போகேந்திர ஜா(1923-2009)
போகேந்திர ஜா (1923-2009) போகேந்திர ஜா மைதிலி பிராமண இனத்தில் பிறந்தவர். 1929-1933 பஞ்ச காலகட்டத்தில் வாழ்வாதாரமாக இருந்த நிலங்களை கந்துவட்டிக்காரர்களிடம் ஜாவின் பெற்றோர் இழந்தனர். கூலிவேலைக்கு செல்லும் வறுமை. பீகாரிலுள்ள கிராமங்களை கவனிக்க வைத்ததும் கூட இதே சம்பவம்தான். தன் தந்தையிடமிருந்து இந்து வேத தத்துவங்களை கற்ற போகேந்திர ஜா, உண்மையான மதம் என்பது பொதுமக்களுக்கு நாம் செய்யும் சேவை என்ற தத்துவத்திற்கு வந்தார். குடும்ப வறுமையில் அக்காலகட்டத்தில் பள்ளிப்படிப்பை விட தேடிப்படித்த தொன்மை நூல்களும், சமூக சூழல்களும் ஜாவை சமூக கவனம் கொண்டவராக மாற்றியது. 1935 ஆம் ஆண்டு மதுபானி பகுதிக்கு காந்தி தீண்டாமை மற்றும் சட்டமறுப்பு இயக்க பிரசாரத்திற்கு வந்தார். கலியுக கொலைகாரர்களில் இருவர், பசுக்களை வைத்திருக்கும் ஜின்னா, வேதங்களை பற்றியுள்ள காந்தி என சூர்யோதயா பத்திரிகையில் எழுதுமளவு பொதுவாழ்க்கையில் இடதுசாரி வேகம் கொண்டிருந்தார் ஜா. வெறும் எழுத்தோடு நின்றுவிடாமல் குடும்பமே எதிர்த்தாலும் சமபந்தி போஜனம் நடத்துவது என மாறியிருந்தவர் காந்தியின் ராம ராஜ்யன் என்பதை பொதுவுடைமை சமுதாயமெனவே