இடுகைகள்

ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதில் சொல்லுங்க ப்ளீஸ் - மிஸ்டர் ரோனி - மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ்... அட்டைப்படம் தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவந்த வார இதழ், முத்தாரம். அந்த  இதழில் வெளியான ஏன்? எதற்கு? எப்படி? தொடரின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்தான் இந்த நூல்.  பதில் சொல்லுங்க ப்ளீஸ் நூலில் என்ன எதிர்பார்க்கலாம்? தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சந்தேகங்கள், படிக்கும் நாளிதழில் உள்ள அறிவியல் தொடர்பான கேள்விகள் ஆகியவைதான் நூலில் இடம்பெற்றுள்ளன.  நூலின் தலைப்பை எழுத்தாளர் சுஜாதா தனது நூல்களுக்கு ஏற்கெனவே வைத்துவிட்டார் என பின்னர்தான் தெரிந்த்து. ஆனால் அதற்குள்  தலைப்பு வைத்து தொடரை தொடங்கியாயிற்று. ஆனாலும் தலைப்பு தொடருக்கு சரியாக இருந்த காரணத்தால் அதை மாற்றவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவரின் தலைப்புக்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.  நூலின் அட்டைப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. ஃபோடார் வலைத்தளத்தில் படத்திற்கான குறிப்புகளைக் கொடுத்து உருவாக்கியது. அறிவியல் தொடருக்கு, அட்டைப்படமும் சாதாரணமாக இருந்தால் எப்படி? அறிவியல் என்பது காலம்தோறும் மாறிக்கொண்டே இருப்பது, நிறைய தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கும்தான். அதை மறுக்கவில்லை.

உப்புக்கு மாற்று உப்பு இருக்கிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி சாண்ட்விச்சை எப்படி எடுத்துசெல்வது? கையில்தான் என்று சொல்லுவது அரசு பதில்கள் போல சிம்பிளாக ஆகிவிடும். இருந்தாலும் சூழல் முக்கியம் அல்லவா? அலுமினியம் பாயில்தான் எளிதாக கிடைக்கும். ஆனால் இதனை திரும்ப திரும்ப பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். இல்லையெனில் பாதிப்பு அதிகம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறும் காகிதம் என்பதை உடனே சாப்பிடுவதற்காக கொடுப்பார்கள். அதனை பார்சல் பெற்று கொண்டு செல்ல அந்த காகிதம் தாங்காது. காகிதத்தில் சுற்றி  உங்கள் கேர்ள் பெஸ்டியின் பையில் வைத்துவிடுங்கள்.  உப்புக்கு மாற்றாக வேறு உப்புகள் ஏதேனும் உண்டா? ஏன் இல்லாமல்? பொட்டாசியம் குளோரைடை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஒரே பாதிப்பு, நீங்கள் நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டிருந்தால்  இதைப்பற்றி அவருக்கு கூறவேண்டும். சிறுநீரக பிரச்னை இருந்து பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்தினால் ஆபத்து அதிகம். உப்பாக நாம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடிற்கும் பொட்டாசியம் குளோரைடிற்கும் ருசியில் பெரிய வேறுபாடு கிடையாது.  சயின்ஸ்போகஸ் 

வயிற்றில் சுடப்பட்டால் வாயில் எப்படி ரத்தம் வரும்? - லாஜிக் மேஜிக் - பதில் சொல்லுங்க ப்ரோ? @ ரோனி

