இடுகைகள்

இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐஇடி வெடிகுண்டுகள் - ஒரு அலசல்

படம்
  காவிக்கட்சி ஆட்சியில் கலவரங்கள் தேசியமயமாக்கப்பட்டு சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. நாளிதழ்களில், இந்தமுறை எத்தனை பேர் இறந்தார்கள் என எண்ணிக்கை விளையாட்டுதான் மக்கள் விளையாட வேண்டும். அந்தளவு சிறுபான்மையினர் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். சொத்துகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதில், அதீதமாக வெடிகுண்டு வைப்பதும் புதிதாக சேர்ந்துள்ளது. தேசப்பற்று கொண்ட வட இந்தியர்கள் கட்டுப்பாடு தவறாமல் காவிக்கட்சிக்கு வாக்களித்துவிட்டு வேலை செய்யவும், வாழவும் தென்னிந்தியாவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ராஜதந்திரம் புரியாத வடநாட்டிலேயே வேலை செய்யும் மக்கள் மாட்டு மூத்திர பைத்தியங்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.  பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற இடத்தில் ஐஇடி என்ற வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் பத்துபேர் காயமுற்றிருக்கிறார்கள். ஐஇடி என்பதற்கு இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்ளோசிவ் டிவைஸ் என்று விரிவாக்கம் கூறுகிறார்கள்.  சிசிடிவி கேமராவில் கஃபேயில் மர்ம மனிதர் பேக்கோடு வந்து உட்கார்ந்திருக்கும் காட்சியை காவல்துறை கைப்பற்றியுள்ளனர். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட குண்டு வகையில் ஐஇடி வருகிறது. இதை குழாய் வெடிகு

மரபணு நோய்களை தீர்க்க உதவும் மரபணு வரிசை வரைபடத் திட்டம்!

படம்
  ஜெனோம் இந்தியா - மரபணு வரைபடத்திட்டம் இந்தியாவிலுள்ள 20 அறிவியல் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 10 ஆயிரம் ஆரோக்கியமான மனிதர்களின் மரபணு வரிசையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இதுபற்றிய செய்தி, கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது. ரத்த மாதிரிகளை சேகரிப்பது, மரபணுக்களை வரிசைப்படுத்துவது, செயல்பாட்டுமுறையை மேம்படுத்துவது, தகவல்களை சேகரிப்பது ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.  ஒரு மரபணு வரிசையை சேமித்து வைக்க 80 ஜிபி நினைவகம் தேவைப்படுகிறது. 8 பீட்டபைட்ஸ் அளவுள்ள தகவல்கள் ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தகவல் மையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் பொதுமக்களின் நன்மைக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. புதிய நோய் கண்டறியும் முறைகள், சிகிச்சைகள், அரியவகை நோய்களை அடையாளம் கண்டறிவது, நோய்களை குணமாக்குவது ஆகியவற்றுக்கு மரபணு வரிசை தகவல்கள் உதவக்கூடும்.  மக்கள்தொகையில் உள்ள மரபணுக்களின் பன்மைத்தன்மையை அறிய மரபணு வரிசை வரைபடம் தேவை. அதை வைத்து பரிமாண வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம். கூடுதலாக, நோய் அதற்கான சிகிச்சைகளை மேம்படுத்தலாம். இதற்கு உலக நாடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள மரபணு

பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ

படம்
  பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ ஐஐடி பாம்பே தலைமை தாங்கி வழிகாட்ட ஏழு இந்திய பொறியியல் கழகங்களின் உதவியுடன் பாரத் ஜிபிடி குழுமம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதரவை வழங்கி வருகிறது. பாரத் ஜிபிடி குழுமம், ஹனுமான் எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கி வருகிறது. இந்த பணிக்கு சீதாலட்சுமி ஹெல்த்கேர் நிறுவனம், உதவியையும், பங்களிப்பை வழங்கியுள்ளது.  ஹனுமான் ஹனுமான் என்பது செயற்கை நுண்ணறிவு மாடல். இதை எல்எல்எம் என குறிப்பிடுகிறார்கள். மொத்தம் பதினொரு மொழிகளில் இயங்கவிருக்கிறது. தமிழ், மராத்தி, இந்தி ஆகிய மொழிகள் இதில் அடங்கும். இருபது மொழிகளுக்கு செயல்பாடுகளை விரிவாக்கும் திட்டமும் உள்ளது. மருத்துவம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படவிருக்கிறது. இதுதொடர்பாக பாரத் ஜிபிடி குழுமம், வெளியிட்ட வீடியோவில் பல்வேறு மொழிகளில் மக்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது காட்டப்பட்டது.  இப்படி உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு வெறும் உரையாடுவதற்கான பாட் மட்டும் கிடையது. இதைப் பயன்படுத்தி எழுத

2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?

