இடுகைகள்

இழப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊசி மூலம் புதிய உறவு அமைப்போம்!

 நல்ல சேதி ஊசி மூலம் உறவுகளை இணைப்போம்! நம் அன்புக்கு உரியவர்கள், தையல்காரர்களாக, தச்சு வேலை செய்பவர்களாக, மண்பாண்டங்களில் ஏதேனும் பொருட்களை சுயமாக உருவாக்குபவர்களாக இருக்கலாம். இப்படியானவர்கள் பலரும் நோய் காரணமாக, வயது மூப்பு காரணமாக தாங்கள் பொழுதுபோக்காக அல்லது தொழிலாக செய்து வந்த வேலைகளை செய்யமுடியாமல் போவதுண்டு. தீவிரமாக இயங்குபவர்கள் திடீரென தங்கள் செயல்பாட்டை முடக்கிக்கொண்டு சக்கர நாற்காலியில் வலம் வந்தால்... அல்லது மரணமடைந்து விட்டால் அவர்களுடைய குடு்ம்பத்தினருக்கு எப்படியிருக்கும்? அதுபோன்ற அதிர்ச்சியைக் குறைக்க லூஸ் எண்ட்ஸ் என்ற தன்னார்வ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தொண்டூழிய நிறுவனம், துணிகளை தைப்பவர்கள் யாராவது முடிக்காமல் விட்ட துணிகள் பற்றி தகவல் கொடுத்தால், அவற்றை வாங்கி தைப்பவர்களிடம் கொடுத்து அதை நிறைவு செய்து வழங்குகிறது. இதில், நிறைவு செய்யாத துணிகள், அதை நிறைவு செய்து கொடுப்பவர்கள் என யாரும் யாருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம். இதில் இணைபவர்கள் அனைவரும் மறைந்த தம் அன்புக்குரியவர்களின் நினைவாக, துணிகளைத் தைக்கிறார்கள். தைக்கும் கோரிக்கையை...

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்!

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்! இந்திய அரசு, பத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்காக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அதன் வணிகம், கடன் வழங்கும் திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைள்    முழுமையடைய    தோராயமாக ஓராண்டு பிடிக்கும். வங்கிகள் இணைப்பால் வங்கிகளில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? 1.பயனர்களின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படலாம். ஒன்றிணையும் இரு வங்கிகளில் வெவ்வேறு கணக்கு எண்களை வைத்திருப்பவர்களுக்கு, ஒரே எண் அளிக்கப்படும். தொலைபேசி எண் மேம்படுத்தும் அறிவுரை கூறப்படலாம். 2.வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி எண் ஆகியவையும் கூடுதலாக மாற்றப்படும். வங்கியில் அளிக்கப்பட்ட செக் புத்தகம், கடன்தொகை    தவணை ஆகியவை மாற்றத்தைச் சந்திக்கலாம். 3. வங்கிகள் இணைக்கப்படுவதால், வங்கிக் கிளைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இணைக்கப்படும் வங்கிகள் ஒரே பகுதியில் இரண்டு இருந்தால், சிறிய வங்கியின் கிளைகள் மூடப்படும். ஏடிஎம் வசதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. முன்னர் இணைக்கப்பட்ட விஜயா, தேனா, பரோடா வங்கிகளின் ஏடிஎம்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றன. 4. கட...

ஓவியனின் பார்வையில் குற்ற உலகம்!