படம்
    பதில் சொல்லுங்க ப்ரோ ? @ ரோனி ஹாலிவுட் படத்தில் நாயகனை எங்கு சுட்டாலும் வாயில் வாந்தி எடுக்கிறாரே எப்படி நடக்கிறது அந்த மேஜிக் ? ஒருவரை வயிற்றில் சுட்டால் நிச்சயம் வாயில் ரத்த வாந்தி எடுக்கமாட்டார் . வயிற்றின் உள்ளே ரத்தக்கசிவு இருக்கும் . அப்படியும் வாயில் குடம் குடமாக ரத்தம் கொட்டுகிறது என்றால் அவரது நுரையீரல் காயம்பட்டிருக்கிறது என்று பொருள் . அங்கு ரத்தம் கசிவதால் மூச்சு , வாய் என அனைத்திலும் பொங்கல் பானையில் நுரை பொங்கி வருவது போல ரத்தம் பொங்குகிறது . அதிலும் மனவலிமை குறையாத நாயகன் , நாலைந்து பக்கங்களுக்கு வசனம் வேறு பேசிவிட்டு சாவார் . வயிற்றில் துப்பாக்கி குண்டு பட்டு வாயில் ரத்தம் வந்தால் அதனை ஹீமாடெமெசிஸ் என்கிறார்கள் . அதுவே நுரையீரல் காயம்பட்டு இருமலோடு ரத்தம் வந்தால் அதற்கு ஹீமோடைசிஸ் என்று பெயர் . நாயகன் மீது இரக்கம் வருவதற்காக , அல்லது வில்லன் மீது உனக்கு இது சரியான தண்டனைடா என நாம் சொல்லும்படி ரத்தத்தை பம்பு செட்டு தண்ணீர் போல மோட்டார் வைத்து இறைக்கிறார்கள் . அதைப்பார்த்து ரசிகர்களுக்கும் புயல்கால மழையாய்

கற்பனையால்தான் மனிதகுலம் வளர்ச்சி பெற்றதா?

படம்
மிஸ்டர் ரோனி  நீரின் கொதிநிலை மாறுமா? நீரின் கொதிநிலை என்பது அங்குள்ள அழுத்தத்தைப் பொறுத்தது. கடல்மட்டத்தில் நீங்கள் இருந்தால் அங்கு அழுத்தம் தோராயமாக 1013 ஹெக்டாபாஸ்கலாக இருக்கும். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். அதுவே நீங்கள் இமயமலையில் உட்கார்ந்து இருந்தால் அங்கு நீரின் கொதிநிலை 71 டிகிரி செல்சியஸாக இருக்கும். வேகமாக நீரைக் கொதிக்க வைத்துவிடலாம்.  நீரை கொதிக்கவைக்கும்போது, நீர் மூலக்கூறுகள் அலைவுற்று நீராவியாகின்றன. அந்த நீராவி மூலக்கூறுகளின் அழுத்தம், அச்சூழலின் அழுத்தத்திற்கு  சமமாகுவதே நீரின் கொதிநிலை எனலாம். வெயிலில் காய வைக்கப்படும் துணி வெளுத்துப்போவது ஏன்? ஒரு பொருளின் துணியிலுள்ள நிறத்தை தேக்கி வைக்கும் மூலக்கூறு அமைப்புக்கு குரோமோபோர் என்று பெயர். இதன்மீது ஒளியிலிருந்து வரும் போட்டான்கள் பட்டு உட்கவரப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு பொருளின் வண்ணம் தீர்மானிக்கப்படுகிறது. சிவப்பு வண்ண உடைகளை வேகமாக வெளுத்துப்போகின்றன. காரணம், அவை அதிகளவு ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கின்றன. இதனால் அதன் குரோமோபோர் அமைப்பு சிதைகிறது. இதனால் அதன் நிறம் மங்குகிறத

