இடுகைகள்

துப்பாக்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அண்டர்கவர் ஏஜென்டாக இருந்து காணாமல் போன அம்மாவைக் கண்டுபிடிக்க செல்லும் மகனின் கதை!

படம்
  சேஸ் தி ட்ரூத்  24 எபிசோடுகள் சீன டிராமா நாயகன் போலீஸ் அதிகாரி. அவனது அம்மா, சிறுவயதிலேயே வடமேற்கு ஓநாய் குழுவைப் பிடிக்க அதில் இடம்பிடித்தவர். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவருடனான தொடர்பு காவல்துறையிடம் இருந்து துண்டிக்கப்படுகிறது. அவர் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா, காவல்துறைக்கு துரோகம் செய்துவிட்டாரா என பல கணிப்புகள் நிலவுகின்றன. நாயகன், தனது அம்மாவைத் தேடி வடமேற்கு ஓநாய் குழுவைத் தேடி கிளம்புகிறான். இதில் அவன் சந்திக்கும் சவால்களே கதை.  இந்த தொடரின் பலம், சண்டைக்காட்சிகளும், உணர்ச்சிகரமான பாசம் தொடர்பான உரையாடல்களும்தான். அதுதான் தொடரை பார்க்க வைக்கிறது. சுவாரசியமானதாக மாற்றுகிறது.  தொடர் நெடுக ஓநாய்களின் ஓவியங்கள், அதன் பொம்மைகள், கிராபிக்சில் ஓடிவரும் ஓநாய்கள் என பார்க்க அழகாக இருக்கிறது. மனிதர்கள் நகருவது போலவே கேமராவும் ஹான்பெய், காலிசா, பாலைவனம், மலைதொடர்கள் என நகர்கிறது. கதையின் வழியாக அதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. காவல்துறைக்கும், வடமேற்கு ஓநாய் குழுவுக்கும் நடைபெறும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் இறுதிப்பகுதியில் வடமேற்கு ஓநாய் குழுவின் தலைமை அலுவல

அமெரிக்கர்களின் தூக்கத்தைக் கெடுத்து பீதிக்குள்ளாக்கிய ஸோடியாக் கொலைகாரன்!

படம்
  ஸோடியாக் கில்லர் இந்த பெயரை ஊடகங்களும், காவல்துறையினரும் மறக்கவே முடியாது. அந்தளவு அத்தனை பேரையும் பீதிக்குள்ளாக்கிய சீரியல் கொலைகாரர். அமெரிக்காவில் வடக்கு கலிஃபோர்னியாவில் 60, 70 களில் ஏராளமான கொலைகளை செய்தார். பெரும்பாலும் ஜோடிகளாக உள்ளவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு செல்வது ஸோடியாக் கொலைகாரரின் பாணி. பிறகு தனது கொலை பற்றி குறியீடாக கடிதம் எழுதி நகரின் முக்கிய பத்திரிகைகளுக்கு, காவல்நிலையத்திற்கு அனுப்பி வைப்பார். கணினியில் என்கிரிப்ஷன் டீகிரிப்ஷன் என்று கூறுவார்கள். குறியீடுகளை என்ன தகவல் என்று அறிந்துகொள்ள ஒருவர் அதை டீகிரிப்ஷன் செய்யவேண்டும். அதன்படி ஸோடியாக் கொலைகாரரின் செய்திகளை காவல்துறையினர், மக்களில் சில தன்னார்வலர்கள் டீ கிரிப்ஷன் செய்து குற்றங்களை புரிந்துகொள்ள முயன்றனர். 37 கொலைகளை செய்தாலும் 5 கொலைகளை மட்டுமே அவர் செய்தார் என காவல்துறையால் நிரூபிக்க முடிந்தது. ஸோடியாக் கொலைகாரரைப் பற்றி ஏராளமான திரைப்படங்கள், நூல்கள் வெளியாகியுள்ளன.’’ எனது இறப்பிற்கு பிறகு அடிமையாக இருக்க மனிதர்கள் தேவை, சிறுமிகளை கொல்வது எளிதானது, மக்களைக் கொல்வது பிடித்திருக்கிறது. அ

தன்னை எதிர்ப்பவர்களை பல்வேறு நூதன வழிகளில் ரஷ்யா தண்டிக்கிறது? - என்னென்ன வழிகள் என அறிவோமா?

