இடுகைகள்

இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்வதேசியவாதி நூலில் இருந்து

 நேரு கூறிய கருத்துகளில் முக்கியமானவை... நாம், ஒன்றை அழிப்பதை விட உருவாக்குவதில் பெரிது்ம் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் எதிர்காலத்தில் மதரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பது முக்கியம். இப்படி நடைபெற்றால் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். மத ரீதியான வன்முறைகளுக்கு எப்போதும் மக்கள் பேச்சு அல்லது வேறு வகையில் வாய்ப்பளித்துவிடக் கூடாது.  ஹைதராபாத் மக்கள் அவர்கள் இந்துக்களாக முஸ்லீம்களாக எப்படி இருந்தாலும் அவர்களை பிற கிரகத்தைச் சேர்ந்தவர்களாக கருதமாட்டோம். அவர்களை நமது நாட்டு மக்களாகவே கலாசார தொன்மை கொண்ட இந்தியாவின் மக்களாகவே கருதுவோம்.  காஷ்மீர் மாநில மக்கள் அங்கீகாரமற்ற அத்துமீறல்களால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கடுமையான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. உலகில் நடைபெறும் போர்களில் ஒரு நாடு நடுநிலையாக இருப்பது கடினம். வெளியுறவு விவகாரங்கள் தெரிந்த யாருக்குமே இந்த விஷயம் தெரிந்து இருக்கும்.  இந்தியாவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள் அனைத்தும் சுதந்திரம் பெற்றவையாகவும், அ...

நீரளவே ஆகுமாம் நீராம்பல் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
   நீரளவே ஆகுமாம் நீராம்பல் இந்திராகாந்தி உரைச்சுருக்கம் அன்பரசு சண்முகம் நூலை வாசிக்க https://www.amazon.in/dp/B0FTZ12X2H

இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? - உடற்பயிற்சி கலாசாரமே இல்லாத மதவாத நாட்டின் வெட்டிப்பெருமை!

படம்
  இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? இந்தியாவில் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்கி பல்வேறு வகுப்புகளை நடத்துவார்களே ஒழிய அடிப்படையிலான விளையாட்டை, உடற்பயிற்சியை ஒருவருக்கு வழங்க அனுமதிப்பதில்லை. இந்த லட்சணத்தில் இந்தியா போட்டியிடும் போட்டிகளில் வெற்றிவாகை சூடவேண்டுமென ஊடகங்கள் ஊளையிடுகின்றன. பாலியல் சுரண்டல், தாக்குதல், வன்முறை இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வீரர், வீராங்கனைகள் போட்டிக்கு செல்வதே பெரியது. அவர்கள் பதக்கம் வெல்வது அடுத்த சோதனை. அதில் சரிவு ஏற்பட்டால், உடனே அரசியல்வாதிகள் அரிசி, உப்பு, புளி கணக்கையெல்லாம் எடுத்து நிதானமாக படிக்கத் தொடங்குவார்கள்.  எந்த நாட்டிலும் வீரர்களுக்கு இப்படியான அவமானம், இழிவு நடந்ததில்லை. இந்தியாவில் இதெல்லாம் சாதாரணம், ஏனெனில் இங்கு சாதிக்கு ஒரு நீதி என்ற தர்ம அமைப்பு உள்ளது. அடிப்படையில் இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் கிடையாது. அதை யாரும் ஊக்கப்படுத்துவதுமில்லை. மாத சம்பளத்திற்கு மாணவர்களை தயாரிக்க பள்ளிகள் உதவுகி்ன்றன. படிக்கவேண்டும். வேலைக்கு போகவேண்டும். திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் டெம்பிளேட்டான வழிமுறை.  மற்றப...

தலித் - உயிர் வாழும் பிணம் இலவச மின்னூல் வெளியீடு

படம்
\    நூலை இலவசமாக வாசிக்கலாம். தரவிறக்கி கொள்ளலாம். நூலை தமிழ் வாசிப்பு வலைதளங்கள், குறுஞ்செய்தி தளங்கள் தரவிறக்கி பதிவிட்டு பயன்படுத்துவது அவர்களது முழுப்பொறுப்பு. இதுதொடர்பாக வரும் புகார்களுக்கு கோமாளிமேடை குழு பொறுப்பல்ல.     https://www.academia.edu/129854276/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE_

மீண்டும் அணுஉலைகள்!

