இடுகைகள்

சைக்கோபாத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாவியான பங்குச்சந்தை தரகன் தன்னை சைக்கோபாத் கொலைகாரனாக நினைத்துக்கொண்டால்....

படம்
சைக்கோபாத் டைரி  கே டிராமா பதினாறு எபிசோடுகள்  ராக்குட்டன் விக்கி ஆப்  பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன். இளகிய இதயம் கொண்ட அப்பாவி. எனவே, அவனை பலியாடாக்கி ஒரு நிறுவனத்தைப் பற்றிய அறிக்கையை தயார் செய்யச் சொல்கிறார்கள். அந்த வேலை கூட அவனது நண்பன் செய்யவேண்டியதுதான். ஆனால் அவன் நாயகனின் தலையில் கட்டிவிடுகிறான். அதை அவன் தயாரித்துக் கொடுத்த அந்த நேரத்தில் அதிலுள்ள தகவல்களால் அந்த நிறுவனம் சரிவைச் சந்திக்கிறது. இதை வைத்து அவனை வேலையை விட்டு நீக்க முயல்கிறார்கள். தனது நெருங்கிய நண்பனே இப்படி துரோகம் செய்கிறானே என நொந்துபோன நாயகன் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். அப்படி தற்கொலை செய்ய முயலும்போது, யாரோ ஒருவர் வலியில் முனகுவது போல சத்தம் கேட்க, கீழே வந்து எட்டிப்பார்த்தால் ஒருவன் வயதான ஒருவரைக் கொல்ல முயன்றுகொண்டிருக்கிறான். அதை நாயகன் மறைந்திருந்து பார்க்கிறான். அவன் கோழை, அப்பாவி. எனவே, அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். அப்போது முதியவர் கொலைகாரனது டைரியை தட்டிவிடுகிறார். அதை நாயகன் எடுத்துக்கொண்டு ஓடும்போது போலீஸ்காரில் அடிபட்டு ரெட்ரோகிராட் அம்னீசியாவில

சைக்கோபாத் கொலைகாரனுக்கு விபத்தில் நினைவுகள் அழிந்து, மீண்டும் நினைவுகள் திரும்பினால் - மவுஸ்

படம்
  மவுஸ் - கே டிராமா மவுஸ் கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   வன்மம் கொண்ட ஆபத்தான சீரியல் கொலைகாரனை கொரிய போலீஸ் தேடி வருகிறது. ஆனால், அவனோ அவர்களுக்கு ஒரு படி முன்னே சென்றுகொண்டே இருக்கிறான். அவனை பிடிக்கும் முயற்சியில் ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள். அவர்களைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதரவற்றவையாக மாறுகின்றன. சீரியல் கொலைகாரர்களால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்த போலீஸ்காரர்   துணிச்சலாக களமிறங்க, அவருக்கு சைக்கோபாத் கொலைகாரன் சவால் விட ஊடகங்கள் இடைத்தரகர்களாக மாற என்னவானது என்பதே கதை. மேலே சொன்னது கதையின் ஆதாரமான பகுதி அல்ல. பொதுவாக சைக்கோபாத்/ தொடர் கொலைகாரர்கள் கதையில் பூனை – எலி விளையாட்டு போல ஓடுதல், தப்பித்தல், வேட்டையாடுதல் எல்லாமே உண்டு. இந்த கதையிலும் அதெல்லாம் உண்டுதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்த டிவி தொடர் பேசும் விஷயம் சற்று சர்ச்சையானது. இங்கிலாந்தில் படித்து ஆராய்ச்சி செய்யும் மருத்துவர், டேனியல் கொரியாவை பூர்விகமாக கொண்டவர். இவர். சியோ ஹன் என்ற மூளை அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அடையாளம் காணப்பட்டு புகழ்பெறுகிறார். மூளை தொடர்பான ஆய்வ

சைக்கோபாத்களிடம் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

படம்
  அசுரகுலம் 5 சைக்கோபாத்களிடம் எப்படி பத்திரமாக பாதுகாப்பாக இருப்பது பற்றிய வழிமுறைகளைப் பார்த்து வருகிறோம். மேலும் என்னென்ன விஷயங்கள் இருக்கிறதென காணலாம். ராபர்ட் ஹரே எழுதி கட்டுரைகள் நாளிதழ்களில் வெளிவரத் தொடங்கியபோது, அவருக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் வரத் தொடங்கின. அவையெல்லாமே எனது கணவர், காதலர் சைக்கோபாத் அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார் என்றுதான் இருந்தன. இதில் அவருக்கு போன் செய்த பெண்மணியின் கதை வித்தியாசமானது. அந்த பெண்மணி தன் கணவர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவரை முறையாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது ஆகியவற்றை மனைவி செய்திருக்கிறார். ஆனால் சைக்கோபாத் கணவர், தனது வசீகரமான பேச்சால் நடத்தையால் ஆழ்மனதில் உள்ளதை மறைத்துக்கொண்டு பேசியிருக்கிறார். இதனால் அவரைச் சந்தித்த மருத்துவர்கள் அவர் நார்மல் என அறிக்கை கொடுத்திருக்கின்றனர். இப்படி அறிக்கைகள் கிடைக்க மனைவி, தான் கணவரைப் பற்றி நினைப்பதுதான் தவறு. தனக்குத்தான் பிரச்னை என நினைக்கத் தொடங்கியிருக்கிறார்.   சைக்கோபதி பற்றித் தெரிந்தவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால் பயன் இருக்கும். இல்லாதப

சைக்கோபாத்களுடன் உறவு, பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி?

