இடுகைகள்

சஞ்சய் காந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி

படம்
        மாருதி 800 காரை உருவாக்கிய கர்த்தா - ஒசாமு சுசுகி அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகனின் விருப்பமான கார் மாருதி 800. பிஎம்டபிள்யூவைத் தாண்டி மாருதி காரையே முன்னாள் பிரதமர் நம்பினார். மக்களின் காரான மாருதி 800 ஐ உருவாக்கி சாலைகளில் ஓடவைத்த ஒசாமு டிசம்பர் 25 ஆம் தேதி மறைந்தார். 1930ஆம் ஆண்டு பிறந்தவருக்கு ஒசாமு மட்சுடா என்பதான் வைக்கப்பட்ட பெயர். பின்னாளில் சுசுகி மோட்டார் கார்ப் நிறுவன குடும்பத்தில் பெண் எடுத்த காரணமாக ஒசாமு மட்சுடா மாறி ஒசாமு சுசுகி என்றானது. இந்தியாவில் தொழில் தொடங்க முடிவெடுத்ததே ஒசாமுவின் துணிச்சலான குணத்திற்கு சான்று. அப்போது கார்களின் சந்தையே நாற்பதாயிரம் கார்கள் என்றுதான் நிலை இருந்தது. பதினான்காயிரம் பேர்களில் ஒருவர் காரை வாங்கிப் பயன்படுத்தி வந்தார். அன்றைய காங்கிரஸ் அரசு, மாருதி என்ற நிறுவனத்தை தொடங்கி சுசுகியுடன் கைகோர்த்து கார் ஒன்றை உருவாக்க முனைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் ஆர்சி பார்க்கவா, வி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். அன்றைய சூழலில் ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு வாகனமாக சுசுகி தடுமாறிக்கொண்டிருந்தது.  ...

மாருதி 800 கார் உருவாக்கம் சஞ்சய் காந்தியின் கனவா? இந்தியா 75

படம்
  இந்திய அரசு, 1950களில் மக்களுக்கான சிறிய காரை உருவாக்க வேண்டும் என நினைத்தது. ஆனால் அப்போது நிறைய விதிமுறைகள் இருந்ததால் ஐடியாக்கள் காகிதங்களோடு அப்படியே மூடி வைக்கப்பட்டன. கார்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவேண்டும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒன்றாக இணையவேண்டும் என்ற சூழல் இருந்தது.  அரசு, தனியார் கார் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து கார் தயாரிப்புக்கான உரிமங்களை தருகிறோம் என்று கூறியது. இதற்கு பதினெட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. டெல்கோ என்ற நிறுவனம் முக்கியமானது. இன்றைய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் அது.  ஆனால் சஞ்சய் காந்திக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. அவரைப் பொறுத்தவரை கார்களின் தயாரிப்பு அவரது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென நினைத்தார். வெளிநாட்டில் இருந்தபோது, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் படித்தார் என்று கூறப்பட்டது. பின்னாளில் அந்நிறுவனம், இயந்திர பொறியியலில் சஞ்சய்க்கு குறைந்த திறமையே இருந்தது. அவருக்கு அதைக் குறிப்பிட்டுத்தான் சான்றிதழ் வழங்கினோம் என்று கூறியது.  பழைய டெல்லி அருகே வாடகைக்கு காரேஜ் ஒன்றை சஞ...

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிஜமான நடுத்தர வர்க்க கனவு! - இந்தியா 75

படம்
  இந்தியாவில் தொண்ணூறுகளில்தான் தாராளமயமாக்கல் தொடங்கியது என்று கூறுகிறார்கள். உண்மையில் இதற்கான முன்னேற்பாடுகள் 1980களிலேயே தொடங்கிவிட்டன. இதனை தொடங்கியவர் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி. இவர் நடுத்தர வர்க்க மக்கள் வாங்கும்படியான காரை தயாரிக்க விரும்பினார். இப்படித்தான் மாருதி உத்யோக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனம் மாருதி சுசுகியாக மாறிவிட்டது.  சஞ்சய் காந்தியின் கனவு இன்று நிஜமானாலும் கூட அதைப் பார்க்கும்வரை அவர் உயிரோடு இல்லை. 1980ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்துவிட்டார். இந்திய அரசு ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து மாருதி காரைத் தயாரித்தது.  ஹர்பால்சிங் தனது காருடன்.. கார் எளிமையாக இருக்கவேண்டும். விலையும் பாக்கெட்டை ஓட்டையாக்காமல் இருந்தால் நல்லது என்ற விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கினார்கள். டெல்லியில் அதன் விலை 52, 500ஆக இருந்தது. 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய முன்பதிவு விறுவிறுவென பிரமாதமாக இருந்தது. 1.35 லட்சம் பேர் மாருதியை வாங்க ஆர்வமாக இருந்தனர். தயாரிக்கப்பட்ட கார்கள் அதே ...