இடுகைகள்

பயிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்பிரிக்க கண்டத்தின் வேளாண்மை பொருளாதாரத்தை மேம்படுத்த முயலும் இளம்பெண் கேட் கலோட்!

படம்
  கேட் கலோட் என்ற பெண்மணி கென்யா நாட்டைச் சேர்ந்தவர். இவர்,2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமினி என்ற தகவல்தள நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், ஆப்பிரிக்காவில் உள்ள விவசாய நிலங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது.  மண்வளம்,ஈரப்பதம், மழை ஆகிய தகவல்களை செயற்கைக்கோள் மூலம் சேகரித்து வருகிறது. கலோட்டின் நோக்கம், விவசாயிகளுக்கு காலநிலை பற்றிய தகவல்களை  எஸ்எம்எஸ் வழியாக வழங்குவதுதான். இதன் மூலம் அவர்கள் பயிர்களை கவனித்து வளர்க்கலாம், லாபம் பெறலாம். ஆப்பிரிக்க கண்டமே இதன் மூலம் லாபம் பெறும். இந்த திட்டத்தை சற்று விரிவாக பார்ப்போம்.  மொத்தம் ஆறு செயற்கைக்கோள்கள் வானில் அலைந்து திரிந்து ஆப்பிரிக்காவின் 11.7 மில்லியன் சதுர மைல் நிலப்பரப்பு பற்றிய காலநிலை தகவல்களை சேகரிக்கும். இதை வைத்து காலத்தே பயிர் செய்து, பராமரித்து லாபம் பெறலாம். வெள்ளம், பூச்சி தாக்குதல், மழை பற்றிய தகவல்கள் விவசாயிகளுக்கு போன் வழியாக அனுப்பி எச்சரிக்கப்படும். ஆப்பிரிக்க கண்டமே வேளாண்மையை அடிப்படையாக கொண்டதுதான். எனவே, அதை மேம்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவ முடியும்.  உலகளவில் உள்ள விவசாயம் செய்யப்படாத தரிசு

ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

            காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம் . ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது . காடு , இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது . நாளிதழ்கள் , வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம் , சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள் , மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன . ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும் . ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள் . அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள் . அவர்களை எதிர்க்க த் துணிவார்களா கடினம் தான் . குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம் . இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள் . இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டு லிவ்விங் கார்பன் என்ற நிறுவனம் தொடங்கப்பட

காபி பயிரில் புதிய வகை - எக்ஸெல்சா

படம்
  எக்ஸெல்சா காபி செடி காபியில் புதிய ரகம்! காபி ரகங்களைப் பொறுத்தவரை இரண்டு வகைகள்தான் அனைவரும் அறிந்தவை. அராபிகா, ரோபஸ்டா. இந்த இரண்டு வகை காபிகளைத்தான் ஒருவர் அருந்தியிருக்க முடியும். இதிலும் நிறையப் பேர் குறிப்பிட்ட வகை காபிக் கொட்டைகளை வாங்கி வறுத்து பொடி செய்வது உண்டு. இல்லையெனில் குமார் காபி, குரு காபி, நரசுஸ் காபி, லியோ காபி என காபி நிறுவனங்களில் கூட வாங்கிக்கொண்டு காபி போட்டு குடிப்பார்கள். உலகளவில் அராபிகா, ரோபஸ்டா என்பவைதான் பிரபலமானவை. ஆனால், இந வகை காபி செடிகளை பயிரிடுவதில் நோய்த்தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் இதன் ஆண்டு விளைச்சலும் குறைந்து வருகிறது. இதன் விளைவாக வேறு காபி ரகங்களை தேடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. காபி   பயிரில் மொத்தம் 124 இனங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் வணிகரீதியாக வளர்த்து அதைப் பயன்படுத்தும் காபி கொட்டைகளுக்கு ஏற்றவை என வணிகர்கள் அராபிகா, ரோபஸ்டா என இரண்டை மட்டுமே ஏற்றனர். அதை மட்டுமே விளைவித்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், இனி அவற்றை பயன்படுத்துவதில் அதிக பயனில்லை. மேற்சொன்ன இரண்டு ரகங்களுக்குப் பதில் எதிர்காலத்தில் லைபீரியா என்ற காபி

