இடுகைகள்

ஐஐடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களை புன்னகைக்க செய்ய நினைத்தேன்! பாலகிருஷ்ண தோஷி, கட்டுமானக் கலைஞர்

படம்
பி.வி. பாலகிருஷ்ணா தோஷி கட்டுமான கலைஞர்  பிரைட்ஸ்கர் பிரைஸ் என்ற கட்டுமான கலையின் நோபல் என்று அழைக்கப்படும் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள். இதோடு ராயல் கோல்டு மெடல் பரிசும் கிடைத்துள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ரிபா அமைப்புடன் எனது தொடர்பு பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. கட்டுமானக் கல்வியை படித்தபோதிலிருந்து எனக்கு அந்த அமைப்புடன் நல்ல உறவு உண்டு.  நான் ரிபா அமைப்பின் நூலகத்தை பயன்படுத்தி வந்தேன். அங்கு படித்த நூல்களைப் பற்றிய நினைவுகள் எனக்கு இன்றும் இருக்கிறது.  அவை சிறப்பானவை. லே கார்பசியர் ரிபா தங்கமெடல் விருதை வாங்கும்போது நான் அவருடன் தான் இருந்தேன்.  லே கார்பசியரை எப்படி உங்களது குரு என்று சொல்லுகிறீர்கள்? ஒரு இடத்தில் வெளிச்சம் எப்படி இருக்கவேண்டும், அமைப்பு, மேசைகளின் இடம் பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறார். இதைப்பற்றி எழுதிய தாள் எனது மேசை டிராயரில் இப்போதும் உள்ளது. பின்னாளில் தான் அவர் வரைந்து வைத்த இடம் உண்மையில் கிடையாது என்றும், தாளில் மட்டும் தான் உருவானது என தெரிந்தது. ஆனால் அவரது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சரியப்படுத்தியது என்று தனியாக கூறவேண்டுமா என்ன? விலை குறை

இந்தியாவின் சாதனைகளைப் பேசும் மின்னூல் இந்தியா 75! - சாதனைகளும் தற்போதைய நிலையும்- அமேஸான் வலைத்தளம்

படம்
  இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த காலகட்டங்களில் இந்தியாவின் வரலாறு அனைவரும் அறியவேண்டியது முக்கியம். தேசிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தியா 75 என்பதை பல்வேறு சாதனைகளாக அழகுற வடிவமைத்து சிறுசிறு கட்டுரைகளாக வெளியிட்டது. அதுதான் இப்படி நூலை எழுதி தொகுக்க உந்துதல் வழங்கியது. இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சுருக்கமாக இந்தியா இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன, தற்போதுள்ள நிலை என்ன ஆகியவற்றை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவில் சில நாட்கள் ஒருவர் தங்கினால் நூலு்ம், சில வாரங்கள் தங்கினால் கட்டுரையும், அங்கேயே ஆண்டுக்கணக்கில் தங்கினால் எதையும் எழுத முடியாது என ஓஷோ இந்தியா பற்றிய நூலில் கூறியிருப்பார். அது இங்கு நிலவும் பல்வேறு பன்மைத்துவம், முரண்பாடுகளின் கலவையாக முன்வைத்த கருத்து. நூலில் நாம் அறிந்துகொள்வது இந்தியாவைப் பற்றிய சில கோணங்களே. இது முழுமையானதல்ல. இந்தியா என்பது வெறும் வரைபடம் அல்ல. அது ஒரு மனநிலை. யாரையும் ஆளாத, ஆளும் அதிகாரம் கூட மனதில் எழாத ஆன்மாக்கள் வாழும் இ

