இடுகைகள்

சுவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்னுடைய விமர்சனம் நேரடியானது, கையால் செய்யும் ரொட்டிக்கு தனி சுவையுண்டு - பால் ஹாலிவுட்

படம்
  பால் ஹாலிவுட், சமையல் கலைஞர் பால் ஹாலிவுட் டிவி நிகழ்ச்சி நடுவர், எழுத்தாளர் தி கிரேட் பிரிட்டிஷ் பேக்கிங் ஷோ நிகழ்ச்சியில் முன்னர் இருந்ததை விட தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட வசதிகள் அதிகரிப்பது சிறந்த சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். அதிகரிக்கப்பட்ட வசதிகள், சமையல் கலைஞர்களின் திறனை வெளிக்காட்ட உதவும். நீங்கள் நடத்தும் நிகழ்ச்சி நட்பு சார்ந்த நிகழ்ச்சியாகவே இத்தனை ஆண்டுகாலமும் உள்ளது. எப்படி இதை சாத்தியப்படுத்தினீர்கள்? நான் சமையல் பற்றி கூறும் விமர்சன வார்த்தைகள் சிலநேரங்களில் கடுமையாக இருக்கும் என்பது உண்மை. நான் நேரடியாக என்ன விஷயமோ அதைக் கூறிவிடுவேன். பிற நிகழ்ச்சிகளில் அப்படியான நேரடியான விமர்சனம் இருப்பதில்லை. அவர்களுக்கு நெருப்பு பற்றவைப்பது என்பதெல்லாம் நிகழ்ச்சியின் ஒரு பகுதி. அவ்வளவுதான். பேக்கிங் செய்வது என்பது மக்களுக்கு ஆக்ரோஷமான ஒன்றாக தெரிவதை விட மென்மையாக தெரிவதை நான் விரும்புகிறேன். இந்தமுறை நிகழ்ச்சியில் உங்களுடன் ஆலிசன் ஹாமாண்ட் பங்கேற்கிறார். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சமையல் கலைஞர்கள்தான் நிகழ்ச்சியின் நட்சத்த

பொருட்களை வாங்கும்போது சுதாரிப்பாக இருக்கிறோமா, இல்லையா?

படம்
  பெப்சி தனது லோகோவை மாற்றியுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லோகோ மாற்றம் பெற்றுள்ளது. இதனால், அந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா இல்லையா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். கொக்க்கோலா, பெப்சி என இரண்டில் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது, கொக்ககோலாதான். இதற்கு அடுத்த இடத்தில்தான் பெப்சி உள்ளது. இப்போதும் இரு பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்று வருகிறது. கோலா நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1980ஆம் ஆண்டு கொக்க்கோலா தனது சந்தை லாபம், பெப்சியிடம்   செல்வதை உணர்ந்து, புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கியது. இனிப்பு சற்று கூடுதல். இதற்கான நான்கு மில்லியன் டாலர்களை அள்ளி இறைத்தது. மார்க்கெட்டில் ஏழு சதவீத விற்பனை உயர்வு கிடைக்கும் என திட்டம் போட்டது. ஆனால் சந்தைக்கு சென்றபிறகு, மக்கள் புதிய கொக்ககோலாவை ப்பருகினர். ஆனால் அதை தொடரவில்லை. அவர்களுக்கு பழைய கோலா போல சுவை இல்லை என்று தோன்றியது. எங்களுக்கு புதிய கோலா பிடிக்கவில்லை. பழைய கோலாவின் சுவை வேண்டும் என்று கருத்துகளை சொல்லத் தொட

வாசனையையும் சுவையையும் அறியும் சுவாரசிய சோதனை!