அலமாரியில் கால்நடை தீவனப்பயிர்களை வளர்க்கும் விவசாயி - நாமக்கல் சரவணன்

படம்
  அலமாரியில் சோளம் விதைத்து அதை கால்நடைகளுக்கு போடுவதை எங்கேனும கண்டிருக்கிறீர்களா? அதை நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன் செய்கிறார். வெளிநாடுகளில் மண் இல்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறி விளைவிப்பதை பற்றி அறிந்திருப்பீர்கள். அதை நமது ஊரில் சாத்தியப்ப்படுத்துகிறார். தனது உறவினர்களுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு சொல்லித் தருகிறார். அரியக்கவுண்டம்பட்டியில் விவசாயத்திற்கென சிறியளவு நிலம் இருக்கிறது. ஆனால் அவர் வளர்க்கும் கால்நடைகளுக்கான தீனி என்று வரும்போது அது போதுமானதாக இல்லை., எனவேதான் மண்ணில்லாமல் விவசாயம் செய்யும் வழியை கிரிஷி விக்யான் கேந்திரா எனும் மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்பில் அறிந்து கற்றுத் தேர்ந்திருக்கிறார். இதில் மண் இல்லாத காரணத்தால் நீர் மூலமே அனைத்து சத்துகளையும் பயிருக்கு தரவேண்டியிருக்கும். குறைவான அளவில் கால்நடை தீவனங்களை, பருப்புகளை விளைவிக்க முடியும். சந்தையில் கிடைக்கும் தீவனங்களை விட மலிவாக விளைவிக்க முடிந்திருக்கிறது என்பதுதான் இதில் முக்கியமான சங்கதி. 500 கிலோ விதையில் 4.5 கிலோ கால்நடை தீவனத்தைப் பெறமுடிகிறது. விதை சோளத்திற்கு இருபத்து நான்கு மணிநேரமும் நீர் வி

உருளக்குடி கிராமத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்! - சூல் - சோ.தர்மன் - அடையாளம் பதிப்பகம்

படம்
    சூல் நாவல் சூல் நாவல் எழுத்தாளர் சோ.தர்மன் சூல் சோ. தர்மன் அடையாளம் பதிப்பகம்   நாவலாசிரியர் சோ.தர்மன், சூல் நாவலை நீர், நீர் பாய்வதால் பயிர் பச்சைகள் எப்படி விளைகின்றன என்பதையே சூல் என அர்த்தப்படுத்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளக்குடி என்ற ஊரின் தொன்மையும், சாதி கட்டுப்பாடுகளும் உடைந்து மெல்ல விவசாயம் என்ற தொழில் அழிவதை 500 பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார். நாவலில் நாம் ரசிக்கும்படியான விஷயம் என்றால், பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் திட்டுவது போல ஹாஸ்யமாக உரையாடிக் கொள்வதுதான். இதில் பாலியல் சார்ந்த விஷயங்கள் இருந்தாலும் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. கொஞ்சம் விஷமமான விஷயங்களை போகிற போக்கில் பேசிவிட்டு போகிறார்கள். நாவலில் வரும் குப்பாண்டி, கோவிந்தசாமி விவகாரம் முதலில் இயல்பானதாக இருந்து பிறகு மெல்ல ஆன்மிகம் நோக்கி நகர்கிறது. அதற்கு பிறகு குப்பாண்டி குப்பாண்டி சாமியாக மாறுகிறார். அதற்கு பிறகு அவர் பேசுவதெல்லாம் ஆசிரியரின் மனதில் உள்ள உபதேசக் கருத்துகளைத்தான். நீர்ப்பாய்ச்சி, ஊரில் உள்ள மனைவி இல்லாத மூவரின் வாழ்க்கை, எலியன், அவரின் நண்பரான ஆசாரி, கோணக்கண்ணன், சுச