ஐஐடி டூ அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  எஸ்.பவிஷ், படுகர் இனத்தைச் சேர்ந்தவர். ஊட்டியிலுள்ள துனேரி பகுதியைச் சேர்ந்தவர். பவிஷ், ஐஐடி இந்தூரில் இயற்பியல் படித்துவிட்டு, துனேரியிலுள்ள அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். முனைவர் பட்டம் பெறும் முனைப்பில் இருந்தவரை மாற்றியது அவரது நண்பர்கள்.  கிராமத்திலிருந்து ஐஐடி வரை சென்ற ஒருவர் மாணவர்களுக்கு பெரியளவில் ஊக்கமூட்டி உதவ முடியும் என கூறியதால் ஆசிரியராக பணியாற்ற பவிஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பவிஷ், ஐந்தாவது வரை உள்ளூர் பள்ளியில் படித்திருக்கிறார். பின்னர் காக்குச்சி, காரமடை என பள்ளிப்படிப்பு விரிவடைந்தது. பிளஸ் 2 படிப்பு முடிந்தபிறகு கோவைக்கு பஸ் ஏறியவருக்கு, பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.  கணினி பொறியியல் பட்டம் பெற்றவர் முதுகலைப் பட்டம் பெற ஐஐடி இந்தூருக்கு சென்றுபடித்தார். ”நான் முனைவர் படிப்பிற்கான தயாரிப்பில் இருந்தபோதுதான் எனது நண்பர்கள் கிராமத்து மாணவர்கள் பற்றி கூறினார்கள். அவர்களுக்கு பாடம் பற்றி உதவினால் நன்றாக இருக்கும் என்றார்கள். எனவே, நான் தன்னார்வமாக அவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்”’ என்றார

அனாதைப் பிணத்தை வைத்து ஐஐடி மாணவர் ஆடும் பரமபத ஆட்டம்! - ஐஐடி கிருஷ்ணமூர்த்தி 2020

படம்
        ஐஐடி கிருஷ்ணமூர்த்தி   தனது சித்தப்பா காணவில்லை என கிருஷ்ணமூர்த்தி மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து நாளிதழில் விளம்பரம் கொடுக்கிறார் . அதைப் பார்த்து உதவி கமிஷனர் வினர் வர்மா , அவனை புகார் கொடுக்க அழைக்கிறார் . அவன் சொல்வது உண்மையா என அவருக்கு சந்தேகம் வருகிறது . உண்மையில் கிருஷ்ணமூர்த்தி யார் ? அவன் உண்மையில் தேடுவது அவன் சித்தப்பாவைத்தானா ? அவனது நோக்கம் என்ன என்பதை உதவி கமிஷனரோடு சேர்ந்து பார்வையாளர்களும் அறிவதுதான் படத்தின் மையப்பகுதி . படத்தில் மசாலா அம்சங்கள் ஏதுமில்லை . மைரோ தோஷி வரும் காட்சிகள் கூட இறுக்கமான கதையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யவேண்டுமே என்பதுதான் .    படத்தின் நாயகன் நல்ல ஓங்குதாங்கான உடல்கட்டோடு இருக்கிறார் . இதனால் படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கலாமே என தோன்றுகிறது . ஆனால் படத்தில் அதற்கான தேவைகள் மிகவும் குறைவு . ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டுமே உள்ளது . பள்ளியொன்றை நடத்தி வரும் ஶ்னிவாசன் என்பவரின் மீது சுமத்தப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டும் அதைப்பற்றிய சர்ச்சைகளும்தான் பின்பாதி கதையை நகர்த்த உதவுகிறது . உண்மையில் ஶ்னிவாசன்

சேட்டன் பகத் - படிக்கும்போது கட்சிகளுக்கு உழைக்காதீர்கள்!

படம்
டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கும், ஐஐடி ஆகிய இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஐஐடியில் வகுப்புகளை பங்க் செய்வது, கலாட்டா செய்வது, தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என ஜாலியாக இருப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது, அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றுக்கு வேலையே கிடையாது.  அப்படி உள்ள மாணவர்கள் உடனே அந்நிறுவனத்திலிருந்து வெளியே தள்ளப்படுவார்கள். நாங்கள் படிக்கும்போது டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை ஏக்கமாக பார்ப்பது இதற்காகத்தான். எங்களுக்கு அப்படியே எதிர்மறையாக இருப்பார்கள். அவர்களும்  அங்கு படிக்கத்தான் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அனுபவித்த சுதந்திரம் எங்களுக்கு பொறாமையாக இருந்தது. அரசியல் சினிமா என அவர்களுக்கு அனைத்திலும் சுதந்திரம், தனித்தனி கருத்துகள் இருந்தன. அதனை பகிரங்கமாக அவர்கள் கூறவும் முடிந்தது. ஆனால் அதேசமயம் அவர்கள் வளாகத்தில் செய்யும் அரசியல் ரீதியான போராட்டங்களை நான் ரசிக்கவில்லை. காரணம், மாணவர்கள் கல்லூரிக்கு வருவது தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவே. இதில் அரசியல் கட்சிகளுக்கு உதவும்படியான நடவடிக்கைகள் எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. கருத்து சுதந்திரத்தை