ஸ்நாப்சாட் படங்கள் முழுவதாக அழிவதில்லையா? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி தகவல்களை வயர்களின்றி பகிரும் தொழில்நுட்பத்திற்கு ப்ளூடூம் என்று பெயர் வந்தது எப்படி? டென்மார்க் மன்னர் ஹெரால்டு பிலாடண்ட், முன்னர் டென்மார்க்கையும் நார்வேயையும் வன்முறையின்றி இணைத்தார். இதன் காரணமாக இதனைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அவரின் பெயரைக் குறிப்பிடும் விதமாக ப்ளூடூத் என்று பெயரிட்டனர். நோர்ஸ் எழுத்துவடிவில் பிலாடண்ட் என்பதை சுருக்கி பி என எழுதியிருப்பார்கள். ஸ்நாப்சாட் புகைப்படங்களை நீங்கள் பார்த்தபிறகு என்னாகிறது தெரியுமா? ஸ்நாப்சாட் நிறுவனம் அவற்றை அழித்து விடுவதாக கூறுகிறது. அதன் சர்வர்களிலிருந்து நீக்கிவிடுவதாக கூறியிருந்தது. ஆனால் அது சாத்தியமில்லை. உங்கள் போனில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை திரும்ப மீட்க முடியும். மின் கோப்புகளை அழிக்கும்போது அவை அழிந்துபோனது போல தோன்றினாலும், அவற்றை திரும்ப பெறமுடியும். அதாவது அவை நம் பார்வைக்குத் தெரியாது. திரும்ப அவற்றை பயன்படுத்தும் வரை போனிலுள்ள நினைவகத்தில் இருக்கும். ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி வேலை செய்கிறது? அனைத்து பேட்டரிகளுக்கும் அடிப்படை மூன்றுதான். அனோடு, கேத்தோடு, அமிலம். இவற்றுக்கு இட

உடல் களைத்து தளர்ந்து தூங்குகிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி மிகவும் உடல் தளர்ந்து சோர்ந்து தூங்குவது சாத்தியமா? கணக்கு பாடத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தாலே தலை கிறுகிறுவென்று ஆகி படுத்து தூங்கியவனைப் பார்த்து இந்தக்கேள்வி. பொதுவாக நமக்கு ஐம்புலன்கள் பகலில் வேலை செய்யும். அதில் சிலருக்கு பாரபட்சமாக சில உறுப்புகள் வேலை செய்யப்பட திறன்கள் மாறும். ஆனால் இயல்பாக கண்கள் சோர்ந்து போனால், மூளை படுத்துவிடும். உடனே ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றுவது போல எதையும் செய்ய முடியாது. உடனே தூங்கிப்போனால் உடல் புத்துணர்ச்சியோடு எழும். அப்போது உணவு, தண்ணீர் கூட உடலுக்கு தேவைப்படாது. பேய்த்தூக்கம் போல சிலர் தூங்குவார்கள். மிகவும் உடல் தளர்ந்து தூங்குவது என்பது அரிசி மூட்டை தூக்குவது, பழக்கமின்றி திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுவது போன்றவை செய்தால் நிச்சயம் கடுமையாக சோர்ந்து போய் தூக்கம் வரும். நன்றி - பிபிசி

மனிதர்களின் கண்களில் மாற்றம் ஏற்பட்டது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி பாலூட்டிகளின் கண்களில் வெள்ளை நிறம் அதிகம் இருப்பதில்லை. ஆனால் நமது கண்களில் வெள்ளை நிறம் அதிகமாக  இருக்கிறது. என்ன காரணம்? பொதுவாக கூடி வேட்டையாடும் விலங்குகள் தமக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்ள இந்த வெள்ளை நிற சங்கதியை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற பாலூட்டிகளுக்கு இந்த நிறம் குறைவாக இருப்பதன் காரணம், பரிணாம வளர்ச்சிதான். புலி, சிங்கம்  போன்றவை தனியாக வேட்டையாடும். ஆனால் ஓநாய்கள் கூட்டாக வேட்டையாடும். இந்நேரங்களில் சின்ன சின்ன ஒலிகள், ஊளைகள் என சிக்னல்கள் கொடுத்து வேட்டையாடப் பாயும். இதில் மூத்த ஓநாய்களின் அறிவுரைப்படி இளைய ஓநாய்கள் ஆட்டு மந்தைகளை கொல்லும். பரிணாம வளர்ச்சி பங்காளிகளான மனிதக்குரங்களுக்கு கூட கண்களில் வெள்ளைநிறத் தன்மை குறைவுதான். இதனை உறுதியாக இப்படித்தான் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இன்று நம்மிடையே மிக குறைவாக உள்ளன. நன்றி - பிபிசி

அலுமினிய பாயில் இனிப்பு மூலம் வயிற்றுக்குள் போனால்?

