இடுகைகள்

தேநீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டீ இஸம் - அகாகுரா காகுஸோ - மின்னூல் வெளியீடு - விரைவில்.....

படம்
  விரைவில்...

சிறுநீரக அமைப்பு எப்படி செயல்படுகிறது? - அறியாத புதிய தகவல்கள்

படம்
            சிறுநீர் அமைப்பு எப்படி செயல்படுகிறது ? உடலில் அறுபது சதவீதம் நீர் உள்ளது . அப்படி நீர் இருப்பதுதான் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது . ரீனல் அமைப்புதான் உடலில் உள்ள நீரின் தன்மையைக் கட்டுப்படுத்தி தேவையில்லாத கழிவுகளை சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது . இந்த அமைப்புதான் சரியான அளவில் சிறுநீரை வெளியேற்றி உடலிலுள்ள நீரின் அளவை கண்காணிக்கிறது . இதில் பாதிப்பு ஏற்படும்போது மனிதர்களுக்கு கழிவுநீர் ரத்தத்தில் கலக்கும் ஆபத்து உள்ளது . சிறுநீர்ப்பையில்தான் பெரும்பாலான கழிவுநீர் தேக்கப்பட்டிருக்கும் . இதன் கொள்ளளவு எட்டும்போது சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் தோன்றும் . இதன் வேகம் அதிகரிக்கும்போதுதான் முட்டுச்சந்து என்றால் உடனே ஜிப்பை இறக்கி ஆக்ரோஷத்தை தணிக்கிறோம் . சிறுநீரகத்தில் நெப்ரான்கள் உள்ளன . இவற்றில் உள்ள ஃபில்டர்தான் , குளோமெருலஸ் . இதில் ரத்த நாளங்களின் வலையமைப்பு உள்ளது . இவற்றில் உள்ள சுவர் போன்ற அமைப்பு , கழிவுகளை வடிகட்டுகிறது . இப்படி வடிகட்டிய நீர் ட்யூபில் என்ற இடத்திற்கு செல்கிறது . சோடியம் , பொட்டாசியம் , புரதம் ஆகியவை உறிஞ்சப்பட்டு கழிவ

ஒரு கப் தேநீரில் என்ன இருக்கிறது என தெரியுமா?

படம்
  உலகம் முழுக்க பல கோடி மக்களால் பருகப்படும் பானம் தேநீர். பிரிட்டிஷார் காலத்தில் அதிகம் பயிரிடப்பட்ட பணப்பயிர், இன்றளவும் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாக உள்ளது. பொதுவாக மக்கள் டஸ்ட் டீயை குடித்து வந்தாலும், இதில் ஆறு வகைகள் உள்ளன. கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஊலாங், பு RCH  என ஆறு வகைகள் இன்று சந்தையில் உள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். இல்லையெனில் அரசு கடைகளான டேட்டீ கிளைகளில் பல்வேறு வகை டீ வகைகள் கிடைக்கின்றன. காபியை விட டீயில் காஃபீன் அளவு அதிகம். ஆனால் தேயிலையை தூளாக மாற்றும் பல்வேறு படிநிலைகளில் காஃபீன் அளவு குறைந்துவிடுகிறது. ஒரு கப் டீயில் 50 மி.கி. காஃபீன் உள்ளது. அதேயளவு காபியில் 175 மி.கி. காஃபீன் உள்ளது. காரணம் தேயிலைக்கும், காபி கொட்டைகளுக்கும் உள்ள வேறுபாடுதான். இதனால்தான் டீயை விட்டுத்தர முடிந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் காபியை பலரும் விட்டுத்தர முடியாமல் அடிமையாக மாறக் காரணம் அதிலுள்ள காஃபீன்தான். இன்று டீயிலும் கூட பல்வேறு கலப்படங்கள் வந்துவிட்டன. டீ, காபி இயல்பாகவே உடலை ஊக்கமூட்டும் தன்மை கொண்டது.

தேநீர் தயாரிக்கப்படுவதில்தான் சிறப்பு இருக்கிறது!

படம்
டீ குடிப்பது இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் மிகவும் பிரபலம். கோடிப்பேருக்கு மேல் அங்கு டீ குடித்து மகிழ்கின்றனர்.முன்னர் இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவிலும டீ குடிப்பதற்கு பெரும் மவுசு உண்டு. டீயில் பெரும்பாலும் தேயிலையையின் துவர்ப்புக்காக அதனை மேட்ச் செய்த பால் ஊற்றி குடிக்கின்றனர். இன்று பிளாக் டீ குடிப்பது ஃபேஷனாகி வருகிறது. இதோடு ஸ்பெஷல் டீ, லெமன் டீ என நிறைய வகைகள் உருவாகிவிட்டன. குறிப்பாக சாய்கிங் போன்ற ஸ்டார்ட் அப்கள் டீயின் தரத்தையும் விலையையும் காபிக்கு நிகராக கொண்டு வந்து விட்டனர். டீயில் என்ன முக்கியம்? நன்கு உலர வைக்கப்பட்டு அரைத்த தேயிலை. அதில்தான் வொய்ட் டீ, பிளாக் டீ, ஊலங் டீ, புவெர் டீ ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவது டஸ்ட் டீ ரகம். இது தேயிலையில் மூன்றாவது தரம். முதல் தரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் டீ, பால் சேர்க்காமல் அருந்தப்படுகிறது. கிழக்காசியாவில் க்ரீன் மிகவும் பிரபலமாக உள்ளது. கேமெலியா சினென்சிஸ் என்ற தாவரத்திலிருந்து தேயிலை பறிக்கப்பட்டு டீ தயாரிக்கப்படுகிறது. இ

டீக்கப்பில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்!

