இடுகைகள்

தொல்லியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொல்லியல் ஆய்வுகளுக்கு உதவி செய்யும் ட்ரோன்கள் !

படம்
  தொல்லியல் ஆய்வுகளுக்கு உதவும்  ட்ரோன்! தொன்மையான புதைப்படிமங்களைக் கண்டறிய அகழாய்வாளர்கள், குறிப்பிட்ட இடத்தை ஏரியல் புகைப்படமாக பதிவு செய்வார்கள். இதற்கு பலூன், பட்டம், விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். தற்போது, ட்ரோன்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த முறையில் புகைப்படம் வேகமாகவும், தரமாகவும் கிடைக்கிறது.  ட்ரோன்களை ரிமோட் மூலம் எளிதாக பறக்கவைப்பதோடு, பறக்கும் பாதையையும் முன்கூட்டியே புரோகிராம் செய்யலாம். ட்ரோன்கள், புகைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளியில்  திட்டமிட்டு வெவ்வேறு கோணங்களில் எடுக்கிறது. இதனை கணினியில் உள்ள மென்பொருள் மூலம் நில அடுக்குகளைப் பார்க்கும் டோபோகிராபி (Topography) காட்சித் தன்மைக்கு மாற்றலாம். இம்முறைக்கு, போட்டோகிராமெட்டரி (Photogrammetry) என்று பெயர். அகழாய்வு செய்யும் இடங்களில் ட்ரோன் மூலம் எடுக்கும் புகைப்படங்களை கணினி வழியே 3 D படங்களாக மாற்றி பார்க்கலாம். இதன்  மூலம் அகழாய்வு செய்யும் இடங்களில் உள்ள சிறிய பொருட்களைக்கூட துல்லியமாக அறியலாம். இப்படங்களோடு செயற்கைக்கோள் படங்களையும் இணைத்து நிறைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பெறமுடியும்.  Digging n

சீன வாத்து எப்படி வீட்டு விலங்காக மாறியது?

படம்
  வீட்டு விலங்கான சீன வாத்து! வீட்டு விலங்காக வளர்க்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் வாத்தும் இடம்பிடித்துள்ளது. இந்த வாத்து, சீனாவில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு வளர்க்கப்பட்ட சீன வாத்து ( ), வீட்டு விலங்கு என ஜப்பான் சப்போரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இத்தகவலைக் கூறியுள்ளனர். இந்த வகையில் வாத்துகள் பண்ணையில் வளர்க்கப்பட்டது என்ற செய்தி உறுதியாகியுள்ளது.  சீனாவில் தியான்லுவோசன் எனும் அகழ்வராய்ச்சி இடம் உள்ளது. கற்காலகட்ட கிராமப் பகுதியான இதன் வயது 7000 - 5500  காலகட்டம் என அறியப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 232 வாத்துகளின் எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், வாத்துகள் பண்ணை விலங்காக வளர்க்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது என ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதில் நான்கு வாத்துகளின் எலும்புகள், முதிர்ச்சியடையாதவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் வயது 18 வாரங்கள் ஆகும். கார்பன் வயதுக் கணிப்பு மூலம், வாத்துகள் உள்ளூரைச் சேர்ந்தவை என  மதிப்பிடப்பட்டுள்ளன.  ”பண்ணை விலங்காக வாத்துகளை மனிதர்கள் வளர்த்திருப்பது இதன் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் இது முக்கியமான ஆய்வு” என பி