படம்
மிஸ்டர் ரோனி நான் சாக்லெட்டை ஆர்வமாக சாப்பிடும்போது, அதிலுள்ள அலுமினிய பாயிலையையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன். இது நச்சாக மாறி ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? வெறித்தனத்தை குறைத்து நிதானம் வளர்ப்பது நல்லது. விளம்பரங்களைப் பார்த்து அதே வேகத்தில் சாப்பிட்டால் எப்படி? அலுமினிய பாயில் உள்ள நச்சு வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தோடு வினைபுரியும். இதில் இரு சதவீத அலுமினிய குளோரைடு நச்சு, வயிற்றில் பாதிப்பு ஏற்படுத்தும். அதை தவிர்க்க முடியாது. ஆனால் இதனால் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் கிடையாது. பயப்படாதீர்கள். உடலில் செரிக்காத சாக்லெட்டின் பகுதிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். நன்றி: பிபிசி 

நீளமான பெண்களின் முடி கிக் ஏற்றுகிறதா?

படம்
pixabay மிஸ்டர் ரோனி நீளமான முடி இருந்தால் பெண்களை பெண்தன்மை உள்ளவராக நினைக்கிறார்களே அது ஏன்? பொதுவாக பெரியாரியம் பேசும் பெண்கள் கூட தங்களின் நீளமான கவர்ச்சியான கூந்தலை வெட்டிக்கொள்வதில்லை. மிகச்சில பெண்கள்தான் பாப் கட்டிங் போல வெட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். இயல்பாக பெண்களுக்கு முடி என்பது ஆண்களை கவனிக்க வைக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்பது தெரியும். எனவேதான் முடியை அவர்கள் சொத்து போல பராமரிக்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டு பிரான்சில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் ஜான் விக் போல முடியை வளர்த்துக்கொண்டு கோட் சூட் சர்க்காராக வலம் வந்தனர். ஆண்களின் உளவியல்படி நீளமான புட்டம் தொடும் முடி இருப்பது பெண்களின் கருவுறும் ஆற்றல் சரியாக இருப்பதற்கு அடையாளம் என கருதுகிறார்கள். எனவே, நீளமான முடி என்றால் ஆண்களுக்கு கிக் ஏறுகிறது. ஆண்களுக்கு இதுபோல என்ன என்று கேட்டு சிக்கல் செய்யக்கூடாது. பெண்களுக்கு இந்த மாதிரி என்பது ஆண்கள் பங்கேற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. நன்றி - பிபிசி

மரபணு மாற்ற உயிர்களை பிறகோள்களில் உருவாக்க முடியுமா?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி பூமியில் உருவாக்கிய மரபணு மாற்ற உயிர்களை நாம் பிறகோள்களில் காப்பாற்ற முடியுமா? இம்முறையில் யோசிப்பது நல்ல விஷயம்தான். ஆனால் டிஎன்ஏ முறையில் நாம் புதிய உயிரிகளை உருவாக்கினால் அவை வாழ்வதற்கு நீர் தேவை. வெள்ளியில்  நீரும் கிடையாது பனிக்கட்டியும் கிடையாது. வியாழனில் உள்ள யூரோபா நிலவில் நீர் உள்ளது. இதில் நாம் உயிர்களை உருவாக்க வாய்ப்புள்ளது. செவ்வாய் கோளில் பாக்டீரியா தாக்குப்பிடித்துவிட்டது. சாக்கடல், அன்டார்க் பகுதியிலும் கூட நுண்ணுயிரிகள் உள்ளன. நீர் இருந்தால் அக்கோளுக்கு ஏற்றபடி உயிர்களை நம்மால் உருவாக்க முடியும். நன்றி - பிபிசி

