இடுகைகள்

ஹாங்காங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹாங்காங்கின் சுதந்திர பேச்சுரிமைக்கு போராடிய ஜிம்மி லாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாமா?

படம்
  ஜிம்மி லாய், நிறுவனர், ஆப்பிள் டெய்லி நாளிதழ் ஆப்பிள் டெய்லி நாளிதழ், ஹாங்காங் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி லாய்க்கு வழங்கலாம்! நான் ஒரு பத்திரிகையாளர். எனவே, இதை சொல்வது பாகுபாடாக தோன்றலாம். இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஹாங்காங்கைச் சேர்ந்த பத்திரிகை உரிமையாளர் ஜிம்மி லாய்க்கு வழங்கப்படலாம் என நினைக்கிறேன். ஹாங்காங்கில் உள்ள ஆப்பிள் டெய்லி என்ற நாளிதழின் உரிமையாளர் ஜிம்மி லாய். கருத்து சுதந்திரம், மனித உரிமைகளுக்காக போராடும் மனிதர். பொதுவாக தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளோடு ஒத்துப்போய்விடுவார்கள். அவர்களை மீறி உண்மையை பேசுவதால் இழப்பது அதிகமாகவும் பெறுவது குறைவாகவும் இருக்கும். ஜிம்மி லாய் தனது சொத்துக்களைக் கூட இழந்து சிறைக்குச் செல்ல துணிந்துவிட்டாரர். பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தபோது ஒரு நாடு இரண்டு சட்ட அமைப்பு முறை என்ற அடிப்படையில் அன்றைய அதிபர் டெங் ஜியாவோபிங் அதை ஏற்றார். அதன்படி ஐம்பது ஆண்டுகள் ஹாங்காங் செயல்படுவது ஒப்பந்த விதிமுறை. அந்த வகையில் அதன் குடியுரிமைகள், சுதந்திரமான அமைப்புகள் செயல்படும். உண்மையில் டெங் கொடுத்த வாக்குறுதி, அதாவது உறுதி

சீனாவுக்கு கொடுக்கப்பட்ட ஹாங்காங்!

படம்
  இங்கிலாந்து மிகவும் தந்திரமான காரிய க்கார நாடு. தனது நலனுக்காக பிற நாடுகளை அழித்து மக்களைக் கொல்லவும் அது தயங்கியதில்லை. இந்தியாவை காலனி நாடாக்கிய தன்மையில் இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை இந்த வகையில் சேர்க்கலாம்.  இங்கிலாந்து சீனாவில் இருந்து பீங்கான், தேயிலை, பட்டு ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்தது. இதற்கு தொகையாக வெள்ளியை வழங்கிவந்தது. ஒரு கட்டத்தில் சீனர்களின் பொருட்கள் தேவை, ஆனால் அவர்களுக்கு கொடுக்க வெள்ளி இல்லை. என்ன செய்வது? எனவே தந்திரமாக யோசித்த இங்கிலாந்து அரசியல்வாதிகள், வணிகர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அதுதான், போதைப்பொருட்களை சீனாவில் கள்ளத்தனமாக விற்பது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து வெள்ளி வாங்கி அதனை இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுத்துவிடுவது....  இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை சீன பேரரசர் அறிந்து தடுத்தார். இதனால் ஓபியம் தொடர்பான போரை சீனாவும் இங்கிலாந்தும் நடத்தின. இந்த வகையில், 1839, 1856 ஆகிய ஆண்டுகளில் போர்கள் நடைபெற்றன. சீனா படைக்கு அப்போது பெரிய படைகளும் கடற்படைகளும் இல்லை.எனவே இரும

ஹாங்காங் திரைப்பட விழாவில் திரையிடப்படும் சில படங்கள்!