படம்
  சைக்கோபாத்களை திருமணம் செய்வது ஆபத்தானது. அப்படி செய்துவிட்டால் கூட முடிந்தளவு அவர்களை திருத்தலாம் என கருப்பு வெள்ளைப்பட காலகட்ட சிந்தனையை தள்ளிவைத்துவிட்டு அதில் இருந்து வெளியே வர முனையுங்கள். அதுதான் நல்லது. இன்னும் கொஞ்சம் சகித்துக்கொண்டால் எல்லாம் மாறிவிடும் என நினைத்து தாக்குதல்களை, துரோகங்களை, பிரச்னைகளை எதிர்கொள்வது மேலும் உங்களை சிதைத்துக்கொள்வதாகவே அமையும். உங்களை இப்படிபட்ட சைக்கோபாத்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம். கொள்ளையடிக்கப்படும் வீடு என்ற அபாயம் இருக்கிறது என்றால் வீட்டில், வேட்டை நாயை காவலுக்கு வைத்திருப்பது சற்று பாதுகாப்பை அளிக்கிறது அல்லவா? அதுபோலத்தான் கூறப்படும் ஆலோசனைகளை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் யாருடன் போரிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சைக்கோபாத்கள் எளிதாக பிறரை ஏமாற்றுவார்கள். உளவியலாளர்களைக் கூட… எனவே, கவனமாக இருப்பது அவசியம். சைக்கோபாத்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி, அவர்களின் இயல்பைப் புரிந்துகொள்வதுதான். அதன்மூலம்தான் அவர்களை எதிர்கொள்வது சாத்தியம். ஒருவரின் வெளித்தெரியும் அடையாளங்களை வைத

மனநல சிகிச்சையைப் பயன்படுத்திக்கொள்ளும் சைக்கோபாத்கள்

படம்
  பதற்றம், மன அழுத்தம், தன்னம்பிக்கை இன்மை, கூச்சம் , எதிர்மறையான எண்ணங்கள் ஆகியவை சைக்கோபதி பாதிப்புள்ளவர்களுக்கு உண்டு. இதை பிறர்தான் கண்டுபிடித்து சிகிச்சை தரும்படி இருக்கும். இதை தொடர்புடைய நபர்களுக்கு சொன்னாலும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். அவர்களின் மனநிலை அமைப்பு அப்படி. உலகை அவர்கள் தங்களது போக்கில் அணுகுவார்கள். பிறரை ஏமாற்றுவார்கள். எதற்கும் கிஞ்சித்தும் இரக்கம், கருணை காட்டமாட்டார்கள். தவறு என்றாலும் வருத்தம் இருக்காது. இந்த மனநிலையில் உள்ளவர்களுக்கு மனநல சிகிச்சையும் பெரிதாக பயன் தராது. அதைப் பெறும்போது சிகிச்சையை ஏற்கும் இயல்பில் இருக்க மாட்டார்கள். கரும்பாறை போன்ற மன இயல்பு கொண்டவர்கள். இதனால் அவர்களை யாரும் பெரிதாக செல்வாக்கு செலுத்தி மனதை மாற்றிவிட முடியாது. மனநல சிகிச்சை மையங்களிலும் கூட அவர்களின் உண்மையான இயல்பை அறிவது கடினம். சைக்கோபாத்களை அவர்களின் குடும்பம், நண்பர்கள் என காப்பதற்கு இருப்பார்கள். இதனால் அவர்களின் குற்றங்கள் உலகிற்கு உடனே தெரிய வராது. பிடிபட்டாலும் கூட சமூக அமைப்பு, உறவினர்கள், நட்பு, விதி என பழிபோட்டு சென்றுகொண்டே இருப்பார்கள். சைக்போபாத்களுக

திட்டமிடாமலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சைக்கோபாத்கள் - காரணம் என்ன?

