லை. தினசரி பயன்படுத்தும் கால்குலேட்டரை விட சற்று சிக்கலான அமைப்புமுறை என்று புரிந்துகொள்ளலாம். இன்று அப்படி முழுக்க சொல்ல முடியாது. சிக்கலான பிரச்னைகளை தீர்க்க எழுதப்படும் கோடிங் முறை எனலாம். இதை தீர்க்கும் முறை அப்படியே மனிதர்கள் யோசிக்கும் முறையை ஒத்திருக்கும். கணினிகள் தானாகவே யோசிக்காது. ஆனால் தகவல்களைக் கொடுத்து அவற்றை சோதித்து தீர்வுகளை வழங்க செய்யலாம். நிறைய தகவல்களைக் கொடுத்துவிட்டு கேள்விகளைக் கேட்டால் சரியான பதில்களை நாம் பெறலாம். நியூரல் நெட்வொர்க் முறையில் கணினிகளை இன்று உருவாக்கி எந்திர வழி கற்றலை நுட்பமான செயலாக்குகிறார்கள்.  ஏஐ எங்கெல்லாம் பயன்படுகிறது? இன்று போனின் சேவைகளை கட்டண தொலைபேசியில் அழைத்து பெறுகிறீர்களா? அங்கும் ஏஐ பாட்கள் உண்டு அவைதான் உங்களுக்கு வழிகாட்டுகின்றன. இப்போது குரலை அடையாளம் கண்டு பிடித்து பேசவும், உங்களை அழைக்கவும் கூட திறன் பெற்றுள்ளன. நீங்கள் எழுதவேண்டிய மின்னஞ்சலை ஏஐ இலக்கணப் பிழை இல்லாமல் எ

பணக்காரப் பெண்ணை எப்படியேனும் கல்யாணம் செய்துவிட்டாலே வாழ்க்கை ஈஸி!

படம்
  அதிருஷ்டம் இயக்கம் சேகர் சூரி இசை தினா எம் ஏ   தத்துவம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் நாயகன் ஒருநாள் ஜோதிடம் பார்க்கிறார். அதில், அவருக்கு கல்யாணம் நடந்தால் இப்போதிருக்கும் அரி பரியான அவதி வாழ்க்கை இருக்காது என கூறப்படுகிறது. ஆனால், வேலையில்லாமல் சுற்றும் நாயகனை யார் கல்யாணம் செய்துகொள்வார்கள்? இப்படியான நேரத்தில் நண்பனின் ஆலோசனை பேரில் இளவரசி சுயம்வரத்தில் கலந்துகொள்கிறார். அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதே கதை.   இயக்குநர், கடினமான காலகட்டத்தில் தனது வாழ்க்கையையொட்டி இந்த கதையை யோசித்து எழுதியிருப்பார் போல. நம்பிக்கை, காதல், நட்பு என எந்த விஷயமும் படத்தில் ஒட்டவில்லை. ரீமாசென்னை கவர்ச்சிப் பாடல்களுக்கென பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிடுகிறார்கள். நாயகி கஜாலாவுக்கான பங்கு படத்தில் மிகவும் குறைவு. நாயகன் பகிரங்கமாக அவருக்கு பலாத்கார முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார். அதைக்கூட அவர் தனது அழகுக்கான அங்கீகாரமாக ஏற்று அவரைக் காதலித்து மணம் செய்துகொள்கிறார்.   படத்தில் ஒரே சுவாரசியமான விஷயம், நாயகிக்கு பலாத்கார முத்தம் கொடுத்துவிட்டு நாயகன

ஆபத்து நாமிருக்கும் சூழல்களால் ஏற்படுகிறதே ஒழிய விலங்குகளால் அல்ல! - காட்டுயிர் ஒளிப்பதிவாளர் கார்டன் புச்சனன்

படம்
  கார்டன் புச்சனன் காட்டுயிர் திரைப்படக்கலைஞரான கார்டன் புச்சனன், கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பல்வேறு கண்டங்களில் அலைந்து திரிந்துள்ளார். சைபீரியாவில் பனிக்கரடிகளை தேடிச்செல்வது, கலாஹரி பாலைவனத்தில் சீட்டாக்களை பின்தொடர்வது என அவரது பணிகளுக்கு எப்போதும் குறைவில்லை. மலையில் ஏறுவது, காடுகளில் நடப்பது என பல இடங்களுக்கு செல்வதில் நிறைய திட்டமிடல்கள் இருந்தாலும் எவையும் நினைத்தது போல நடக்காது. விலங்குகளை படமாக்குவது என்பது எளிதல்ல. அதற்கு காத்திருக்கவேண்டும். மனமும், உடலும் ஒருவருக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இப்பணி சாத்தியமாகும். பணம் முக்கியம் தேசியப்பூங்காவிற்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், செலவழிப்பதில் கவனம் வேண்டும். தேசியப்பூங்காவிற்கு காசு கட்டியபிறகு உள்ளே செல்லவேண்டும். ஒளிப்படக்கருவிகளை எடுத்துச்செல்லவேண்டும். விலங்குகளை சரியான கோணத்தில் படம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீங்கள் பணம் செலவழிக்கும் நேரத்தில், விலங்குகளை சரியாக படம்பிடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது. எனது திட்டங்களில் பெரும்பாலும் அதிர்ஷ்டவசமாக நன்றாக நிறைவேறியுள்ளன. உடற்பயிற்சி காட்டுக்

ஆசிரியர் வேலையா, வேண்டவே வேண்டாம் என பதறும் அமெரிக்க மாணவர்கள்!

