இடுகைகள்

அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரஷ்யாவில் அடைக்கலமான அமெரிக்க குற்றவாளி

**தமிழ் மொழிபெயர்ப்பு:** --- **www.occrp.org** **2 பில்லியன் டாலர் அமெரிக்க தொலைமருத்துவ மோசடியின் கூறப்படும் தலைமை குற்றவாளி ரஷ்யாவில் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்** 2015 முதல் 2022 வரை, ஒரு குற்றவியல் குழு அமெரிக்கா முழுவதும் உள்ள டஜன் கணக்கான மருந்தகங்களைப் பயன்படுத்தி, மோசடியான மருந்து மருந்துகளுக்காக காப்பீட்டு நிறுவனங்களுக்கு 2 பில்லியன் டாலர்களை வியக்கவைக்கும் வகையில் பில்செய்தது. அந்த குழு 758 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து, அதிகளவு பணத்தை கடல்கடந்த கணக்குகள் மூலம் கறைபடுத்தி, பின்னர் லாபத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர் அல்லது தங்கள் செயல்பாட்டில் மீண்டும் முதலீடு செய்தனர். இந்த சதித்திட்டத்தில் அவர்களின் பங்கிற்காக கலிபோர்னியாவில் 15 பேர் தண்டனை பெற்றனர், மேலும் ஏழு பேர் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், சிலருக்கு பின்னர் பத்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த குழுவின் தலைவர் என்று வழக்கறிஞர்கள் அடையாளம் காட்டும் 34 வயதான லாஸ் ஏஞ்சல்ஸைப் பிறந்த பிரையன் சட்டன் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. புரூக்ளினில் உள்ள அமெரிக்க வ...

தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ் = உலக கலாசாரத்தையே மாற்றிப்போட்ட ஒற்றைக்கடை!

 The McDonaldization of society -  into the digital age --  George Ritze தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ் ஜார்ஜ் ரிட்ஸ்சர் சேஜ் ப.368 மெக்டொனால்ட் என்பது அமெரிக்காவிலுள்ள துரித உணவகம். இந்த கடை முதன்முதலாக பிரான்சைஸ் என்ற வணிக உத்தியை வெற்றிகரமாக பயன்படுத்தி வணிக வெற்றியைப் பெற்றது. இன்று அமெரிக்காவின் முக்கியமான அடையாளம் மெக்டொனால்ட் உணவகம். இதை தொடங்கியவர்களை விட வாங்கி விரிவுபடுத்தியவரே உலகளவில் புகழ்பெற்றார். அதற்கு அவர் மேற்கொண்ட பல்வேறு நவீன முறைகளே காரணம்.  இந்த நூல் மெக்டொனால்ட் கடை எப்படி உணவு வணிகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று கூறவில்லை. மெக்டொனால்ட் என்ற ஒற்றைக் கடை அமெரிக்க சமூகத்தில் உறவில், உணவில், தொழிலில், கல்வியில், தனிப்பட்ட பொருளாதாரம் என பல்வேறு வகையில் ஏற்படுத்திய பாதிப்பு, செல்வாக்கு பற்றி நூலாசிரியர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஜார்ஜின் நூல், அவர் எடுத்துக்கொண்ட ஆய்வு மையப்பொருள் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறார்.   மெக்டொனால்ட் உணவுகளை ஒருவர் உட்கார்ந்த...

பேய்ப்பாலை நூலை வாசிக்க...

படம்
      பேய்ப்பாலை, சீனாவில் உருவாக்கப்படும் பயனற்ற கட்டுமானங்கள், தொழிற்துறை கழிவுகள் காரணமாக ஏறபடும் மாசுபாடு எப்படி ஏழை விவசாய மக்களை பாதிக்கிறது. கிராமத்தில் உள்ள மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்து பொதுவுடைமைக் கட்சி உள்நாட்டு உற்பத்தியை எப்படி போலியாக வளர்த்துக்காட்டுகிறது என இந்நூல் விரிவாக விளக்குகிறது. உலக நாடுகள் பலவும் தூய ஆற்றல் சாதனங்களை சீனாவின் தயாரிப்பில்தான் வாங்கி செயல்படுத்தி வருகின்றன. ஆனால், அப்படி பெறும் சாதனங்களை உருவாக்க சீனா, என்ன மாதிரியான விலையைக் கொடுக்கிறது, அங்கு ஏற்படும் சூழல் பிரச்னைகள், நோய்கள், மக்கள் போராட்டம், ஊழல், மக்கள் போராட்டங்களை நசுக்கும் காவல்துறை, ராணுவம் ஆகியவை பற்றியும் நூல் விளக்குகிறது.                 https://www.amazon.in/dp/B0DX7FY6QG

சுதந்திர வணிகம்!