படம்
  உணர்வுகளோடு விளையாடு! தேவையான பொருட்கள் வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை,மாதுளை, கண்களைக் கட்டும் துணி, நண்பர் ஒருவர் செய்யவேண்டியது 1. மேற்குறிப்பிட்ட பழங்களில் இரண்டை(வாழைப்பழம், ஆப்பிள்) எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்றை முகர்ந்து பார்க்கவேண்டும். இன்னொரு உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இச்செயலை செய்யும்போது உங்கள்  கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். நண்பர் தான் உணவுப்பொருட்களை எடுத்துக் கொடுப்பார். தொடங்கலாமா? 2. உங்கள் நண்பரை அழைத்து கண்களை இறுக கட்டச்சொல்லிவிடுங்கள். அடுத்து அவர் ஒரு உணவுப்பொருளை (வாழைப்பழம்) உங்களுக்கு சாப்பிட கொடுக்கவேண்டும். அதேசமயம், இன்னொரு உணவுப்பொருளை (ஆப்பிள்) மூக்கில் அருகில் நீங்கள் அதனை வாசனையை அறியும்படி பிடிக்கவேண்டும். 3. மூக்கால் உணரும் வாசனை, உண்ணும்போது உங்களுக்கு தெரிய வரும் உணவுப்பொருளின் சுவை இரண்டையும் நீங்கள் கூறவேண்டும். இச்சோதனைகளை உணவுப்பொருட்களை மாற்றி செய்யலாம்.  கற்பது இதைத்தான்! பொதுவாக ஒருவருக்கு மூக்கால் முகரும் திறன் இல்லாதபோது பசி உணர்வு தூண்டப்படாது.  தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வாசனைகளை உணரும் திறனை இழப்பதற்கு அனோஸ்மியா (Anosmia)

உண்மையா? உடான்ஸா - எச்சில் இல்லாதபோது உணவின் சுவை அறிய முடியுமா?

படம்
  எச்சில் இல்லாதபோது மனிதர்களால் உணவின் சுவையை உணர முடியாது! உண்மை. உணவில் உள்ள பொருட்கள் முதலில் எச்சிலில் கரைந்தால்தான் நாவின் சுவை மொட்டுகளை அணுக முடியும். இதற்குப் பிறகுதான், அறுசுவை உணவாக இருந்தாலும் சாப்பிடலாம் என்ற உணர்வு தோன்றும். எச்சில்,  செரிமானத்திற்கு மட்டுமல்ல சுவை உணரவும் உதவுகிறது என்பதே முக்கியமான அறிவியல் உண்மை.  விண்வெளிக்கு செல்பவர்களின் உயரம் அதிகரிக்கும்! வினோதமாக இருந்தாலும் உண்மை. அங்குள்ள குறைந்த ஈர்ப்புவிசை மனிதர்களின் முதுகெலும்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆறு அடி உள்ளவர், விண்வெளிக்கு சென்று சில மாதங்கள் கழித்தால் 2 அங்குலம் உயரம் கூடியிருப்பார். இது நிரந்தரமானது அல்ல. பூமிக்கு திரும்பி சில மாதங்களுக்குப் பிறகு, உடல் முன்பிருந்த உயரத்தை அடையும் என சயின்டிஃபிக் அமெரிக்கன் வலைத்தளம் தகவல் கூறுகிறது.   மூளையின் அளவைப் பொறுத்து கொட்டாவியின் அளவு மாறும்!  உண்மையல்ல. சில ஆராய்ச்சிகள் மூளை, அதன் நியூரான்களின் எண்ணிக்கை பொறுத்து மாறும் என கூறுகின்றனர். ஆனால் உண்மையில் மூளையைக் குளிர்விக்கவே கொட்டாவி வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் 2016ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.

பெருந்தொற்று காலம் எனக்கு ஆராய்ச்சி செய்ய நேரத்தைக் கொடுத்தது! - அதிதி கார்வாரே, ஸ்வீட் பொட்டிக்

படம்
  அதிதி கார்வாரே, கேக் கலைஞர் அதிதி கார்வாரே, கேக் தயாரிப்பு கலைஞர் அதிதி கார்வாரே பேக்கர், கேக் தயாரிப்பு கலைஞர் சோசியோ லீகல் சயின்ஸ் படித்தவர். எல்எல்பி டிகிரியும் வைத்துள்ளார். ஆனால் வழக்குரைஞராக மாற வேண்டியவர், அந்த வழியை தேர்ந்தெடுக்கவில்லை.அதிதிக்கு வயது 31 தான் ஆகிறது. உலகளவில் சிறந்த சமையல் கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவத்தில் ஸ்வீட் பொட்டிக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் ஆறு ஆண்டுகளாக பல்வேறு கேக் வகைகளை தயாரித்து அலங்கரித்து தனது கடை வழியாக விற்று வருகிறார். கேக் மாஸ்டர் யுகே 2020 என்ற அமைப்பு மூலம் இந்தியாவின் டாப் 10 கேக் மாஸ்டர் என்ற பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் அதிதி கார்வாரே.  அல்டிமேக்ஸ் இந்தியா, மேஜிக் கலர்ஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருக்கிறார் அதிதி கார்வாரே.  பெருந்தொற்று காலத்தில் நீங்கள் அடையாளம் கண்ட நேர்மறையான விஷயங்களை சொல்லுங்களேன்.  இந்த காலகட்டத்தில் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அப்போது, நான் இனிப்புகளை, கேக்குகளை பற்றி ஆராய்ச்சி செய்தேன். முதலில் பரபரப்பாக வேலை செய்யும்போது ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லை. பெரு

