இடுகைகள்

ஓப்பன் ஏஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

15 நொடி குரல் இருந்தால் போதும்- பேச்சு, பாட்டு எதையும் உருவாக்க முடியும்!

படம்
  ஏஐ மூலம் எந்த குரலிலும் எந்த மொழியிலும் பேசலாம்! ஓப்பன் ஏஐ நிறுவனம், அடுத்த சர்ச்சைக்குரிய தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இதன்படி, ஏதேனும் ஒருவரின் குரலைக் கொடுத்தால், அதை வைத்து தேசியகீதம் பாடச்சொன்னால் அல்லது குத்துப்பாட்டு பாடச்சொன்னால் கூட அதைச் செய்யமுடியும். மார்ச் 29 வெளியாகியுள்ள இந்த குரல் எஞ்சினில் ஒருவர் பதினைந்து நொடிக்கு குறையாத ஆடியோ கிளிப் ஒன்றை பதிவேற்றினால் போதும். அதை வைத்து, பல்வேறு மொழிகளில் அந்த குரலை பேச வைத்து பாடவைத்து மஜா செய்ய முடியும். தற்போதைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குரல் எஞ்சின் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கு குரல் வழியாக பாடங்களை எளிதாக நடத்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும் இது பிரயோஜனமாக இருக்கும். எழுத்து வழியாக ஒலி என்ற நோக்கத்தில் குரல் எஞ்சின் செயல்படுகிறது. மாணவர்களுக்கு பல்வேறு குரல் சாம்பிள்களை வைத்து குரல் பதிவுகளை உருவாக்கி பாடங்களை நடத்த முடியும். படிக்கத் தெரிந்தவர், தெரியாதவர் என அனைவருக்கும் பயன்படும்படியான படைப்பு இது. இதன் தயாரிப்பில் சாட்ஜிபிடி 4 பயன்பாடும் உள்ளது.        2022ஆம் ஆண்டு தொடங்கி, குரல் எஞ்சின் ஆராய்ச்சி

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மக்களின் அனுபவம்தான் முக்கியம் - சாம் ஆல்ட்மேன்

படம்
  சாம் ஆல்ட்மேன், ஓப்பன் ஏஐயின் இயக்குநர். இவர் தலைமையிலான குழுதான் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை வெளியிட்டது. ஓப்பன் ஏஐ தொடங்கி ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது. பணியாளர்கள் 500பேர். இவர்கள் செய்துள்ள பணி இணையத்தையே இன்று மாற்றிவிட்டது.  தமிழில் வரும் நாளிதழ்கள் கூட சாட்ஜிபிடி மாடலை தனது நிருபர்களுக்கு வழங்கி அதைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்தளவுக்கு ஜோக் முதல் பாட்டு, ரெஸ்யூம், பள்ளி மாணவனுக்கான கட்டுரை என அனைத்தையும் எழுதி வருகிறது சாட்ஜிபிடி. கேள்விகளை சரியாக கேட்க தெரிந்தால் உங்களுக்கு பதிலும் சிறப்பாக தெளிவாக துல்லியமாக கிடைக்கும்.  சாம் ஆல்ட்மனிடம் பேசினோம்.  சாட்ஜிபிடியை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? எனது மின்னஞ்சலில் உள்ள அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் கடிதங்களை எடுத்து குறிப்புகளாக்கி பார்ப்பேன். முக்கியமானவர்களின் மின்னஞ்சலை தனியாக எடுத்து வைப்பேன். அடுத்து, சந்திக்கவிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை மொழிபெயர்த்து வைத்து படிப்பேன். பிறகு அதன் வழியே சந்திப்புக்கு தயாராவேன். இப்போதைக்கு அவ்வளவுதான்.  அறி

செயற்கை நுண்ணறிவில் சாதனை படைக்கும் தொழிலதிபர்கள்!

படம்
  உர்டாசன், வாபி லீலா இப்ராகிம், டீப் மைண்ட் செயற்கை நுண்ணறிவின் பிரம்மாக்கள் டாரியோ, டேனியெலா அமோடெய் துணை நிறுவனர்கள், ஆந்த்ரோபிக்   ஆந்த்ரோபிக், லாபநோக்கற்ற ஏஐ ஆராய்ச்சி நிறுவனம். செயற்கை நுண்ணறிவை ஆராய்ச்சி செய்வது எளிதல்ல. அதற்கு தொடக்கத்திலேயே அதிக நிதி தேவை. எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ எக்சேன்ஞ்ச், சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் பெருமளவு நிதி பெற்று இயங்கி வருகிறது. ஓப்பன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய ஏஐ மாடல்களுக்கு நிகராக சாட்பாட், கிளாட் 2 ஆகிய மாடல்களை உருவாக்கியுள்ள நிறுவனம்தான் ஆந்த்ரோபிக். 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் டாரியோ இயக்குநராகவும், டேனியெலா தலைவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சகோதர உறவுமுறையைக் கொண்டவர்கள். இந்த நிறுவனத்தை ஏழு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தொடங்கினர். இவர்கள் அனைவருமே ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் என்பதுதான் முக்கியமான அம்சம். ‘’நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பற்றி வெளியில் அதிகம் பேசுவதில்லை. அதற்கு காரணம், அதை கார்ப்பரேட் அறிக்கை போல மாற்றவேண்டாம் என்ற நோக்கத்தில்தான்   ’’ என இயக்குநர் டாரியோ தெளிவாக பேசுகிறார