இடுகைகள்

குப்பை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

படம்
  மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள் உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்   ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை. இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.   கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது. ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்சி செய்யப்படுவ

ஊருக்கு நல்லது செய்யும் மோட்டார் சைக்கிள் கிளப்புகள்!

படம்
  யமஹா, கவாசாகி நின்ஜா, ஹீரோ இம்பல்ஸ், பல்சர் என பைக்குகளை ஓட்டும் இளைஞர்கள் எப்போதும் சமூகத்தில் ஆபத்தான ஆட்களாகவே பொறுப்பற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் நடந்துகொள்ளும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற அவசரமான மனநிலையும் முக்கியமான காரணம்.   ராபர்ட் எம் பிர்சிக் என்பவர், ஸென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டார்சைக்கிள் மெயின்டனன்ஸ்   என்ற நூலை எழுதியிருக்கிறார். ‘’மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வது என்பது தெரபி போலத்தான். பைக் பயணம் மூலம் ஒருவர் உலகத்தின் மீதும் சமூகத்தின் மீதும் கவனம் கொள்கிறார்’’ என்று பேசுகிறார். இங்கு நீங்கள் படிக்கப்போவது மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு பீச்சில் பந்தயத்திற்கு போய் வாக்கிங் வரும் தொப்பை அங்கிள்கள் மீது மோதுபவர்கள் அல்ல. சமூகத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் நன்மை செய்யும் ஆட்களைப் பற்றித்தான். ஊர்வதி பத்தோலுக்கு இப்போது வயது 35 ஆகிறது. அவர் முதன்முதலில் தனது அக்காவின் தோழி ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்தார். அதனால், பின்னாளில் ராயல் என்பீல்ட் பைக் ஒன்றை வாங்கி ஓட்டத் தொடங்கினார். முதன்முதலில் பைக் ஓட்டத் தொடங்கியபோது அவருக்கு வயது

செஞ்சி கோட்டை ஏறிய வரலாற்று நிகழ்ச்சி! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  6.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது. இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார்.  ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர்.  இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன். அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு. தனிநபர்களுக்கு கிடையாது. அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என விரிவாகப் பேசினார். உண்மையில் ரேடார், சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை.  ஆ.வியில் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது. தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன். ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் தெரிந்த அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம். தொடர் சிறப்பாக இருந்தது. தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன்.  இந்த ஆண்டு உருப்படியாக ஏதேனும் ஒரு நூலை எழுத முயல வேண்டும். எங்கள் நாளிதழ் இனி எப்போது வெளிவரும் என்

கட்டுமானங்களுக்கு குப்பைகேள போதும்!

படம்
  கட்டுமானங்களுக்கு குப்பைகளே போதும்!  கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் சூழலுக்கு உகந்த வகையில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்கள். இந்த வீட்டை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இதில் பயன்படுத்தும் பொருட்கள் , பலவும் குப்பைக்கிடங்கில் இருந்து பெறப்பட்டவை.  இந்த வீட்டுக்கு உரிமையாளர் அபிஷேக், பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  இவருக்கு சூழலை மாசுபடுத்தாதபடி வீட்டைக் கட்டும் ஐடியாவைக் கூறியது பொறியாளர் வினு கோபால்.  அதனை வடிவமைத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பவாஸ் தென்கிலன். வினு கோபால், குப்பைச் சுவர் (Debris wall ) என்ற நுட்பத்தை காப்புரிமை செய்து வைத்துள்ளார். இதன்படி, 2007ஆம் ஆண்டு முதல் கட்டடங்களை வடிவமைத்து வருகிறார். இவர், உருவாக்கும் கட்டடங்கள் அனைத்துமே பிறர் தூக்கியெறிந்த குப்பைகளாலானவை.   கட்டுமானப் பொருட்களை 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள குவாரி, கட்டுமான இடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுப்பொருட்களிலிருந்து பெறுகிறார்.  அதை சேகரித்து வீடுகளை கட்டிவருகிறது வினுவின் குழு. இந்த வகையில்  தூக்கியெறியப்பட்ட கம்பிகள், டயர்கள் என எதையும் விடுவதில்லை.  ”

கரும்பருந்தின் வாழ்க்கை பற்றி அறியும் ஆய்வு!