உடலைக் காக்கும் பசி!

படம்
giphy மிஸ்டர் ரோனி பசி எடுக்கும்போது வயிற்றிலிருந்து பல்வேறு ஒலிகள் கேட்கிறதே? டிடிஎஸ் மிக்சிங் செய்யும்போது ஸ்டூடியோவில் வரும் ஒலியெல்லாம் கேட்கும். காரணம், உங்கள் குடல் இயல்பாகவே உணவை குடலுக்கு தள்ளிவிட முயற்சிக்கும். உணவு இருக்கும்போது சத்தம் வராது. உணவு இல்லாமல் வயிறு காலியாக இருக்கும்போது இந்த சத்தம் உங்களுக்கு மட்டுமன்றி, பக்கத்து சீட்டுக்காரருக்கும் கேட்கும். உடனே ஓடிப்போய், அருகிலுள்ள ஓட்டலில் சாப்பிட்டு விடுங்கள். வயிற்றில் வரும் அரவை மில் சத்தத்தை இப்படித்தான் நிறுத்த முடியும். உணவு இல்லாத பல்வேறு பொருட்களை ஒருவர் சாப்பிடக் காரணம் என்ன? உடல் உங்களுக்கு பசி, ஊட்டச்சத்து பற்றிய பல்வேறு சமிக்ஞைகளைக் கொடுக்கும். அதில் ஒன்றுதான் பற்றாக்குறையான சத்துக்களை நிறைவு செய்ய மாவுக்கற்கள், சாக்பீஸ் போன்றவற்றை சிலர் சாப்பிடுவார்கள். அவர்களைக் கேட்டால் ஏன் என்று சொல்லத் தெரியாது. அவர்களை சோதித்து பார்த்தால் உடலில் சத்துகள் பற்றாக்குறையாக இருப்பது தெரியும். ஆனால் இப்படி சாப்பிடும் பொருட்களால் மூளையில் டோபமைன் சுரக்கலாம். ஆனால் உடல் ஆலமரம் போல விரிவடைவதற்கான சிக்கல் இரு

கொத்துமல்லி சுவை ஓவ்வொருவருக்கும் மாறுபடுமா?

படம்
மிஸ்டர் ரோனி கொத்துமல்லியை சாப்பிடும் சிலர் அதை சோப்பின் சுவையுடன் ஒப்பிடுகிறார்களே அது ஏன்? காரணம், அவர்களின் உடல் அந்தளவு நுட்பத்தன்மையுடன் இருப்பதுதான். இதனால், கொத்துமல்லியை சுவைக்கும் ஐந்தில் ஒருவருக்கு அது சோப் சுவையைப் போல உள்ளதாக தோன்றுகிறது. இதற்கு காரணமான வேதிப்பொருள் அல்டிஹைடு. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 14 ஆயிரம் பேரின் டிஎன்ஏவை ஆராய்ந்தனர். அதில் இரண்டு டிஎன்ஏ மட்டும் மாறுபட்டு இருந்தது. அதுவே கொத்துமல்லியை சோப்பு சுவையில் காண்பித்த மனிதர்களுடையது. இவர்களின் மரபணுவில் அல்டிஹைடு இருப்பதே காரணம். நன்றி - பிபிசி

தேநீர் தயாரிக்கப்படுவதில்தான் சிறப்பு இருக்கிறது!