படம்
  அமெரிக்காவில் ஆசிரியர் வேலையை கைவிடும் தலைமுறையினர்! அமெரிக்காவில் ஆசிரியர் தொழிலை கையில் எடுத்து பணியாற்றும் ஆட்கள் படிப்படியாக குறைந்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணங்கள் என பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, குறைந்த சம்பளம், அதிகவேலை ஆகியவற்றைக் காரணமாக கூறலாம். நமது ஊரின் டெலிகிராம், டெய்லிபுஷ்பம் ஆகிய நாளிதழ்களில் வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உழைப்பு கதையெல்லாம் அமெரிக்காவில் கூட நடந்து வந்தவைதான். ஆனால், இப்போது அதுபோல எந்த மாணவரும் பேட்டி கொடுப்பாரா என தெரியவில்லை. ஒரு ஆசிரியரே பல்வேறு பாடங்களை எடுக்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு ஆசிரியரின் மாணவர்களையும் சேர்த்து பார்க்கவேண்டியதிருக்கிறது என பிரச்னைகள் நீள்கின்றன.   ஆசிரியர் வேலைக்கு குறைந்தபட்ச சம்பளம் என்பது மாகாணங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.அது இயல்பான ஒன்றுதான். ஆனால், மாறும் சம்பளம் விலைவாசிக்கு ஏற்றபடி இருக்கிறதா என்றால் இல்லை. ஆண்டுக்கு 48 ஆயிரம் டாலர்கள் என்பது மிக குறைவான சம்பளம். இதை வைத்து ஆசிரியர், அவரது மனைவி, குழந்தை என மூன்று பேர் கொண்ட குடும்பத்தை பசி, பட்டினியின்றி ஓட்டுவதே மிக கடினம்.சில ம

வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

படம்
  இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்   செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.   இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்   இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநிறுவனங்களில் கைக்கு

கடற்கரை நகரத்தில் காதலனின் அக்காவைக்கொன்ற குற்றவாளியைக் கண்டறியும் இளம்பெண்! சம்மர் ஸ்ட்ரைக்

படம்
  சம்மர் ஸ்ட்ரைக் 2022 கே டிராமா பனிரெண்டு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்     த்ரோ தி டார்க்னெஸ் என்ற கிரைம் தொடர்பான கே டிராமா பனிரெண்டு எபிசோடுகளைக் கொண்டதுதான். கொரிய டிவி தொடர்கள், இப்போது பதினாறு எபிசோடுகளில் இருந்து பனிரெண்டாக குறையத் தொடங்கியுள்ளன. இது கொஞ்சம் நல்லவிஷயம்தான். சம்மர் ஸ்ட்ரைக்கும் அந்தவகையில் ஆறுதலைத் தருகிறது. சக மனிதர்களால் மோசடிக்கு உள்ளான இருவர், கடற்கரை குறு நகரம் ஒன்றில் சந்தித்து காதல்வயப்படுவதுதான் முக்கியமான மையப்பொருள். ஆனால், அதைமட்டுமே சுவாரசியமாக காட்டுவது கடினம். எனவே, அதில் கொலைக்குற்ற வழக்குகளை சேர்த்திருக்கிறார்கள். மோசமில்லை. இந்த தொடரைப் பார்க்க நன்றாகவே இருக்கிறது. வெறும் காதல், பொறாமை என்று இல்லாமல் நிறைய நெகிழ்ச்சியான தருணங்கள், மனிதர்களின் பொறுத்துக்கொள்ள முடியாத சுயநலம், சொத்துக்களை பெற தாழ்ந்துபோகும் மனித குணம், அத்தனையையும் தாண்டி நிற்கும் அன்பு, மனிதநேயம் என தொடர் வசீகரமாக உள்ளது. பல்வேறு பாதிப்புகளை அடைந்த துன்பங்களை அனுபவித்த மனங்கள் ஒன்றாக சேர்ந்து இன்பம் காண்கின்றன. ஒருவருக்கு நேரும் பிரச்னைகள் பிறர் அந்நியமாக கருத

தொழிற்சாலை வேலை என்பது மத்தியதர வர்க்க மக்களைக் காப்பாற்றாது!

படம்
  தொழிற்சாலை வேலை எனும் மாயத்திரை தொழிற்சாலையில் வேலை எனும் மூடநம்பிக்கை தொழிற்சாலையில் வேலை என்பது உலகம் முழுக்க உள்ள அரசியல்வாதிகளால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படுகிறது. உண்மையில் இன்று தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன என்ற குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் கூட இதை ஏற்க மாட்டார்கள். பேசுவதுதான் முக்கியம். பேசுவதை செயல்படுத்தினால்தானே பிரச்னை என அரசியல் தலைவர்கள் நினைக்கலாம். அப்படித்தான உலகம் முழுக்க நடப்பு இருக்கிறது. ‘’தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும்போது சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அடிமை முறை ஆகிய சமூக தீமைகள் ஒழியும்’’ என ஃபெர்னான்டோ கலியானி என்ற சிந்தனையாளர் கூறினார். அவர் இந்தக் கருத்தைக் கூறி 250 ஆண்டுகள் ஆகியும் அரசியல்வாதிகள் இதே கருத்தில் கடந்த காலத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். சிந்தனையாளர் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. ஆனால், அது இன்றைய காலத்திற்கு பொருந்தாது. காலநிலை மாற்றம், மத்தியவர்க்கத்தின் வேலை, பொருளாதார வளர்ச்சி சுணக்கம், புவியியல் ரீதியாக அரசியல் நெருக்கடி என அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக தொழிற்சாலைகளைத் தொடங்குவதை அரசியல் தலைவர்கள் முன்வைக்க