உறவின் நோக்கமே சுயநலம்தானா? - கடிதங்கள்
கடிதங்கள் 3.1.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக உள்ளீர்களா ? சொந்த ஊருக்கு சென்றதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் . சென்னையில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களை நான் சந்திக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது . கல்வி வேலை வழிகாட்டியில் வேலை செய்த வெங்கடசாமியுடன் இப்போது பேசுவது இல்லை . தேவையைப் பொறுத்தே உறவுகள் என்பதை அவர் தீவிரமாக நம்புகிறார் . எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் விலகிவிட்டேன் . அது உண்மையாக இருக்குமோ என்னமோ , எனக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது . 2021 ஆம் ஆண்டில் இழப்புடன்தான் சம்பளக்கணக்கு தொடங்கியுள்ளது . பொதுமுடக்க காலம் என்பதால் இரண்டாயிரம் ரூபாயை வெட்டிவிட்டார்கள் . மீதியுள்ள பணத்தில்தான் ஊருக்கு பணம் அனுப்புவது , வாடகை , சாப்பாடு ஆகியவற்றை சமாளிக்க வேண்டும் . நீங்கள் வேலை செய்யும் பத்திரிகை நிறுவனத்தில் இப்போது பிடிக்கும் பிடிமானங்களைத் திருப்பித் தர வாய்ப்புள்ளது . ஆனால் எங்களுக்கு அப்படியான நிலைமை இருக்குமா என்று தெரியவில்லை . எங்கள் தலைவர் எங்களுக்கான பரிந்து பேசுவார் என