இடுகைகள்

அல்சீமர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்?

 அறிவியல் தகவல்கள் மிஸ்டர் ரோனி நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்? இப்போதுதான் உடையை வாங்கினேன். ஆனால், அதற்குள் இந்த நாகரிகம் பழசாகிவிட்டதா? காலம் வேகமாக ஓடுகிறது என சிலர் ஆச்சரியப்படுவார்கள். அவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயது ஆசாமிகளாக இருப்பார்கள். குழந்தையாக இருப்பவர்களுக்கு நேரம் என்பது அப்படியே உறைந்து நிற்பது போல தோன்றும். இளையோருக்கு குழந்தையிலிருந்து நீண்ட தொலைவு பயணித்து வந்தாலும், காலம் வேகமாக நகர்ந்திருப்பதை அறியமாட்டார்கள். எதிர்காலம் என்ன விஷயங்களைக் கொண்டிருந்தாலும் நடைமுறை மட்டுமே நிஜம் என்பதை புரிய சிலகாலம் தேவை.  ஒரு மனிதர் இயல்பாக நடைபாதையில் நடந்து செல்லும்போது சுற்றியுள்ள கட்டுமானங்கள் அப்படியே மாறிக்கொண்டே நவீனமாக மாறுவது போலத்தான் காலம் மாறுவதை கருதவேண்டும். காலம் வேகமாக நகருவதை நடுத்தர வயது கொண்டவர்கள் உணர்வார்கள்.  டிமென்சியா என்றால் என்ன? டிமென்சியா என்றால் மூளையில் உள்ள ஒருவரின் அறிவுத்திறன்களை இழக்கும் நோய் என்று கூறலாம். திட்டமிடல், கருத்துகளை கோர்வையாக கூறுவது, சுயமாக தன்னை கண்காணித்தல், நினைவுகள் ஆகியவற்றை நோயாளி இழந்துவிடுவா...

அல்சீமர் நோயின் அறிகுறிகள்!

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி அல்சீமர் நோயின் அறிகுறிகள் என்னென்ன? ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பது, ஒரே கதையை திரும்ப கூறுவது, கூறிக்கொண்டே இருப்பது, சமைப்பது, பழுதுபார்ப்பது போன்ற வேலைகளை மறந்துபோவது, திசை, முகவரி தெரியாமல் தடுமாறுவது, கட்டணம் செலுத்துவதை மறப்பது, குளிப்பதை மறப்பது, ஒரே உடையை அப்படியே அணிந்திருப்பது, இன்னொருவரின் முடிவுக்காக காத்திருப்பது, இன்னொருவரை சார்ந்திருப்பது. புற்றுநோயின் வகைகள் என்னென்ன? கார்சினோமா, சர்கோமா, லுக்குமியா, லிம்போமா பாய்சன் ஐவி செடியை தொட்டவுடன் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமா? 85 சதவீதம் பேருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தோலில், உடையில் பாய்சன் ஐவி இலைகள் பட்டால், அந்த இடத்தை மென்மையான சோப்பு போட்டு கழுவவேண்டும். ஒவ்வாமை காரணமாக தலைவலி, காய்ச்சல், உடல் பலவீனம் ஏற்படலாம். இந்த பாதிப்பு ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும். நன்றி சயின்ஸ் ஹேண்டி புக்

தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு!

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி   கான்கஷன் என்றால் என்ன? தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு. இதன் காரணமாக ஒருவருக்கு உயிரபாயம் ஏற்படாது. ஆனால் சிலருக்கு சுயநினைவு இருக்கும். சிலருக்கு இருக்காது. ஆனால் மெல்ல பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கும் அவற்றைப் பார்ப்போம். தலைவலி, கழுத்துவலி எப்போதும் இருக்கும். முடிவெடுப்பது, நினைவில் வைத்துக்கொள்வது, கவனத்தை குவிப்பது கடினமாக மாறும். சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது ஆகிய செயல்கள் மெதுவாக மாறிவிடும் எப்போதும் உடலில் களைப்பு இருக்கும். மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். தூங்கும் பழக்கம் மாறும் மயக்கம், உடல் சமநிலை தவறும் சூழல் உருவாகும். வாந்தி வருவது போல தோன்றும் கண் பார்வை மங்கும், கண்ணில் எளிதாக சோர்வு தோன்றும். ஒளி, ஒலி சார்ந்து கவனக்குறைவு ஏற்படும் வாசனை, சுவையறியும் திறன் இழப்பு காதில் ஓலி கேட்கத் தொடங்கும் இரண்டு வகை வாதங்கள் உள்ளனவா? ஐசீமிக், ஹெமோர்ஹேஜிக் என இரு வாதங்கள் உள்ளன. ஐசீமிக், மூளையில் செல்லும் ரத்தம் தடைபடுவதால் உண்டாவது. இந்த வகையில் மனிதர்களுக்கு எண்பது சதவீத வாதம் உருவாகிறது. அடுத்து, ஹெமோர்ஹேஜிக் ...