படம்
  எதிர்த்து நின்றால் மரணம் நிச்சயம் ரஷ்யா எதிரிகளை தாக்கும் விதம் என்பது மாறுபட்டது. நோவிசோக், பொலோனியம் என பல்வேறு வேதிப்பொருட்களை பயன்படுத்தி தன்னை விமர்சிக்கும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை கொல்வது ரஷ்ய அரசின் வழக்கம். அதாவது இருபத்து மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவை ஆண்டு வரும் ‘வலிமையான தலைவர்’ புதின் அணுகுமுறை இதுதான். அண்மையில் ரஷ்யாவின் ராணுவ கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி ஜெட் விமானத்தில் வானில் இருக்கும்போது கொல்லப்பட்டார். இந்த டெக்னிக்கை புதிதாக கூட பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்டால், கிரெம்ளினில் எந்த பதிலும் வராது. அவையெல்லாம் வதந்தி, உண்மையல்ல என்று கூறுவார்கள். ஆனால் ரஷ்யாவில் உள்நாட்டில் நடக்கும் விஷயங்கள், சொல்பவை   எல்லாமே அரசியல் ரீதியாக அந்த அரசின் கூற்றுக்கு மாறாக இருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு விஷம் வைத்துக்கொல்வது சோவியத் காலம்தொட்டே நடந்து வருகிறது. ரஷ்ய விஞ்ஞானிகளின் விஷயம் என்னவென்றால், வாசனை இல்லாத நிறமில்லாத விஷத்தை கண்டுபிடித்து அதை மேம்படுத்தி வருகிறார்கள். இதனால் ஒருவரை எளிதாக கொல்ல முடியும். யார் கொன்

''கொலைகளை செய்யாமல் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை''

படம்
  1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சிகாகோவின் புறநகரான லிங்கன்வுட்டில் பிறந்தார். அப்பா, தனியார் உருக்காலையில் வேலை செய்து வந்தார். வில்லியமிற்கு செக்ஸ் என்பது மகா பாவம் என சொல்லி வளர்த்தனர். செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் வரும் என கூறினார்கள். பிறரது வீட்டுக்குள் பிறந்து, அங்கு வாழும் பெண்களின் ஜட்டி, பேன்டீசை திருடுவது வில்லியமிற்கு   மகிழ்ச்சியாக   இருந்தது. ஏறத்தாழ பாலுறவு கொள்வது போன்ற சந்தோஷம். 1942ஆம் ஆண்டு வில்லியமிற்கு பதிமூன்று வயது. அப்போதே குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துச் சென்று காவல்துறையால் கைதானார். வில்லியமின் பெற்றோருக்கு காவல்துறை தகவல் அளிக்க, அவர்கள் பதற்றத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போதே பதினொரு கொள்ளைகளை வில்லியம் செய்திருந்தான். ரைபிள், நான்கு பிஸ்டல்கள் என திருடி வைத்திருந்தான். பெற்றோர் தம் செல்வாக்கைப் பயன்படுத்த வில்லியம் மீது வழக்கு பதியப்பட வில்லை. இந்தியானாவில் உள்ள பள்ளியொன்றில் பதினொரு மாதங்கள் இருந்த வில்லியம், பின்னர் ஊருக்குத் திரும்பினார். வில்லியம் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருட வில்லை. அதை வாய்ப்பு கிடைக்கும்போது அணிந்தும