படம்
  டிரைவ் மை கார் ஹாங்காங் திரைப்பட விழாவில் இடம்பெறும் முக்கியமான படங்கள் இந்த திரைப்படவிழாவில் ஏராளமான புதிய இளைஞர்கள், கருத்து, நடிகர்கள் இடம்பெற்ற திரைப்படங்களை எதிர்பார்க்கலாம். சில படங்களைப் பார்ப்போம்.  அனிதா அனிதா 2003ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்துபோன அனிதா இம் முயி என்ற பாப் இசைக்கலைஞர்  பற்றிய திரைப்படம் இது. லூயிஸ் வாங் அனிதாவாக நடிக்கிறார். இவர் மாடல் நடிகையாக புகழ்பெற்றவர். கவாஷிமோ யோஷிகோ, மிட்நைட் ஃபிளை என்ற இரு படங்களை திரைப்பட விழாவில் அனிதாவை நினைவுகூறும்வகையில் திரையிடுகிறார்கள்.  மடலேனா எமிலி சான் என்கா என்ற இயக்குநரின் படம். இன்சோம்னியா பாதிப்பு கொண்ட டாக்சி ஓட்டுநர், வேலை செய்து தனியாக வாழும்  குழந்தையைக் கொண்ட பெண் என இருவருக்குமான உறவும் சம்பவங்களும்தான் கதை. படம் முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.  ஃபார் ஃபார் அவே ஹாங்காங் இயக்குநர் அமோஸ் எடுத்துள்ள படம் இது. டாட் 2 டாட் என்ற படம் எடுத்து புகழ்பெற்ற இயக்குநர் இவர். காகி சாம் என்ற ஐடி துறையில் வேலை செய்பவர்தான் நாயகன். அவர் செய்யும் காதல் கலாட்டாக்களில் ஐந்து பெண்கள் சிக்குகிறார்கள். சிக்கலான காதல் உறவுகளைப்

அவமானச்சின்னத்தை அகற்ற முயலும் சீன அரசு!

படம்
  அவமானத்தின் தூண்- ஹாங்காங் சீன கம்யூனிஸ்ட் கட்சி, வரலாற்று ரீதியான களங்கத்தை மறைக்கும் முயற்சியை எப்போதும் செய்துவந்திருக்கிறது. அண்மையில்  ஹாங்காங் பல்கலைக்கழகத்தில்  டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கல்சியோட் தியான்மென் சதுக்க படுகொலைகளை சுட்டும் சிற்பத்தை வடிவமைத்தார். இப்போது சீன அரசு அந்த சிற்பத்தை அகற்ற வலியுறுத்தி வருகிறது.  சீனாவில் அனுமதிக்கப்படாத தியான்மென் அடையாளம், ஹாங்காங்கில் மட்டுமே உள்ளது. சீனாவில் இருக்கும் ஜனநாயகத்தை முடக்கும் பிரச்னைகள் ஹாங்காங்கில் எதிரொலிக்க, அங்கு போராட்டங்கள் தொடங்கின. இப்போராட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அரசு ராணுவம் கொண்டு அடக்கியது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தொடங்கின. இதனை நினைவுறுத்தவே சிற்பி அவமானத்தின் சின்னம் என்ற பெயரில் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்.  தியான்மென் சதுக்கத்தில் மொத்தம் 7 ஆயிரம் பேர் காயம்பட்டனர். இதில் போராட்டக்கார ர்கள், காவல்துறையினரும் உள்ளடங்குவார்கள்.  36 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பத்து ராணுவ வீர ர

மனநலம் பற்றிப் பேசி விருது வென்ற திரைப்படம்! - ஹாங்காங் பெண் இயக்குநர் நிக்கோலா ஃபேன்

