இடுகைகள்

துயரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுகளின் சேமிப்பு காலத்தை தீர்மானிக்கும் உணர்ச்சிகள்!

படம்
  1950ஆம் ஆண்டு, மனிதர்களின் மூளை, அதில் பதிவாகும் நினைவு பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. மூளையில் குறைந்தகால நினைவுகள், அதிக காலம் உள்ள நினைவுகள் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 1970ஆம் ஆண்டு, கற்றல் கோட்பாடு, நினைவுகள் பற்றிய ஆய்வுகள் தொடங்கியது. சில நினைவுகளை நாம் எளிதாக நினைவுகூர்ந்து மீட்டெடுப்போம். அப்படி திரும்ப மீட்கும் நினைவுகள் பற்றித்தான் உளவியலாளர்கள் ஆர்வமாக தெரிந்துகொள்ள நினைத்தனர். உளவியலாளர் கார்டன் ஹெச் போவர், மூளையில் சேமித்து வைக்கும் நினைவுகளை உணர்ச்சிகள் பாதிப்பதைக் கண்டுபிடித்தார். அதாவது நினைவுகளை குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கும்போது அந்த நேரத்தில் உள்ள உணர்ச்சிகளும் அதோடு இணைந்துவிடுகின்றன. திரும்ப அதே நினைவில் நாம் இருக்கும்போது அந்த நினைவுகளை எளிதாக மீட்டெடுக்க முடிகிறது.  துயரமான நிலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் நடந்த துயரமான வலி, வேதனை பெருக்கும் நினைவுகளை துல்லியமாக அன்று நடந்தது போல கூற முடியும். ஆனால் அதே மனிதர்கள் மகிழ்ச்சியான நிலையில் இருக்கும்போது துயர நினைவுகளை முன்னர்போல தெளிவாக கூற முடியாது. இதை மூட் கான்க்ரன்ட் புரோசஸிங் என்று

ஆழமான துயர் நிறைந்த ஷிபுவின் வாழ்க்கை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.1.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  உங்கள் உடல், மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன். மறைமலை அடிகள்  எழுதிய கடிதங்களைத் தரவிறக்கி வாசித்தேன். தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை. தனித்தமிழில் எழுதுவது, சைவத்தை பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார். தமிழக அரசு  மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன. இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன்.  இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன். அவர் தனது மனைவி, குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார். வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார். மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன். கிராமத்து சூப்பர் ஹீரோ கதை. நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான். அதாவது, நாடக கலைஞரான குரு சோமசுந்தரம்.  அம்மா, காதலி என இரண்டையும் சுற்றியுள்ளவர்கள் இழக்கிறார். வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார். அதில் ஏதும் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. நாயகனான ஜெய்சன் என்பவரின் வாழ்க்கை பெரிதாக ஈர்க்கவில்லை. ஷிப

மனமறிய ஆவல்! - கடிதங்கள்- துயரம் துரத்துதே ஏன்?

படம்
pixabay முன்னமே கூறினேனே திடீரென எழுதும்போது உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டு வெறுமனே காலியாக உட்கார்ந்திருப்பது என் வழக்கமென. வின்சென்ட் கூட திட்டுவான். இப்படி சட்டென உணர்ச்சி வசப்படுவது சரியல்லவென. என்ன செய்வது என் இயல்பு அப்படி ஆகிவிட்டது. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது போல திடீரென காலங்களில் பின்னால் கடிகாரத்தை திருப்பி வைத்துச் சென்றபோது கடும் விரக்தி ஏற்பட்டது. அந்தநேரத்தில் அஞ்சல் அட்டை கையில் கிடைத்தது துரதிர்ஷ்டம். உடனே எழுதி அப்போதே முருகானந்தம் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன். இன்று படித்தால் உண்மையில் ஏன் இப்படி எழுதினேன். என்ன பிரச்னை என எனக்கே புரியவில்லை.இப்படி நெருங்கிய நண்பர்களுக்கு எழுதி பின்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். நட்பில் அதெல்லாம் சாதாரணமப்பா என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  சரி, எழுதியதை மறைக்க முடியாது. படியுங்கள். 3 1.3.2013 அன்பு சகோதரருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உங்கள் நான் என்றும் உடன்பிறவாத சகோதரராகவே பாவிக்கிறேன். இனிமேலும் அப்படித்தான். தங்களது அறிவிற்கும் சிந்தனைக்கும் கி.மீ. தூரத்திலுள்ள என்ன