இடுகைகள்

அசோக் செல்வான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறரது வாழ்க்கை அனுபவங்களின் வழியே துக்கத்தை மறக்கும் அகவயமானவனின் கதை! நித்தம் ஒரு வானம் -ரா கார்த்திக்

படம்
  நித்தம் ஒரு வானம் நித்தம் ஒரு வானம்  நித்தம் ஒரு வானம் இயக்கம் – ரா கார்த்திக் பாடல் – கோபி சுந்தர் பின்னணி தரண் குமார் பாடல்கள் கிருத்திகா நெல்சன் படத்தில் பாடல்கள் தனியாக தனியிசை ஆல்பம் போல இருக்கிறது. அதனால் அதை தனியாக நிதானமாக பாடல் வரிகளை அசைபோட்டு கேட்கலாம். அகவயமான இளைஞர் வாழ்க்கை, திருமணம் நின்றுபோனதால் எப்படி பிரச்னைகளுக்குள்ளாகிறது. அதை அவன் எப்படி எதிர்கொண்டு மீள்கிறான் என்பதே கதை. ஓசிடி உள்ள அதிகம் பேசாத ஆள். அவனுக்கும் காதல் வருகிறது. அவனை மணக்க பெண் சம்மதிக்கிறாள். ஆனால் அவளது காதல் மீண்டும் மனதிற்குள் வரும்போது என்னாகிறது? அர்ஜூனை விட்டு கல்யாணப் பெண் தனது முன்னாள் காதலனைத் தேடி செல்கிறாள். இந்த நேரத்தில் அர்ஜூன் கிடைத்த கல்யாண வாழ்க்கையும் கைவிட்டு போகிறது என நொந்துபோகிறான். அந்த மன அழுத்த த்திலிருந்து தப்ப உறவினரான மருத்துவரின் உதவியை நாடுகிறான். அவர் அவனுக்கு இரண்டு ஜோடியின் கதைகளைக் கொடுக்கிறார். அந்த கதைகளை படிக்கிறான். அதில் இறுதிப்பக்கங்கள் இல்லை. அதைத் தேடி மேற்குவங்கம், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களுக்கு பயணிக்கிறான். உண்மையை அவன் கண்டுபிடித