இடுகைகள்

பெருந்தொற்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் அணிவரிசை

படம்
  டைம் 100 கண்டுபிடிப்பாளர்கள் வரிசை காட்டுதீயைக் கட்டுப்படுத்துவோம் கிறிஸ்டினா தாஹ்ல் 45 அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்படுவது புதிதல்ல. ஆனால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்வதை விட்டுவிடுகின்றனர். தீயை அணைக்கவேண்டும். தீ பற்றாமலிருக்க முயலவேண்டும் என ஊடகங்கள் நாசூக்காக கூறி, தம் விளம்பர வருமானத்தை காப்பாற்றிக்கொள்கின்றன. அரசியல்வாதிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு பெருநிறுவனங்களை நம்பியுள்ளதால் அவர்களின் செயல்பாட்டை குறைகூறுவதில்லை. ஆனால் முப்பத்தேழு சதவீத காட்டுத்தீ சம்பவங்களுக்கு கரிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் பெரு நிறுவனங்களும், சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களும்தான் காரணம் என கிறிஸ்டினா தைரியமாக கூறுகிறார். தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, காலநிலை மாற்றத்தின் இயல்புகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதன்மூலம் நமது நடவடிக்கைகளை சற்று முன்னதாக திட்டமிட்டுக்கொள்ளலாம். மாசுபாட்டிற்கு கட்டுப்பாடு அனஸ்டாசியா வால்கோவா 32 காலநிலை மாற்றத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு, உணவு உற்பத்தி தடுமாறுகிறது. ரீகுரோ ஏஜி என்ற நிறுவனம், வேளாண்மைத்துறையில் உள்ள பெருநிறுவனங

குரோம்புக்கால் எந்த பயனும் இல்லை - காலாவதி தேதியால் குப்பைக்குச் செல்லும் கணினி

படம்
  குரோம்புக் இ குப்பையாகும் குரோம் புக் அமெரிக்க பள்ளிகளில் குறைந்த விலை காரணமாக வாங்கப்பட்ட குரோம்புக், தற்போது இ குப்பையாக மாறத் தொடங்கிவிட்டன. இதற்கு காரணம், கூகுளின் காலாவதி அறிவிப்புதான். குரோம் புக் மடிக்கணினி வன்பொருட்கள் நன்றாக இயங்கி வந்தாலும் கூட அதற்கு வழங்கும் ஆதரவை நிறுத்திக்கொண்டால் அதை மாணவர்கள் பயன்படுத்த முடியாது. குறைந்த விலை, எளிதாக பயன்படுத்துவது காரணமாகவே   பள்ளிகள் கூகுளின் குரோம் புக் கணினியை வாங்கின. நடப்பு ஆண்டில் பதிமூன்று மாடல்கள், அடுத்த ஆண்டு 51 மாடல்களுக்கான   காலாவதி தேதியை கூகுள் அறிவித்துவிட்டது. அமெரிக்க அரசு, கூகுள் குரோம் புக் மடிக்கணியை வாங்குவதற்கு மட்டும் 1.8 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. ஆனால், இக்கணினிகளுக்கான பயன்பாடு குறைந்த கால வரம்பே கொண்டிருந்தால், செலவழித்த பணத்திற்கான மதிப்பே இருக்காது. இதற்கு எதிர்மறையாக விண்டோஸ், மேக் ஆகிய நிறுவனங்களின் ஆதரவு நிறுத்தப்பட்டாலும் அதை ஒருவர் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம். உடனே தூக்கி குப்பைத்தொட்டியில் எறிய வேண்டியதில்லை. ஆனால் குரோம்புக்கில் இந்த வசதி இல்லை.   பெருந்தொற்று காலத்தில் குரோம்

