இடுகைகள்

போக்குவரத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானியங்கி முறையில் இயங்கும் கார்கள், அவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்!

படம்
  என்ஓஏ, என்ஏடி, என்சிஏ, ஏசிடிஎம் என்ற சொற்களை கேட்டால் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? இதெல்லாம் கார் தயாரிப்புத் துறையில் பயன்படுகிற சொற்கள். இப்போது டிரெண்டிங்கில் இருப்பது தானியங்கியாக இயங்கும் கார்கள்தான். அப்படி இயங்குகிற கார் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படி சொற்களை கண்டுபிடித்து வைத்து குழப்புகின்றன. உண்மையில் கார்களின் தானியங்கி இயக்க முறை என்பது ஒரே முறைதான். ஆனால் வெவ்வேறு பெயர்களில் தொழில்நுட்பத்தை பயனர்களுக்கு காட்டி மயக்க முயல்கின்றன.  லீ ஆட்டோவின் தொழில்நுட்பம் என்ஓஏ எனவும், ஹூவாய் என்சிஏ - நேவிகேஷன் க்ரூஸ் அசிஸ்ட் எனவும், டெஸ்லா - எஃப்எஸ்டி, எக்ஸ்பெங் நிறுவனம், எக்என்ஜிபி எனவும் பல்வேறு எழுத்துகளை இணைத்து புதுமையான பெயர்களை வைத்து வருகின்றன. இந்த கார் நிறுவனங்கள் லேசர், கேமரா ஆகியவற்றை பயன்படுத்தி தானியங்கி கார் சோதனைகளை செய்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துவது ஒரே தொழில்நுட்ப கருவிகள்தான். ஆனால் பெயர்களை மாற்றி வைத்து மக்களை ஏமாற்றி குழப்புகின்றன. இப்படி பயன்படுத்தும் கருவிகளுக்கு குறிப்பிட்ட தரம் இருக்கிறதா என்பதே கேள்விதான்.  பெரும்பாலான இதுபோன்ற சொல் வ

5 ஜியால் முன்னேறும் துறைகள்! - போக்குவரத்து, சூப்பர் ஆப், விற்பனைத்துறை

படம்
  5 ஜி பயன்கள்  ஸ்மார்ட்போன் பயனாளர்கள் டேட்டா வேகம் பத்து மடங்கு அதிகரிக்கும். தரவிறக்க வேகத்திற்கு வட்டவடிவில் சுத்துவதை நீங்கள் பார்க்கும் துரதிர்ஷ்டம் நேராது. ஓடிடி தளத்தில் நிகழ்ச்சிகளை பார்ப்பது வேகமாகும்.  வீடு வீஆர் விளையாட்டுகளை எளிதாக விளையாடலாம். 8கே அளவிலான டிவிகளைப் பயன்படுத்தலாம்.  கல்வி  பெருந்தொற்றில் அறிமுகமான டிஜிட்டல் கல்வி இன்னும் வேகமாகும். நெடுந்தொலைவில் இருந்தாலும் கூட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கற்றுத் தரமுடியும்.  விற்பனை விரல் முனையில் தட்டினால் பொருட்கள் வாசலில் வந்து நிற்கும். குரல் வழி ஆணை, உடல்மொழி மூலம் நீங்கள் எளிதாக பொருட்களை வாங்கலாம். பணத்தை வேகமாக செலுத்தலாம். அமேசான் கோ போல கேஷியர் இல்லாத சூப்பர் மார்க்கெட்டுகள் உருவாக வாய்ப்புள்ளது.  வங்கி மொபைலில் இருந்தே வங்கியில் செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்யலாம். வங்கிக்கு செல்வது என்பது மிக அரிதான நிகழ்வாக மாறும்.  விவசாயம்  பயிர் விதைப்பது தொடங்கி சாகுபடி வரையிலான அனைத்து விஷயங்களும் தொழில்நுட்ப ரீதியாக ஒழுங்குபடுத்தப்படும்.  உற்பத்தித்துறை இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் முறையில் சென்சார், கருவிகள

நுகர்வை குறைத்தால் சூழல் பிழைக்கும்!

