இடுகைகள்

வகுப்புவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதம், வகுப்புவாத கருத்துக்களைப் பற்றி உறுதியாக இருந்த நேரு! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? கடந்த 25ஆம் தேதி முதல் நாங்கள் வேலை செய்த நாளிதழ் பதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. திங்கள் மட்டும்தான் இதழ் வெளியாகும். அதற்கான வேலைகளை செய்து தரவேண்டும்.  எம்எக்ஸ் பிளேயரில், லிமிட்லெஸ் என்ற வெப்தொடரைப் பார்த்தேன். மூளையை சுறுசுறுப்பாக்கி அதன் சக்தியைக் கொண்டு குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒருவரின் கதை. வேலை இல்லாமல் கஷ்டப்படும் இளைஞனுக்கு இந்த மாத்திரை கிடைக்கிறது. கூடவே இதனைத் தயாரித்து விற்கும் மாபியா தலைவனின் பகையும் போனஸ். இப்பிரச்னைகளைச் சமாளித்து கொலைப்பழியிலிருந்து தப்பி காவல்துறைக்கு உதவத் தொடங்குகிறான்.  அவனுக்கு பக்கபலமாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் இருக்கிறார். நாயகன், மூளையை உசுப்பும் மருந்தின் பக்கவிளைவுகளை தடுக்கும் மாற்று மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் கண்ணில் கற்பனைக் காட்சிகள் தோன்றும், உடல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார்கள். காமெடியில் அசத்தியிருந்தார்கள். குடும்பம், காதல், நட்பு, துரோகம், அரசியல் பழிக்குப்பழி என நிறைய விஷயங்களை சொல்ல முயன்றிருந்தார்கள். பரபரவென தொடர் பற

புதிய இந்தியா பிறந்துவிட்டதா?

படம்
pixabay புதிய இந்தியா பிறந்துவிட்டதா? உலக நாடுகள் முழுக்க அரசியல் நிலையின்மை காரணமாக  போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. மக்களின் எண்ணங்களை போராட்டங்களாக வெடிக்கச் செய்ய சமூக வலைத்தளங்கள் பெருமளவு உதவி வருகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் அடிப்படைவாத, தேசியவாத கட்சிகள் வென்றுவருகின்றன. இந்த போராட்ட அலையில் இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அமலான குடியுரிமை திருத்தச்சட்டம், நாடெங்கும் கடும் போராட்டங்களை கிளப்பியுள்ளது. இந்தியாவின் அண்டைநாடுகளிலுள்ள முஸ்லீம் அல்லாதவர்கள் அரசின் மூலம் குடியுரிமையை எளிதாகப் பெற முடியும் என்கிறது இச்சட்டம். ஏறத்தாழ முஸ்லீம்களை இரண்டாம் தர மக்களாக மாற்றும் இச்சட்டம் அமலாகிவிட்டது என உள்துறை அமைச்சககம் கூறிது.  இல்லை என பிரதமரும் பேச, விவகாரம் மேலும் குழப்பமாகிவிட்டது. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டத்தின் முடிவில் லட்சக்கணக்கான இந்துகள் குடியுரிமை இல்லாத நிலைமையில் இருப்பது தெரியவர, இந்திய அரசின் திட்டம் தோல்வியுற்றது. திரும்பவும் இத்திட்டத்தை மாநிலம் முழுவத