படம்
 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம் 2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது.  ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன. ஜெர்மனி

யோகா பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

படம்
  ரிக் வேதத்தில் யோகா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சோப்பு விற்பவர்கள் கூறுவது போல இருக்கிறது என யோசிக்காதீர்கள். எளிமையாக செய்யும் உடற்பயிற்சிதான் யோகா. உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் யோகா செய்கிறார்கள். சரியாக செய்கிறார்களா என்று கேட்கக்கூடாது. செய்கிறார்கள். அந்தே... உடல், மனம், ஆன்மா என்ற மூன்றும் ஒன்று என்று கூறிய பதஞ்சலி முனிவரின் தத்துவத்தில் யோகா பயிற்சி உள்ளது. ஒருவரின் ஆன்ம சக்தி என்பது உள்ளிழுக்கும்,வெளிவிடும் மூச்சில் உள்ளது. மூச்சைக் கட்டுப்படுத்துவதன் வழியாக உடலை புத்துயிர்ப்பு செய்வதோடு, ஆயுளையும் அதிகரிக்கமுடியும். இந்திய அரசியல்வாதிகள், வலதுசாரி கட்சிகள் யோகாவை கருத்தியலுக்காக பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்ல. பெரும்பாலான மேற்குலக மக்கள் அதை உடற்பயிற்சியாகவே கருதுகிறார்கள்.  பொதுவாக யோகா  பயிற்சிகள், உடலின் இறுக்கத்தை தளர்த்துபவை. உடலை இறுக்கமாக்கும் எடை பயிற்சிகள் போல அவற்றை செய்துவிட்டு குளிக்கக்கூடாது. குளித்துவிட்டு யோகா செய்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும்.

இந்தியாவிற்கு தேர்தலை இலக்காக கொள்ளாத தலைமை தேவை! - ரகுராம் ராஜன், பொருளாதார வல்லுநர்

படம்
  பொருளாதார வல்லுநர், முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம்ராஜன்  நேர்காணல்  உலகப் பொருளாதாரம், இந்தியாவின் நிலை என இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்? ஆண்டு தொடங்கும்போது உலகப்பொருளாதாரத்தின் முன் நிறைய கவலைகள் இருந்தன. இந்தியாவைப் பற்றி கவலைப்படவும் நிறைய விஷயங்கள் உள்ளன. அமெரிக்க பொருளாதாரம் மெல்ல வேகம் இழந்ததற்கான அறிகுறிகளை கண்டோம். இந்த பாதிப்பு கடுமையாக அல்லது மென்மையாக இருக்குமா என்பதுதான் கேள்வி. கடினமாக இருக்கும் என்பதுதான் அடையாளம் கண்ட விஷயம். எனவே, முழு உலகமும் இந்த வழியில் பயணிக்கிறது.  பெருந்தொற்று காலத்தில் இருந்து சீன பொருளாதாரம் பெரிதாக முன்னேற்றமடையவில்லை. ஐரோப்பிய பொருளாதாரமும் கூட வேகம் பெறவில்லை. தொய்வடைந்துதான் உள்ளது. இந்தியாவைப் பார்த்தால், இந்தாண்டு சிறிது வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் இந்த விஷயங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  எந்தெந்த விஷயங்களை, முக்கிய அம்சங்களை கவனமாக பார்க்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?  2021ஆம் ஆண்டு தொடங்கி வெளிநாட்டு முதலீடுகள் குற

பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு

படம்
  பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு ரா அமைப்பு பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளை விளையாடி வருவது பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் ஆதரவு தலைவரை கொல்வார் என யாரும் நினைத்திருக்க முடியாது. இதுபற்றிய உளவுதுறை தகவலை கனடா பெற்று, இந்தியாவின் ரா அமைப்பு படுகொலைக்கு காரணம் என வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் பேசியது. இது இந்தியாவுக்கு தர்மசங்கடமாக ஆகிப்போனது. கொலைக்கு ஆதரவான தடயங்கள், ஆதாரங்களை கனடா இந்தியாவுக்கு தரவில்லை. அரசியல்ரீதியாக அவற்றை தர முடியாது என்றாலும் கூட இந்தியாவை நேரடியாக குற்றம்சாட்டியது மேற்கு நாடுகளுக்கே சற்று அதிர்ச்சிதான். சீக்கியர்கள் கனடாவில் பெரும்பான்மையினராக வசித்து வருகிறார்கள். கனடா அரசின் அமைச்சர்களாகவும் சீக்கியமதத்தினர் இருக்கிறார்கள். எனவே, அவர்களில் ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரிலுள்ள குருத்துவாராவுக்கு வழிபாட்டிற்கு சென்றுவிட

வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

படம்
  இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்   செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.   இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்   இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநிறுவனங்களில் கைக்கு

அறியப்படாத விடுதலை வீரர்களுக்கு புதிய கௌரவம்! - விடுதலைப் பெருநாள் சிறப்பு திட்டம்

படம்
  இந்திய அஞ்சல்தலை சுதந்திர இந்தியாவின் முதல் ஸ்டாம்ப் அறியப்படாத உள்ளூர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிடும் இந்திய அரசு! எழுபத்தைந்தாவது விடுதலை பெருநாள் விழா தொடர்பான நிறைய திட்டங்களை இந்திய அரசு தொடங்கியது. அதில் முக்கியமானது, வரலாற்றில் இடம்பெறாத உள்ளூர் விடுதலை வீரர்களை ஆவணப்படுத்துவது இந்த வகையில் இந்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 25 வரலாற்று ஆய்வாளர்களோடு இணைந்து விடுதலை போராட்ட வீரர்களை   கண்டறிய முயன்றது. இந்திய அரசின் முயற்சியைத் தொடர்ந்து நாட்டிலுள்ள மாநில அரசுகளின் உதவியோடு தொடக்க கட்டமாக 10 ஆயிரம் விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் உருவங்களை இந்திய அரசு அஞ்சல் தலையாக மாற்றி அவர்களை பெருமைப்படுத்தவிருக்கிறது. தனிநபர்கள், குறிப்பிட்ட தொகையை அஞ்சல் அலுவலகத்தில் கட்டி அவர்களின் புகைப்படங்களைக் கொடுத்தால் அதையே அஞ்சல் தலையாக மாற்றித் தரும் செயல்பாடு உள்ளது. அதிலிருந்து விடுதலை வீர ர்களின் அங்கீகாரம் எப்படி மாறுபடுகிறது என தெரியவில்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர பிரதாப் சிங். இவர் உள்ளூர் கலை

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - ராஜ் ஷெட்டி, மாதாபி, ரோகினி பாண்டே, மஞ்சுள் பார்க்கவா

படம்
  மாதாபி, தலைவர், செபி ராகுல் பாட்டியா, இண்டிகோ என் சந்திரசேகரன், டாடா குழுமம் ரோகினி பாண்டே, பொருளாதார வல்லுநர் ராஜ் ஷெட்டி, பொருளாதார வல்லுநர் ராஜ் செட்டி 43 பொருளாதா வல்லுநர் டெல்லியை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுநர். அரசின் கொள்கைகளை பொருளாதார தகவல்கள் அடிப்படையில் உருவாக்கவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். தனது 29 வயதில் பெருமை மிக்க ஜான் பேட்ஸ் கிளார்க் விருதை வென்றவர். இந்த விருது, பேபி நோபல் பரிசு என மரியாதையாக குறிப்பிடப்படுகிறது. பொருளாதார   பாகுபாடுகள் பற்றிய ஆய்வுகளை அர்ப்பணிப்புடன் செய்தவர், ஏழை மக்களில் 30 சதவீதம்பேர்தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.   மாதாபி பூரி புச் தலைவர்,செபி நிதி சந்தையைக் கட்டுபடுத்தும் ஒழுங்குமுறை அமைப்பின் முதல் பெண் தலைவர். ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டதாரி. கடந்த ஆண்டு செபியில் தலைவராக பதவியேற்றவர், அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முனைந்து வருகிறார். பொதுவாக அரசியல்வாதிகளுக்க

பால்புதுமையினரை சமூகம் தானாகவே மனமுவந்து ஏற்றுக்கொள்ளாது! - கவிஞர் ஆதித்யா திவாரி