படம்
  டாஃபோடில் என்ற  பதினெட்டு நிமிடங்கள் ஓடும் படம் உளவியல் நலம் பற்றி பேசி திரைப்பட விருது விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது. ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட இந்த படம் , தற்கொலை செய்து இறந்துபோன அம்மாவின் நினைவுகளால் பாதிக்கப்படும் இளம்பெண்ணின் கதையைப் பேசுகிறது.  2020ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்கியவர் 32 வயதே ஆன நிக்கோலா பேன். இண்டிபிளெக்ஸ் எனும் வலைத்தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 2019இல் யூரோப்பியன் சினிமாட்டோகிராபி விருதை வென்று, 2020இல் வான்கூவர் ஆசியன் திரைப்பட விழாவுக்கு தகுதி பெற்றுள்ளது. எனது கல்லூரி படிப்பின்போது எனது நண்பனின் அம்மாவுக்கு உளவியல் பிரச்னை இருந்திருக்கிறது. தினசரி வாழ்க்கையே இழுபறியாக இருக்கும்போது ஒருவர் அழுகிறாரா, சிரிக்கிறாரா என்று யார் பார்க்கப்போகிறார்கள்? இப்படி இருந்தபோது திடீரென அவரது அம்மா தற்கொலை செய்துகொண்டார். இந்த சோகமான நிகழ்ச்சியால் அவரது நண்பர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நாம் உளவியல் பிரச்னைகளைப் பற்றி இன்றுதான் பேசத் தொடங்கியுள்ளோம். முந்தைய தலைமுறையினருக்கு இதில் ஆர்வமும் இல்லை, நேரமும

ஜனநாயகத்தை மலர வைக்கிறதா டெலிகிராம்?

படம்
இணையம் சார்ந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நிறுவனங்கள் மெல்ல ஏற்படுத்தி வருகின்றன. கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்காக அரசியல்வாதிகளுக்கு ஏற்ப பயனர்களின் பதிவுகளை அழிப்பது, நீக்குவது போன்ற செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதனால் பலரும் ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களிலிருந்து விலகிவருகின்றனர். திறமூல மென்பொருள் ஆப்பான டெலிகிராமில் பதிலுக்கு இணைகின்றனர். டெலிகிராம் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் நிகோலாய், பாவ்லோவ் என்ற இருவரால் 2013 இல் தொடங்கப்பட்டது. என்ன சிறப்பு இதில் இருக்கிறது? நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே படங்கள் உங்கள் போனில் இறங்கும் இல்லையெனில் க்ளவுட் கம்ப்யூட்டரில் மட்டுமே இருக்கும். இதனால் வாட்ஸ்அப் இயங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் நம் போனுக்கு ஏற்படாது. குறைந்த ரேம் கொண்ட போனிலும் டெலிகிராம் சிறப்பாக இயங்கும். இதில் எந்த குழுவிலும் நீங்கள் இணையலாம். எந்த அட்மினும் உங்களை கேள்வி கேட்க முடியாது. இல்லையென்றால் அக்குழுவில் உள்ள விஷயங்களை தரவிறக்கிக்கொள்ள முடியும். சரி விடுங்கள். இதனால் நடைமுறை பயன் என்ன? ஜனநாய

கண்காணிப்பை தகர்க்கும் போராட்டக்காரர்கள்! - சீனா எரிச்சல்

படம்
கண்காணிக்கும் விளக்கு கம்பம்! ஹாங்காங்கில் போராட்டக்கார ர்கள் செய்யும் குறிப்பிட்ட காரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாம் சாதாரணமாக கவனமின்றி எரிச்சலில் என்ன செய்வோம்? ஜல்லிக்கற்களை எடுத்து சோடியம் வேபர் விளக்கில் விட்டெறிந்து அதனை உடைப்போம். இது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு. பின்னர் அப்படி அடித்த ஆட்களே அதனை தவறு என்று மாறுவது வழக்கம். அதேபோல அங்கு சீன அரசு அமைத்துள்ள மின்விளக்கு தூண்களை ஹாங்காங் குடிமகன்கள் அடித்து உடைத்து சாய்க்கின்றனர். அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போடுகின்றனர். எதற்கு? காரணம், அது சீனாவின் கண்காணிப்பு கோபுரமாக உள்ளது. சீன அரசு அதனை போக்குவரத்தை கண்காணிக்கும் கம்பம் என்று கூறுகிறது. மின்விளக்கு கம்பம்தான், குப்பைகளைப் போடுபவர்களை கண்காணிக்கிறது. மேலும் தட்பவெப்பநிலை, 5ஜி இணைய இணைப்பு, ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு இயங்குகிறது. ஸ்மார்ட் சிட்டி வசதிகளில் இதுவும் ஒரு அங்கம். இதைத்தான் ஹாங்காங்க் புரட்சியாளர்கள் அடித்து உடைக்கின்றனர். அவர்களின் கூட்டம் அதற்கு அப்ளாஸ் எழுப்புகின்றனர். இதன் விலை 34.75 மில்லியன் டாலர்கள். அதாவது ஒரு க

போராட்டங்களின் அடிப்படை- வெல்லுமா -தோற்குமா?