படம்
மெக்கில் பல்கலைக்கழகம் நாம் பயன்படுத்தும் டீ பேக்குகளில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் வெளியாகியுள்ளன. டீ பேக்குகளில் பதினாறு மைக்ரோகிராம் இருப்பதுதான் இன்று சர்ச்சையாகி உள்ளது. இதில் மட்டும்தான் என்றில்லை. முன்பே மீன், தேன், பீர் போன்றவற்றில் பிளாஸ்டிக் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருந்தனர். தற்போது தேயிலையின் முறை. டீபேக்குகளில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்குகள் உங்களைக் கொன்றுவிடும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால் அவை உயிரினங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படும்தும் என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நதாலி டுஃபென்ஜி. டீ பேக்குகளில் சிலிகான் பேக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சிலிகான் செய்யப்பயன்படுத்தும் வேதிப்பொருட்கள்தான் உடலை குலைக்கின்றன. பாலி எத்திலின் டெரப்திலின் எனும் பொருள் இது. 2017 ஆம் ஆண்டு இந்தியா பயன்படுத்தும் டீ பேக்குகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உள்ளது. இதற்கடுத்து சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையில் டீ குடிக்கின்றனர். இந்தியாவில் இதுதொடர்பான தகவல்கள் இன்னும் முறையாக சேகரிக்கப்படவில்லை. நன்றி: டவுன் டு எர்த்

சுந்தரசாமியுடன் தேநீர் குடித்தபோது... கடிதங்கள்!

படம்
நூல்வெளி தேநீர் குடிக்கவெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. சு.ரா பற்றி அறச்சலூர் சிவராஜ் ஏராளமான பதிவுகளை எழுதி வருகிறார். ஏதேனும் ஒருவகையில் மெய்யருள் போன்றவர்களும் அவரின் வார்த்தைகளை மெய்மறந்து கூறும்போது அவரின் நினைவுகள் தோன்றும். சு.ரா பற்றி முருகு கூறியபோது, பெரிய ஆச்சரியம் தோன்றியது. வார்த்தைகளை திருத்தி செம்மையாக்கி எழுதுவார் என்று கூறினார். அப்படித்தான் புளியமரத்தின் கதை நூலைப் படித்தேன். நாவல் படித்தாலும் அதனை வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்றவாறு படிக்கவேண்டும் என்பதை நான் நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் இந்த நாவலைப் படிக்கவேண்டும். அறச்சலூர் பிரகாஷ், அன்று  காவல்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். இன்று அவர் பதவி உயர்வு பெற்று ஊர் நீங்கிச்சென்றுவிட்டார். அன்று, தீவிரமாக பல்வேற நூல்கள் படிப்பதும், திரைப்படங்களைப் பார்ப்பதுமாக இருந்தார். இதில் ஆச்சரியம். அவரிடம் படிப்பவர்களைப் பற்றி அங்கதம் கேட்பதற்கு படு சுவாரசியமானது. புத்தகங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் கடன் கொடுக்க மாட்டார்கள். பிரகாஷ் அண்ணா என்னை நம்பிக் கொடுத்தார். புத்தகத்தைப் படித்துவிட்டு நானும் சரியா

டீ குடித்தால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் என்னாகும்? ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய டஸ்ட் டீயையே இன்றுவரை ரசித்து குடித்து பழகிவிட்டோம். இதிலும் நிறைய வகைகள் உண்டு. இதில் பயன்படுத்தும் பூச்சிமருந்துகளின் பாதிப்பும் நம் உடலில் தாக்கம் ஏற்படுத்துகிறது. விஷயம் டீ பாதிப்பு தருமா? என்றால் பெரியளவு கிடையாது. டீயில் பாலிபெனல் எனும் ஆன்டி ஆக்சிடன்ஸ் உண்டு. இந்தியர்கள், சீனர்கள், ஆங்கிலேயர்கள் அதிகம் டீ அருந்தும் வழக்கம் கொண்டவர்கள். ஒரு நாளுக்கு மூன்று கப் என்பது சரியான அளவு. இந்த அளவு ஆன்டி ஆக்சிடன்ஸ் மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு கப்பில் 40 கிராம் காபீன் டீயில் இருக்கிறது. இது காபியை விட பாதிதான். அமெரிக்காவில் உள்ள பெண் ஒருவர் டீ குடித்து தன் பற்களை இழந்தார். காரணம், பதினேழு ஆண்டுகளில் 150 டீ பேக்குகளை ஐஸ் டீயாக போட்டு குடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். நன்றி: பிபிசி

சிலோன் டீ குடித்தால் பயன் உண்டா?

படம்
Monterey Bay Spice Company சிலோன் டீ பருகலாமா? சிலோன் டீ என்பது இலங்கையில் தயாராகும் ஆன்டி ஆக்சிடன்ஸ் நிறைந்த தேநீர். காமெலியா சினென்சிஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த தேயிலையில் மைரிசெடின், க்யூவர் செடின் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடன்ஸ் உண்டு. காஃபீன், மாங்கனீஸ், கோபால்ட், குரோமியம் ஆகிய வேதிப்பொருட்கள் இத்தேயிலையில் உண்டு. காஃபீன் உள்ள பொருட்களில் கொஞ்சம் பிரச்னைகள் உண்டு. தூக்க குறைவு, செரிமானப் பிரச்னை, பதற்றம் ஆகியவற்றை சிலோன் டீயும் ஏற்படுத்துகிறது. 237 மி.லி நீருக்கு ஒரு டீஸ்பூன் 2.35 கிராம் தேயிலை எடுத்து போட்டால் போதும். நன்றி: ஹெல்த்லைன்