நாய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், கிடைத்த தகவல்களும்

படம்
  நாய் மனிதனுக்கு மிக நெருக்கமான வீட்டு விலங்கு. வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து தருவதோடு, அகழாய்வு பணிகளிலும் கூட பயன்படுகிறது. இதுபற்றி நார்த் கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் பிரையன் ஹரே, அனிமல் காக்னிஷன் என்ற இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். மனிதர்களைப் போலவே நாய்களும் பரிணாம வளர்ச்சி பெற்று சமூகத்தைப் புரிந்துகொள்கின்றன என்பதே ஆய்வின் மையப்பொருள். அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் 9,200 நோய் மாதிரிகளை அடையாளம் கண்டு சோதிக்க பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் உதவின. இதுபற்றிய சோதனையை கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். பெருந்தொற்றில் மிகச்சிலர் மட்டுமே நண்பர்கள் சகிதம் இருந்தனர். பலரும் தனிமையில் இருந்தனர். சூழல் நெருக்கடியால் பல்வேறு மனநல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால், நாய்களை வளர்த்தவர்களுக்கு அதிக பிரச்னையில்லை. பிற மனிதர்கள் இல்லாத நிலையில் பேச்சுத்துணையாகவும் விளையாடுவதற்கான இணையாகவும் இருந்தது. அறிவியலாளர்கள், நாய்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தனர். அதற்கு நன்கு அறிந்த மனிதர்களின் முகங்கள் கண்ணில் தெரிந்தபோது மூளையில் மி

வீடு என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது! - விஷால் பரத்வாஜ், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  விஷால் பரத்வாஜ்  இந்தி சினிமா இயக்குநர் மாரேங்கே டு வாஹின் ஜாகர் என்ற பாடலுக்காக விஷாலுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.  உங்களுக்கு முன்னரே தேசியவிருது கிடைத்துள்ளது. இப்போது கிடைத்த விருது எந்த வகையில் முக்கியமாகிறது? பெருந்தொற்று காலகட்ட அவலத்தைச் சொல்லும் ஆவணப்படத்திற்கான பாடல் இது. நமக்கு பெருந்தொற்று காலத்தில் பிழைப்புக்கான பிரச்னை எழவில்லை. ஆனால், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தான் தங்கள் வீட்டை எட்ட பல கி.மீ. நடக்க நேரிட்டது.இவர்களைப் பார்க்கும்போது எனது பிள்ளைகள், மனைவியோடு வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கடும் குற்றவுணர்ச்சியை அளித்தது.  இதனால்தான் ஆவணப்படத்தை இயக்கி அதற்கென பாடலை உருவாக்கினேன்.  நெட்பிளிக்ஸிற்காக கூஃபியா என்ற திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளீர்கள். இது சவாலைக் கொடுத்ததா? இல்லை. இப்படி இயங்குவது எனக்கு விருந்து சாப்பிடுவது போலத்தான். இந்த வாய்ப்பு எனக்குள்ளிருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவது போல இருந்தது. நான் சாகச நாவல்கள், உளவு நாவல்களை விரும்பி படிப்பவன்.  குட்டே என்ற படத்தை உங்கள் மகன் இயக்கியுள்ளார். நவம்பரில் வெளியா

பெருந்தொற்று கால வேதனைகளை மறக்கவேண்டும். பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும்! - ஆஞ்சல் மல்ஹோத்ரா

படம்
  ஆஞ்சல் மல்ஹோத்ரா ஆஞ்சல் மல்ஹோத்ரா எழுத்தாளர் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும் பிரிவினை கலவரங்கள் நடைபெற்றும் 75 ஆண்டுகள் ஆகின்றன. இன்று பிரிவினையால் பாதிக்கப்பட்ட குடும்ப வாரிசுகள் பலரும் வெளிநாடுகளில் பரவி வாழ்கின்றன. எழுத்தாளர் ஆஞ்சல் மல்ஹோத்ரா, தி லாங்குவேஜ் ஆஃப் ரிமெம்பரிங் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் பிரிவினை பற்றிய பல்வேறு நினைவுகளை பதிவு செய்துள்ளார். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  நூலில் நீங்கள் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் பேரன்கள் ஆகியோருடன் பேசியுள்ளீர்கள். இந்த சூழல் எப்படியிருந்தது? பிரிவினையால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டிகள், அவர்களின் வாரிசுகள், பேரன்கள் ஆகியோருடன் நிறைய நேரம் செலவிட்டுத்தான் நூலுக்கான தகவல்களைத் திரட்டினேன். பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்றாலும் அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எளிதாக மறக்கமுடியாது. அதனை எளிதில் அகற்றிவிடவும் முடியாது.  பெரும்பாலான பேட்டிகளை நான் பாதிக்கப்பட்டவர்களின் பேரன்கள், வாரிசுகளிடம்தான் எடுத்தேன்.