படம்
             அண்டர் தி ஸ்கின் சீன தொடர் 24 எபிசோடுகள மகத்தான திறமையான ஓவியன். கல்லூரி வயதில் போலீஸ்காரர் கொல்லப்படுவதற்கான ஓவியத்தை வரைந்து கொடுத்து சர்ச்சையில் சிக்குகிறான். நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றாலும் கொலைக்கும்பலுக்கு மறைமுகமாக போர்ட்ரைட் ஓவியம் வரைந்து கொடுத்தது, அவனுக்கு எதிர்பார்த்திராத துயரத்தை அளிக்கிறது. அதுவரையில் அவன் கண்காட்சிக்கென வரைந்த ஓவியங்களைக் கூட தீவைத்து எரித்துவிட்டு, காவல்துறையில் பணிக்கு சேர்கிறான். அங்கு ஸ்கெட்ச் ஆர்டிஸ்டாக வேலை செய்கிறான். தொடக்கத்தில் கொலைக்கும்பலுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்து கொடுத்தான் என்பதற்காக கேப்டன் டுசெங் அவனை மதிப்பதில்லை. ஆனால் கொலை வழக்குகளை கண்டுபிடிப்பதில் சென் யிக்கு உள்ள புத்திசாலித்தனம், ஈடுபாடு பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. பல்வேறு வழக்குகளோடு, தனது வாழ்க்கையை மாற்றிப்போட்ட கேப்டன் லீ வெய் வழக்கிலுள்ள குற்றவாளிகளை எப்படி பிடித்தான் என்பதுதான் கதை. தொடரின் நாயகன் ஓவியன் என்பதால், வழக்குகள் அனைத்தும் ஓவியம் சார்ந்த அடிப்படையைக் கொண்டுள்ளன. அதாவது கொலையாளி உள் அலங்கார வடிவமைப்பாளர், க...

அமேசானை நெருக்கடியில் தள்ளும் போலிப்பொருட்கள்!

படம்
              அமேசானில் கிடைக்கும் அனேக டெக் பொருட்கள் போலியானவை! அனைத்துமே போலி என்று கூறமுடியாது. ஆனால், நிறைய பொருட்களை ஒரே நிறம், வேறு எழுத்துகள் என நுட்பமாக பயனர்களை ஏமாற்றி வருகிறார்கள். இதனால், அமேசானே இப்படி செய்தால் எப்படி என மக்கள் வேறுவேறு இ விற்பனை தளங்களுக்கு மாறி வருகிறார்கள். அலி எக்ஸ்பிரஸ், டெமு ஆகிய இ விற்பனை தளங்களிலும் நிறைய போலிகள் உண்டு என ஊடகங்கள் கூறி வருகின்றன. போலிகளை முற்றாக தடுப்பது கடினம். ஆனால், அதிக விலை கொடுத்து மட்டமான பொருட்களை வாங்காமல் இருக்கலாமே? அதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். அமேசானில் ஒரு பொருளை வாங்கி சில நாட்களிலேயே அது போலி என தெரிந்தால், முப்பது நாட்களில் அதை வாங்கிய காசை திரும்ப பெறலாம். இதற்கு ஏ டு இசட் கேரண்டி புரடக்சன் என்ற வலைத்தள பக்கம் உள்ளது. பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது பொருட்கள் பற்றி புகார் தெரிவிக்க வாய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், பயனர்கள் தங்களுக்கு கிடைத்த போலிப்பொருட்களைப் பற்றி புகார் செய்ய முடியாது. எஸ்டி கார்டுகள் இதில் சான் டிஸ்க் நிறுவனத்தின் போலி...

அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி - காரிங்க்டன் நிகழ்ச்சி என்றால் என்ன?

படம்
       காரிங்க்டன் நிகழ்ச்சி என்றால் என்ன? மிஸ்டர் ரோனி ரிச்சர்ட் காரிங்க்டன் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர். சூரியனை கண்காணித்து அதன் மாற்றங்களை பதிவு செய்தவர். அதன் மேற்புறத்தில் நடைபெறும் சுழற்சி, சீரற்றதாக உள்ளது என கண்டுபிடித்துக் கூறினார். சூரியனில் நடைபெறும் வேதி வினைகள் காரணமாக மின்காந்த அலைகள் அதிகளவில் வெளியேறுகிற நிகழ்வை காரிங்க்டன் நிகழ்ச்சி என்று கூறுகிறார்கள். 1859ஆம் ஆண்டு வானியலாளர் காரிங்க்டன் இப்படியான நிகழ்ச்சி ஒன்றை பதிவு செய்தார். அன்று, மின்காந்த அலைகளின் பாதிப்பு உலகிற்கு பெரிதாக இல்லை. மின்னணு பொருட்கள் குறைவாக பயன்பாட்டில் இருந்தன. மின்சார வசதிகளும் பேரளவில் பரவலாகவில்லை. ஆனால் தந்தி முறை பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. அலுவலகங்களில் நெருப்பு பற்றிக்கொண்டது. முழு எந்திரங்களையும் பாதித்தது. சூரிய மின்காந்த தாக்குதல், சீரான இடைவெளியில் நடப்பவை என கணிக்க முடிவதில்லை. இந்தமுறை அதுபோல தாக்குதல் நடந்தால், செயற்கைக்கோள்கள் நிரந்தரமாக பழுதாகும். பூமியில் உள்ள தகவல் தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்படும். அமெரிக்க அறிவியல் அகாடமி இதுபற்றிய ஆய்வை ...