படம்
  நுகர்வைக் குறைத்தால் சூழல் பிழைக்கும்! உலகளவில் வெப்பமயமாதல், சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நீர், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் அளவு கூடுவது, சூழலின் சமநிலையை நிலைகுலைய வைக்கும். இந்த விளைவுகளை சமாளிக்க நாம், நமது நுகர்வைக் கவனித்து குறைத்தாலே போதுமானது.  மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்பது, இன்று நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. வீடு, வணிகம், தொழிற்சாலை என மின்சாரப் பயன்பாடு தடையில்லாமல் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முயன்று வருகின்றன. ஐ.நாவின் மனித மேம்பாட்டு தொகுப்பு பட்டியில் (HDI) கூட தனிநபர் செலவழிக்கும் அளவு 2000 - 3000 கிலோவாட்(kWh) என்று கணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தை வைத்து ஒருவர் செலவழிக்கும் தோராய மின்சார அளவு கணிக்கப்படுகிறது. இதன் வழியாக அவரது வாழ்க்கை எப்படி செழிப்பாக அல்லது ஏழ்மையாக உள்ளதா என கணிக்கிறார்கள்.   வளர்ந்த மேற்குநாடுகளில் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒருவரின் வருமானத்திற்கும், அவரின் மின்சார நுகர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவை எடுத்து

அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் ஒரே சூப்பர் ஆப்!- அசத்தும் கொச்சி - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்க்ஷன் 21.7.2021 அப்படியா! புதிய வசதி!  இன்ஸ்டாகிராமில் வன்முறை, ஆபாசம் ஆகியவற்றை தவிர்க்கும்படியான வசதிகளை நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. யாராவது ஒருவர் வெளியிடும் செய்தி, சங்கடத்தை ஏற்படுத்தும்படி இருந்தால் அதனை எக்ஸ்ப்ளோரர் எனும் டேப் மூலம் மறைத்துவிடலாம். இதன்மூலம் நாம் பார்க்க விரும்பும், விரும்பாத செய்திகளை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். ”சிலர் வெளியிடும் செய்திகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்கள் பார்க்காமல் தவிர்த்துக்கொள்ள முடியும். இப்படி செய்திகள் வெளியிடுவது எங்கள் விதிகளுக்கு புறம்பானது இல்லை” என இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறியுள்ளது. https://techcrunch.com/2021/07/20/instagram-sensitive-content-controls-explore/ சாதனை! தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ஷெப்பர்ட் ராக்கெட் வானில் பறக்கும் காட்சி! இடம் அமெரிக்கா, டெக்சாஸ் அடச்சே! ஆக்சிஜன் மரணம்! இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால்  நோயாளிகள் இறந்ததாக எந்த தகவல்களும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. டில்லி, ஹரியாணா, கோவா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் -19 பாதிப்பு கூடுதலாக இருந்தது. இங்கு

டாப் 5 ஸ்டார்ட் அப்கள்- மத்திய கிழக்கு நாடுகளில் அதிக முதலீடு பெற்ற ஸ்டார்ட்அப்கள் இவை!

      டாப் 5 ஸ்டார்ட்அப்கள் ப்யூர் ஹார்வெஸ்ட் ஸ்மார்ட் ஃபார்ம்ஸ் நிறுவனர் மஹ்மூத் அதி , ராபர்ட் குப்ஸ்டாஸ் , ஸ்கை கர்ட்ஸ் பெற்ற முதலீடு 135.8 மில்லியன் தலைமையகம் அரபு அமீரகம் தொடக்கம் 2016 பசுமை இல்ல வாயுக்கள் பிரச்னையில்லாத காய்கறிகள் , பழங்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது . தற்போது இருபதிற்கும் மேலான வகைகளில் தக்காளி , ஆறு வித ஸ்ட்ராபெரி பழங்களை உற்பத்தி செய்து வருகிறது . ராபர்ட் , ஸ்கை ஆகியோர் ஸ்டான்போர்டு மாணவர்கள் . 2016 ஆம் ஆண்டு இவர்களுடன் மஹ்மூத் அதி இணைந்தார் . அபிதாபியில் 2018 ஆம் ஆண்டு ஹைடெக் பசுமை இல்லம் ஒன்றை கட்டினர் . தற்போது 110 மில்லியன் டாலர்கள் நிதியுதவி கிடைக்க குவைத்திலும் தங்களது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவுள்ளனர் . ஸ்வெல் நிறுவனர் முஸ்தபா கண்டில் , அஹ்மத் சபா முதலீடு 92 மில்லியன் டாலர்கள் தலைமையகம் அரபு அமீரகம் தொடக்கம் 2017 ஸ்வெல் என்பது போக்குவரத்து சேவை நிறுவனம் . கெய்ரோ , அலெக்ஸாண்ட்ரியா ஆகிய தடங்களில் 600 க்கும் மேற்பட்ட போக்குவரத்து சேவைகளை இயக்கி வருகிறது . தற்போது கென்யா , பாகிஸ்தான் ஆகிய

