பட்ஜெட் 2020 - மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!
பட்ஜெட்டை இரண்டு மணிநேரம் வாசித்து சாதனை செய்திருக்கிறார் நிதி அமைச்சர். புதிய அறிவிப்புகள் பெரும்பாலும் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான அம்சங்களாகவே இருக்கின்றன. இந்த பட்ஜெட்டில் சில விஷயங்கள் விலை குறையும். சில விலை ஏறும். அவை பற்றி பார்ப்போம். மதிப்பிற்குரிய பெற்றோர்களே, குழந்தைகளுக்கு இறக்கமதி டின் உணவுகள், பொம்மைகள் வாங்கிக் கொடுத்துத்தான் வளர்ப்போம் என நீங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் நெஸ்லே நான் புரோ உணவு ரூ.1,200 லிருந்து ரூ.1,340 ஆக விலை உயர்கிறது. பார்பி பொம்மையுஉம் கூட 800 ரூபாய் விலை கூடுகிறது. உடல் ஆரோக்கியத்தை உயிராக கருதுகிறீர்களா? அப்படி உடலைப் பராமரிக்க நீங்கள் சாப்பிடும் பருப்பு வகைகளும், ஷூ, செருப்புகளும் விலை ஏறுகின்றன. கலிஃபோர்னியா வால்நட் பருப்புகள் 850 லிருந்து 1280 ரூபாயாக விலை எகிறுகிறது. நைக் ஷூக்கள் 8,999 ரூபாயிலிருந்து 9,749 ரூபாயாக விலை உயர்கிறது. உள்நாட்டு வரி பர்னிச்சர் பொருட்களுக்கு கூடுகிறது. இதனால் சோபா, மெத்தை, எல்இடி விளக்குகளுக்கு நீங்கள் காசு அதிகம் செலவழித்தால்தான் உங்கள் வீட்டுக்கு வரும். நீங்கள் ஐகியா இறக்குமதி படுக்கை ஒன்றை வாங்க 5