பார்லே ஜியும் இந்தியாவின் உணவு பாதுகாப்பு தடுமாற்றமும்!

படம்
  1929 ஆம் ஆண்டு பார்லே பிஸ்கெட் நிறுவனத்தை மோகன்லால் தயாள் சௌகான் தொடங்கினார். அவர் வைல் பார்லே எனுமிடத்தில் வாழ்ந்தார். அந்த இடத்தின் பெயரையே நிறுவனத்திற்கு சூட்டினார். அன்று பிரிட்டிஷ் நிறுவனங்கள்தான் பிஸ்கெட் துறையில் ஆதிக்கம் செலுத்தின. அதற்கு போட்டியாக தொடங்கிய சுதேசி நிறுவனம்தான் பார்லே. முதல் பிஸ்கெட் பிராண்ட் பார்லே ஜி.   இன்று பார்லே  நிறுவனம் பல்வேறு உணவு சார்ந்த பொருட்களை தயாரித்து வருகிறது. இதிலும் அவர்களது முத்திரை பதித்த ஒரு பொருள் என்றால் அது குளுக்கோஸ் பிஸ்கெட்டான பார்லே ஜி தான். விலை குறைவு. இன்றுவரையுமே கையில் காசு இல்லாத பலரும் பார்லே ஜியை வாங்கி டீயில் தொட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொள்வது பார்க்க கூடிய ஒன்று. பார்லே ஜி மகத்தான ருசி கொண்ட பிஸ்கெட் கிடையாது. ஆனால் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு பிஸ்கெட் அதுதான்.  இன்றைய காலத்தில் பார்லே கூட ப்ரீமியம் வகையில் தனது பிஸ்கெட் வரிசைகளை உருவாக்கிவிட்டது. ஆனாலும் பார்லே ஜி பிஸ்கெட் உற்பத்தியை நிறுத்தவில்லை. இன்றும் அதனை தொடர்ச்சியாக விற்றுவருகிறது. பெருந்தொற்று காலத்தில் பார்லே நிறுவனம், பார்லே ஜி பிஸ்கெட்டுகளை இலவசமாக கொ

காப்புரிமையற்ற தடுப்பூசி

படம்
  பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காப்புரிமையற்ற  தடுப்பூசியின் பங்கு! உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தம்மைக் காக்க உலக மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவே தற்போது மாறிவரும் வைரஸ் வகைகளுக்கு ஏற்ப பெருமளவு மக்கள் பலியாகாமல் தடுத்து வருகிறது.  மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் செலுத்தியுள்ளனர். வறுமையான நாடுகளில் இந்த வகையில் 10 சதவீத மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த இடைவெளியை காப்புரிமை இல்லாத கோர்பேவாக்ஸ் (CORBEVAX ) போக்கும் என மருத்துவர் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.  வேறுபாடு என்ன? புரத துணைப்பிரிவு (protein subunit) தடுப்பூசி வகையைச் சேர்ந்த கோர்பேவாக்ஸ், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்பைக் புரதத்தை கொரோனாவிலிருந்து பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு எதிர்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. பிற தடுப்பூசிகள், உடலில் ஸ்பைக் புரதத்தை உருவாக்க தூண்டுகின்றன. கோர்பேவாக்ஸ், நேரட

பெருந்தொற்று காலத்தில் க்யூஆர் கோட் மூலம் கல்வி கற்பித்த ஆசிரியர்!