அறையில் கூடும் வெப்பமும், வடகிழக்கில் அதிகரிக்கும் அரச பயங்கரவாதமும்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  6 3.10.2021 அன்புள்ள நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இந்த வாரம்தான் சற்று நிதானமாக இருக்க நேரம் கிடைத்தது. எல்லாமே காந்தியின் அருள்தான். வேலைகள் எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. பதிப்பக வேலைகள் இந்தளவு சலிப்பாக நகரும் என நினைக்கவில்லை. நான் வேலைசெய்யும் நாளிதழ் நிறுவன ஆட்களால் தான் வேலை மோசமாக மாறியுள்ளது. சிற்பி கற்களை உளி கொண்டு செதுக்குவது போல செதுக்கி வருகிறார்கள். இப்படி நகாசு பார்த்தால் எப்போது நூலை அச்சுக்கு அனுப்பி வேலையை முடிப்பது? நூல்களுக்கான சந்தை என்பதே இனி டல்லாகத்தான் இருக்கும். வேலை இழப்பு, பொருளாதாரம் என நிறைய சிக்கல்கள் நமக்கு முன்னே உள்ளன.  அறையில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மழைக்காலமாக இருந்தாலும் மாறி வரும் காலநிலை மாற்றத்தை உடலால் தாங்குவது கடினமாக உள்ளது. ஒவ்வாமை பற்றிய நூலை எழுதி தொகுத்து வருகிறேன். சொந்த உடல்நலம் சார்ந்த சுயநலம் காரணமாகவே நூலை எழுதுகிறேன். உலகம் முழுவதும் அலர்ஜி பிற நோய்களை விட அதிகரித்து வருகிறது.  ஃபிரன்ட்லைன் மாத இதழின் கட்டுரைகளை படித்து வருகிறேன். ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் செ

துப்பாக்கி வன்முறை குற்றங்கள் குறைவாக உள்ள நாடு ஜப்பான்!

படம்
  ஜப்பான் நாட்டில் துப்பாக்கிகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் நிறைய விதிகள், சட்டங்கள் உள்ளன. குடிமக்கள் ஷாட்கன், ஏர் ரைபிள் மட்டுமே வாங்க முடியும். ஹேண்ட் கன் ரகங்களை வாங்க முடியாது.  துப்பாக்கி வாங்க நினைத்தால் இதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவேண்டும். அடுத்து, எழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும். பிறகு, துப்பாக்கி சுடும் பயிற்சியில் வெற்றி பெறவேண்டும். இதன் பின்னால், மனநலன் சார்ந்த தேர்வு, சாப்பிடும் மருந்துகள் பற்றிய சோதனை நடைபெறும். இவையன்றி, நமது பின்னணி பற்றிய தேர்வும் உண்டு.  இதெல்லாம் துப்பாக்கி வாங்குவதற்குத்தான். அதற்கு பிறகு இன்னும் சில நடைமுறைகள் உள்ளன.  துப்பாக்கியை அருகிலுள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்யவேண்டும். துப்பாக்கி பற்றிய தகவல்கள், தோட்டா பற்றியும் கூறவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தோட்டாக்களை காவல் நிலையத்தார் சோதனை செய்வார்கள். துப்பாக்கி பயன்படுத்தும் உரிமத்தை  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இப்படி புதுப்பிக்கும்போது எழுத்து தேர்வு எழுதவேண்டும்.  தண்டனை என்ன? துப்பாக்கியை வைத்து குற்றங்களை பெரிதாக செய்தால் 15 ஆண்டுகள் சிறை வாசம

வியட்நாம் சிறுமியின் பழிதீர்க்கும் வெறி! - தி புரோடேஜ் 2021

படம்
  முதல் காட்சி வியட்நாம் நாட்டில் விரிகிறது. மழை பெய்துகொண்டிருக்க, அதில் தலைக்கு சிறு முக்கோண தொப்பி அணிந்துகொண்டு மக்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் ஒரு வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தால், அங்குள்ளவர்கள் அனைவருமே இறந்துகிடக்கிறார்கள். அனைவருமே ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடமுள்ள பணத்தை அந்த நபர் எடுத்துக்கொள்கிறார். அப்போது, அவருக்கு ஏதோ சத்தம் கேட்க கைத்துப்பாக்கியை எடுத்து அதை சோதிக்கிறார். பீரோவில் சிறுமி ஒருத்தி தானியங்கி துப்பாக்கி ஒன்றுடன் இருக்கிறாள். அவளை அந்த நபர் அதாவது சாமுவேல் எல் ஜாக்சன் கொல்லவில்லை. அவளது பயம் போக்கி அவளை க் கூட்டிக்கொண்டு செல்கிறார். சாமுவேல் அவரே சொல்லிக்கொள்வது போல நல்லவர் கிடையாது. கூலிக்கொலையாளி.  தனக்குத் தெரிந்த வித்தையை வியட்நாம் சிறுமிக்கு, அதாவது அன்னாவுக்கு சொல்லித்தருகிறார். அவள் அவரே பிரமிக்கும்படி சூட்டிகையாக ஆபத்தானவளாக வளர்கிறாள். அவளுக்கு வளர்ப்பு அப்பா என மூடியை மட்டுமே நினைக்கிறாள். அன்னாவுக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். எனவே, புத்தக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறாள். இந்