படம்
    பாயும் பொருளாதாரம் 11 சுதந்திர வணிகம் ஒரு நாடு குறிப்பிட்ட பொருளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது. இன்னொரு நாடு அதே பொருளை தயாரிக்க அதிக செலவாகிறது. நினைத்த அளவுக்கு தரமும் மேம்படவில்லை. ஆனால் வேறு சில பொருட்களை சிறப்பாக தயாரிக்கிறது. இந்த சூழலில் பொருளை சிறப்பாக தயாரிக்கும் நாடு, அதை தயாரிக்க விட்டுவிடலாம். அதே பொருளை சிறப்பாக தயாரிக்க முடியாத நாடு, அம்முயற்சியை கைவிட்டு தனக்கு எளிதாக தயாரிக்க முடிகிற பொருளைத் தயாரிக்கலாம். இப்போது இருநாடுகளும் வணிகம் செய்தால் இரு பொருட்களை ஒருவருக்கொருவர் குறைவான விலையில் விற்றுக்கொள்ள முடியும். மக்களுக்கும் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். பரவலாக அனைத்து மக்களும் வாங்குகிற இயல்பில் இருக்கும். அமெரிக்கா விமானங்களை சிறப்பாக தயாரிக்கிறது என்றால் அதை இன்னொரு நாடு வாங்கிக்கொண்டு பயன்பெறலாம். தற்சார்பு என்ற பெயரில் முழங்கால்களை தரையில் தேய்த்துக்கொண்டு கஷ்டப்படவேண்டியதில்லை. சீனா, வெளிநாட்டு வரி தீவிரவாத செயல்களை சமாளித்து கணினி,அலைபேசிகளுக்கான சிப்களை கூட உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது. அவ்வளவு ஏன் ஓப்பன் ஏஐயை அடிப்படையா...

உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள்! - அமெரிக்கா தயங்குவது ஏன்?

படம்
          உணவுகளில் எச்சரிக்கை லேபிள் அமெரிக்காவில் உணவுப்பொருட்களில் எச்சரிக்கை லேபிள்களை ஒட்டி விற்க எஃப்டிஏ அமைப்பு யோசித்து வருகிறது. அமெரிக்கர்கள் ஏராளமான குப்பை உணவுகளை வகைதொகையின்றி உண்பதால் உடல்நலம் கெட்டு வருகிறது. இதை சரி செய்ய அமெரிக்க அரசு யோசித்து வருகிறது. இந்த எச்சரிக்கை லேபிளில் கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் இருக்கும். எப்போதும் போல அமெரிக்க நிறுவனங்கள், லேபிள் போடச்சொன்னால் குப்பை உணவுகளின் விலைகளை ஏற்றுவோம் என்று கூறியுள்ளன. ஆனால் நிறுவனத்தின் லாபம் தாண்டி உடல்நலம் பற்றி யோசித்தால் அமெரிக்காவில் உள்ள சிறார்கள், இருபது சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை 1970ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு கணக்குப் போட்டு கூறுகிறார்கள். உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்டிஏ, லேபிள்களில் பச்சை சிவப்பு மஞ்சள் ஆகிய நிறங்களை பயன்படுத்தி உடலுக்கு நேரும் ஆபத்தை கூறுவது அல்லது உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக உள்ளது என நேரடியாக கூறுவது என இரண்டு லேபிள் திட்டங்களை யோசித்து வருகிறது. சிலி நாட்டில் உணவுப்பொருட்களில் உள்ள பகுதிப்பொருட்கள் சார்ந...

நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர்

படம்
            நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர் மாத்வி சித்தூரின் பெற்றோர்கள் சென்னையை பூர்விகமாக கொண்டவர்கள். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மாத்வி, தினசரி பயன்பாட்டுப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் கலப்பை அறிந்தார். இதனால் ஏற்படும் நோய்கள், மண்ணுக்கு, நீருக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முயன்றார். இதற்காக கொலராடோவில் லிசா கட்டர் என்ற மக்களவை உறுப்பினரை சந்தித்து பேசி தனி மசோதாவை உருவாக்கி அதை சட்டமாக்குவதிலும் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்காக  ஆளுநர் போலிசின் ஆதரவையும் பெற்றார். அவர், மாத்வியின் செயல்பாட்டை பாராட்டியதோடு, மசோதா சட்டமானபோது அந்த விழாவுக்கும் அழைத்து தனது பேனாவை பரிசாக கொடுத்து கௌரவித்திருக்கிறார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நீங்கள் கூறும் புகார்களை ஏற்க மறுக்கிறார்களா, தயங்காதீர்கள். திரும்பத் திரும்ப அவர்களைக் கேட்டுக்கொண்டே இருங்கள் என்கிறார் மாத்வி. பிஎஃப்ஏஎஸ் எனும் வேதிப்பொருட்களால் இளையோருக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை, நோய்எதிர்ப்பு சக்தி குறைவது, கெட்ட கொ...