படம்
  புதிய கற்பித்தல் முயற்சி! மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சோவநகர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஹரிஸ்வாமி தாஸ்.  இவர், பள்ளியில் படிக்கும் 2,900 மாணவர்களையும், அவர்களது குடும்ப நிலையையும் அறிந்தவர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டபோது மாணவர்களுக்கு எப்படி கற்றுக்கொடுப்பது என யோசித்தார். சோவநகரில் ஏற்பட்ட மண் அரிப்பு, குடியிருப்புகள் மாற்றம் ஆகிய பிரச்னைகளையும் சமாளித்து மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.  பள்ளிகள் மூடப்பட்டு பொதுமுடக்க காலகட்டம் நடைமுறையில் இருந்தது. தனது மாணவர்கள் சிலரின் வீடுகளுக்கு போனில் அழைத்தார் ஹரிஸ்வாமி தாஸ். ஏழை மாணவர்களில் 30 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தமுடியாத சூழல் இருந்தது. படிப்பதற்கான நூல்களும் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். “என்சிஇஆர்டி நூல்களில் க்யூஆர் கோட் இருந்தது. ஆனால் மேற்குவங்க  மாநில அரசு பாடநூல்களில் இந்த வசதி கிடையாது. எனவே, அரசு வலைத்தளங்களிலிருந்து பாட நூல்களை தரவிறக்கி க்யூஆர் கோட் மூலம் அதனை அணுகும்படி வசதிகளை செய்தோம் ”  என்றார்.   தாஸின் மாணவர்கள் வீடுகளில், ஸ்மார்ட்போன்களை அவர்களது தந்தை அல்லது சகோதரர்கள்

பெருந்தொற்று கால எழுத்தாளர்கள்! - குதிரை சவாரி, முன்னோர்களின் கதை, கலாசாரம் சார்ந்த கேள்வி, குறைந்த கழிவுகள்

படம்
  எழுத்தாளர் சஹர் மன்சூர் தரிபா லிண்டெம் எழுத்தாளர், நேம் பிளேஸ் அனிமல் திங் - ஜூபான் புக்ஸ் தரிபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் சுங்கத்துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது முன்னோர்களைப் பற்றிய கதை மனதில் சுனை நீராக பெருக எழுத தொடங்கியிருக்கிறார். இந்த வேலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனாலும் கிடைத்த நேரத்தில் நூலை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். அப்படித்தால் இவரது புதிய நூல் பிரசுரமாகியிருக்கிறது. 34 வயதாகும் தரிபா, எனக்கு நூல் பிரசுரமாவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. புதிய எழுத்தாளர்களுக்கு இப்போது பிரசுரங்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்கிறார்.  தரிபா லிண்டெம் இப்போது நம்மிடம் பேசும்போது கூட நான் தனியாக அமர்ந்து நூலை எழுதுவேன். அது நூலாக வெளியாகும் என்பதை யோசிக்கவே முடியவில்லை என்கிறார்.  யஷாஸ்வினி சந்திரா எழுத்தாளர், எ டேல்  ஆப் தி ஹார்சஸ் கலை வரலாற்று ஆய்வாளர், குதிரை சவாரிக்காரர் என்றுதான் சந்திராவைச் சொல்ல முடியும். இவர் தனது குதிரை தொடர்பான ஆர்வத்தை முன்வைத்து வரலாற்று பின்னணியில் நாவலை எழுதி பான் மெக்மில்லனில் வெளியிட்டிருக்கிறார். பெருந்தொற்று