காலநிலையைக் கட்டுப்படுத்தும் மனித முயற்சிகள் - மேக விதைப்பு, மேக வெளுப்பு

படம்
    காலநிலையை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியுமா?   உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 800 கோடியை உலகம் எட்டிவிட்டது. இதில் முதலிடம் சீனா, என்றால் அடுத்தது இந்தியாதான். ஒப்பீட்டளவில் சீனாவின் மனிதவளம் பெற்ற பொருளாதார வளர்ச்சியை இரண்டாவது இடத்தில் இருந்தால் இந்தியா பெற முடியவில்லை. இதற்கு தொலைநோக்கு இல்லாத தலைவர்கள் நாட்டை வழிநடத்துவதுதான் என்பதை தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களுக்கான இயற்கை வளங்கள் நீர், நிலம், உணவு என அனைத்துமே குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய இயற்கை நிகழ்வுகளை புரிந்துகொள்வது அல்லது அதை கட்டுப்படுத்துவது என இரு வழிகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் நாம் இப்போது படிக்கப் போகிறோம். இப்போது நிறைய மாநிலங்களில் அதிகமாக மழை பெய்வது, சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருந்தும் பருவமிருந்தும் கூட மழை பெய்வதே இல்லை. இந்த பிரச்னையை க்ளவுட் சீடிங் முறையில் தீர்க்க முடியும். இதற்கான சோதனை 1946ஆம் ஆண்டே நடைபெற்றது. செயற்கையாக மழை பொழிய வைக்கும் முயற்சி தேவையா என்றால், மழை பொழிவு மட்டுமே இயற்கையாக மண்ணில் உள்ள ஆற்றலை, விதைகளை முளைக்கும் திறன

90 நொடியில் மண்ணில் இயல்பை அறியலாம்!

படம்
  90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்! ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில்  மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால்,  ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும்.  இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது.  மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம்.  சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத் வழியாக இணைத்தால் 90 நொடிகளில

பயிர்களை வளர்க்க பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகளை மாற்றிக்கொள்வது அவசியம்! - அரியல் ஆர்டிஸ் போயியா

படம்
  நேர்காணல் அரியல் ஆர்டிஸ் போயியா பொருளாதார பேராசிரியர், கார்னெல் பல்கலைக்கழகம் உங்களது ஆராய்ச்சி பற்றி கூறுங்கள். வரலாறு மற்றும் எதிர்காலத்தில் காலநிலை மாற்றங்கள்  பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். குறிப்பாக, வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள்.  2021ஆம் ஆண்டு நானும், சக பணியாளர்களும் வேளாண்மையில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை பற்றிய ஆய்வை செய்தோம். இதில் பயிர்கள், மரங்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை உள்ளடங்கும். 1960ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 99.9 சதவீத உலக வேளாண்மை உற்பத்தியை நாங்கள் ஆய்வில் உள்ளடக்கியிருந்தோம். வெப்பம் அதிகரித்த காலத்தில் வேளாண் துறையில் உற்பத்தி வீழ்ச்சியை அடையாளம் கண்டோம். இதற்கு, சரியான அளவில் முதலீடுகள் தேவை.  பயிர்களை எப்படி விளைவிப்பது? மனிதர்களின் உதவியின்றி முன்னமே பயிர்கள் இங்கு சிறப்பாக வளர்ந்து வந்துள்ளன. மனிதர்களின் எண்ணிக்கை பெருகியபோது, வேளாண்மையின் உற்பத்தி குறையத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளில், 7 ஆண்டுகளுக்கான வேளாண்மை உற்பத்தித் திறனை நாம் அறிந்தே அழித்திருக்கிறோம்.  நீங்கள் உற்பத்தித் திறனை வளர்க்க தீர்வுகளை வைத்திர

மண்ணிலுள்ள அமிலங்கள், பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி! - தெரியுமா?

படம்
  மண்ணிலுள்ள அமிலங்கள்! இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களும் ஒரேமாதிரியான சத்துக்களை கொண்டிருப்பவை அல்ல. சில இடங்களிலுள்ள நிலங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். மண்ணிலுள்ள அமிலத்திற்கு எதிரிடையான வேதிப்பொருளை மண்ணில் பயன்படுத்தும்போது மண், பயிர்களை விளைவிப்பதற்கு ஏதுவான நிலையைப் பெறும். பெரும்பாலான பயிர்கள் அமிலம், காரம் என அதிகம் மிகாத மண்ணில்தான் சிறப்பாக விளைகிறது.  மண்ணில் தாவரங்கள் வளர்வதற்கும் அதிலுள்ள அமில, கார அளவுகள் முக்கியமானவை. ஆசியா மற்றும் அமெரிக்காவில் அதிகம் விளையும் பூ தாவரம், ஹைட்ரேஞ்சியா (Hydrangea). இந்த தாவரம் அமிலம் நிரம்பிய மண்ணில் விளைந்தால், நீலநிற பூக்களும், காரம் நிரம்பிய மண்ணில் விளைந்தால் ரோஸ் நிற பூக்களையும் பூக்கின்றன. மண்ணிலுள்ள அமில, கார அளவை பிஹெச் அளவுகோல் மூலம் எளிதாக கணக்கிடலாம்.  மேற்குலகில் நிலத்திலுள்ள அமிலத்தன்மையை சீர்படுத்த சுண்ணாம்பை பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, நிலத்தின் அமிலத்தன்மை நடுநிலையாக பிஹெச் 7 என்ற அளவுக்கு மாறுகிறது.  பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி ( Biome Domes )  உலகில் பாலைவனங்கள், காடுகள் என பல்வேறு நிலப்பரப்புகள்  உண்டு.

