இடுகைகள்

பத்ம விருது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்ம விருதுகளைப் பெற்ற சாமானியர்கள்! - பினோதேவி, ராய் சிங்காபாய், லதா தேசாய்

படம்
  பினோ தேவி லூரெம்பம் பினோ தேவி, 77 மணிப்பூரைச் சேர்ந்த கலைஞர். பினோ தேவி, தனது மாநிலத்தில் அழிந்து வந்த லீபா எனும் உடையில் செய்யும் அலங்கார வேலைக்காக புகழ்பெற்றவர். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் தேவி. ஐம்பது ஆண்டுகளாக அழிந்து வரும் கலையைக் காப்பாற்ற போராடி வருகிறார்.  கலையின் மீதான ஆர்வத்தால் தனது மாமியாரிடம் இருந்து லீபா கலையைக் கற்று செய்து வந்தார். மேலும் அதனை ஆர்வமுள்ள மாணவர்களும் கற்றுக் கொடுத்தார். மெய்டெய் எனும் இனக்குழு மக்களை நினைவுபடுத்துவது லீபா எனும் இக்கலை என்பது குறிப்பிடத்தக்கது.  வி எல் என்காகா வி எல் என்காகா 91 மிசோரம் மாநிலத்தில் இந்தி பிரசார சபையை தொடங்கி வைத்தவர். 1954இலிருந்து இந்தியை அங்கு பரப்ப முயன்று வருகிறார். மிசோரம் மாநிலத்திற்கும் இந்தி மொழிக்கும் கலாசார பாலம் அமைத்து வருகிறார். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகவே இப்பணியை என்காகா செய்து வருகிறார். மொழியை அனைவருக்கும் கற்பிப்பதன் வழியாக அரசையும் மக்களையும் ஒன்றிணைக்கிறார் என்று விருதுக்கான குறிப்பில் எழுதியிருக்கிறார்கள்.  காமித் ராமிலாபென் ராய்சிங்காபாய் காமித் ராமிலாபென் ராய்சிங்காபாய் 52 பழங்குடி மக்களு

பத்ம விருதுகளைப் பெற்ற சமூக செயல்பாட்டாளர்கள் - சிறு அறிமுகம்

படம்
  இந்தியாவில் உள்ள பத்ம விருதுகளுக்கு யாருடைய பெயரையும் யாரும் பரிந்துரைக்கலாம். இதற்கான குறிப்புகளை இணையத்தில் பதிவேற்றி அதனை கமிட்டி ஏற்றுக்கொண்டால் உள்துறை அமைச்சகம் இறுதிப்பட்டியலை வெளியிடும். விருதுகளை பெறுகிறவர்களை அமைச்சகம் போன் செய்து தகவல் தெரிவிக்கும். சிலர் அதனை ஏற்க மறுத்தால், அதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களது பெயரை உள்துறை அமைச்சகம் விருதுப் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கிவிடும். இதுதான் நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.  இப்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட சிலரைப் பற்றி படிக்கப் போகிறோம்.  கே வி ரபியா கே வி ரபியா 55 கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர். கழுத்துக்கு கீழே உடல் இயக்கம் கிடையாது. இதனால் வீல்சேரில்தான் வாழ்கிறார். அப்படியிருந்தும் கூட பிறரைப் பற்றி யோசிக்கிறார் என்ற நோக்கில் விருதை அறிவித்திருக்கிறார்கள். பனிரெண்டு வயதில் போலியோ பாதிப்பு, புற்றுநோய் ஆகியவற்றைக் கேட்டு மனமொடிந்தவரின் உடலும் மெல்ல செயலிழந்து போனது. இதனால் அப்படியே கலங்கி நிற்காமல், தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முயன்று வருகிறார்

பத்ம விருதுகளைப் பெற்றவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்!

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை விருது என்பதே அப்ளிகேஷன் போட்டு வாங்குவது என்று மாறிவிட்டது. அரசு தனக்கென தனி குழுவை வைத்து சமூகத்திற்கு உழைப்பவர்கள், அதன் பாரத்தை தனது தோளில் சும்பபவர்களை பரிசளித்து கௌரவித்தால் நன்றாக இருக்கும். பெரும்பாலும் அரசுக்கு விழா கொண்டாடுவது முக்கியமே ஒழிய, அதற்கான உழைப்பை போட எப்போதும் சோம்பல் பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் சில மனிதர்களை அதிகாரிகள் குழு எப்படியோ தேர்ந்தெடுத்து கௌரவம் செய்துவிடுகிறார்கள். அவர்கள் பெயர் நமக்கு தெரியாவிட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் நாம் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். அப்படி பத்ம விருது வென்ற சில மனிதர்களைப் பற்றி பார்க்கலாம். நந்தா கிஷோர் ப்ரஸ்டி கைவிளக்கு ஏற்றிய ஆசிரியர் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பரிசு வழங்கப்பட்ட மனிதர். கடந்த ஆண்டு டிசம்பரில் காலமாகிவிட்டார். ஆனால் இவர் கற்பித்த கல்வி பலரது வாழ்க்கையில் இருளை விலக்கியிருக்கிறது. அறிவு விளக்கை மனதில் ஏற்றியிருக்கிறது. ஒடிஷாவைச் சேர்ந்த கிஷோர், எழுபது ஆண்டுகாலம் கல்வியை குழந்தைகள் முதல் வயது வந்தோருக்கும் கற்பித்து வந்திருக்கிறார். இச்ச