இடுகைகள்

துருவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்புகள் பற்றி சிறு பார்வை - இயற்கை 360 டிகிரி

படம்
  ஆண்டு முழுவதும் வெப்பம் இருக்கும் புல்வெளிப்பகுதி. ஆப்பிரிக்காவின் சாவன்னா பலருக்கும் நினைவுக்கு வரலாம். அதேதான் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இங்கு, வெப்பம் இருந்தாலும் மழையும் பெய்வதுண்டு. இதில் முளைக்கும் புற்களை தின்ன வரிக்குதிரை உள்ளிட்ட உயிரினங்கள் வருகின்றன. அப்போது அதை வேட்டையாடி உணவாக உண்ணும் உயிரினங்களும்தானே வரும்? ஆம் சிங்கம் உள்ளிட்ட இரையுண்ணிகள் இதை தமது ஆகாரமாக்கிக்கொள்கின்றன.  சாவன்னா துருவப்பகுதி நாம் வாழும் உலகம் பூமியில் நமது வாழ்க்கை முதன்முதலில் கடலில்தான் தொடங்கியது. 3.5 பில்லியன் ஆண்டுகள் முன்பு, (ஒரு பில்லியன் - நூறு கோடி). உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி நிலம், நீர் என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கியது. அப்போது பூமியில் பல்வேறு இயல்புகள் கொண்ட நிலப்பரப்புகள், நீர்ப்பரப்புகள் இருந்தன. அவற்றைப் பார்ப்போம்.  ரோனி வடதுருவப்பகுதியில் ஆர்க்டிக் கடல் சூழ்ந்துள்ளது. தென்பகுதியில் அன்டார்டிகா அமைந்துள்ளது. எனவே இருதுருவப் பகுதிகளிலும் உறையும் பனி உள்ளது. இங்கும் உயிரினங்கள் உள்ளன. இவை குளிரைத் தாங்கும் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. உடலில் அடர்த்தியான ரோமம், சேம

ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமயமாதல் விளைவுகள்!

படம்
  ஆர்க்டிக்கில் தீவிரமாகும் பருவச்சூழல் விளைவுகள்! சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் வெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடியுள்ளதை ஐ.நா அமைப்பு, சுட்டிக்காட்டியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை  உலக தட்பவெப்பநிலை அமைப்பு (WMO) வெளியிட்டது. ஆர்க்டிக் பகுதியில் இம்முறையில் அதிகரித்துள்ள வெப்ப அளவு, கடந்த கோடைக்காலத்தை விட அதிகம். இப்படி வெப்பம் அதிகரிப்பது காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றை நிகழ்ச்சிகளை அதிகரிக்கக்கூடும்.  கடந்த ஆண்டு சைபீரியாவில் செய்த ஆய்வில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே சமகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான  அதிக வெப்பநிலை ஆகும். பருவச்சூழல் மாறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஐ.நா அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்ய நகரமான வெர்க்கோயான்ஸ்க் (verkhoyansk)என்ற இடத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நகரம் ஆர்க்டிக் பகுதியிலிருந்து 115 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தட்பவெப்பநிலை கணக்கீடு 1885ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.  2020ஆம் ஆண்டு, உலகளவில் அதிக வெப்பநிலை நிலவிய மூன்று ஆ