நான் வளர்ந்து வந்த கதையை தமிழ் இயக்குநர்கள் திரைப்படமாக எடுத்தனர்! - அனுராக் காஷ்யப், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படம் 2012ஆம் ஆண்டு கான் படவிழாவில் திரையிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு இது பெரிய கௌரவமான நிலை. இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் இதுபற்றி பேசியபோது,  கான் படவிழா அனுபவம் எப்படியிருந்தது? 2010இல் தட் கேர்ள் இன் யெல்லா பூட்ஸ் என்ற படத்தை வணிகப்படமாகவே நான் எடுத்தேன்.  2013இல் தி லன்ச் பாக்ஸ் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. எனக்கு கான் திரைப்பட விழாவில் படத்தை திரையிடுவது முக்கியமாகப் படவில்லை. மார்கோ முல்லர் தான் வாசிப்பூர் படத்தை நான் பார்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அவர்களுக்கு அந்தப்படம் பிடித்திருந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  கான் படவிழாவில் படத்தை திரையிட்டபோது உங்கள் அனுபவம் எப்படியிருந்தது.  எனக்கு பதற்றமாக இருந்தது. நான் தியேட்டரிலிருந்து வெளியேறி வெளியே தான் ஐந்து மணிநேரம் இருந்தேன். அப்போது அங்கே குடிக்கத் தொடங்கியிருந்தேன். திரைப்பட விழாவில் விற்கவென நான் உருவாக்கிய படம் யெல்லோ பூட்ஸ் தான். படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது. படத்தின் இடையே பத்து நிமிட இடைவேளைதான் இருந்தது. நடிகர்களை பார்வையாளர்கள் தெருவிலேயே நிறுத்திவிட்டனர்

இனவெறியை சட்டம் மூலம் நீக்கிய ஆப்ரஹாம் லிங்கன்!

படம்
  ஆபிரஹாம் லிங்கன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க வரலாற்றில் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மகத்தான இடம் உண்டு. இவர்தான், துணிச்சலாக உள்நாட்டுப் போரையும் சமாளித்து அடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.  தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அரசுக்கும் மாகாணங்களுக்கும் போர் தொடங்கியது. 1861 தொடங்கி 1865 ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது.  அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் நிறைய ஜவுளித்துறை மில்கள் இயங்கி வந்தன. இதன் அடிப்படையே அடிமைகளை வைத்து வேலை வாங்கி கொழிப்பதுதான். இதனை அமெரிக்க அரசு ஒழித்தவுடன், இவர்கள் அதனை ஏற்கவில்லை. தங்களிடமுள்ள அடிமைகளை சுதந்திரமாக வாழ விடவில்லை. எனவே, வடக்கு புறமுள்ள மாகாணங்களோடு மோத தொடங்கினர்.  இந்த நேரத்தில் வடக்குப்புற மாகாணங்களை வழிநடத்துபவராக அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் இருந்தார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.  1860ஆம் ஆண்டு லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரின் அடிப்படை ஆதாரமே , லிங்கன் அடிமை மக்களுக்கு வழங்கிய சுதந்திரம் என்ற அறிவிப்புதா

