இடுகைகள்

ஆழக்கற்றல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் மூளைத்திறனை தொட வாய்ப்புள்ளதா?

படம்
    cc     மிஸ்டர் ரோனி செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் மூளைத்திறனை தொட வாய்ப்புள்ளதா? 1950ஆம் ஆண்டு கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலம்தொட்டே செயற்கை நுண்ணறிவு சமாச்சாரங்கள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றை கணினியின் மூளை என்று முதலில் அழைத்தனர். செஸ் விளையாடுவத, மொழிகளை மொழிபெயர்ப்பு செய்வது ஆகியவற்றை முதலில் ஏ.ஐ செயதுவந்தது. மனித மூளையின் செயல்திறனுக்கு ஏற்ற வகையில் செயல்படும் என்று ஏ.ஐ முதலில் கருதப்பட்டது. கணினியின் செயல்திறனும், இணையமும் வேகமாக கூடியபோது, ஏ.ஐ அல்காரித ஆராய்ச்சியும் வேகம் பிடித்தது.கடந்த பத்தாண்டுகளில் நாம் தீர்க்க நினைத்த பல்வேறு பிரச்னைகளை ஏ.ஐ தீர்த்துவைத்துள்ளது. இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் திட்டங்கள், வணிகம் ஆகியவற்றின் அடிப்படையாக ஏ.ஐ உள்ளது. செயற்கை நுண்ணறிவில் என்னென்ன வகைகள் உண்டு? இன்று ஆழக்கற்றல் என்ற வகையில் சிறப்பானது என்று கூறும்படியான ஏ.ஐ கணினிகள் உருவாகி வருகின்றன. இவை மனிதர்களைப் போன்றவை. எப்படி வீட்டிலுள்ள குழந்தை தன் பெற்றோரைப் பார்த்து தாய்மொழியைப் பேசக் கற்கிறதோ அதைப்போல, ஆழக்கற்றல் ஏ.ஐ கணினி, பல்வேறு பேச்சுகளை அடையாளம் கண்டுபிடித்து சேகரித்த