பெருந்தொற்று காலத்தில் உருவான எழுத்தாளர்கள்- கிருபா ஜி, ஜோதி பாண்டே லவாகரே

படம்
  கிருபா ஜி, எழுத்தாளர் சென்னை பெருந்தொற்று காலம் நிறையப் பேருக்கு உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு சிக்கல்களை அளித்துள்ளது. சிலர் அதில் சிக்கி பாதிக்கப்பட்டாலும் இன்னும் சிலர் எழுத்து, ஓவியம், படைப்பு, பல்வேறு ஆன்லைன் படிப்பு என மீண்டு வந்துள்ளனர். முன்பை விட இன்னும் சிறப்பான மனிதர்களாக தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.  இந்த பெருந்தொற்று காலத்தில் நிறைய புதிய எழுத்தாளர்கள் வந்துள்ளனர். இதற்கு பின்ஞ், பிரதிலிபி என நிறைய வலைத்தளங்கள் காரணம் என்றாலும் கூட சொந்த முயற்சியும் தளராத உழைப்பும் பின்னணியில் உள்ளதையும் மறுக்க முடியாது. தன்னறம் நூல்வெளியின் காணொலியில் எழுத்தாளர் தேவிபாரதி, புதிய இளம் எழுத்தாளர்களுக்கு தொடர்ச்சியாக எழுதுங்கள். அதன் வழியாக நீங்கள் என்ன கண்டடைய வேண்டுமோ அதனைக் கண்டுபிடிப்பீர்கள் என சொன்னார். பயணம் என்று கிளம்பிவிட்டால் இறுதியாக அனைவரும் வந்தடையும் இடம் ஒன்றுதான். தன்னைத்தானே அறிதல்தானே? அப்படிப்பட்ட சிலரைப் பற்றி பார்ப்போம்.  கிருபா ஜி  வாட் வீ நோ அபவுட் ஹெர் - வெஸ்ட்லேண்ட் புக்ஸ்  சென்னையைச் சேர்ந்த 35 வயதாகும் எழுத்தாளர் இவர். நாவலை எழுத வேண்டும் என்று தோன்றியதும் தனத

சென்னை புத்தக கண்காட்சி வரலாறு!

படம்
  pixabay 1976ஆம் ஆண்டு சென்னையில் முதல்முறையாக புத்தக திருவிழா நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள முகல் இ ஆசாம் என்ற பள்ளியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.  2022ஆம் ஆண்டு நடைபெறும் புத்தக காட்சி 45 ஆவது ஆண்டாக நடைபெறும் புத்தக காட்சி ஆகும்.  பை பதிப்பகத்தில் கே வி மேத்யூ என்பவரே புத்தக காட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்தக காட் சி இயக்கத்தை சென்னையில் உருவாக்கியவர்.  தொடக்க காலத்தில் தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் இடம்பெறவில்லை. காரணம். இதற்கான கட்டணம்தான். பின்னாளில் தொகை குறைக்கப்பட்டது. பல தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் பங்கேற்றனர்.  இப்போது சென்னையில் நடைபெறும் புத்தக காட்சியில் அறுநூறு கடைகள் தமிழ் பதிப்பகங்களுக்கும் மீதியுள்ளவரை பிற மொழிநூல்களுக்கும் பதிப்பகங்களும் வழங்கப்படுகிறது.  பதிப்பகங்கள் அல்லாத எழுத்தாளர்களும் கூட இங்கே தனி ஸ்டால் போட்டு புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.  2021ஆம்ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு இருந்தது. அப்போது கூட புத்தக காட்சியில் 700 ஸ்டால்கள் இருந்தன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான தலைப்பில் நூல்கள் விற்பனையில் இருந்த

அரசின் கல்வித்திட்டங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது! - பேராசிரியர் கிருஷ்ணகுமார்

