இடுகைகள்

india லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜிஎஸ்டி சந்திக்கும் சவால்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி சந்திக்கும் சவால்கள் என்னென்ன? ஒரே நாடு ஒரே வரி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி. இன்று நாடு முழுக்க சுணக்கம் கண்டுள்ளது. அரசு பட்ஜெட்டில் எதிர்பார்த்தபடி வரிவருவாய் கிடைக்கவில்லை. ஜிஎஸ்டி வரியைக் கட்டுவதில் தொழில்முனைவோருக்கு ஏற்பட்ட குழம்பம்தான் இதற்கு முக்கியக் காரணம். பிராண்டுகள் இல்லாத பனீர், தேன், சானிடரி நாப்கின், கைத்தறி உடைகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட வரி, மக்களின் எதிர்ப்புக்குள்ளானது. பின்னர் அவை வரிபட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. ஜிஎஸ்டி உருவான விதம் பற்றி சுருக்கமாக பார்ப்போம். 2003 ஆம் ஆண்டு பொருளாதாரவியலாளரான விஜய் கேல்கர் கமிட்டியால், ஜிஎஸ்டி வரி பற்றிய கருத்து வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி வரி பற்றிய கருத்தை வெளியிட்டார். 2010 ஆம் ஆண்டு இவ்வரி அமலாகும் என்று கூறப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசுகள் இணைந்து ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் தொடங்கியது. 2011ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி மசோதா சட்டத்திருத்தமாக, சட்டம் 115படி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இதுபற்றி ஆராய நிதி அமைச்...

பொய் சொல்வது எதனால்?

 மூளை, ஒருவர் சொல்லும் பொய்யை ஏற்றுக்கொள்கிறதா? மூளை, ஒருவரின் ஆளுமையை தெளிவாக உருவாக்கி வைத்திருக்கிறது. அதை பாதிக்கும் விதமாக பொய்கள் கூறப்பட்டால் அதை முதலில் ஏற்காதுதான். ஆனால், தொடர்ச்சியாக பொய்களை சொல்லிக்கொண்டே இருந்தால் மனதில் குற்றவுணர்ச்சி குறைந்து அதை ஏற்றுக்கொண்டுவிடும். வலதுசாரி மதவாத கட்சி உறுப்பினர்கள், இப்படி பொய்களை சொல்லியே பிழைப்பு நடத்தி தாங்கள் சொல்வது தங்களது நன்மைக்கு என கூறிக்கொள்கிறார்கள். இதனால்தான் விமான விபத்து நடந்தால் கூட அந்த இடத்தில் நின்று இன்ஸ்டா ரீல்ஸ் போட முடிகிறது. அழகான புகைப்படங்களை எடுக்க முடிகிறது. தாங்கள் செய்யும் செயல் யாரையும் காயப்படுத்தாது என அவர்களாகவே நம்பிக்கொள்கிறார்கள். வலதுசாரி மதவாதிகளின் உலகம் முழுக்க கடந்தகாலத்தில் இருப்பது. அவர்கள் வேற்றுமதம் அல்லது எதிரிகளாக கட்டமைக்கப்பட்டவர்களின் கல்லறைகளைத் தோண்டி அதை வைத்து பிழைப்பு செய்வார்கள்.  மூளைக்கு தொடக்கத்தில் பொய் சொல்லும்போது தடுமாற்றம் இருக்கும். பொய்யை உடல் ஏற்று ஒத்துழைக்காது. எனவே, பொய் சொல்லும்போது ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை எதிரில் உள்ளவர் எளிதாக அறியலாம். உடல் அசை...