அல்சீமர் பற்றிய கல்வி அனைவருக்கும் தேவை - மருத்துவர் சஞ்தீப் ஜாவ்கர்

படம்
  மை ஃபாதர்ஸ் பிரெய்ன் - அல்சீமர் நூல் சந்தீப் ஜாவ்கர் மருத்துவர் சந்தீப் ஜாவ்கர் இதயவியல் மருத்துவர், அமெரிக்கா அண்மையில் மருத்துவர் சந்தீப், தனது அப்பாவிற்கு ஏற்பட்ட அல்சீமர் நோய் பற்றிய தனது கருத்துகளை, தொகுத்து நூலாக எழுதியிருக்கிறார். நூலின் பெயர். மை ஃபாதர்ஸ் பிரெய்ன்   - லைஃப் இன் தி ஷாடோ ஆஃப் அல்சீமர்ஸ். தங்களுடைய   பெற்றோர், மனைவி ஆகியோருக்கு அல்சீமர் ஏற்பட்டிருப்பதை ஒருவர் முதல்முறையாக அடையாளம் காண்கிறார். அவர்களுக்கு ஏற்படும் நினைவிழப்பை எப்படி சமாளிப்பது? குறைந்த கால அளவில் ஏற்படும் நினைவிழப்பு என்பது அல்சீமரின் முக்கிய அறிகுறி. இது நோயாளியை கடுமையான விரக்தியில் தள்ளும். விரக்தியும் கோபமுமாக மாறுவார்கள். மேலும், நோயாளிகளை கவனித்தும்கொள்ளும் குடும்ப உறுப்பினர் அல்லது பணியாளர்களுக்கு பொறுமை தேவை. அல்சீமர் வந்த நோயாளிகளுக்கு மூளையில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் செயல்பாடு குணங்கள் மாறும். எனவே, இதைப் புரிந்துகொள்ள அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு நோய் பற்றிய கல்வி தேவை. அல்சீமர் நோய் வந்தபிறகு நோயாளிகளுக்கு அவர்கள் புரிந்துகொண்டபடியே உலகம் இயங்க...

குழந்தை கடத்தலைத் தடுத்து அப்பாவின் களங்க கறையைத் துடைக்கும் மகன் - ட்ரிகர் - அதர்வா, தான்யா - சாம் ஆண்டன்

படம்
  ட்ரிகர் இயக்கம் சாம் ஆண்டன் நடிப்பு அதர்வா, தான்யா பாலச்சந்திரன், முனீஸ்காந்த், சின்னிஜெயந்த் இசை ஜிப்ரான்   அப்பாவின் கடந்த கால அவமானத்தை துடைக்கப் போராடும் மகனின் கதை. அல்சீமரால் அதர்வாவின் அப்பா அருண்பாண்டியன் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். அவருக்கு இருக்கும் நினைவு எல்லாம் தான் ஒரு வழக்கு தொடர்பாக விசாரித்த தகவல்கள் மட்டுமே. அதை மட்டுமே காகிதத்தில் கிறுக்கி சுவற்றில் மறக்கக் கூடாது என ஒட்டி வைத்திருக்கிறார். அதை அதர்வா பார்த்து அதில் உள்ள மர்மம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்கான வாய்ப்பு இயல்பாகவே அவருக்கு ஆயுதக்கடத்தல் மூலமாக கிடைக்கிறது. அந்த வழக்கை ஆராயும்போது அதர்வாவுக்கு வழக்கின் அடிப்படை விஷயமாக பேரல்லல் கிரைம் என்பது புரிய வருகிறது. இதை வைத்து வழக்கை எப்படி தீர்த்தார் என்பதே படம்.   வேகமாக காட்சிகள் நகரவேண்டிய படம். அதை ஒளிப்பதிவாளரும், சண்டைப்பயிற்சி கலைஞரான திலீப் சுப்பராயனும் புரிந்துகொண்டு பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் சண்டைக்காட்சிகள் என வரும்போது   பார்ப்பவர்கள் வயிற்றில் அட்ரினலின்   சுரக்கிறது. சாம...

ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆர்கனாய்டு மினி ப்ரெய்ன் ஆராய்ச்சி! - ஆட்டிசம், அல்சீமர், டிமென்ஷியா குறைபாடுகளை தீர்க்கலாம்!

படம்
  cc மூளை ஆராய்ச்சி     மினி மூளை ஆராய்ச்சி ஆட்டிசம், அல்சீமர், சிசோபெரெனியா ஆகிய நோய்களை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் மூளை முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. மூளை பற்றிய ஆராய்ச்சி அதிகளவில் நடைபெறுவதில் உள்ள சிக்கல், அதன் அமைப்புதான். இப்போது அத்தடைகளையும் தாண்டி அதனை ஆய்வகத்தில் வளர்க்க முய்ன்று வருகிறார்கள். கேம்பிரிட்ஜிலுள்ள மூலக்கூறு உயிரியல் பிரிவு பேராசிரியர் மேடலின் லான்காஸ்டர் என்ற பெண்மணி, மூளையிலுள்ள ஸ்டெம்செல்களை தனியாக பிரித்து வைத்து அதனை ஆராய்ந்து வருகிறார். வியன்னாவில் முதுகலைபடிப்பிற்கு செய்த ஆராய்ச்சியின் போது விபத்தாக மூளை ஆராய்ச்சியை செய்யும் நோக்கம் தொடங்கியிருக்கிறது. கருப்பையில் மூளை எப்படி வளருகிறது என்பதைப் பற்றித்தான் லான்காஸ்டர் முதலில் ஆராய்ச்சி செய்தார். பின்னர்தான், அது மூளையை தனியாக ஆய்வகத்தில் வளர்க்கும் நோக்கத்தில் வந்து நின்றது. ஆர்கனாய்டுகளை ஆராய்ந்து வந்த லான்காஸ்டர் இப்போது மெல்ல மூளையை ஆய்வகத்தில் வளர்த்து அதன் புதிர்தன்மையை காண முயன்று வருகிறார். பொதுவாக எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கூட நாம் மூளையின் வளர்ச்சியைத்தான் பார்க்க முடியும். ஆனால் ...