படம்
டீ குடிப்பது இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் மிகவும் பிரபலம். கோடிப்பேருக்கு மேல் அங்கு டீ குடித்து மகிழ்கின்றனர்.முன்னர் இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவிலும டீ குடிப்பதற்கு பெரும் மவுசு உண்டு. டீயில் பெரும்பாலும் தேயிலையையின் துவர்ப்புக்காக அதனை மேட்ச் செய்த பால் ஊற்றி குடிக்கின்றனர். இன்று பிளாக் டீ குடிப்பது ஃபேஷனாகி வருகிறது. இதோடு ஸ்பெஷல் டீ, லெமன் டீ என நிறைய வகைகள் உருவாகிவிட்டன. குறிப்பாக சாய்கிங் போன்ற ஸ்டார்ட் அப்கள் டீயின் தரத்தையும் விலையையும் காபிக்கு நிகராக கொண்டு வந்து விட்டனர். டீயில் என்ன முக்கியம்? நன்கு உலர வைக்கப்பட்டு அரைத்த தேயிலை. அதில்தான் வொய்ட் டீ, பிளாக் டீ, ஊலங் டீ, புவெர் டீ ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவது டஸ்ட் டீ ரகம். இது தேயிலையில் மூன்றாவது தரம். முதல் தரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் டீ, பால் சேர்க்காமல் அருந்தப்படுகிறது. கிழக்காசியாவில் க்ரீன் மிகவும் பிரபலமாக உள்ளது. கேமெலியா சினென்சிஸ் என்ற தாவரத்திலிருந்து தேயிலை பறிக்கப்பட்டு டீ தயாரிக்கப்படுகிறது. இ

இறைச்சி சுவையில் சைவ பலகாரங்கள் எப்படி உருவாயின?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி இறைச்சி சுவையில் முறுக்குகள் எப்படி உருவாகின்றன? இறைச்சி சுவையில் உருவாகும் பல்வேறு பிஸ்கெட்டுகள், முறுக்குகள் சைவ வகையைச் சேர்ந்தவைதான். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கு நாடுகளில் 2013 ஆம் ஆண்டு தொடங்கின. இன்று பல்வேறு இறைச்சி சுவையில் தின்பண்டங்களைத் தயாரித்து வருகின்றனர். இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள்தான் அதன் மணத்திற்கு காரணம், இவற்றை சூடுபடுத்தும்போது இறைச்சிக்கான தன்மை உணவில் உண்டாகிறது. இதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சைவ உணவுகள் ரெடியாகின்றன. அப்படியே அல்ல. தாவரங்களிலுள்ள அமினோ அமிலங்களான எல் - சிஸ்டெய்ன் எனும் அமினோ அமிலத்தை இதற்காக பயன்படுத்துகின்றனர். இதன்விளைவாக சைவத்திலும் நிறைய தின்பண்டங்கள் புதிய மணம் சுவையில் சாப்பிடக் கிடைக்கின்றன. நன்றி - பிபிசி

சில பானங்களை கூலிங்காக குடிக்கவேண்டிய அவசியம் என்ன?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி சில பானங்களை கூலிங்காக குடித்தால் நன்றாக இருக்கிறதே ஏன்? பொதுவாகவே மூளை கொடுக்கும் சிக்னல்களில்தான் நம் உடல் இயங்குகிறது. ஆச்சி மோர் குடிக்கலாமா, டெய்லி கம்பெனியின் பன்னீர்சோடா, அல்லது மாங்கனிச்சாறு குடிக்கலாமா என்பதெல்லாம் உங்கள் தாகம் பொறுத்ததல்ல. குறிப்பிட்ட பானங்களில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க வைக்கின்றன. எனவே குறிப்பிட்ட பானங்களை கேட்டு வாங்கிக் குடிக்கிறோம். பெப்சி போன்றவற்றை குளிர்ந்த நிலையில் இல்லாமல் குடித்தால் இரும்புச்சத்து டானிக் போலவே இருக்கும். எனவே அதனை கூலிங்காக குடியுங்கள் என அக்கம்பெனியே விளம்பரம் செய்கிறது. இந்த பானங்கள் நம் நாக்கிலுள்ள சுவை உணர்வை மட்டுப்படுத்துகின்றன. எனவே நமக்கு கோலா குடித்தால் நன்றாக இனிப்பாக உள்ளது போலத் தெரிகிறது. இதை எப்படி பார்க்கலாம் என்றால் டீ குடிப்பதை விட கூலிங் கோலா ஓகே என்றளவு மனிதர்கள் இதற்கு அடிமையாகிறார்கள். 