படம்
  கரும்பருந்து கரும்பருந்துக்குப் பாதுகாப்பு!  இயற்கைச்சூழலில் கரும்பருந்தின் (Milvus migrans) பங்கு,குப்பைகளைத் தூய்மைப்படுத்துவதுதான். டில்லியைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரி  இளைஞர்,நிஷாந்த்குமார். இவர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள குப்பைக்கிடங்குகளை அடிக்கடி பார்ப்பார். அங்கு இரைதேட வரும் கரும்பருந்துகள் வானில் வலம் வரும் காட்சி அவருக்கு பிடித்தமானது. ஆனால் இப்படி அவர் பார்வையில் படும்  கரும்பருந்துகளின்  எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. உண்மையில் கரும்பருந்துகளுக்கு என்னவானது என்ற கேள்வியே 2009ஆம் ஆண்டு,கரும்பருந்து பாதுகாப்பு திட்டத்தை (black kite project ) ஊர்வி குப்தா என்பவரோடு சேர்ந்து தொடங்கவைத்தது.  இந்த திட்டத்திற்கான உதவிகளை வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வழங்குகிறது. பொதுவாக குப்பைக்கிடங்குகளில் காணும் சிறிய பருந்துகள்,(Small indian kites)  கரும்பருந்தின் இனத்தைச் சேர்ந்த துணைப்பிரிவைச் சேர்ந்தவை. டில்லியில் கரும்பருந்துகளுக்கான உணவில் குறையேதும் இல்லை. டில்லியின் தொன்மையான நகரப்பகுதிகளில் முஸ்லீம்கள், கரும்பருந்துகளுக்கென இறைச்சித்துண்டுகளை உணவாக வீசி வருகிறார்கள். இ

விண்வெளியை ஆக்கிரமிக்கும் செயற்கைக்கோள்!

படம்
  புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அதிகரித்து வருகின்றன.  செயல்படாத செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்கவும், அதன் போக்குவரத்தைச்  சீர்படுத்தவும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் முயன்று வருகின்றன.  தற்போது உலக நாடுகளில் ஆய்வுக்காகவும், இணையச்சேவை சார்ந்தும் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் புவி வட்டப்பாதையில் ஏராளமான செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதால், புதிய செயற்கைக்கோள்களுக்கு இடமேயில்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மைய பொறியாளர்கள் விண்வெளியில் இயங்கும், செயல்படாத செயற்கைக்கோள்களின் போக்குவரதை ஒழுங்கு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி சர்வதேசி விண்வெளி மையத்திற்கு எச்சரிக்கை ஒன்று வந்தது. பூமிக்கு 400 கி.மீ . தொலைவுக்கு மேலே செயற்கைக்கோளின் பாகம் ஒன்று,  விண்வெளி நிலையத்தை தாக்க வருவதாக ஆய்வாளர்கள் கூறினர். உடனே நிலையத்திலிருந்த ராக்கெட்டை உசுப்பி ஆய்வாளர்கள் மோதலிலிருந்து தப்பினர். 1999ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தி

அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை!

  அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை ! இணையம் வழியாக பல்வேறு டிஜிட்டல் பொருட்களை வாங்குகிறோம் . ஸ்மார்ட்போன் , கணினி போன்றவற்றை வாங்கிய உடனே இணைய இணைப்பில் இணைத்து மென்பொருட்களை மேம்படுத்துவது முக்கியம் . அதற்குப் பிறகுதான் அதனை சீராக பயன்படுத்த முடியும் . ஒருமுறை மேம்படுத்திவிட்டால் , டிஜிட்டல் சாதனங்களை பிரச்னையின்றி நீண்டகாலம் பயன்படுத்த முடியும் என நினைத்திருப்போம் . ஆனால் அதுவும் கூட குறைந்த காலத்திற்குத்தான் . கூகுள் , ஆப்பிள் ஆகிய டெக் நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களில் , சில ஆண்டுகளிலேயே புது இயக்கமுறைமை , பாதுகாப்பு வசதி ஆகிய மேம்பாட்டு சலுகைகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன . இதனால் ஒருவர் பயன்படுத்தி வரும் சாதனங்களை வேறுவழியின்றி கைவிட்டு புதிய சாதனங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் உருவாகிறது . உதாரணமாக 2017 இல் வெளியிடப்பட்ட கூகுளின் பிக்ஸல் 2 போனுக்கான பாதுகாப்பு வசதிகள் நடப்பு ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டுவிடும் என கூறப்படுகிறது . அக்டோபர் 2020 ஆம் ஆண்டு , விற்கப்பட்ட கூகுள் பிக்சல் 5 போனை , 2023 ல் பயன்படுத்தமுடியாது . இதற்கு நிறுவனங்கள் தரப்பில்

தலைமுறைகளை காப்பாற்றும் கலை ஐடியா!- துணிக்கழிவுகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி!

படம்
  2017ஆம் ஆண்டு ஸ்ரீநிதி உமாநாதன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்திற்கு சுற்றுப்பயணமாக சென்றார். போகும் வழியில் மேல காலகண்டர் கோட்டை அருகே நிறைய கழிவுகள் கிடப்பதைப் பார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை துணிக்கழிவுகள்தான்.  அப்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த 23 வயது பெண்தான் அவர். அப்போதே முடிவு செய்துவிட்டார். இனி பேஷன் டிசைனராக மாறினாலும் கூட கழிவுகளை முடிந்தளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்துகொண்டார். இப்போதுவரை துணிகளை மறுசுழற்சி செய்வது பற்றியும், சூழலுக்கு ஆபத்தில்லாமல் வாழ்வதும் பற்றியும் பிரசாரம் செய்.து வருகிறார்.  இரண்டாவது ஆண்டு படிப்பின்போது, ரீடெய்லர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் பயன்படுத்திய துணிவகைகளைப் பயன்படுத்தி பைகள், தலையணை உறைகள், ஸ்க்ரீன்கள், சிறு பைகள், கால் மிதியடிகள் என நிறைய பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரரிடமிருந்து, துணிகளை எப்படி கலைப்பொருளாக மாற்றவேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு இப்படி தயாரித்த பொருட்களை திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு

சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்!

படம்
  சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்! உடனே எங்கே என்றுதானே அனைவரும் கேட்பார்கள். தமிழ்நாட்டில் அல்ல. பீகார் மாநிலத்திலுள்ள மதுபானி மாவட்டத்தில் இப்படி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சுகேத் எனும் கிராமத்தில்  கிராம மக்களுக்கு இலவசமாக கிடைத்த கேஸ் சிலிண்டர்களை தொழுவத்திலுள்ள சாணி, குப்பைகளைக் கொடுத்து இலவசமாக எரிவாயும் நிரப்பிக்கொள்ளலாம். இதனை உருவாக்கியவர்கள் இருவர். இருவருமே சமஸ்பூர் மாவட்டத்தில் மத்திய விவசாய பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறார்கள். ஒருவரின் பெயர் ராஜேந்திர பிரசாத், மற்றொருவர் ரமேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா.  மத்திய அரசு கிராம மக்களுக்கென இலவசமாக கேஸ் சிலிண்டர்களை உஜ்வாலா திட்டத்தின்படி வழங்கி வருகிறது. இதை நான் ஆச்சரியமாக கவனித்தேன். அப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதனை எரிவாயு நிரப்ப போதுமான பணம் கிராமத்து ஏழை மக்களிடம் இல்லை என்பதை அறிந்தேன். அதற்காகத்தான் பசுக்களின் சாணியைக் கொடுத்து எரிவாயுவை நிரப்பும் மாடலை உருவாக்கினோம் என்றார் ஸ்ரீவஸ்தவா. பீகாரின் முசாபர் நகர், ஜார்க்கண்டின்  டியோகர் நகரிலுள்ள கோவில்களுக்கு கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், இலைகள் ஆகியவற்றை

சதுப்புநிலங்களை மீட்பது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட!

