இடுகைகள்

ஊடகங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊடகங்களைப் பயன்படுத்தி நீதியின் முதுகெலும்பை முறிக்கும் அதிகார அரசியல்- ஜனகனமண -2022

படம்
  ஜனகனமண பிரிதிவிராஜ் சுகுமாரன் (நடிப்பும், தயாரிப்பும்) மம்தா மோகன் தாஸ்  இசை - ஜேக்ஸ் பிஜாய்    கல்லூரி பேராசிரியர் சபா, வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்படுகிறார். அவர் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணியாற்றி வருகிறார். அவரின் இரங்கல் கூட்டத்தை கூட  அதன் தலைவர் விட்டேத்தியாக நடத்துவதோடு அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் பல்கலைக்கழகம் முழுக்க போர்க்களமாகிறது. காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாக்க ரணகளமாகிறது சூழ்நிலை. இதை விசாரிக்க ஏசிபி சாஜன் குமார் நியமிக்கப்படுகிறார். சபா என்ற பெண்ணைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.  படத்தின் நாயகன் சாஜன் குமாராக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடுதான். தொடக்க காட்சியில் பிரிதிவிராஜை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அதற்குப் பிறகு தொடரும் காட்சிகளில் சபாவின் வழக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, பிரிதிவிராஜ் திரையில் வருகிறார். முதல்முறை வந்தது போல இளமையாக அல்ல. மத்திய வயது ஆளாக, ஒரு கால் செயலிழந்தவராக , வழக்குரைஞராக இருக்கிறார். படத்திற்கு இரண்டாவது பாகத்திற்கான முன்னோட்டத்தையும் கொடுத்து விட

ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில் கோவிட் மரணங்களை எப்படி மறைக்க முடியும்? - சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

படம்
            நேர்காணல் கே . கே . சைலஜா தற்போதைய நோய்த்தொற்று என்பது நிபாவை விட எப்படி வேறுபட்டது என்கிறீர்கள் ? நிபா நோ்ய்த்தொற்றுதான் எங்களை இன்று எச்சரிக்கையாகவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் உதவின . நிபாவின் மரண சதவீதம் அதிகம் என்றாலும் கோவிட் 19 அளவுக்கு வேகமாக பரவ வில்லை . கோழிக்கோட்டிலுள்ள வௌவால்கள் மூலம் நிபா பரவியது . எனவே நாங்கள் மக்களை வெளியே வரவேண்டாம் என்று சொன்னோம் . கோவிட் 19 வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வந்தது . கேரளத்திலுள்ள விமானநிலையங்கள் நான்கு . அதன் மூலம் வந்திறங்கிய மக்கள் மூலம் நோய்த்தொற்று வேகமாக பரவியது . இதனால் 14 மாவட்டங்களில் உடனடியாக நோய்த்தொற்று பரவி பாதித்தது . இரண்டாவது அலை பரவுவதால் , மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா ? பொதுமுடக்கம் என்பது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை . எனவே , மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று நினைக்கிறேன் . மக்களை ஏற்கெனவே அடைத்து வைத்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இப்போது நோயிலிருந்து மக்களை காப்பாற்றவே முயன்று வருகிறோம் . கொர