இடுகைகள்

கல்லீரல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காளான் வழியாக கல்லீரலை பாதிக்கும் நச்சு!

படம்
    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி உணவு நச்சில் பாக்டீரியாவின் பங்குண்டா? ஏன் இல்லாமல்... குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஒரு கிராம் நச்சு மூலம் பதினான்கு மில்லியன் வயது வந்தோரை கொல்ல முடியும். நீரை நூற்று இருபது டிகிரி செல்சியசில் கொதிக்க வைத்தால் மட்டுமே பாக்டீரியாவை அழிக்க முடியும். உடல் செயலிழப்பு, வாந்தி பிறகு இறப்பு வந்து சேரும். எனவே கேன் உணவுகளை கவனமாக பார்த்து மேற்கு நாடுகளின் தர கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதா என பாருங்கள். உருளைக்கிழங்கை தாக்கும் முக்கியமான கிருமி எது? பைடோதோரா இன்ஃபெஸ்டான்ஸ்  என்ற கிருமி, உருளைக்கிழங்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ஐரிஸ் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு இடம்பெற, இக்கிருமி முக்கிய காரணம். 1845-49 ஆகிய காலகட்டத்தில் மட்டும் கிருமி ஏற்படுத்திய பஞ்சத்தால் நான்கு லட்சம் மக்கள் பட்டினியால் இறந்துபோனார்கள். ஏராளமானோர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டனர். பூஞ்சைகளை விளக்கமாக வரைந்த குழந்தை நூல் எழுத்தாளர் யார்? பீட்ரிக்ஸ் பாட்டர், பூஞ்சைகளைப் பற்ற...

பாரசிட்டமால் சிரப்பால் கல்லீரல் பாதிப்பு - தவறு எங்கே நடக்கிறது?

படம்
  பாரசிட்டமால் சிரப் ஓவர்டோஸால் கல்லீரல் பாதிக்கப்படும்  குழந்தைகள்- தவறு எங்கே நடக்கிறது? ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் உடனே மருந்துக்கடையில் பார்மாசிட்டமால் வாங்கி சாப்பிட்டுவிட்டு, வேலைக்கு போகும் பலருக்கும் உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாரசிட்டமால் சிரப்பை காய்ச்சலுக்கு எடுத்துக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்லீரல் செயலிழந்து கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பெற்றோர் பலரும் பாரசிட்டமாலை   எந்த ஆபத்தும் இல்லாத மருந் து என நினைக்கின்றனர். உண்மையில் அது தவறானது. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சிரப், அவர்களின் உடல் எடை அடிப்படையிலானது. ஆனால், பாரசிட்டமால் மருந்து இந்தியாவில் நான்கு   விதமாக தன்மையில் விற்கப்படுகிறது. இதனால் சிரப் ஓவர்டோஸாக கொடுக்கப்பட்டு குழந்தைகள் ஆண்டுக்கு ஒருவரேனும் இறந்து போகிறார்கள். மீதியுள்ளவர்கள் அவசர சிகிச்சையில் வைக்கப்படுகிறார்கள்.   இதை எதிர்கொள்வது எப்படி? பாரசிட்டமால் சிரப்பைக் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுவலி, வாந்தியில் ரத்தம் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். இல்லையெ...

முதன்முதலாக பிரெஞ்சு அரசு இறுதிச்சடங்கு செய்த அறிவியலாளர்! - கிளாட் பெர்னார்ட்

படம்
  கிளாட் பெர்னார்ட் (  Claude Bernard , 1813-1878) பிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜூலியன் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர், பியர் பெர்னார்ட் - ஜீன் சால்னியர். 1834 -1843 வரையிலான காலகட்டத்தில் பாரிஸ் சென்று மருத்துவம் கற்றார்.  1847ஆம் ஆண்டு, டி  பிரான்ஸ் கல்லூரியின் மருத்துவ பேராசிரியரான  பிரான்கோய்ஸ் மாகன்டெயிடம், பணிக்குச் சேர்ந்தார்.  பெர்னார்ட், பல்வேறு சோதனைகளை செய்து பார்த்த மாகன்டெய்யிடம்தான், மருத்துவத்தை அனுபவரீதியாகப் பயின்றார்.  தன் வழிகாட்டியான மாகன்டெய் மறைவிற்குப் பிறகு, கல்லூரியில் பேராசிரியரானார். 1864ஆம் ஆண்டு, அன்றைய பேரரசர் மூன்றாம் நெப்போலியன், பெர்னார்டிற்கென இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆய்வகம் ஒன்றை உருவாக்கித் தந்தார்.  விலங்குகளின் மீது பல்வேறு சோதனைகளை பெர்னார்ட் செய்து வந்தார்.  1878ஆம் ஆண்டு பெர்னார்ட் மறைந்தார். இவரது கணையம், கல்லீரல், வாஸ்மோட்டார் அமைப்பு பற்றிய ஆராய்ச்சிகள் முக்கியமானவை. விஞ்ஞானியான பெர்னார்ட்டின் இறுதிச்சடங்கை  பிரெஞ்சு அரசு முதன்முறையாக பொறுப்பெடுத்து நடத்தி கௌரவித்தது....