படம்
  குப்பைகளால் அழியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்! செய்தி: தமிழகத்திலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 8.4 ஜிகா டன்கள் மீத்தேன் வாயு உருவாகி சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை உலக சதுப்புநில நாள் அரசு வனத்துறையால் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பான சந்திப்பில் இயற்கை ஆர்வலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் பங்குபெற்று, பள்ளிக்கரணையில் குப்பை கொட்டும் இடமாக மாறிய சதுப்புநிலங்களை மீட்பது குறித்து ஆலோசித்துள்ளனர். பள்ளிக்கரணையில் பல்வேறு இடங்களில் கருவிகளைப் பொருத்தி கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.  மீத்தேன் அதிகரிப்பு நன்னீர் சதுப்பு நிலப்பகுதியான பள்ளிக்கரணையில்  கொட்டப்படும் நகரின் ஒட்டுமொத்தக் கழிவுகளால்  8.4  ஜிகா டன்கள் மீத்தேன் உருவாகி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் சூழல் ஆராய்ச்சிக் கழக இயக்குநரான ஏ.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.  கடந்த 50 ஆண்டுகளாக பள்ளிக்கரணையிலுள்ள சதுப்புநிலத்தில் கொட்டப்படும்

விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்!

படம்
  விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்! விண்வெளியில் பூமியின்  அருகிலேயே அமைந்துள்ள கீழ்மட்ட சுற்றுப்பாதையில் எதிர்காலத்திற்கான ஆபத்து குவியலாக உருவாகத் தொடங்கிவிட்டன. உலக நாடுகள் அனுப்பிய ஆயிரக்கணக்கான  செயற்கைக்கோள்களின் கழிவுகள்தான் அவை.  இந்த பிளாஸ்டிக் கழிவுகள் 1 மி.மீ அளவிலிருந்து 1 செ.மீ அளவுகள் வரை உள்ளன.  செயலற்றுப்போன செயற்கைக்கோள் உள்ளிட்ட கழிவுகளை எரிக்க லேசர் கதிர்கள், காந்தம் மூலம் அதனை சேகரித்து அழிப்பது உள்ளிட்ட முயற்சிகளை உலக நாடுகள் முயற்சிக்க தொடங்கியுள்ளன. பிளாஸ்டிகள் துகள்களை உடனே கைப்பற்றி அழிப்பதும் சாதாரண காரியமல்ல; ஈர்ப்புவிசையின் விளைவாக 56 ஆயிரம் கி.மீ வேகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள்  பூமியைச்  சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதனை நுட்பமாக கவனிப்பதே சவாலான காரியம்.  தற்போது எம்ஐடி பல்கலைக்கழகம் பிளாஸ்டிக்குகளை அதிவேகத்தில் படம்பிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. எம்ஐடியில்  மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் எஞ்சினியரிங்  துறையைச் சேர்ந்த ஆய்வாளர் முஸ்தபா ஹசானி கங்காராஜ், அத்துறை தலைவரான கிறிஸ்டோபர்  ச்சூ(Schuh) ஆகியோரின் புதுமையான ஆராய்ச்சிக் கண்டுபிடிப

விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!