படம்
போராட்டங்கள் வெல்லுமா? ஹாங்காங்கில் ஜூன் பனிரெண்டாம் தேதி தொடங்கிய போராட்டம் ஹாங்காங் கடந்து உலகளவில் மக்களின் கவனத்தையும் ஊடகங்களையும் ஈர்த்தது. காரணம், சீனா வர்த்தக மையமான ஹாங்காங்கை எப்படி பல்வேறு சட்டங்கள் மூலமாக சீனாவின் துணை நாடாக மாற்ற முயல்கிறது என்பதை மக்கள் போராட்டம் உலகிற்கு காட்டியது. காவல்துறை மையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராடத் தொடங்கினர். கேரி லாம் என்ற ஹாங்காங்கின் நிர்வாகத்தலைவரை மாற்றக்கோரி போராட்டம் மாறியுள்ளது. முதலில் தொடங்கிய போராட்டம்  லாம் அமல்படுத்திய குற்றச்சட்டம் தொடர்பானது. சாதாரணமாக பேரணி, அமர்ந்து போராடி செய்திகளை உலகிற்கு கூறிய மக்கள் இன்று அதில் வன்முறை வழியாகவும் உணர்த்துவதற்கு தயங்குவதில்லை என்கிறார் டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்த மார்க் ஃபெய்ன்பெர்க். கடந்த ஏப்ரலில் இம்முறையில் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டத்தை மத்திய லண்டனில் மக்கள் முன்னெடுத்தனர். மக்களின் கவனம் ஈர்ப்பது நமக்கொன்றும் புதிதல்ல. மரம் வெட்டி போடுவது, பஸ்களை எரிப்பது, கிடைத்தால் மனிதர்களை பஸ்ஸில் வைத்து எரிப்பது என பல்வேறு வழிகளில் போராட்டம் குறித்து இந்தியளவில்

ஹாங்காங்கில் நடப்பது என்ன?

இரண்டு மில்லியன் மக்களின் போராட்டம் 1997 ஆம் ஆண்டு வசம் வந்துவிட்ட ஹாங்காங் நாட்டை சீனா ஒரே நாடு இரண்டு சட்டம் என்று பராமரித்து வந்தது. அதாவது , நாம் ஜம்மு காஷ்மீரை 370 என்ற சட்டம் மூலம் தனி அந்தஸ்து அளித்து பராமரித்து வருகிறோமோ அதேபோல. ஆனால் ஜின்பிங் தன் பதவியை உறுதிப்படுத்தியவுடன் ஹாங்காங்கை சீனாவுடன் இணைப்பதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். அதில் ஒன்றுதான், ஹாங்காங் நாட்டிற்கான சீன ஆதரவாளர் ஒருவரைத் தலைவராக்கியது. அவர் என்ன செய்வார்? அதேதான். சீனாவின் ஆணைகளுக்கு தலையசைத்தவர், சீனாவின் புதியசட்டத்திற்கும் கையொப்பமிட்டு சர்ச்சைக்குள்ளானார். இன்று பெரும் போராட்டத்திற்கும் அது காரணமாகியுள்ளது. ஹாங்காங்கில் பிடிபடும் குற்றவாளிகளுக்கு சீனாவில் தண்டனை என்பதுதான் சட்டத்தின் எளிமை வடிவம். சீனாவின் காலனி நாடு ஹாங்காங் என்பதை உறுதிபடுத்தும் சட்டம் என்பதற்காக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் வெல்லும், உலகை மாற்றும் என்று கூறுவது நம் நோக்கமல்ல. ஆனால் இது ஒரு முக்கியமான போராட்டம் என்று கூறவருகிறோம். போனி லியங் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றுதிர