படம்
    சைக்கோபாத்கள் எப்படி உருவாகிறர்கள் என்று பார்த்தால் இன்னும் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வறுமை, வளரும் சூழல் என்று பார்த்தாலும் அதிலுமும்முழுமையான திருப்தியான வரையறை கிடைக்கவில்லை.   மரபணு சார்ந்து யோசித்தாலும் அதிலும் விடை இல்லை. ஆனால் இரண்டுமே ஏதோ ஒருவகையில் சைக்கோபாத் விஷயத்தில் பங்களிக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சைக்கோபாத்கள் குற்றங்களை செய்தாலும் கூட மணவாழ்க்கை அடிப்படையில் கவனமாக இருப்பவர்கள்தான். விலக்கப்பட்ட கனிகள் சுவையுடையவை என எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் சொல்வது போல, சைக்கோபாத்கள் மீது காதல் கொண்டு ஈர்ப்பு கொண்டு மணம் செய்துகொள்ளும் பெண்கள் பலருண்டு. இவர்களைப் பயன்படுத்திக் கொண்டு கழற்றிவிட்டு செல்லும் ஆட்கள் நிறையப் பேர் உண்டு.   இதனால் குழந்தைகளுக்கு குறைவேதும் கிடையாது. இப்படி வளருபவர்கள் பின்னாளில் என்னவாகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. இதுபோல ஒரு குற்றவாளியின் கதையைப் பார்ப்போம்.   இந்த குற்றவாளி, இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தார். எனவே, அவர்களுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி அடுத்த தலைமுறை இசைக்கலைஞர்களாக ஆக

சைக்கோபாத் வார்த்தை தோன்றிய வரலாறு

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு உளவியலாளர் சைக்கோபாத் என்ற வார்த்தையை உருவாக்கி அதற்கான தற்போதைய பொருளைச் சொன்னார். அவரது பெயர் பிலிப்பெ பைனல். மனிதர்கள் செய்யும் தீய செயல் என சொல்லுவதிலிருந்து சற்று வேறுபட்டதாக பொருளைக் கூறினார். 1941ஆம் ஆண்டு தி மாஸ்க் ஆப் சானிட்டி என்ற நூல் வெளியானது. இதை உளவியலாளர் ஹார்வி கிளெக்லி என்ற மருத்துவர் எழுதினார். இதில் அவர் தனது அம்மாவை   துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்று பிடிபட்ட சைக்கோபாத் பற்றி எழுதியிருந்தார். இவர் குறிப்பிட்ட நோயாளியின் பெயர் கிரிகோரி. இவர், ஏற்கெனவே பலமுறை தாக்குதல், கொலைமுயற்சி என சிறைக்கு சென்று வந்த குற்ற வரலாறு கொண்டவர்.   கிரிகோரிக்கு மருத்துவத்திலும் என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது என தெரியவில்லை. அப்படி சிகிச்சை அளித்தாலும் கிரிகோரிக்கு அது பயன்தருமா என்றும் தெளிவாகவில்லை. சமூக மதிப்புகளை புரிந்துகொள்ள முடியாதவர்களை சைக்கோபாத் என கூறலாம். அந்த வகையில் கிரிகோரி தனக்கு தெரிந்த விஷயங்களை புரிந்துகொண்டவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு பிறரது வாழ்க்கை, உணர்ச்சிகள் பற்றி புரியுமா என்று எனக்கு தெரியவி

சாடிஸம் பற்றிய ஆய்வுகளால் உலகையே அதிர வைத்த ஜெர்மன் மருத்துவர்!

படம்
          அமெரிக்காவில் மட்டும்தான் தொடர் கொலைகாரர்கள் உருவாகிறார்களா என பலரும் நினைக்கலாம் . இந்தியாவில் ராமன் ராகவ் ரக கொலைகார ர்கள் இருப்பதைப் போல அனைத்து நாடுகளிலும் உண்டு . இவர்களைப் பற்றிய முழுமையான ஆவணம் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களைப் பற்றி பேச முடியாததற்கு காரணம் . ரெக் கிறிஸ்டி இவரைத்தான் இங்கிலாந்தின் ரிலிங்டன் பிளேசின் ராட்சசன் என்று அழைக்கின்றனர் . 1953 ஆம் ஆண்டு இங்கிருந்த வீட்டை வாங்கியவர்கள் அதனை புதுப்பிக்க நினைத்தனர் . சமையல் அறையில் இருந்த வால்பேப்பர்களை அகற்றியதும்தான் உள்ளே இருந்த விபரீதம் புரிந்தது . அங்கிருந்த கப்போர்டில் மூன்று பெண்களின் பிணம் பிளாஸ்டிக் உறையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது . சாப்பிடும் அறையின் கீழும் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது . தோட்டத்தில் மூன்றுக்கும் அதிகமான பிணங்கள் இருந்தன . ஏன் இந்த ரத்த வெறியாட்டம் . அத்தனைக்கும் காரணம் , கண்ணாடி போட்ட ரெக் கிறி்ஸ்டி என்பவர்தான் . வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் வேலையை முக்கியமாக கருதும் குடும்பத்தில் பிறந்தவர் , பின்னாளில் அனைவரின் பொருட்களையும் திருட