இடுகைகள்

விவாதத்திற்காக… லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதியும் வர்க்கமும்

விவாதத்திற்காக…       நீண்ட காலத்திற்குப் பிறகு சாதியின் சமுதாய / பொருளாதார / அரசியல் பாத்திரத்தை அங்கீகரித்திருப்பதன் அடையாளமாக ‘’ சாதியும் வர்க்கமும் ’’ என்ற புத்தகம் தமிழ்நாடு புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தினரால் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் ஏற்கனவே சென்னையில் 15, 16.8.1987 தேதிகளில் அனைத்திந்தியப் புரட்சிப்பண்பாட்டு இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ‘’சாதியும் வர்க்கமும்’’ பற்றிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.      இப்புத்தகத்திற்காக பேராசிரியர் அ. மார்க்ஸ் முன்னுரை வழங்கியிருக்கிறார். அம்முன்னுரை பற்றி விமர்சிக்கும் போக்கில் வரலாற்றைப்பற்றி சில கேள்விகளை எழுப்புகிறார் திரு. கருணாமனோகரன்.      பேராசிரியர் தன் முன்னுரையில் ‘’ இந்தியாவில் பிறக்கிற ஒருவன் மத முத்திரை தவிர சாதி முத்திரையையும் தரித்துக்கொண்டு தான் இம்மண்ணில் கால்பதிக்கவேண்டியிருக்கிறது ‘’ என்று குறிப்பிடுகிறார். மேலும் ‘’ இந்தியப்புரட்சிக்கு ஒர் சவாலாய் இன்றளவும் சாதி நிலவி வருகின்றது ‘’ எனக்குறிப்பிடுகிறார். பொதுவுடமை இயக்கத்தினர் தங்களின் யுத்த தந்திரங்களில் , போர்த்தந்திர