சூயிங்கம் வயிற்றில் செரிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூயிங்கத்தை செரிமானம் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்? சூயிங்கத்தில் செரிமானம் செய்ய வயிறு பெரும்பாலும் சிரமப்படாது. அதில் பெரும்பாலும், இனிப்பு மற்றும சோயாபீன் கலவைகள் இருக்கும். ஈரமான குடலில் சூயிங்கம் ஒட்டாது. பெரும்பாலும் மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும். சிறுவர்கள் சூயிங்கம்மை நிறைய விழுங்கிவிடும்போது செரிமானக்கோளாறு ஏற்படும். இதன் விளைவாக, ஆபரேஷன் செய்த அதனை அகற்றும சூழல் ஏற்படலாம். நன்றி - பிபிசி 

நம் காதுகளை மட்டும் தூங்கும்போது கூட மூடமுடிவதில்லை ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி கண்களை மூடுவது போல காதுகளை நாம் ஏன் மூடிவிட முடிவதில்லை? கண்களை மூடினால் காது விழித்திருக்கும். அப்போதுதான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லையெனில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் எப்படி அறிந்துகொள்வது? கண்களை மூடிக்கொண்டு தூங்கினாலும், வீட்டுக்குள் யாரே உள்ளே வருவதை எப்படி அறிகிறோம்- காதுகள் திறந்திருப்பதால்தான். இது ஆதிகாலத்திலிருந்து நமக்கு இயற்கை கொடுத்துள்ள ஃபயர்வால் என்று நினைத்துக்கொள்ளுங்கள். எந்த வருத்தமும் இருக்காது. அனைத்து விலங்குகளுக்கும் இந்த அம்சம் பொருந்தும். ஆனால் சீல் போன்றவை நீந்தும்போது மட்டும் அதன் காதுகளை மூடிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி 

சிறப்பு அங்காடிகளில் முட்டை குஞ்சு பொரித்து வருவது உண்டா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூப்பர் மார்க்கெட் முட்டையில் கோழிக்குஞ்சு வருமா? அதற்கு வாய்ப்பு லேது பாவா. காரணம்,  கோழிகளின் பண்ணையில் பெரும்பாலும் இருப்பது பெண் கோழிகள்தான். அதுதான் பெயரிலே கோழிப்பண்ணை என்று இருக்கிறதே என கடிஜோக் சொல்லாதீர்கள். சேவல்களின் தேவை இன்று கிடையாது. இனப்பெருக்கம் செய்விப்பதற்கான பலவழிகளை அறிவியல் கூறியுள்ளது. எனவே கோழி முட்டையில் குஞ்சு பொரிப்பதற்கான வாய்ப்பு கிடையாது. வாத்துப்பண்ணைகளில் ஆண், பெண் என இரு வாத்துகளும் ஒன்றாக சுற்றித்திரிவதால் அவற்றின் முட்டைகள் சூப்பர் மார்க்கெட்டில் குஞ்சு பொரித்த செய்திகள் வந்திருக்கின்றன. நன்றி - பிபிசி