ஏஐயைப் பயன்படுத்தி வேலையில் சாதிக்கலாம்!

படம்
  இருப்பதிலேயே குறைந்த கூலிக்கு ஆட்களை வேலைக்கு எடுத்து செக்குமாடு போல வேலைவாங்கும் நாளிதழ் நிறுவனம், சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு போவது உங்கள் விதியாக இருந்தாலும் ஏஐ பற்றி அறிந்து கொள்வது நல்லது. தெரிந்துகொண்டால் அங்கிருந்து தப்பி நல்ல நிறுவனத்திற்கு வேலைக்குப் போகலாம். உலகம் முழுக்க 300 மில்லியன் வேலைவாய்ப்புகள் ஏஐ மூலம் பாதிக்கப்படவிருக்கின்றன என மெக்கின்சி ஆய்வு நிறுவனம் தகவல் கூறியுள்ளது. இதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஏஐ பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றுக்கொண்டால் நல்லது.  டெக் கம்பெனி அல்லாத நிறுவனத்திற்கு சென்றால் கூட ஏஐ பற்றிய அறிவை பணியாளர் கொண்டிருப்பதை வேலைக்கு எடுப்பவர்கள் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் உதவும் என அவர் நினைக்கலாம். வடிவமைப்பாளராக இருப்பவர்கள், சாட்ஜிபிடி, டால் இ ஆகிய மாடல்களை கற்பது அவர்களின் கிரியேட்டிவிட்டியை உயரே கொண்டு செல்லும். மொத்த வித்தையையும் டிசைனில் இறக்கியிருக்கேன் என காலரை தூக்கிவிட்டுக்கொண்டு முதலாளியிடம் பெருமை பீற்றிக்கொள்ளலாம். உலகளவில் அடிப்படையான ஏஐ பற்றிய படிப்புகள் க...

நிலநடுக்கத்தை முன்னரே அறிந்து இழப்பைத் தடுக்க உதவும் கருவிகள், முறைகள்!

படம்
  நிலநடுக்கத்தை அறிய உதவும் பல்வேறு முறைகள்!  பூமியின் கீழுள்ள அடித்தட்டு பகுதி (Crust), மேற்புற மூடகம் (Mantle) ஆகியவற்றுக்கு இடையில்  புவித்தட்டுகள் அமைந்துள்ளன. இவை ஒன்றன் மீது மற்றொன்று நகரும்போது  நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் புள்ளி, ஃபோகஸ் அல்லது ஹைப்போசென்டர்  (Hypo center)என்று அழைக்கப்படுகிறது.  நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளை எளிதாக நீட்ட முடியும். இதில் கூடுதலாக அழுத்தம் சேரும்போது, குறிப்பிட்ட வரம்புவரை நீளும். அதையும் தாண்டி அழுத்தம் கொடுத்தால் அப்பொருள் உடைந்துவிடும். பூமியும் அப்படித்தான் இயங்குகிறது. பூமியின் கீழ்ப்பகுதியில்  வெப்பம், அழுத்தம் உருவாகிறது. இப்படி உருவாகும் ஆற்றலை பூமி, நெகிழ்வுத்தன்மை கொண்ட அலையாக மாற்றுகிறது. இதனை நிலநடுக்க அலைகள் (Seismic waves) என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  நிலநடுக்க அலைகளை, நிலநடுக்க அளவீட்டு நிலையங்கள் கண்டறிகின்றன. அலைகளின் ஆற்றலை அறிய, சீஸ்மோகிராப் கருவிகள் உதவுகின்றன. இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் (National ...