பயிர்களை அழிக்கும் அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்! ஃபார்ம் சென்ஸ்

படம்
  அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பம்! இயற்கைச்சூழலில் பூச்சிகளின் பங்கு முக்கியவை. விவசாயப் பயிர்களை தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமானதாக மாறிவருகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரோமோன் வேதிப்பொருள் கொண்ட பசை அட்டைகளை விவசாயிகள் பயன்படுத்தினர். ஆனால் இதன் மூலம் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையை, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஃபார்ம்சென்ஸ் (Farmsense) நிறுவனம் மாற்றியுள்ளது. இந்த நிறுவனம் பூச்சிகளை கண்காணிக்கும் சென்சார் கருவிகளை உருவாக்கி வருகிறது.   2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபார்ம்சென்ஸ் நிறுவனம், பூச்சிகளைக் கண்காணித்து அதற்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை வகுக்க உதவுகிறது. இந்த நிறுவனத்தின்,  ஃபிளைட்சென்சார் கருவி, 2020ஆம் ஆண்டு முதலாக வயல்வெளிகளில் நிறுவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்தக்கருவி, பூச்சியை கவர்ந்து இழுக்கும் கொல்லும்பொறி அல்ல. அந்திபூச்சிகளின் வடிவம், இறக்கை எழுப்பும் ஒலி என பல்வேறு அம்சங்களை பதிவு செய்து உரிமையாளருக்கு தானியங்கியாக அனுப்பிவிடும்.  கருவி தரும் தகவல்களின் அடிப்படையில், பூச்

பழங்குடி மக்களின் விதைவங்கி!

படம்
  பழங்குடி மக்களின் விதைவங்கி! ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள மலைப்பகுதி மாவட்டங்கள் பாகுர், கோட்டா. இங்கு வாழும் பழங்குடி மக்கள் இனமான பகாரியா, விதை வங்கிகளை உருவாக்கியுள்ளனர். இந்த விதை வங்கியில், தாங்கள் பயிரிடும் தொன்மையான பயிர் ரகங்களைப் பாதுகாத்து வருகின்றனர். தொடக்கத்தில் நிலங்களில் பயிரிடுவதற்கான பயிர்களை உள்ளூர் வட்டிக்காரர்களிடம் பெற்று வந்தனர்.  பயிர்களை நடவு செய்து கடுமையாக உழைத்து பன்மடங்காக பெருக்கினாலும் கூட சரியான விலைக்கு விற்கமுடியவில்லை. மேலும் அவர்களின் உணவுக்காக கூட விளைந்த பயிர்களை பயன்படுத்தமுடியவில்லை. வட்டிக்காரர்களின்  பயிர்க்கடனை அடைக்க விளைந்த தானியங்களை மொத்தமாகவே விற்க வேண்டியிருந்தது. பல்லாண்டு காலமாக பாகுர், கோட்டா மாவட்டங்களில் வாழ்ந்த பழங்குடிகளின் வாழ்க்கை இப்படித்தான் நடந்து வந்தது.  பழங்குடி மக்கள், 2019ஆம் ஆண்டு நான்கு விதை வங்கிகளை உருவாக்கினர். இதற்கு டிராய்ட் கிராஃப்ட், பத்லாவோ பௌண்டேஷன், சதி ஆகிய மூன்று நிறுவனங்கள் உதவியுள்ளனர். இதற்குப் பிறகு, பயிர்களை வட்டிக்காரர்களிடம் கடனுக்கு வாங்கும் பிரச்னை மெல்ல குறைந்துவிட்டது.   பழங்குடி மக்கள் நாட்டு

மண்ணின் தரத்தை 90 நொடியில் அறியலாம்!

படம்
  90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்! ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில்  மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால்,  ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும்.  இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது.  மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம்.  சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத் வழியாக இணைத்தால் 90 நொடிகளில