ஆண்களில் சிலருக்கு மட்டும் அதிக முடிகள் இருப்பது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலருக்கு உடலில் அதிக முடிகள் இருக்கிறதே... அதற்கு காரணம் என்ன? ஏறத்தாழ பனிமனிதன் போல சிலர் தோன்றுவதற்கு அவர்களின் உடலிலுள்ள முடி காரணம். இவை மரபணு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு கூடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகும். இதற்கான சிகிச்சைகள் இன்று கிடைக்கின்றன. அவற்றை சரி செய்துகொள்ளலாம். ஒரு வகையில் சில பெண்களுக்கு உடலில் இதுபோன்ற முடிகொண்ட ஆட்களைப் பிடிக்கலாம். எல்லாம் ஆதிமனிதனின் மீதான பாசம்தான். முடிகள் இருந்தால் அதற்கு மரபணுரீதியான சிகிச்சை என்பதை விட அவற்றை ட்ரிம் செய்துகொள்வது நல்லது. முடிகள் இருந்தால் வியர்க்கும். அதன்மூலம் பாக்டீரியாக்கள் பிரச்னை ஏற்படலாம். கவனமாக இருங்கள். நன்றி - பிபிசி  

நேற்று இன்று நாளை - நாஸ்டாலஜியா நல்லதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி நாஸ்டாலஜியா நல்லதா கெட்டதா? பொதுவாக நாம் கடந்த காலத்தில் செய்த தில்லுமுல்லுகள், போக்கிரித்தனங்கள், கோமாளித்தனங்கள் இவைதானே இன்று நம்மை வடிவமைத்துள்ளன. அதனால்தான் ஜென் இசட், மில்லினிய இளைஞர்களைக்கூட இறந்த காலத்திற்குள் சென்று பார்க்கும்படி திரைப்படங்கள் எடுக்கிறார்கள். இதன்மூலம் கடந்த காலத்தில் நடந்த சமாச்சாரங்களை சற்று கண்கொண்டு பார்க்கலாம். இன்றும் காமெடி என்றால் வடிவேலுவை பேசுபவர்கள் அடுத்து சபாபதி படத்து காமெடியில் சென்று முடிப்பார்கள். காரணம், அந்த பட கலைஞர்கள் இன்றைய கலைஞர்களுக்கு ஊக்குமூட்டுபவர்களாக இருந்திருப்பார்கள். பொதுவாகவே வரலாறு தெரிந்தால்தானே வரலாறு படைக்க முடியும் என்று கூறுவார்கள். அதுதான் விஷயம். இதில் எதிர்மறையான விஷயங்களை விட நேர்மறையான சங்கதிகள் நிறைய உள்ளன. எனவே நாஸ்டாலஜியாவுக்கு சென்று வருவது உங்களை புத்துணர்வாக்கும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி

நஞ்சுக்கொடியை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா ?

படம்
pixabay மிஸ்டர் ரோனி குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிகள், தங்கள் நஞ்சுக்கொடியை சாப்பிட விரும்புகிறார்கள் என்று செய்தியில் படித்தேன்.உண்மையா? நஞ்சுக்கொடி குழந்தைக்கு ஊட்டம் தருவதற்காக உருவாகிறது. அப்பணி முடிந்த தும் அது கழிவாக உடலிலிருந்து வெளியேறுகிறது. அதனை சாப்பிடுவது மூலம் கர்ப்பிணிகள் இழந்த ரத்தத்தை, சத்துக்களை பெறுகிறார்கள் என்பது தவறான வதந்தி. எனவே, நஞ்சுக்கொடியை சாப்பிடுவதை விடுத்து சத்தான பழங்கள், தின்பண்டங்களை வாங்கி அல்லது செய்து சாப்பிடுங்கள். நஞ்சுக்கொடியில் ஈகோலி பாக்டீரியா, காட்மியம் எனும் சிக்கல்கள் உள்ளன. எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. நன்றி -பிபிசி 

செடிகளை பெட்ரூமில் வைத்து வளர்க்கலாமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி தாவரங்களை படுக்கையறையில் வைத்து வளர்க்கலாமா? எந்த தவறும் இல்லை. சிலர் இரவில் கார்பன் டை ஆக்சைடை செடிகள் வெளியேற்றும். இதனால் நமக்கு மூச்சு திணறல் ஏற்படும் என்பார்கள். ஆனால் அது எல்லாம் ஆதாரமில்லாத உளறல்கள் என ஒதுக்கிவிடுங்கள். மின்விளக்கை அணைத்து விட்டால் ஒளிச்சேர்க்கைக்கான விஷயம் செடியில் நடைபெறாது.அப்புறம் என்ன கவலை? முக்கியமாக உங்கள் தூக்கம் கெடாது. நன்றி - பிபிசி

பாடிபில்டர்களின் உடலில் மரங்களின் வேர்கள் எப்படி வருகின்றன?