படம்
  மீண்டும் அணுஉலைகள்! இந்தியா 100 ஜிகாவாட் அளவிலான அணுஉலைகளை 2047ஆம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது. உலக நாடுகள் அணுஉலைகள் ஆபத்தானவை என உணர்ந்து பின்வாங்கும் நிலையில், இந்தியா அணுஉலைகளை அதிகமாக அமைப்போம் என களமிறங்கி நாட்டை ஒளிரச்செய்ய முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இடிந்தகரை, திருநெல்வேலியிலுள்ள கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுஉலைகளுக்கு எதிரான அமைதிப்போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதே ஆண்டில் ஜப்பானின் புகுசிமா அணுஉலை விபத்தில் கதிரியக்க பாதிப்பு தீவிரமாக உணரப்பட்டது. கசிவு ஏற்பட்டு கடல் நீரில் கலந்தது. இதை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டு போராட்டக்காரர்கள், அணு உலை ஆபத்து என வாதிட்டனர். அறிவு, புத்திசாலித்தனம் என இரண்டுமே வடக்கு நாட்டு ஆட்களுக்கு கிடையாது என்பதால் எப்போதும் போல போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்தனர். 2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி போல ஒரு சம்பவம் நடந்தால், அதில் கூடங்குளம் அணுஉலை மாட்டினால் என மக்கள் பீதியுற்றனர். மக்கள் மீது அரசு ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இப்போதும் கூட முக்கியமான போராட்டக்காரர...

இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்!

படம்
  இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்! தீண்டத்தகாதவர்களை ஆளும் வர்க்கம், அரசு, இடதுசாரிகள் தொடர்ச்சியாக கீழே இழுத்து தள்ளி வருகிறார்கள். இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால், சாதிமுறை அப்படியேதான் உள்ளது. சாதிமுறை தொடரும்போது அதைப் பின்பற்றி தீண்டாமையும் அப்படியே அழியாமல் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆளும் வர்க்கம், இதை அறிந்தும் அதை அழிக்காமல் அப்படியே வளரவிட்டுவருகிறது. சாதிமுறை அழிவது என்றால் இந்துமதம் அழிவது என்றே அர்த்தமாகிறது. ஒரு இந்து, இந்தியாவைக் காக்க இந்துமதத்தை அழிக்க முன்வருவாரா? தீண்டாமையை அப்படியே வளரவிடுவதால், ஆளும் வர்க்கத்திற்கு நிறைய சமூக பொருளாதார பயன்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமாக தீண்டத்தகாத மக்களின் வாக்குகளைப் பெற முடிகிறது. வட்டியில்லாத கடன்களை வழங்குவதைப் போல வாக்கு வங்கியாக மக்கள் இருக்கிறார்கள். தீண்டத்தகாதவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் வறுமையில், பலவீனமானவர்களாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக, ஒருங்கிணைக்கப்படாதவர்களாக உள்ளனர். சாதி, துணைசாதி பிரிவுகள் என பலவும் அவர்களை ...

சாதி என்பது ஒருவகையான இந்து மனநல நோய்!

படம்
  இந்து பார்ப்பன கருத்தியல் என்பது, லாபத்தை அதிகரித்து மேல்சாதியினரை வைத்து சொத்துக்களை கட்டுப்படுத்தி தங்களது அந்தஸ்து, பிற சாதிகளுக்கு இடையிலான உறவைக் காப்பாற்றிக்கொள்வதாக இருக்கிறது. பார்ப்பன சமூகம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, சமூகத்திலுள்ள பிற சாதி இளைஞர்களை தவறாக வழிநடத்தி தங்களது கருத்தியலை பாதுகாக்க போரிடுமாறு செய்கிறார்கள். இந்த வகையில் அவர்கள் மக்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கல்வி என்பது இந்தியாவுக்கு எந்த தீர்வையும் கொண்டு வராது. சாதி, தீண்டாமை என்பது இந்தியாவில் பரவலாக கடைபிடிக்கப்பட காரணமே படித்த மக்கள்தான். சாதி என்பது அவர்களின் மூளையில் உள்ளது. இது ஒருவகையான இந்து மனநல நோய். இந்து மதம் என்பது அமைப்பு என்பதையும் கடந்தது. இ்ங்கு வாழும் ஒவ்வொரு இந்துவும் சாதி, தீண்டாமையை கடைபிடிப்பதை தனது மதக்கடமையாக கருதுகிறான். இதில் பொருளாதார அமைப்பும் உண்டு. முதலாளி, தனது அடிமையை நன்றாக சோறு போட்டு, உடை உடுத்த வைத்து, தங்குவதற்கு இடம் கொடுத்து சந்தைமதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்வாரோ அதுபோலத்தான் இங்கும் நடைபெறுகிறது. தீண்டாமை என்பதைப் பொறு...