ரத்தத்தை பின்தொடரும் கேங்ஸ்டர் குடும்பம்! - தி பவர் 2021- இந்தி

படம்
  தி பவர் - வித்யுத் ஜாம்வால் தி பவர் மகேஷ் மஞ்ரேக்கர் காட் பாதர் படத்தின் தழுவல் என கூறுகிறார்கள். மும்பையில் இருக்கும் அனைத்து  சட்டவிரோத செயல்களையும் வணிகத்தையும் தாக்கூர் குடும்பத்தினர் செய்கிறார்கள். இவர்களுக்கும் முறைகேடான வணிக சிண்டிகேட்டிற்கும் உள்ள சண்டையும், பழிவாங்கும் சம்பவங்களும்தான் கதை.  சிண்டிகேட்டில் உள்ள ராணா, மும்பையில் நிழல் உலக ராஜாவாக இருக்கும் காளிதாசை நேரடியாக எதிர்க்க முடியாமல் மறைமுகமாக எதிர்க்க நினைக்கிறார். இதற்காக அவர் செய்யும் செயல்கள்தான் கதையை நகர்த்துகின்றன.  கதை தொடங்கும்போது, காளிதாசின் மருமகன் தனது மாமனார் காளிதாசின் பொறுப்புக்கு வர ஆசைப்படுகிறார். இதைப்பற்றி பேசும்போது, காளிதாஸ் அங்கே வருகிறார். ரஞ்சித்தை அமைதிபடுத்தி அவருக்கு கோவாவில் ஹோட்டல் பிசினஸ் உள்ளது. அதைப்பார், நானும் உன்கூட வருகிறேன் என்கிறார். பிறகு கதை அப்படியே பின்னோக்கி செல்கிறது.  காளிதாசின் மகன்கள் ராம்தாஸ், தேவிதாஸ், மகள் ரத்னா. இதில் ராம்தாஸின் மனைவியின் தம்பியைத்தான் ரத்னாவுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள், அவர்தான் ரஞ்சித். மாமனாரின் வீட்டிலேயே டேரா போட்டு அவரது இடத்திற்க

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு

படம்
  ரொமான்டிக் ரொமான்டிக்  தெலுங்கு  இயக்குநர் அனில் பதூரி கதை, திரைக்கதை, தயாரிப்பு, வசனம் - ஆல் இன் ஆல் அனைத்துமே பூரி ஜெகன்னாத்.  கோவாவில் உள்ள போதைப்பொருள் கும்பலின் தலைவன் வாஸ்கோவுக்கும், இன்ஸ்பெக்டர் ஒருவரின் தங்கை மோனிகாவுக்குமான காதல், இன்ன பிற பிரச்னைகளும்தான் கதை.  படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடனே பலரும் கேத்திகா சர்மா மீது மையல் கொண்டு படத்தை எப்போது புக் செய்யலாம் என ஸ்மார்ட்போனில் ஐநாக்ஸ் ஆப்பை தேடுவார்கள். ஆனால் அவசரப்படாதீர்கள்.  ரொமான்டிக் - ஆகாஷ் பூரி, கேத்திகா சர்மா ரோமியோ ஜூலியட் ரகத்தில்தான் முடிகிறது,. ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் மட்டுமே முழுமையாக படத்தில் தேறுகிற சில காட்சிகள். எனவே பணத்தை வீணடிக்காதீர்கள்.  படத்தைப் பார்க்க வைக்கத் தூண்டுவது ஒரே ஒருவர்தான் அது கேத்திகா சர்மாதான். அவரது அழகான உடலும் அதனை மேயும் கேமரா கோணங்களும்தான் படத்தை அழகாக்குகிறது. படத்தில் வேறு ஒன்றும் இல்லை.  கோவாவில் இரண்டு போதைக் கடத்தல் கும்பல்கள், அதில் ஒன்றில் வாஸ்கோ சேருகிறார்.வேலை மோசம் என்றாலும் லட்சியம் பெரிது. குடிசையில் வாழும் தனது மக்களை வீடுகட்டி வாழ வைப்பதுதான் நோக்கம். அதற்காகவ