தனது காதலியை பறித்த ஊரை வேட்டையாடத் துடிகும் ஷிபு! - மின்னல் முரளி - பசில் ஜோசப் - மலையாளம்

படம்
  மின்னல் முரளி பசில் ஜோசப் மலையாளம்  ஜெய்சனை மின்னல் முரளியாக கண்டுபிடித்துப் பேசும் காட்சி ஒரு கிராமம். அங்கு ஏற்படும் வரலாற்று முக்கியமான கிரக சூழ்நிலையில் மின்னல் தாக்குகிறது. அதன் பாதிப்பில் கிராமத்திலுள்ள இருவர் மாட்டுகின்றனர். இருவரும் அதனால் சக்தி பெறுகிறார்கள். அதனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே கதை.  ஜெய்சன், ஊரில் டெய்லர் கடை வைத்திருக்கிறார். அவருக்கு ஒரே லட்சியம், பாஸ்போர்ட் வாங்கி அமெரிக்காவுக்கு போவதுதான். தனியாக அமெரிக்காவுக்கு போய் என்ன செய்வது என, அந்த கிராமத்து  இன்ஸ்பெக்டர் பெண்ணையும் காதலிக்கிறார். அதாவது, ஜெய்சனுக்கு அந்தப் பெண் மீது காதல் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கான பொழுதுபோக்குக்கு ஜெய்சன் உதவுகிறான். ஆனால் அவள், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை  திருமணம் செய்துகொள்ள இசைகிறாள்.  உஷாவை சந்தித்துப் பேசும் நெகிழ்ச்சியான காட்சி... இதனால், ஜெய்சன் கோபம் கொள்ளுகிறான். அதேநேரம், அங்குள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்பவன், ஷிபு. இவனை கிராமத்தில் யாருக்கும் பிடிப்பதில்லை. இதற்கு காரணமான காட்சி, தாசனுடன் ஷிபு பேசும் காட்சி.  ஷிபுக்க...

2022இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய நூல்கள்!

படம்
  டிரேஸி ஃபிளிக் கேனாட் வின் டாம் பெரட்டா டிரேஸி ஃபிளிக்  என்ற பாத்திரம் எப்படி பாலின வேறுபாடுகளைத் தாண்டி தனது துறையில் வெல்கிறார் என்பதே கதை. எலக்சன் என்ற நூலை எழுதியபிறகு 25 ஆண்டுகள் கழித்து டிரேஸி ஃபிளிக் என்ற பாத்திரத்துடன் வாசகர்களை எழுத்தாளர் டாம் பெரட்டா சந்திக்க வந்துள்ளார். உயர்நிலைப்பள்ளி துணை முதல்வராக உள்ள டிரேசி பல்வேறு சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.  தி கிரேன் வைஃப் சிஜே ஹாசர் ஆய்வுக்காக செல்லும் பயணத்தில் காதல், அன்பு, திருமணம் ஆகியவற்றை புரிந்துகொள்கிறார் எழுத்தாளர் ஹாசர். இதன் விளைவாக நடக்கவிருந்த தனது திருமணத்தைக் கூட நிறுத்திவிடுகிறார். இப்படி செய்ய என்ன காரணம் என்பதை நூலில் ஹாசர் வாசகர்களுக்கு கூறுகிறார்.  ரெயின்போ ரெயின்போ லிடியா கான்கிளின் நூல் முழுக்க மாற்றுப்பாலினத்தவர்களின் கதைகள் நிரம்பி வழிகின்றன. ஓரினச்சேர்கைத் தம்பதிகள், சமூகத்தோடு இணைந்து வாழ விரும்பும் மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்கும் அனுபவங்கள், இதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என பல்வேறு உணர்வுகளை சொல்லும் கதைகளாக உள்ளன. விரும்புபவர்கள் இதனை வாங்கி வாசிக...