இந்தியர்களுக்கு உண்மையை விட சாதியே பெரிது!

படம்
 இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினராக உள்ள பத்து சதவீதம் பேர் மீதியுள்ள பெரும்பாலான மக்களை வறுமையிலும், நோயிலும், அவலத்திலும் உழலுமாறு மாற்றியுள்ளதை வெளிப்படுத்தும் கட்டாயம் நமக்குள்ளது. வெளியே உள்ள உலகம், இங்குள்ள மூன்றாயிரம் ஆண்டு தீண்டாமை என்ற பிரச்னையை பற்றி அறியமாட்டார்கள். இதுபற்றிய உண்மைகளை நீங்கள் அறிய நேர்ந்தால், உங்களுக்கு கண்ணீர் வரக்கூடும். தடுக்காமல், அதை இனிமேல் சிந்தலாம். இந்தியாவின் மீது இரக்கம் கொண்டுள்ள வெளிநாட்டினர், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் உள்ளனர். தொன்மை குடியேற்ற நாடு என பெருமை கொண்ட இந்தியா எப்படி உலக நாடுகளிடையே நோயாளியாக உள்ளது என அவர்களும் புரிந்துகொள்ள உதவும்.   இந்திய அதிகார வர்க்கத்தில் அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், கலாசார, மதவாத தலைவர்கள், சாமியார்கள், இந்துமத தலைவர்கள், நிதித்துறை நபர்கள், காந்தியின் அகிம்சையைப் போற்றுபவர்கள், உண்மை, சகிப்புத்தன்மை, நீதி, சுதந்திரம்,சமத்துவம் பற்றி பேசுபவர்கள் உள்ளடங்குவார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் உலகிலேயே சரியாக இயங்குவது எந்த நாட்டில் என்றால் இந்தியாவை ச...

சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கூறும் நூல்!

படம்
 ஆன் டைரனி டிமோத்தி ஸ்னைடர் இந்த நூல், சர்வாதிகாரம் எப்படி தொடங்குகிறது, அதற்கு ஆதரவு கிடைப்பது எங்கிருந்து, மக்கள் அதை ஏன் ஏற்கிறார்கள் என்பதை இரு உலகப்போர்கள் பின்னணியில் இருந்து ஆராய்கிறது. சர்வாதிகாரம் பற்றிய அடிப்படைக் கருத்து ஒன்றைக் கூறிவிட்டு வரலாற்று சம்பவங்களுக்கு நூல் செல்கிறது. இது படிக்க சற்று ஆறுதலைக் கொடுக்கிறது. எழுத்தாளர் டிமோத்தி, வரலாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு கட்டுரை எழுதினால், அது நூலை பலநூறு பக்கங்கள் கொண்டதாக எளிதாக மாற்றியிருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. சர்வாதிகாரம் வளர்ந்து வரும் நாடாக இந்தியாவையும் எழுத்தாளர் டிமோத்தி குறிப்பிட்டிருப்பது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. அவர் வரலாற்று ரீதியாக ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு நிறைய சம்பவங்களை விளக்குகிறார். அவற்றைப் படிக்கும்போதே நமக்கு திகைப்பாக உள்ளது. ஒரு போர் நடைபெறுகிறது. அதற்கு ஆதரவாக, எதிராக அணி திரள்வோருக்கு பல திட்டங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதைப்பற்றிய விவரிப்பு யூதர்களின் இனப்படுகொலையை எப்படி வல்லரசு நாடுகள் கண்டும் காணாமலும் இருந்தன என்பதை விளக்கிக் ...

சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

படம்
  சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது? அனைத்து விதிகளையும் சட்டங்களையும் சர்வாதிகார அரசு உடைத்தெறியும் என சட்ட கோட்பாட்டாளர் கார்ல் ஸமிட்ச்ட் கூறினார். நாட்டை நிரந்தரமான அவசர நிலைமையில் வைத்திருக்க முயல்கின்றனர். அப்போதுதான் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக, அடிப்படை சுதந்திரத்தை விலைபேச முன்வருவார்கள். தீவிரவாதம் பற்றி இன்றைக்கு நிறைய ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மக்கள் அதை நம்பி விடக்கூடாது. அதில் எந்த உ்ணமையும் இல்லை. அடிப்படை உரிமைகளை இழந்தால் அரசு கொடுப்பதாக கூறும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதும் நடைபெறுவதுண்டு. அதிகாரத்திற்கு கீழ்ப்படிவது சற்று இணக்கமான பாதுகாப்பான தன்மையை ஏற்படுத்துகிறது. சுதந்திரம், பாதுகாப்பு என இரண்டையும் இழந்துவிடுகிறோம். பாசிஸ்ட் ஒருவருக்கு வாக்களித்தால், மோசமான நிலையே கிடைக்கும். சர்வாதிகாரிகள், பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி பேசும்போதெல்லாம் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள், தங்களுடைய கருத்துகளை எதிர்ப்பவர்களை, விமர்சனம் செய்பவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்...

ஊழலால், அநீதியால் இழிந்த நிலைக்கு தள்ளப்படும் மூடநம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் கிராமம்! - தர்பாரி ராகம் - ஶ்ரீலால் சுக்ல

படம்
            மறுவாசிப்பு- தர்பாரி ராகம் ஶ்ரீலால் சுக்ல தமிழ் மொழிபெயர்ப்பு - சரஸ்வதி ராம்னாத் நேஷனல் புக் ட்ரஸ்ட் அரசு மீது அங்கத தன்மையோடு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் இந்தி இலக்கிய நூலை வெளியிட்டதற்காகவே அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். புண்பட்ட மனங்கள் அதிகரித்துவிட்ட காலத்தில், இந்த நூலெல்லாம் மறுபதிப்பு கண்டு வெளியானால் அதுவே பெரிய ஆச்சரியம். நூலாசிரியர், ஶ்ரீலால் சுக்ல. இவரது வேறு எந்த நூல்களையும் நான் படித்தது இல்லை. இந்த நூலும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட பிறரையும் வாசிக்க வைக்கும் நோக்கில் உள்ள சகோதரர் முருகு மூலமாகவே வாங்கினேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. முந்நூறு பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட நூலின் அச்சிடப்பட்ட விலை ரூ.28. புத்தக திருவிழா தள்ளுபடியில் ரூ.14க்கு வாங்கினேன். இந்நூலில் உள்ள கருத்துகளை காங்கிரஸ் அனுமதித்து அரசு நிறுவனம் மூலம் வெளியிட்டது.  தற்போதுள்ள வலதுசாரி மதவாத அரசு, இத்தகைய நூலை நிச்சயம் ஏற்காது. புறக்கணிக்கவே செய்யும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் நூலில் ஏராளம் உள்ளன. சிவபால்கஞ்ச் எனும் கிராமம்...

பாயும் பொருளாதாரம் - பொருளாதாரத்தை அறிந்தால், பொருளாதார வல்லுநர்கள் நம்மை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்!

படம்
              பாயும் பொருளாதாரம் பொருளாதாரம் இந்தியாவில் ரூபாய் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. வேலையிழப்பு பரவலாகி வருகிறது. விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்ணாவிரதம் கூட இருக்கிறார்கள். எதேச்சதிகார ஆட்சியில் அகிம்சை எப்படி எடுபடும் என்று தெரியவில்லை. சுயதொழில் செய்பவர்கள் நிலைமை எப்படியோ, ஆனால், மாதச்சம்பளக்காரர்களிடம் பறிக்கும் வரிக்கொள்கை புதிதாக அமலாகிவிட்டது. மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு சேவை வரி பதினெட்டு சதவீதம் என்றால், பணக்காரர்களுக்கு அத்தியாவசியமான வைரத்திற்கு ஐந்து சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவு வரி தீவிரவாதம் அதிகரித்தாலும் கல்வி, மருத்துவம், தங்குமிடம், உணவு என பலவற்றுக்கும் அரசு எந்த பொறுப்பும் ஏற்காது. இதையெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். பொருளாதாரம் பற்றி அறிந்துகொண்டால் அதைப்பற்றிய விழிப்புணர்வைப் பெற்று நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிய அறிமுகத் தொடர் இது. பொருளாதாரம் என்றால் வங்கிகள், பங்குச்சந்தை, அப்புறம் வினோதமான வரைபடங்கள் என ட...

புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் !