தலைவர், நம்பிக்கைக்குரியவராக தவறுகளை ஒப்புக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்பவராக இருக்கவேண்டும்!

படம்
        பில் ஃபோர்ட் எக்சிகியூட்டிவ் சேர்மன்,போர்ட்மோட்டார் கோ. நீங்கள் நிறைய நிறுவனத் தலைவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன? நீங்கள் நம்பும் விஷயங்களை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்ள வேண்டும். செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்க தயங்கவே கூடாது. சிறந்த தலைவராக இருக்க இந்த அம்சங்கள் முக்கியம். மின்வாகனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதில் நிறுவனத்திற்கு உள்ள எதிர்காலம், போட்டி ஆகியவற்றைப் பற்றி கூறுங்கள். மின்வாகனங்களை வாங்குபவர்கள், இன்னொரு மின்வாகனத்தை வாங்கவேண்டுமென நினைக்கிறார்கள், இதற்கான சார்ஜிங் மையங்கள் கூடும்போது, கார்களின் விலை குறையலாம். நாம் சில விஷயங்களை திட்டமிட்டு இயங்கலாம். ஆனால் நிறைவேறும் காலத்தை உறுதியாக கூற முடியாது. நம் அனைவரிடமும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மின்வாகன விற்பனை நிறுவனமாக உள்ளோம். கலப்பு வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்களையும் கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். மின்வாகனங்கள் தொடர்பான அரசியல் விவாதங்களை...

ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி!

படம்
  ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி! ஜெர்மனியின் போன் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாடு எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. இதில், பொருளாதார இலக்கு ஒன்றை தீர்மானிக்க இருந்தனர். 2024ஆம் ஆண்டு இறுதியில் ஆண்டுக்கு நூறு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கு தாண்டி செல்லவேண்டும் என்பதே லட்சியம். அப்போதுதான் காலநிலை மாற்ற திட்டத்திற்கு வளரும் நாடுகளுக்கு உதவ முடியும். வரும் நவம்பர் மாதம் அஜர்பைஜானில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற மாநாடுக்கு முன்னதாக நிதி இலக்கை திட்டமிட இருந்தனர். ஆனால் நோக்கம் நினைத்த திசையில் செல்லவில்லை. காலநிலை மாற்ற அறிக்கையில் நாற்பத்தைந்தாவது பக்கம், இன்புட் பேப்பர் என்ற சொல் உள்ளது. இதில், நாடுகள் வழங்கும் நிதி, அது செலவழிக்கப்படும் விதம், அதை அமைப்பினர் கண்காணிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்துகளை அழுத்தம் கொடுத்து கூற வாய்ப்புள்ளது. காலநிலை மாற்றத் திட்டங்களில் நிதியாதாரமே முக்கியப் பங்கு வகிக்கிறது. பணம் செலவிடப்படும் விதம், ஏற்பட்ட தாக்கம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவது 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை...

ஆராய்ச்சியாளர்களின் பிணங்களைத் திருடி அழிவு சக்தியாக்கும் சதிகாரக்கூட்டம்!