பரிணாமவளர்ச்சி பெறும் ஜோம்பிகளை போட்டுத்தள்ளும் வேட்டைக்குழு! - ஜோம்பிலேண்ட் - டபுள் டேப்

படம்
  #ஜோம்பிலேண்ட் - டபுள் டேப் ஜோம்பிலேண்ட்  டபுள் டேப் கொலம்பியா பிக்சர்ஸ் - சோனி முழு அமெரிக்காவுமே ஜோம்பிகளால் அழிந்துபோகிறது. மிஞ்சிய சிலரில் டெலிகாஸி, மேடிசன், கொலம்பஸ், விசிட்டா, லிட்டில் ராக் என மிகச்சிலரே மிஞ்சுகிறார்கள். இவர்களுக்குள் வரும் ஈகோ, காதல் தகராறுகளும் இன்ன பிற ஜோம்பிகளின் வம்பு தும்புகளும்தான் கதை.  அமெரிக்கா முழுக்கவே புல் பூண்டுகள் முளைத்து நாசமாகி கிடக்கிறது. அங்கு பெருசு டெலிகாசியுடன் இளைஞன் கொலம்பஸ், அவனது பெண் தோழி விசிட்டா, அவளது தங்கை லிட்டில் ராக் ஆகியோர்  மட்டுமே இருக்கிறார்கள். இவர்களும் முதல் காட்சியில் ஒரு டஜன் ஜோம்பிகளை தலையில் சுட்டுக் கொல்கிறார்கள். இதனை  இயக்குநர் கவித்துவமாக ஸ்லோமோஷனில் படமாக்கியிருக்கிறார். ரத்தம் பார்த்தாலே பதறும், மண்டை உடைந்தாலே வாய் அலறும் என்பவர்கள் படத்தைப் பார்க்காமல் இருப்பதே நல்லது.  படம் ரத்தம் தவிர, முறுக்கேறும் உடல் கொண்ட எல்விஸ் ப்ரெஸ்லி பார் பெண், ஃப்ரீசரில் இருந்த மேடிசன் 18 பிளஸ் காட்சிகள் உண்டு என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டுமான படம்தான் இது. இதை மனதில் வைத்துக்கொண்டு பாருங்கள். தமிழ் டப்பிங்கில் நம் ஆட்கள் அசத்

அம்னீசியா பலவீனத்துடன் துரோகத்தை களையெடுக்கும் குற்றவியல் அதிகாரி! ரீபார்ன் - சீன தொடர்

படம்
            ரீபார்ன் சீனத்தொடர் 28 எபிசோடுகள் நகரில் உள்ள புகழ்பெற்ற குற்றக்குழுவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் சிலர் செய்யும் துரோகத்தால் தனது சகாக்களை போலீஸ் அதிகாரி இழக்கிறார் . உண்மையில் அந்த துரோகத்தின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து அவர்களை அழிப்பதே கதை . பொதுவாக உடலில் நோய் , ஊனம் கொண்ட நாயகர்களை தொடரில் படத்தில் நடிக்கவைப்பது பார்வையாளர்களிடையே எப்படி இவர் வெல்வார் என எதிர்பார்ப்பை உருவாக்கும் . இந்த தொடரில் நாயகனுக்கு அம்னீசியா பிரச்னை உள்ளது . தலையில் தோட்டா பாய்ந்து அதன் சில்லுகள் மூளையில் தேங்கி நிற்கின்றன . ஆபரேஷன் கூட செய்யமுடியாத நிலை . முழங்காலில் தோட்டா பாய்ந்ததில் தினசரி காலில் பதினைந்து மில்லி சீழை அகற்றிக்கொண்டே இருக்கவேண்டும் . இந்த சிக்கல்களோடு குற்றவியல் பிரிவின் துணைத்தலைவராக குழுவை வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது . என்கவுண்டர் சம்பவத்தில் தனது அத்தனை சகாக்களையும் பலி கொடுத்துவிட்டு கோமாவிலிருந்து எழுந்து வருபவரை பலரும் கைதட்டி வரவேற்று பதவி உயர்வு கொடுக்கின்றனர் . அதில் உரையாற்ற சொல்லும்போது , தனது விருதை து