படம்
  ஆதித்யா திவாரி ஆதித்யா திவாரி கவிஞர், பால் புதுமையினர் ஆதரவாளர், செயல்பாட்டாளர் ஜபல்பூரில் பிறந்து வளர்ந்தவரான ஆதித்யா, கடந்த ஆண்டு பிபிசி வாய்ஸிற்கு, ஆறு பகுதிகளாக பாட்காஸ்ட் ஒன்றை தயாரித்து தொகுத்து வழங்கினார். கூடவே, ஓவர் தி ரெயின்போ    - குயிர் ஐகான்ஸ் ஆஃப் இந்தியா என்ற நூலை ஜக்கர்நட் பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார். அவரை ஆடியோ சாட் ரூம் ஆப்பான கிளப்ஹவுஸ் வழியே சந்தித்து பேசிய பேட்டி இது. சமூகம் ஏற்றுக்கொண்டபிறகு பால்புதுமையினருக்கான திருமணம் பற்றிய சட்டம் உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நவ்தேஜ் தொடர்பான தீர்ப்பில் பால்புதுமையினர் விவகாரத்தில் எந்த தீண்டாமையும் இல்லை என்ற கூறப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? சக இந்திய குடிமக்கள் போல வாழும் உரிமையைப் பெற பால்புதுமையினர் 2023ஆம் ஆண்டில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் . பால் புதுமையினராக உள்ளதால் உடல் பாகங்களில் உள்ள மாற்றத்திற்காக எங்களுக்கு உரிமைகள் தர மறுக்கப்படுகிறதா? இதற்கு, ‘நீங்கள் சிறுபான்மையினர் ‘என பதில் கூறுகிறார்கள். இதற்காகவே பால்புதுமையினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 37

மதவாதம் சார்ந்து உருவாகும் அரசதிகாரம் அச்சமூட்டும் ஒன்று! - வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்

படம்
  ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர் இந்துத்துவா அரசியலை விமர்சனம் செய்பவர்களில் முக்கியமானவர், வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர். இந்தியாவின் பன்மைத்துவ தன்மைக்காக குரல் கொடுத்து இந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிரான குரலாக ஒலித்து வருகிறார். தற்போது, ‘தி ஃப்யூச்சர் இன் தி பாஸ்ட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். வரலாற்று ஆய்வாளராக அவரை மாற்றிய விவகாரங்கள், பல்வேறு பிரச்னைகள் பற்றிய தனது கருத்துகளை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன நூலாக வெளிவந்திருக்கிறது. வரலாற்றை இந்துத்துவா எப்படி அணுகுவதாக நினைக்கிறீர்கள்? வரலாற்றை அணுகுவது என்பது பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுப்பதுதான். ஆதாரங்களை சேகரித்து, அதை ஆய்வு செய்து, கடந்த கால நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான விளக்கங்களை கொடுப்பது என புரிந்துகொள்ளலாம். இந்துத்துவா கருத்தியலுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய சிறு குறிப்பை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு கருத்தியலை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள். ஆதாரங்கள் நம்பகத் தன்மை கொண்டவையா, வாதங்கள் ஏற்புடையவையா என்றெல்லாம் பா

டேட்டிங் ஆப்பில் தீயாய் காதல் வளர்க்கும் இந்தியர்கள்! - இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் காட்டாறாக பாயும் காதல்

படம்
  பம்பிள் டேட்டிங் ஆப் டிண்டர் போன்ற வடிவத்தில் ட்ரூலிமேட்லி ட்ரூலிமேட்லி ஆப் காற்றில் பரவுகிறது காதல் தலைப்பை பார்த்ததும் எங்கே என கேள்வி கேட்க கூடாது. இதெல்லாம் நாமே கற்பனை செய்துகொள்ளவேண்டியதுதான். இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தி தங்களுக்கான காதலை, நட்பை ஆண்களும், பெண்களும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். டிண்டர், பம்பிள், ட்ரூலிமேட்லி, அய்லே ஆகிய டேட்டிங் ஆப்கள் இன்று மிக பிரபலமாகிவிட்டன. காரணம், இவற்றின் வழியாக லட்சக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக 18-23 வயதுப் பிரிவினர் காதலைத் தேடி டேட்டிங் சென்று வருகிறார்கள்.   பெருந்தொற்று காலகட்டம் காதலி, நண்பர்கள் என பலரையும் சந்திக்க விடாமல் செய்தது. இந்த சூழல் பலரையும் மனதளவில் பாதித்தது. அந்த நேரத்தில் உதவியாக இருந்தது இணையமும், அதன் வழியாக அறிமுகமான டேட்டிங் ஆப்களும்தான். ட்ரூலிமேட்லி என்ற ஆப், இந்தியாவில் உருவாக்கப்பட்டது மாதம் 699 தொடங்கி 2,800 வரை காசு கட்டினால் டேட்டிங் அனுபவத்தை சுகமானதாக்குகிறார்கள். அதாவது, நிறைய வசதிகளை பயன்படுத்தி பெண்களைப் பற்றி அறியலாம். பாதுகாப்பு என்ற வகை