படம்
  பேராசிரியர் கிருஷ்ணகுமார் கல்வியாளர் டிஜிட்டல் கல்விமுறை என்பது கல்வி கற்பதை பெரும் பிரிவினைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? பள்ளிகள் பெருந்தொற்று காரணமாக தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். நிலப்பரப்பு ரீதியாக எங்கு நோய்த்தொற்று அதிகம் பாதிக்கிறது என்பதை கண்டுபிடிக்கவேண்டும். கல்வி நிறுவனங்களை திறப்பது, மூடுவது என்பதை அரசு கூறக்கூடாது. அதனை ஊரக அளவில் உள்ள நிர்வாகத்தினர் நோயின் பெருக்கத்தைப் பொறுத்து தீர்மானித்துக்கொள்வதாக இருந்தால் நன்றாக இருக்கும்.  மதிய உணவு வழங்குவதிலும் இதேபோன்ற சூழல்தான் நிலவுகிறது. எதற்கு பள்ளிகளில் வழங்கும் உணவை தடுத்தார்கள் என்றே புரியவில்லை. சாதாரணமாக எடுக்கும் வகுப்புகளுக்கு மாற்றாக வரும் ஆன்லைன் கல்வி முறை மாணவர்களுக்கு பெரியளவில் மாற்றாக இருக்காது என்பது ஆசிரியர்களுக்கும் தெரியும். மாணவர்களுக்கு மேசைக்கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன் என எதையும் கொடுக்காமல் எப்படி அவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வியை கற்றுத்தருவது? ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாத ஒன்றுதான்.  ஆன்லைனில் கல்வி கற்ற மாணவர்கள் இ

காந்தியின் பொருளாதார அறிவு உலகைக் காப்பாற்றுமா? - நூல் அறிமுகம்

படம்
  ஸ்கேரி ஸ்மார்ட் மோ காவாதத் பான் மெக்மில்லன் 699 மனிதர்கள் எழுதும் அல்காரிதப்படிதான் எந்திரங்கள் இயங்குகின்றன. இதன் செயல்பாடு பற்றி இன்னும் நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதனைப் பற்றி ஆசிரியர் விளக்கி எழுதியுள்ளார்.  ஷட் டவுன் ஆடம் டூஸ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 899 பொதுமுடக்கம் வந்தபிறகு நாடுகளின் பொருளாதாரம் 1929ஆம் ஆண்டுக்கு முன்னர் சென்றுவிட்டது. பணம், தங்கம் என பலவற்றையும் செலவு செய்யும் நிலைக்கு நாடுகள் வந்துவிட்டன. பெருந்தொற்று காரணமாக மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டு நாடுகளின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. இப்படி உலகம் முழுக்க நடந்த விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார் ஆசிரியர்.  பெரில் பாப் வுட்வர்ட் ராபர்ட் காஸ்டா சைமன் ஸ்ஹஸ்டர் அமெரிக்காவில் டிரம்ப் தேர்தலில் தோற்றபிறகு பைடன் ஆட்சிக்கு வருகிறார். அவருடைய காலம் வரலாற்றில் மிக மோசமானதாக அமைந்துவிட்டது. இருநூறு பேர்களுக்கு மேல் நேர்காணல் கண்டு அரசியல் சிக்கல்களை பேசியுள்ளனர். எகனாமிஸ்ட் காந்தி ஜெய்திர்த் ராவ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  499 இன்றும் பொருளாதார நூல்களில் காந்தியப் பொருளாதாரத்தை பற்றி மாணவர்கள் படிக்கிறார்கள். காந்தி வறுமைய

பெருந்தொற்று காலத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பாப்புலிச தலைவர்கள்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
                          புத்தகம் புதுசு ! லாங்குவேஜஸ் ஆப் ட்ரூத் சல்மான் ருஷ்டி பெங்குவின் 2003 இல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட பல்வேறு விஷயங்களை நூல் கொண்டுள்ளது . இந்த காலகட்டங்களி்ல் நடைபெற்ற கலாசார மாற்றங்களை பேசுகிறது . கதை சொல்லுவதை இயல்பாக தனது எழுத்தில் இயல்பாக கொண்டிருப்பதால் இந்நூலை படிக்கும் அனுபவம் சிறப்பாக உள்ளது . டூம் நியால் ஃபெர்குஷன் பெங்குவின் உலகம் முழுக்க செயல்படும் பாப்புலிச தலைவர்கள் , பெருந்தொற்று காலத்தில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி மக்களை காக்கமுடியாமல் தடுமாறி வருகின்றனர் . இந்த நிலை ஏற்பட்டது எப்படி ? சில நாடுகள் மட்டும் சார்ஸ் , மெர்ஸ் ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது எப்படி என இந்த நூல் பேசுகிறது . டெவலப்மென்ட் , டிஸ்ட்ரியூபூஷன் அண்ட் மார்க்கெட்ஸ் கௌசிக் பாசு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூல் எப்படி மேம்பாட்டு பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது . இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நேரடியாக பணத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் எப