தமிழகத்தில் நடைபெறும் சாலைவிபத்துகளின் ஹாட்ஸ்பாட்!

படம்
George Herald தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி? கடந்தாண்டு மாநில போக்குவரத்து திட்டக்குழுவும், மெட்ராஸ் ஐஐடியும் இணைந்து அதிக விபத்துகள் ஏற்படும் இடங்கள், பகுதிகள் குறித்த அறிக்கையை தயாரித்தன. இதில் பதினொரு மாவட்டங்கள் முன்னணியில் நின்றன. அதிக விபத்து ஏற்படும் இடங்களாக 120 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. விபத்தைக் குறைக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. 2017 ஆம் ஆண்டு 65, 562 ஆக இருந்த விபத்துகளின் அளவு இன்று 63, 920 ஆக குறைந்துள்ளன. 3% குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், ஆம்புலன்ஸ் வசதிகளும், கோல்டன் ஹவரில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும்தான். இம்முறையில் இறப்பிலிருந்து பிழைத்தவர்களின் எண்ணிக்கை  16, 157(2017), 12,216(2018) இதன் அளவு 24.4%.  நெடுஞ்சாலையில் இருந்த 3,300 மதுபானக்கடைகள் அகற்றப்பட்டதும் விபத்துகளின் அளவு குறையக் காரணம். 2017 ஆம் ஆண்டு திருவான்மியூர் டூ முட்டுக்காடு ஏரியாவில் நான்கு மதுபானக்கடைகள் செயல்பட்டு வந்தன.  “இப்பகுதியில் சாலைத் தடுப்புகள் சரியான உயரத்தில் அமைக்கப்படவில்லை. இன்று அக்குறைகளை சரிசெய்துள்ளோம்” என்கிறார்

இறப்புக்கு காரணம் டீசல்!

படம்
உலகம் முழுவதும் தோராயமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டில் பாதிக்கப்பட்டு மரணத்தை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பான அமெரிக்க ஆய்வு வெளியாகி அதிர்ச்சியூட்டி உள்ளது. காற்று மாசுபாடு மக்களின் சில நோய்களுக்கு காரணம் என்பது பொதுவாக பலரும் அறிந்ததே. ஆனால் முழுமையாக ஒருவரின் இறப்புக்கு காரணம் என்று ஆய்வறிக்கை திடமாக கூறுவது அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.  எண்ணிக்கையில் 3 லட்சம், உலகளவில் 40 சதவீதம் என டீசல் இஞ்ஜின்கள் மனிதர்களை பலிவாங்கி வருகின்றன. பொதுவான சதவீதம் என்று கூறினாலும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த அளவு 66 சதவீதமாக உள்ளது. இன்டர்நேஷ்னல்  கௌன்சில் ஆன்  க்ளீன்(ICCT) என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  2015 ஆம் ஆண்டு இந்த அமைப்பும், அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது மாசுபாட்டு குற்றத்தைக்கூறி(2015) நிரூபித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.  ஐரோப்பாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஊறு விளைவித்துவருவது டீசல் இஞ்ஜின்கள் ஆகும். மாசுபாடு குறித்த சரியான கொள்க