இணையத்தில் செல்லப்பிராணி வீடியோக்கள் உங்களுக்குப் பிடிக்குமா?
நாய், பூனை வீடியோக்களை இணையத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக சீரியசாக பொருளாதார கட்டுரைகளை எழுதும் எங்கள் இதழ் ஆசிரியர் கூட தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள இணையத்தில் நாய்களைப் பற்றிய வீடியோக்களைத் தேடி பார்ப்பது வழக்கம். ஆனால் நமக்கு நன்றாக இருக்கிறது ஆனால் இப்படி வீடியோக்களை எடுப்பதற்காக நாய்களை சித்திரவதை செய்வது நியாயமா என்று விலங்கு நல அமைப்புகள், விலங்கு நேசர்கள் குழுவினர் குரல் எழுப்புகின்றனர். உச்சமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் எழுத்தாளர் வா.மு. கோமு கூட யூட்யூப் வீடியோவுக்காக நாயை சித்திரவதை செய்யும் சிலரைப் பற்றிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். இதைப்பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம். இணையத்தில் ஆயிரக்கணக்கிலான நாய், பூனை குறும்பு வீடியோக்கள் கிடைக்கின்றன. இதனைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. யூட்யூபில் நாய், பூனைகளை கொடுமைப்படுத்தும் வீடியோக்களுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எப்படி தடுப்பது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதும் கடினம். 2021ஆம் ஆண்டு சாரிட்டி இன்டர்நேஷனல் கேட் கேர் அமைப்பு, இதுபோல வீடியோக்