படம்
      கல்வி அறிவு இல்லாத தொழிலாளர்களுக்கு தன்னம்பிக்கை தரும் புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் பாரதம், பாரதீய என்று கூறுவது காவி இயக்கம், கட்சிகளை நினைவுபடுத்துகிறது. எனவே கல்வியறிவுத்திட்டம், புதிய இந்தியா என்ற பெயரில் கட்டுரையில் பயன்படுத்தப்புகிறது. தமிழ்நாட்டில் படிக்க வாய்ப்பு வசதி இல்லாமல் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டவர்கள், பலர் இன்றும் பேருந்து பார்த்து ஏறவும், எண்களைப் பார்த்து படிக்கவும் சிரமப்படுகின்றனர். சிறுவயதில் அவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, அதைத் தடுக்க உறவினர்கள் அல்லது குடும்பத்தினர் முயற்சி செய்து வெற்றி கண்டிருப்பார்கள். அதன் விளைவாக, அவர்களின் கல்வியறிவு அஸ்தமனமாகி இருக்கும். பிற்காலத்தில், கையெழுத்து கூட போட முடியாமல், கால மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி வருவார்கள். இதற்கு ஒன்றிய அரசு, மாநில அரசு இணைந்து நிதியுதவி அளித்து கல்வியறிவுத் திட்டம் ஒன்றை நடத்துகிறது. அந்த வகையில் கற்றல் மையங்கள் முப்பதாயிரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ளன. இதன் வழியாக சேலம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்திலுள்ள நாற்பது வயதுக்கும் மேற்பட்ட மக்கள் பய...

அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மூலம் அரசியல் களம் மாறும்! - ஜவகர்லால் நேரு உரை

படம்
இங்கு நான் வந்திருக்கிற சமயம், மனதளவில் சற்று வினோதமாக உணர்கிறேன். இதுபோன்ற உணவு எப்போதும் ஏற்பட்டதில்லை. இந்த இடத்தில், அறிவியல் சார்ந்த கற்றுக்கொள்ளல் தொடர்பான அழுத்தம் திடமாக உள்ளது. டாக்டர் பாபா, எனக்கு கூறியபடி என்னுடைய பகுதியை, அறிவியல் ஆராய்ச்சிக்கு செய்ய வந்திருக்கிறேன். அறிவியல் நிறுவனத்திற்கான அடித்தள தூண்களை அமைத்துக்கொடுப்பதே நாட்டிற்கான எனது பணி. அடிப்படையான அம்சம் என்றளவில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது. இந்திய அரசு சார்பாக, டாக்டர் பாபா, மாநாட்டு விருந்தினர்களாகிய உங்களை வரவேற்றுள்ளார். நாட்டு அரசின் உறுப்பினராக, இங்கு வருகை தந்துள்ளோர் அனைவரையும் வரவேற்க விரும்புகிறேன். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் பணியாற்ற வந்திருக்கிற வெளிநாட்டு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். இயற்கையைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டால், உங்கள் ஆசைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளலாம். நமது செயல்பாட்டை, எதிர்கால உலகிற்காக, அதன் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நான் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்பவன். இதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க...

இந்தியாவை விட்டு தப்பித்து ஓடும் மக்கள்!

படம்
          இந்தியாவை விட்டு தப்பித்து ஓடும் மக்கள்! எதற்காக ஓடுகிறார்கள்? எல்லாம் ஒரு ஜாண் வயித்துக்காகத்தான் அய்யா. கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவிற்கு கள்ளத்தனமாக சென்று, தங்குவதற்கு அனுமதி பெற முடியாமல் காவல்துறையில் மாட்டிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 96, 917. கொரோனா லாக்டவுன் சீரானவுடன் எவனாவது இந்த நாட்டில் இருப்பானா என மக்கள் தலைதெறிக்க மேற்கு நாடுகளைப் பார்த்து ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். 7,25, 000 இந்தியார்கள் அனுமதி வாங்காமல் அமெரிக்கா, மெக்சிகோ, எல் சால்வடோர் எல்லையில் சுற்றித் திரிந்து வருகிறார்கள் என ப்யூ நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது. பைத்தியக்காரர்களின் கையில் தீப்பந்தத்தைக் கொடுத்துவிட்டு உயிருக்கு தப்பி ஓடுவது என்ன புத்திசாலித்தனமோ? அமெரிக்காவில் அகதிகளைப் பற்றி எப்போது தேடுதல் நடத்தினாலும் அதில் மாட்டிக்கொள்பவர்களில் இந்தியர்களே அதிகம். இவர்கள் அமெரிக்காவில் ஆதார அடையாள அட்டைகள் இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள். எல்லைகளிலும் இப்படித்தான் மக்கள் உள்ளே நுழைய முயன்று வருகிறார்கள். காசு கொடுத்தால் சட்டவிரோத பாதை வழியாக ஏஜண்டுகளே மேற்கு நாடுகளில் உள்ள...