படம்
            லாரன்ஸ் மற்றும் டேவிட் மிரட்டும் திகிலூட்டும் நிமிடங்கள் லயன் காமிக்ஸ் நன்றி -ஆர்எம் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறும் கதை. அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஆராய்ச்சி செய்பவருடன் லாரன்ஸ் அண்ட் டேவிட் ஆகிய இருவரும் விடுமுறைக்காக சென்று தங்கியிருக்கிறார்கள். அப்போது ஒருநாள் காட்டு வாத்து வேட்டைக்காக செல்கிறார்கள். அங்கு, ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் மாரடைப்பு வந்து இறந்துபோகிறார். இறந்த அடுத்தநாளே அழைக்காமல் இருவர் வந்து சவப்பெட்டி செய்பவர்கள் என்று கூறி உடலை அடக்கம் பண்ணலாமா என்று கேட்கிறார்கள். இது லாரன்ஸ், டேவிட்டிற்கு சந்தேகத்தை தருகிறது. பிறகு, உடலை ஆராய்ச்சியாளரின் கடைசி ஆசைப்படி அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். செல்லும் வழியில் ஜீப்பின் பிரேக் பிடிக்காமல் வண்டி விபத்துக்குள்ளாகிறது. அதில், லாரன்ஸ் டேவிட் அடிபட்டு மயக்கமாகிறார்கள். சவப்பெட்டிக்கு மட்டும் ஏதும் ஆகவில்லை. இவ்வளவு பெரிய விபத்தில் எப்படி சவப்பெட்டி அப்படியே இருக்கும் என்று திறந்து பார்த்தால் அதில் செங்கற்கள் இருக்கிறது. ஆராய்ச்சியாளரின் உடலைக் காணவில்லை. இரு புலனாய்...

ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம்!

படம்
  ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் சீன அதிபர் ஐரோப்பாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தருகிறார். அமெரிக்காவுடன் வணிகப்போர் நடந்துவருகிற நிலையில், அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது இதுவரையில் விட்டுப்போன உறவை மீண்டும் உருவாக்குவதற்காகவே என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு ஜின்பிங் செல்லவிருக்கிறார். அதிகாரப்பூர்வ பயணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளும் இருக்கும் என்பது எதிர்பார்க்க கூடியதே. ஆசியாவில் சீன முக்கியமான வளர்ந்து வரும் சக்தி. பிற நாடுகள் சாதி,மதம், இனம் என பிரிவினைக்குள்ளாகி வரும் நிலையில் தனது செல்வாக்கை திட்டமிட்டு வளர்த்துக்கொள்ளும் விதத்தில் சீனா சாமர்த்தியசாலிதான். ஒரே கட்சியைக் கொண்ட தீவிர கண்காணிப்பு முறையைக் கொண்ட நாடு சீனா.  அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை சீனா பிரிக்க முயல்கிறதோ என நினைக்கலாம். 1999ஆம் ஆண்டு மே ஏழாம்தேதி பெல்கிரேட்டில் உள்ள சீன தூதரகத்தில் நேட்டோ படையின் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று சீன பத்திரிகையாளர்கள் இறந்துபோன...

சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா?

படம்
 சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா? கணினி, இணையம் ஆகிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையில் நுழைந்தபோது நிறைய மாற்றங்கள் நடந்தன. வேலையிழப்பு, பழைய தொழில்கள் அழிவு இதெல்லாம் நடந்தது. பழையன கழிதல் புதிது கிடையாது. இப்போது அந்த இடத்தை ஓப்பன் ஏஐயின் சாட்ஜிபிடி பிடித்திருக்கிறது.  கலிபோர்னியாவில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர், பீட்டர் பேக்கன், வகுப்பறையில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி பாடங்களை நேர்த்தியாக நடத்தி வருகிறார். அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவதோடு, அதைப்பற்றி ஜூம் மீட்டிங் கூட ஏற்பாடு செய்து பேசியுள்ளார். அனைத்து பாடங்களையும் ஆசிரியரே நடத்தாமல், சில எளிய விஷயங்களை சாட்ஜிபிடியிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அவரது கருத்து. பாடங்களை முற்று முழுதாக ஆசிரியர் கற்றுத்தருவது அழுத்தங்கள் நிறைந்த பாடத்திட்டத்தில் இயலாத ஒன்று. அதை சாட்ஜிபிடி மூலம் சாத்தியப்படுத்திக்கொள்கிறார் பீட்டர்.  தான் நடத்திய ஜூம் சந்திப்பில் கல்வியில் சாட்ஜிபிடி ஏற்படுத்தும் சாத்தியம், அதை எப்படி பயன்படுத்துவது என நாற்பது சக ஆசிரியர்களிடம் விவாதித்திருக்கிறார் பீட்டர். மருத்துவம் தொடங்கி ராணுவ...