பறவையால் அழகாகிறது வானம்! - கடிதங்கள்

படம்
           பறவையால் அழகாகிறது வானம்!   அன்பு நண்பர் சபாவுக்கு , வணக்கம் . நான் செனைனக்கு வந்துவிட்டேன் . பள்ளிகள் தொடங்கிவிட்டதால் , மாணவர்கள் பஸ்ஸில் தொங்கியபடி செல்லும் காட்சிகளை இனி பார்க்க முடியும் என நினைக்கிறேன் . அறை முழுக்க தூசு காற்று போல நிரம்பியிருந்தது . வாடகைப்பணத்தைக் கொடுத்துவிட்டேன் . படிக்க வேண்டிய நூலாக நேரு எனக்காக இன்னும் காத்திருக்கிறார் . அதனை இப்போதுதான் மெல்ல படிக்கத் தொடங்கியுள்ளேன் . வரும் திங்கள் முதல் அலுவலகம் தொடங்கவிருக்கிறது . வேலைகள் நெருக்கும் என்று நினைக்கிறேன் . ஆசிரியர் சிவராமன் வீட்டுக்கு போகவேண்டும் என நினைத்துள்ளேன் . இந்த பிறந்தநாளுக்கு அவர் வீட்டிற்கு செல்ல நினைத்தே்ன் . ஆனால் பல்வேறு சிக்கல்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை . அதற்காக கடிதம் ஒன்றை எழுதி அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பினேன் . மனிதர் பதறிப்போய் போனில் அழைத்து என்னாச்சு என்று கேட்டார் . அவரைப்பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதை உணர்ச்சிகரமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன் . பிறகு எப்போதுதான் இதனை சொல்லுவது ? அவர் கொடுத்...

பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! 2020இல் என்ன நிலையை உலகம் சந்தித்து கடந்து வந்தது?

படம்
                 உலகப் பொருளாதாரத்தை வீழ்த்திய கொரோனா! சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று தற்போதுவரை 188 நாடுகளைத் தாக்கியுள்ளது . முன்னதாக பொதுமுடக்க அறிவிப்புகளை அறிவிக்காத நாடுகள் கூட இப்போது இரண்டாவது அலை கொரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . உலக நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளும் , ஓய்வூதியம் , தனிநபர் சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்தும் பெருந்தொற்று சூழலால் பாதிக்கப்பட்டன . நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் மக்களுக்காக வட்டி சதவீதத்தைக் குறைத்தன . மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன . உலக நாடுகளின் அரசுகள் மானிய உதவிகளையும் , கடன் தவணைகளை நீட்டித்து தொழிற்துறைக்கு உதவின . கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெருநிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள வெட்டை அமல்படுத்தின . இன்னும் சில நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன . வீட்டிலேயே வேலை செய்யும் முறை அறிமுகமானது . உலகின் பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் வேலையிழப்பு 10.4 சதவீதம் என உலக நிதி க...

உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை இயற்கைதான்!

படம்
pixabay உலகளவில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் இயற்கையான சூழலை அழித்து அதில் பெரும் கட்டுமானங்களை நிறுவுவதாகவே இருக்கின்றன. இத்தொழிற்சாலைகளும் கூட இயற்கையான கனிமங்களை நம்பியே உருவாகின்றன. அல்லது அவற்றிலிருந்து புதிய பொருட்களை உருவாக்குவதாக உள்ளன. உலக பொருளாதார அமைப்பு இதுபற்றிய அறிக்கையில் இயற்கையைச் சார்ந்தே உலக நாடுகளின் பொருளாதார வலைப்பின்னல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இயற்கை ஆதாரங்களை சார்ந்துள்ள நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 44 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி. உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 86 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். உலகளவில் இயற்கையைச் சார்ந்துள்ள மூன்று துறைகள் கட்டுமானத்துறை 4 ட்ரில்லியன் டாலர்கள் விவசாயத்துறை 2.5 ட்ரில்லியன் டாலர்கள் உணவு மற்றும் குளிர்பானங்கள் துறை - 1.5 ட்ரில்லியன் டாலர்கள் இயற்கையோடு சம்பந்தப்படாத சில துறைகளும் உண்டு. அவை விமானத்துறை, வேதிப்பொருட்கள், சுற்றுலாத்துறை. ரியல் எஸ்டேட், சுரங்கம், உலோகம், நுகர்பொருட்கள் ஆகியவை மறைமுகமாக இயற்கையைச் சார்ந்துள்ளவ...

வங்கிகள் தேசியமயமானதன் 50 ஆண்டு நிறைவு!