படம்
மிஸ்டர் ரோனி பாலிபில்டர்கள் உடலில் நரம்புகள் வெடிப்பது போல தெரிகிறதே? இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஏராளமாக உடற்பயிற்சி செய்வதால் உடலின் தோல் ஏறத்தாழ சேசாயி விற்கும் நோட்டுப் புத்தக தாள் போல மெலிதாகிவிடும். அப்புறம் உள்ளே ஓடும் நரம்புகள் வெளியே தெரியாமல் எப்படி? ஏறத்தாழ நரம்புகள் தென்னை மர வேர்கள் போல தெரியும் பாலிபில்டர்களை உடற்பயிற்சி இதழ்கள் அட்டையில் பார்த்திருப்பீர்கள். மேலும் இந்த புகைப்படம் எடுக்கும்போது, அவர்களின் உடலில் நீர் குறைவாகவே இருக்கும். தண்ணீரைக் குடித்தால் உங்கள் உடலின் தசை அழகை வெளிக்காட்ட முடியாது. நன்றி - பிபிசி 

சில்வர் பாயில் ஸ்வீட்டுகள் உடலைப் பாதிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சாக்லெட்டுகளை சாப்பிட்டிருப்போம். அதிலும் பல்வேறு சில்வர் பாயில்களை அகற்றாமல் சாப்பிடுவது இயல்பானது. இது உடலை பாதிக்குமா? இந்த சில்வர் பாயிலை இறந்த மாடுகளின் குடலில் செய்வதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் குமுதத்தில் செய்தி எழுதியிருந்தார்கள். இயற்கையான பொருள் ஓகே. ஆனால் இந்த சில்வர் அல்லது அலுமினிய பாயில் பொருட்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியும் தன்மை கொண்டது. இது உடலுக்கு பாதிப்பு தரும் அளவில் இல்லை. அதனால் பயப்படவேண்டியதில்லை. திருப்தியாக பால் ஸ்வீட்டுகளை கடித்துச் சாப்பிடுங்கள். நன்றி - பிபிசி 

ஆதாம் ஆப்பிள் பெரிதாக இருப்பது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி என்னுடைய தொண்டையில் ஆதாம் ஆப்பிள் பெரிதாக உள்ளது? இதனை சரி செய்ய முடியுமா? எடுத்து நாயுடு ஹோட்டல் வறுகறிக்கு கொடுத்துவிடப்போகிறீர்களா என்ன? ஆண்டவன் கொடுத்ததை அப்படியெல்லாம் எதையும் மாற்றமுடியாது. தைராய்டு அமைப்புக்கு அருகில் உள்ளது ஆதாம் ஆப்பிள். குரல் அமைப்பை பாதுகாக்க ஒன்பது அமைப்புகள் அடுத்தடுத்து உள்ளன. இதில் தைராய்டு அமைப்பின் மீதாக பெரிதாக இருக்கிறது. ஆண்களுக்கு உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிக்கும்போது, தொண்டை அமைப்பு பெரிதாகிறது. குறிப்பாக குரல் மாறுபடுவதோடு அதன் மீதுள்ள ஆதாம் ஆப்பிளின் அளவு பெரிதாகிறது. இந்த அளவு மரபணு சார்ந்தது. இதை மாற்றுவது என்பது கடினம். ஆண்களுக்கு இந்த அமைப்பு பெண்களை விட தெளிவாக தெரியும். நன்றி - பிபிசி