படம்
  விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!  விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் பல்வேறு நாடுகளும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்காக போட்டியிட்டு வருகின்றன.  இன்று உலக நாடுகள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றையும் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சியிலும் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் விளைவாக பல்வேறு நாடுகளும் விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போட்டியிட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் முன்னிலையில் உள்ளன.  1978ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையம் நேவ்ஸ்டார் 1 என்ற ஜிபிஎஸ் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதற்குப்பிறகு பல்வேறு நாடுகளும் ராணுவம், தகவல்தொடர்பு, விவசாயம் என பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகின்றன.  அண்மையில், அமெரிக்க விமானப்படை தனது பிளாக் 3 செயற்கைக்கோள்களை மேம்படுத்த 4 பில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. ”விண்வெளியில்  சரியான இடத்தில் செயற்கைக்கோள்களை நிறுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள பல்வேறு விஷயங்களை கட்டுப்

சூழல் போராளிகள் அறிமுகம்! பசுமை முதல் கழிவுகள் வரை

படம்
கல்பனா மணிவண்ணன் சூழலின் மீது நமக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம் இந்த நாயகர்கள்தான் நம் வாழ்க்கை மீது  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். அதற்காக இவர்கள் ஏமாற்றங்களையும் ஏளனங்களையும் எதிர்கொள்ளாதவர்களல்ல. அதிலிருந்து மீண்டு தன் லட்சியத்தை இமயமாக்கி அதையும் சாதித்து இருப்பவர்கள். இப்போது சூழல் போராளிகளில் சிலரைச் சந்திக்கலாம் வாங்க. கல்பனா மணிவண்ணன் 44 கல்பனா சென்னையைச் சேர்ந்தவர். பரபரப்பான சாலையில் வசிப்பவர். இவர் உயிரியல் வகுப்பு எடுக்கும் ஆசிரியையும் கூடத்தான். வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை சாப்பிட்டு வெறுத்துப்போனவர், அவற்றைத் தவிர்க்க இன்று கல்பவிரிக்ஷா என்ற பண்ணையில் தன் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை விளைவித்து வருகிறார். நாம் பயன்படுத்தும் தரை துடைப்பான்கள், கழிப்பறை துடைப்பான்கள் ஆகியவற்றில் கடுமையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை நம் குடலிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இதனால் நம் உடல் நலம் கெடுகிறது என்று பேசுகிறார் கல்பனா. இவர் காய்கறிகளோடு ஆர்கானிக் முறையில் வீட்டின் தரை துடைப்பான்களையும் தயாரித்து வருகிறார். சமீரா சதீஜா 46 சமீர

டாய்லெட் கழிவுகள் என்னாகின்றன?

படம்
கழிவுகள் என்னாகின்றன? பொதுவாக மனிதக்கழிவுகளை தூ என தூக்கி எறிவது ரயிலில்தான். பிற இடங்களில் விமானம் போன்றவற்றில் அப்படி செய்வதில்லை. என்ன டெக்னிக்குகளை பயன்படுத்துகிறார்கள் என்று அறிவோம். பொதுவாக மனிதக்கழிவுகளை நீர் ஊற்றி ஃப்ளஷ் செய்தவுடன், அது கழிவுநீர் தொட்டிக்கு செல்லும். அங்கு வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி கழிவின் நாற்றம், கிருமிகள் அகற்றப்படும். இது பொதுவான முறை. பின்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் மனிதக்கழிவுகளை உறையச்செய்து அதன் நாற்றம், கிருமியைக் குறைக்கிறது. உறையவைக்கும் நிகழ்வில் வெளிப்படும் வெப்பம் உங்கள் பூட்டிக்கு இதம் சேர்க்கும். நீரின்றி தவிக்கும் பகுதிகளில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. நேராக கழிவறை சென்றுவிட்டு உபாதையை முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடலாம். மண்ணில் சேரும் கழிவுகள் மெல்ல பாக்டீரியா, வைரஸ் சேர்க்கப்பட்டு மண்ணுக்கு உரமாகும். மண் உரத்திற்கு அடுத்தபடி வேறென்ன தகனமேடைதான். உங்கள் உடலை எப்படி மின்தகனம் செய்கிறார்களோ அதேபோல் கழிவுகளையும் சாம்பலாக்குகிறார்கள். நன்றி: க்வார்ட்ஸ்