சில உருளைக்கிழங்கு வகைகள் மட்டும் சுவையாக இருப்பது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி சில குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்குகள் மட்டும் பிசைய சாப்பிட நன்றாக இருக்கிறதே ஏன்? உதயம் பருப்பு வகைகள் விளம்பரம் போல இருக்கிறது நீங்கள் கேட்பது. உபரி அதிகம் வரவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள் போல. உருளைக்கிழங்குகளை வேக வைத்து பிசைந்தால் நிறைய வருவது அதிலுள்ள ஸ்டார்ச் கையில்தான் உள்ளது. இதற்கென குறிப்பிட்ட வகைகள் உள்ளன. இவற்றை விதைத்து அறுவடை செய்து வேக வைத்து தாளித்து சாப்பிட வேண்டியதுதான். கிங் எட்வர்டு, மாரிஸ் பைபர் எனும் வகைகள் இதில் உங்களுக்கு உதவும். சார்லட் மற்றும் அன்யா ஆகிய வகைகள் குறைவான ஸ்டார்ச் கொண்டவை. இவற்றைப் பயன்படுத்துவதை விட மேற்சொன்ன வகைகள் சமைக்கவும் சாப்பிடவும் சிறப்பாக இருக்கும். பெப்சிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் சிப்ஸ் வகைகள் அவர்களின் தனித்துவமான உருளைக்கிழங்குகள் மூலம் உருவாகின்றன. இதனால் அவர்களுக்கு ஏற்றபடி உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய முடிகிறது. இதனால் அவர்களின் உருளைக்கிழங்குகளை சீவினால் மிக நேர்த்தியாக வரும். நன்றி - பிபிசி

சர்க்கரையால் சத்தம் குறையுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சர்க்கரை கலக்கும்போது, ஸ்பூனில் எழும் சத்தம் குறைவாக இருக்கிறதே ஏன்? அநேகமாக நீங்கள் தனியாக காபி சாப்பிடும் பேச்சிலராக இருப்பீர்கள என டவுட்டாகிறது எனக்கு. இதையெல்லாம் கவனித்து கேள்வி கேட்கத்தோன்றுகிறதே ப்பா. பிரமிப்பாக இருக்கிறது. காபியில் ஏதும் கலக்காதபோது அங்கு ஒலிக்கு தடை ஏற்படுத்தும் பொருட்கள் ஏதுமில்லை. ஆனால் சர்க்கரை இதற்கு முதல் தடையாக வருகிறது. எனவே, சர்க்கரையற்ற டம்ளரில் ஸ்பூனால் கலக்கும்போது சத்தம் அதிகமாகவும், சர்க்கரை கலந்த கலக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஸ்பூன் டம்ளரில் மோதினால் ஒலி குறைவாக எழுகிறது. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

பல்துலக்கியவுடன் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் கசப்பது ஏன்?

படம்
ஏன்? எதற்கு ?எப்படி? மிஸ்டர் ரோனி பல் துலக்கியதும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் ஏன் கசக்கிறது? பற்பசையில் உள்ள சோடியம் லாரல் சல்பேட்தான், பிரஷ்ஷில் தேய்த்து பற்களிலுள்ள மாவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது. அதேசமயம், இந்த வேதிப்பொருட்கள் வாயில் நுரையை உருவாக்குகிறது. அதேசமயம் சுவை உணர்வு மொட்டுகளை மெல்ல உணர்விழக்க செய்கிறது. பாஸ்பாலிபிட்ஸ் எனும் வேதிப்பொருளை செயலிழக்க வைப்பதால், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும்போது உங்களுக்கு அதன் சுவை தெரிவதில்லை. இது ஆரஞ்சின் இனிப்பை மட்டுமே கட்டுப்படுத்தும், அதன் துவர்ப்பு கசப்பை அப்படியே உங்களுக்கு வழங்கி விடும். நன்றி: பிபிசி 

தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்? தூய நீர் என்பது உங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை மலரவைக்காது. அதற்காக அதில் எந்த சுவையும் இல்லை என நினைத்து விடாதீர்கள். உங்கள் எச்சிலிலுள்ள வேதிப்பொருட்கள் நீருடன் வினைபுரிந்தால் டாடா குளுக்கோ ப்ளஸ் லெவலுக்கு இல்லையென்றால் சற்றே இனிப்பது போல தோன்றும். நன்றி: பிபிசி