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு

படம்
  காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு காலநிலை மாற்றம் என்பதைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஒருவிதமாகவும், வளரும் நாடுகள் ஒருவிதமாகவும் நடந்துகொள்கின்றன. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற விதிகளை பயன்படுத்தி வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றன. வளரும் நாடுகள், பணக்கார நாடுகளின் விதிகள் தங்களுக்கு பொருந்தாது. நாங்கள் இன்னும் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று கூறி பசுமை விதிகளை அமல் செய்ய மறுக்கின்றன. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை அமல்படுத்த குறிப்பிட்ட தொகையை வளர்ந்த நாடுகள் தர வேண்டியிருக்கும். இதற்கான அடித்தளத்தை காப்29, அசர்பைஜானில் நடக்கும் மாநாடு அமைக்கும் என நம்பலாம்.  துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல் வளங்களை மூன்று மடங்கு வளர்ச்சி கொண்டதாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நடப்பு ஆண்டில், இலக்கு என்பது நாடுகள் அளிக்க வேண்டிய நிதியாக இருக்கும். இதை என்சிக்யூஜி என சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள். புதிய ஒருங்கிணைந்த கூட்டு இலக்கு என தமிழில் கூறலாம்.  2025ஆம் ஆண்டு தொடங்கி வளர்ந்த ந...

கருப்பினத்தவருக்கான புரட்சிப்பாடலை பாடியவர் - ஆந்த்ரா டே

படம்
  ஆந்த்ரா டே  andra day சூப்பர் பௌல் போடியத்தில் கருப்பினத்தவரின் தேசியகீதத்தை பாடவேண்டும் என்பதுதான் டேவின் கனவு. ஏற்கெனவே பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பாடி புகழும், பெயரும் பெற்றவர், எதற்கு சூப்பர் பௌல் போடியத்தை முக்கியமாக நினைக்கவேண்டும்? 2015ஆம் ஆண்டு, டே ரைஸ் அப் என்ற பாடலைப் பாடி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பாடல், இப்போதும் கருப்பினத்தவரின் போராட்டங்களில் ஒலித்து வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லி ஹாலிடே என்ற படத்தில் நடித்தார். அதை இயக்கியவர், லீ டேனியல்ஸ். அதில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டார். பாடல்களுக்கு கிராமி விருது பெற்றார். தி டெலிவரன்ஸ், எக்ஸிபிட்டிங் ஃபார்கிவ்னஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை விரைவில் வெளிவரவிருக்கின்றன.  ரசிகர்கள் ரைஸ் அப் என்ற புரட்சி பாடலைப் போலவே அடுத்தடுத்த பாடல் இருக்கவேண்டுமென நினைக்கின்றனர். ஆனால் டே சற்று வேறுவிதமாக யோசிக்கிறார். அப்படி ரசிகர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் எனது பாடலை சுதந்திரமாக இருக்கவிரும்புகிறேன் என்றார...

குழந்தை பத்திர முறையை உருவாக்கியவர்கள்!

படம்
  டாரிக் ஹாமில்டன் - வில்லியம் டாரிட்டி darrick hamilton -william darity 2023ஆம் ஆண்டு, ஜூலையில் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் நகரம், அங்கு பிறக்கும் புதிய குழந்தைகளுக்கு 3200 டாலர்களை வங்கிக்கணக்கில் செலுத்துவதாக கூறி, அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாட்டிலேயே முதல்முறையாக நடைமுறைக்கு வந்த குழந்தை பத்திர முறை இதுவே. பதினெட்டு தொடங்கி முப்பது வயது வரையில் மேற்கண்ட தொகை பெருகி 24 ஆயிரம் டாலர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதை வைத்து ஒருவர் தனது கல்லூரிக்கான செலவை சமாளிக்க முடியும். குழந்தை பத்திர திட்டத்தில் தற்போது, 15 ஆயிரம் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை டாரிக் ஹாமில்டன் உருவாக்கினார். அதை நண்பரான வில்லியம் டாரிட்டியிடம் கூறினார். இப்படித்தான் திட்டம் சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.  ஹாமில்டனுக்கு வயது 53. கருப்பினத்தவர்களின் பொருளாதார வளம் சார்ந்து ஆய்வுசெய்து வருகிறார். பொருளாதாரம், நகரக்கொள்கைகள் துறை சார்ந்த பேராசிரியராக வேலை செய்கிறார். 2022ஆம் ஆண்டு ஆய்வுப்படி, நடுத்தர வெள்ளை இன குடும்பத்தின் செல்வம், கருப்பினக் குடும்பத்தை விட ஆறு மடங்கு அதிகம். கலிபோர்...

கருப்பினத்தவருக்கு குடியிருக்க வீடுகளைப் பெற்றுத்தர உதவும் போராட்டக்காரர்!

