இடுகைகள்

இரா.முருகானந்தம். அன்பரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனமறிய ஆவல்! - அன்பரசு - இரா.முருகானந்தம் கடிதங்கள்!

படம்
கடிதங்கள் pixabay அன்பரசு சண்முகம் - இரா.முருகானந்தம் 1 2012-2013 இந்த கடிதம் எழுதும்போது வேலை என்று ஒரு வார்த்தை வருகிறது. அந்த வேலை என்பது வீட்டில் சோறைத் தின்றுவிட்டு சும்மா சுற்றாதே என்று சொல்லி அப்பா கொடுத்த வேலைகள்தான். எங்கள் அப்பாவுக்கு தெரிந்த வேலை தேங்காய்களை வெட்டி, சுமந்து, காய வைத்து விற்பது. இக்காலங்களில் அதைத்தான் செய்து வந்தேன். அந்நேரத்தில்தான் தமிழ் கம்ப்யூட்டர், வளர்தொழில் இதழ்களில் கிடைத்த வேலையைச் செய்யமுடியாமல் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அன்புமிக்க ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் செய்த அப்பணி அப்போது வருத்தம் தந்தது. பின்னாளில் சென்னை புத்தகத்திருவிழாவில் அவரைப் பார்க்கும்போது அன்று மனதிலிருந்து வருத்தம், கோபம் எதுவுமே வரவில்லை.  என்னை நிருபராகவும், பத்திரிகைக்கான மார்க்கெட்டிங் ஆளாகவும் மாற்ற முயன்றார். என் உடல் இருந்த நிலையில் அதனை ஏற்க முடியவில்லை. அவ்வளவுதான். இந்த வேலை பறிபோனபிறகு சென்னையில் இருக்க முடியவில்லை. கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் தங்கியிருந்தேன். எனக்கு இறைவன் கொடுத்த சகோதரர், மிகச்சிறந்தவர் என்பதால் வி