போருக்கு செலவு செய்வதைவிட நிதியை ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு திருப்பலாம்!

படம்
           உள்நோக்கம் கொண்ட தேசபக்தி அரசியல்    ஒருவகையில் பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகள் மேம்படுவதாக  இருந்தாலும், இன்னொருவகையில் அந்நாட்டுடன் சுமூகமான உறவு ஏற்படக்கூடாது என்று விரும்புகிறோம். நமது பிரதமர் பாகிஸ்தான் பகுதிகளைப் பற்றிப்பேசும்போது நாடாளுமன்றத்தில் பல அணிகளாகப் பிரிந்து நின்று பேசுவது நடக்கிறது. நாட்டின் ஊடகங்களில் இரு தரப்பு பற்றி கடும் கூச்சல் இடுவதுமாக இரு நாட்டு உறவுகள் சமநிலையடையும் நிலையில், இச்செயல்கள் அதைக் குலைத்துப்போட்டுவிடுகின்றன.  நமது செயல்பாடுகள் பாகிஸ்தானுடனான ஒற்றுமையை உண்மையில் நாம் விரும்புவதில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. உறுதியாக, நாம் உறவுகளை சிறந்ததாகவும், ஆழமானதாகவும் கொள்ள முயற்சித்தும் அங்கே மனக்கசப்பும், கோபமும்தான் இறுதியில் மிஞ்சுகிறது. அனைத்தையும் விட பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை கற்பிக்கவேண்டும்; அவர்களை சரியான இடத்தில் வைக்கவேண்டும்; எனவும், பாகிஸ்தானை இகழ்ந்து பேசுவதுதான் தேசபக்தி என்று கூறுவதில் பெரும் அரசியல் உள்ளது.  மும்பை தீவிரவாதத் தாக்குதல் பிரச்சனைகளை தீர்க்காமல் பிரதமர் பாகி...

இளைஞர்களின் இந்தியா - சேட்டன் பகத் - கட்டுரைத்தொகுப்பின் அட்டைப்படம் வெளியீடு

படம்
        விரைவில், இளைஞர்களின் இந்தியா நூலின் அரசியல் பகுதி - திருத்தப்பட்ட பிரதியாக இன்டர்நெட் ஆர்ச்சீவில் கிடைக்கும். இந்த நூல் சேட்டன் பகத்தின் கட்டுரைகளை அடிப்படையாக கொண்டது.   

அதீதசுயமோக வெறியால் துண்டாடப்படும் குடியரசு!

படம்
        வினோதரச மஞ்சரி ஐந்தாம் வரிசை இருக்கையும், அதீத சுயமோகமும் கூலிப்படை ஊடகங்களில் வேலை செய்து பிறகு, அவை தொழிலதிபர்களின் கைகளுக்கு போனபிறகு வெளியே வந்த பத்திரிகையாளர்களில் பர்கா தத், ரவீஷ் குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். ரவீஷ் குமார், யூட்யூபில் தனி சேனல் ஒன்றைத் தொடங்கி இந்தியில் அரசியல் விவகாரங்களை அவருடைய அனுபவங்கள் வழியாக அலசி பேசிக்கொண்டிருக்கிறார். பர்காதத் மோஜோ எனும் யூட்யூப் சேனலைத்தொடங்கி நடத்தி வருகிறார். நேர்மையான, பாகுபாடற்ற செய்திகளை விரும்புவர்கள் எவரும் இந்த சேனல்களை அணுகி செய்திகளை புரிந்துகொள்ள முயலலாம். ரவீஷ்குமார் யூட்யூப் சேனலில் குடியரசு விழாவில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் வீரர்களுக்கும் பின்னால் ஐந்தாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது பற்றி பேசியிருந்தார். அதில் முக்கியமானது, தற்போதைய பிராமண இந்து மதவாத கட்சியின் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்குமான வீடியோக்கள், அதில் நாம் அறிந்துகொள்ளும் செய்தி. ஒருவர் அதிகாரத்திற்கு வந்து அதை வைத்து என்ன செய்கிறார், எப்படி நடந்துகொள்கிறார் என்பதே முக்கியம். இன்று எதிர்க்கட்சி த...