படம்
  லிசா ரைஸ்  lisa rice வீடுகளை வாங்குவதில், வாடகைக்கு பிடிப்பதில் சாதி, மத, இன வெறி இயல்பாக வெளிப்பட்டுவருகிறது. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையினருக்கு சாதி, மத இழிவு நடக்கிறது என்றால் வெளிநாடுகளில் கருப்பினத்தவருக்கு நடக்கிறது. ஒருவர் வீடு வாங்குவதில் வாடகைக்கு பிடிப்பதில் நிறவெறி சார்ந்த சிக்கல்கள் எழுந்தால் அந்த விவகாரங்களை லிசா ரைஸ் கையாண்டு தீர்வுகளை எட்ட முயல்கிறார்.  அமெரிக்காவில் சொந்த வீடு வைத்துள்ள வெள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம். வாடகைக்கு வீடு கொடுப்பது, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் கருப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அறுபதுகளில் சிறுபான்மையினர் நிறம் சார்ந்த புறக்கணிப்பை அனுமதித்தனர் என்றால் இப்போது வீடு, நிதி வசதி சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் அதே விஷயம் ஒழுங்குமுறையாக நிகழ்த்தப்படுகிறது. தேசிய வீட்டுவசதி கூட்டமைபு என்ற நிறுவனத்தின் அதிபர், இயக்குநராக உள்ள லிசா ரைஸ், இன்று பாகுபாடு என்பது தானியங்கி முறையி்ல மாறியுள்ளது. எனவே இதை எதிர்கொள்வது கடினம் என்றார். பாகுபாட்டிற்கு எத...

கருப்பின பெண் தொழில்முனைவோருக்கு உதவும் முதலீட்டு நிறுவனம்!

படம்
  அரியன் சைமன் - அயானா பார்சன்ஸ் arian simone, ayana parsons கருப்பின பாகுபாடு என்பது மேற்குலக நாடுகளில் சாதாரண ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. சமநீதி, ஒரே சட்டம் என்றாலும் மறைமுகமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கீழே தள்ள நிறவெறியர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம், அவர்களிடம் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதற்கு நிதி முதலீட்டையும் பெருமளவு பெற்றுவிடுகிறார்கள். இவர்களோடு போராடி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேரளவுக்கு முதலீடு பெறமுடிவதில்லை.  ஆண்களே முக்கி முனகும்போது, கருப்பின பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்யும் தொழில்களுக்கு முதலீடு செய்யவே ஃபியர்லெஸ் ஃபண்ட் என்ற முதலீட்டு நிறுவனம் உருவானது. இதை 2018ஆம் ஆண்டு அரியன் சைமோன் தொடங்கினார். இவருடன் கூட்டாளியாக அயானா பார்சன்ஸ் இணைந்துள்ளனர். இவர்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குகிறார்கள்.  இதுவரை 44 நிறுவனங்களில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, வெள்ளையர்கள்தான். பெண்கள் தொடங்கும் நிறுவன...

கருப்பினத்தவர்களுக்கு மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் மனிதர்கள்!

படம்
  லியாண்ட்ரிஸ் லிபுர்ட் leandris liburd கருப்பினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் மருத்துவ வசதிகள் கிடைக்க சிடிசி அமைப்பில் ஹெல்த் ஈகுவிட்டி என்ற அமைப்பின் இயக்குநராக இருந்து செயல்பட்டு வருகிறார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக பணியில் நிறம், இனம் கடந்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் சார்ந்த புரிதலை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்.  ஆரோக்கியம் என்றவுடன் உணவுமுறை, உடற்பயிற்சியுடன் பலரும் நின்றுவிடுவார்கள், லியாண்ட்ரிஸ், ஒருவர் மருத்துவரைச் சென்று பார்க்க போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பது வரையில் கவனிக்கிறார். அரசின் சக துறைகள், மக்களின் இனக்குழு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு செய்து வருகிறார். அலுவலக பணியில் உள்ளவருக்கு நோய் என்றால் கூட சம்பள வெட்டுடன் விடுமுறை கிடைக்கும். அதை லியாண்ட்ரிஸ் மாற்றி, சம்பளத்துடன் விடுப்பு என்பதை நடைமுறையாக்கியிருக்கிறார். நாம் நமக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்தால்தான் நோய்களை எளிதாக முன்னதாக கண்டறிந்து தடுக்கமுடியும் என்றார் லியாண்ட்ரிஸ்.  -அலைஸ் பார்க் டைம் வார இதழ்  இமானி எல்லிஸ்  imani...

2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?

படம்
 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம் 2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது.  ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன...