இடுகைகள்

ஜோஹோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாங்கள் மக்களிடம் முதலீடு செய்கிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ

படம்
  ஶ்ரீதர்வேம்பு, ஜோஹோ நிறுவன இயக்குநர் ஶ்ரீதர் வேம்பு படம் - மனிகண்ட்ரோல் ஶ்ரீதர் வேம்பு நேர்காணல்   உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டங்களைப் பெற்றவர்கள் அல்ல. தொழில்நுட்பத் துறையில் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகளைப் பார்க்க முடிகிறது. ஒருவர், இரண்டு வேலைகள் செய்து வாழவேண்டியிருக்கிறது. திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு ஏறபட்டிருக்கிறதா? இந்த பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்? சந்தையில் நிறைய நிறுவனங்கள் திறமைசாலிகளை தேடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களை வழிகாட்டி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல யாரும் முயல்வது இல்லை. நாங்கள் அந்த பணியை செய்கிறோம். இதன் மூலம் ஊழியர்களின் திறன் உயர்கிறது. அவர்கள் எங்களோடு விசுவாசமாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் மூலமே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர்கிறது. நாங்கள் தொழிலில் முதலீடு செய்வதை விட மக்களின் மீது முதலீடு   செய்கிறோம். மூன்லைட்டிங் (இரு நிறுவனங்களில் பணிகளை செய்வது) பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொறியாளர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு

31 வயதில் 120 பேர்கொண்ட குழுவுக்குத் தலைவர்! - ஜோஹோ பள்ளியின் சாதனைக் கதை

படம்
  ஸ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ பொதுவாக தமிழ்நாட்டில் சாதித்து பெரிய இடங்களுக்கு நகர்பவர்கள், எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். விவசாயிகள், வீட்டுவேலை செய்பவர்களாகவே இருப்பார்கள். இந்தியளவில் எடுத்துக்கொண்டால், பஞ்சாப்பின் புதிய முதல்வரின் அம்மா, பள்ளிக்கூடத்தில் கூட்டிப்பெருக்கும் வேலை செய்தவர், செய்து வருபவர்தான்.  செய்யும் வேலையை புனிதப்படுத்துவதற்காக சொல்லவில்லை. சாதிரீதியாக, திறன் ரீதியாக நிறைய வேறுபாடுகள் இங்குள்ள மனிதர்களுக்கு இடையே உள்ளது என்பதை கூறவே முந்தைய பாரா.  பார்த்திபனுக்கு வயது 31. ஜோகோ நிறுவனத்தின் மேனேஜ் எஞ்சின் என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். புரோடக்ட் மேனேஜராகப் பணி. இந்தப் பணியில்தான் 120 பேரைக் கட்டி மேய்க்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபனுக்கு இருந்த கனவு, கட்டுமானக் கலைஞர் ஆவதுதான். ஆனால் அவரது குடும்பம் இருந்த பொருளாதார நிலையில் அது சாத்தியமில்லை என விரைவில் தெரிந்துகொண்டார். நான்கு பேர் கொண்ட குடும்பம், மாதம் அப்பா சம்பாதிக்கும் 3 ஆயிரத்தில்தான் நடந்து வந்தது. ஆங்கிலப்பள்ளியில் படித்தவர்கள், வருமானப் பற்றாக்குறையால் அங்கிருந்து வெள

டெக் நிறுவனத் தலைவர் இப்போது ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்! - ஶ்ரீதர் வேம்புவின் புதிய ஐடியா!

படம்
        டெக் தலைவர் இப்போது ஆசிரியர் ஜோஹோ கார்ப்பரேஷன் தலைவர் யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருநூறு கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு கொண்ட நிறுவனம் என இதனை போர்ப்ஸ் நிறுவனம் அட்டவணைப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் இயக்குநர், அண்மையில் தனது நிறுவனத்தை தென்காசிக்கு மாற்றினார். கடந்த ஆண்டு இவர் செய்த இந்த மாற்றம், முக்கியமானது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்கள் செலவுகளை குறைத்து வீட்டிலேயே பணி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இவர் கொரானோ பாதிப்பிற்கு முன்னமே இந்த முயற்சியை செய்துவிட்டார். இப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியராகவும் மாறிவிட்டார். தென்காசியிலுள்ள மத்தாளம்பாறை கிராமத்திற்கு நிறுவனத்தை மாற்றியவர், குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கத் தொடங்கினார். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இதனை செய்யத் தொடங்கியவர், இப்போது நான்கு ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி 52 மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார். இம்மாணவர்கள் அனைவரும் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்தவர்கள். ''நான் தொடங்கியுள்ள கல்வி  ஸ்டார்ட்அப் இது. கல்வி,உணவு இலவசமாக கொடுத்து பாடங்களை சொல்லித்தர