நாடு வளர்ச்சிபெற பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவது அவசியம்தான்! - உதய் சங்கர், இந்திய வணிகநிறுவனங்களின் அமைப்பு

படம்
            உதய் சங்கர் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அடுத்து வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? இந்தியாவின் தொழில்துறையில் பல்வேறு துறைகளில் பொருளாதாரம் மீண்டு வருகிறது . இந்த விஷயத்தில் நாங்கள் அரசுக்கு உதவி செய்ய நினைக்கிறோம் . எங்கள் அமைப்பு முதன்முதலாக மக்களின் கையில் பணத்தை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது . காந்தி கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற நிறைய திட்டங்கள் இப்போது தேவை . இங்கு அனைத்து துறைகளும் ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் வளர்ச்சி பெறவில்லை . நகர்ப்புறத்தில் உள்ள வறுமையை அரசு அடையாளம் காண்பது அவசியம் . ஹோட்டல் , சுற்றுலா துறைகளுக்கு அரசு உதவி செய்துவருகிறது . இதைப்போலவே பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் பல்வேறு தொழில்துறையினருக்கு அரசு உதவி செய்யவேண்டும் . 2021 இல் பொருளாதாரம் என்ன மாற்றம் காணும் என்று நினைக்கிறீர்கள் ? அதற்கு முழுக்க நாம் பெருந்தொற்று பாதிப்பை அளவிடவேண்டும் . பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும் . இதில் நல்ல செய்தி , தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் , அது விரைவில் நமது நாட்டிற்கு கிடைக்கும் என்பதுதா

செஸ்ஸை வேகமாக விளையாடினால் சந்தோஷம் கிடைக்காது! - விஸ்வநாதன் ஆனந்த், செஸ் விளையாட்டு சாதனையாளர்

படம்
                விஸ்வநாதன் ஆனந்த் செஸ் வீரர் பெருந்தொற்று காலத்தில் நிறைய மக்கள் செஸ் விளையாடி வருகின்றனர் . இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? செஸ் விளையாட நினைத்தவர்கள் கூட முன்னர் நேரமில்லாமல் தவித்தனர் . ஆனால் இந்த ஆண்டில் நிறைய மக்கள் செஸ் விளையாடத் தொடங்கியுள்ளனர் . நிறைய கடைகளில் செஸ் போர்டுகளோடு , அதற்கான கடிகாரங்களும் சிறப்பாக விற்பனையாகிவருகி்ன்றன . எனக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் உண்மையில் ஆச்சரியம் தருகிறது . முன்னாள் சாம்பியனானா கார்ல்சன் வேகமாக செஸ் ஆடுவது பற்றி பயிற்சி அளிக்கிறார் . அப்படியென்றால் கிளாசிக் செஸ் என்பது எப்படியிருக்கும் ? என்னுடைய தலைமுறையினர் கிளாசிக்கலான செஸ்ஸை விளையாடினர் . ஆனால் அடுத்த தலைமுறை அதில் மாற்றம் ஏற்படுத்த விரும்புகிறது . உண்மையில் இந்த விளையாட்டு வேகமாக மாறினால் அதில் விளையாடும் சந்தோஷம் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை . கிளாசிக் செஸ்ஸில் மாற்றங்களை ஏற்படுத்தி விளையாடவேண்டும் என்று் கார்ல்சன் கூறியுள்ளார் . அது உண்மையும் கூடத்தான் . ஆனால் வேகமாக செஸ் ஆடத்தொடங்கினால் பின்னாளில் பழைய