இடுகைகள்

செல்வராஜ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாய கருவிகளை புதுமையாக வடிவமைத்த டெக் விவசாயி! - செல்வராஜ்

படம்
  கண்டுபிடிப்புகள் என்பது அந்நியச் சொல் அல்ல! கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, எம் செல்வராஜ். இரண்டே முக்கால் நிலத்தை வைத்து விவசாயம் செய்கிறார். விவசாயம் செய்வதோடு, அதனை எளிமையாக செய்வதற்கான பல்வேறு கருவிகளை, சாதனங்களை கண்டுபிடித்து வருகிறார். 58 வயதான செல்வராஜ் அதனால்தான் இப்பகுதியில் சாதனையாளராக பார்க்கப்பட்டு வருகிறார். மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 110 கி.மீ. தூரத்தில் உள்ளது சேசுராஜபுரம். இங்குதான், இவரது விவசாய நிலம் உள்ளது. தனது நிலத்தில் நிலக்கடலை, தக்காளி, சிறு தானியங்களை விளைவித்து வருகிறார்.  இளைஞராக இருக்கும்போதிலிருந்து விவசாய பணிகளை செய்துவருகிறார். அப்போதிலிருந்து பல்வேறு சோதனை முயற்சிகளை நிலத்தில் செய்து பார்த்து வந்தார். சோதனை மற்றும் தவறுகள் என ஏற்க பழகியவர், வீட்டிலுள்ள பல்வேறு இரும்பு பொருட்களை வைத்து விவசாய பொருட்களை செய்யத் தொடங்கினார். இப்படித்தான் சைக்கிள் டயர்கள், மரத்துண்டுகள், கத்திகள் ஆகியவற்றை வைத்து 500 ரூபாயில் கருவி ஒன்றை உருவாக்கினார். விதைப்பது, களை பறிப்பது ஆகியவற்றை இப்படி கருவிகளை வைத்தே செய்கிறார்.  விதைகளை விதைப்பதற்கு முன்னர் மட்டும் ரோட