படம்
வங்கிச் சீர்த்திருத்தங்களில் முக்கியமானது 14 வங்கிகளை அரசு தேசியமயமாக்கியதுதான். இது காங்கிரசுக்கு சோசலிச அரசு என்று பெயர் தந்ததோடு, தேர்தலிலும் வெல்ல உதவியது. ஏழை மக்களிடம் இதன் மூலம் இந்திராவுக்கு செல்வாக்கு பெருகியது. 1960 ஆம் ஆண்டு பல்வேறு தனியார் வங்கிகள் மக்களின் பணத்தை ஏமாற்றிவிட்டு காணாமல் போய்க்கொண்டிருந்தன. பெங்களூருவில் ஜூலை 12 அன்று வங்கிகளை தேசியமயமாக்குவதை நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம் கூறினார். ஆனால் அவர், தனியார்மயத்தை , தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் தருபவர். எப்படி அதை ஏற்பார்? உடனே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்போது இந்திராவுக்கு பதவியை தக்க வைத்துக்கொள்ளும் அவசியமும் இருந்தது. இந்திராவின் தேசியமயமாக்கல் முடிவுக்கு ஆர்பிஐ ஆளுநர் எல் கே ஜா, ஐ பொருளாதார செயலாளர் ஜே படேல் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது வங்கிகள் விவசாயத்திற்கு 2 சதவீதத்திற்கு மட்டுமே வங்கிகள் தந்து வந்தன. தொழிற்சாலைகளுக்கு 68 சதவீத கடன்களை வழங்கியிருந்தன. அப்போதுதான் பசுமைப் புரட்சி திட்டமும் அமலுக்கு வந்தது. திட்டத்தைத் தயாரித்து அமைச்சரவையைக் கூட்டி முடிவைச் சொல்லி அவர்களின் அனு...

காரின் திறன் குறைவதை தடுக்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி கார்கள் தன் திறனை ஆண்டுகள்தோறும் இழக்கிறதா? ஏன் நீங்கள் கூடத்தான் இருபது வயதில் செய்த விஷயங்களை அறுபதில் செய்ய முடியாமல் தடுமாறுகிறீர்கள். கார்களும் அதேபோல்தான். என்ன அம்பாள் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்தால், சும்மா விர் வேகம் காட்டும் மாருதி போல இழப்பு குறையும். நீங்கள் செல்லும் சாலை, பயன்படுத்தும் எரிபொருள், வண்டியை ஓட்டும் விதம் ஆகியவை காரின் திறன் குறைவில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆண்டுகள்தோறும் காரின் திறன் குறைவு தவிர்க்க முடியாது. எந்திரங்கள் தேய்மானம் அடைவது இயற்கை. எனவே அதனைக் கூடுமான அளவு குறைக்க முயற்சிப்பது மட்டுமே நம்மால் முடியும். நன்றி: பிபிசி

கார்பன் வரி கட்டுவது மக்களின் கடமை

படம்
கார்பன் வரி கட்டவேண்டிய நேரம் இதுவே. பிரான்சில் கார்பன் வரி காரணமாக நாடு திரண்டு போராடிய போராட்டங்களைப் பார்த்திருப்போம். உண்மையில் அது அவசியமா இல்லையா என்பது அவரவருக்கு கருத்து மாறுபடலாம். ஆனால் அந்த வரி தவிர்க்க முடியாது என்கிறார் கில்பெர்ட் மெல்காஃப். பசுமை பொருளாதாரம் என்பது பேச்சளவில் நன்றாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என உறுதிப்பட பேசுகிறார் பொருளாதார வல்லுநர் கில்பர்ட் மெல்காஃப். பேயிங் ஃபார் பொல்யூசன்: வொய் எ கார்பன் டாக்ஸ் இஸ் குட் ஃபார் அமெரிக்கா என்ற நூலை அண்மையில் எழுதியுள்ளார். நீங்கள் இப்போது கரிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கார்பன் வரியை விதிக்காவிட்டால் பின்னாளில் பெரும் விலையை தரவேண்டி வரும் என எச்சரிக்கிறார் இவர். கார்பன் வரி கட்டுவதை எப்படி உங்கள் நூலில் நியாயப்படுத்துகிறீர்கள்? கரிம எரிபொருட்களை எரிப்பதால் வரும் கார்பன் டை ஆக்சைடு பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாறுபாடு ஏற்படும்போது, பசுமை இல்ல வாயுக்களின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். மக்கள் தாங்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கேற்ப ஏற்படும் ப...