இடுகைகள்

குலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதி குலம் தெரியாத ராயலசீமா ரௌடியின் கதை! சீமா சிங்கம் - பாலைய்யா, சிம்ரன், ரீமாசென்

படம்
  சீமா சிங்கம் பாலகிருஷ்ணா, சிம்ரன், ரீமாசென், ரகுவரன், சரண்ராஜ்  ஜி. ராம் பிரசாத் வசனம் - பாருச்சி பிரதர்ஸ்  கதை - சின்னி கிருஷ்ணா தனஞ்ஜெய ராவ் என்பவரின் மகனை அவரது நண்பர் சந்திரசேகர் தனது பதவியுயர்வுக்காக காப்பாற்றத் தவறுகிறார். இதன் விளைவாக தீவிரவாதிகள் தனஞ்ஜெய ராவின் மகனை சுட்டுக்கொல்கிறார்கள். மகன் கொல்லப்படுவதைப் பார்க்கும் தனஞ்ஜெய ராவின் மனைவி நோய்வாய்ப்படுகிறார். இதனால் கோபம் கொள்ளும் தனஞ்ஜெய ராவ், சந்திரசேகரின் மகனையும் இதேபோல கொன்று புத்திரசோகத்தில் தவிக்க வைப்பேன் என்று சொல்லி பழிக்குப்பழி வாங்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு அவரது மனைவியைக் கவனித்துப் பார்ப்பதே கடினமாக இருக்க அந்த வேலையை அவுட்சோர்ஸிங் செய்கிறார். அப்போதுதானே பாலைய்யா திரையில் வரமுடியும். பாலைய்யா தனஞ்ஜெய ராவின் கோரிக்கையை தீர்த்து வைத்தாரா என்பதே மீதிக்கதை.   முதல் காட்சியில் கடிதம் ஒன்று பறந்து வருகிறது. கிராபிக்ஸ் ப்ரோ.. ஏழைப்பெண்ணின் இடத்தை அபகரித்துதான் போலீஸ் நிலையம் உருவாகி இருக்கிறது. அதை அடித்து உதைத்து தட்டிக்கேட்கிறார் துர்கா பிரசாத். அவர்தான் அங்கே லோக்கல் ரௌடி.  ஏழைப்பெண்ணின் வீட்டை அபகரிக்க பார்க