இடுகைகள்

அறம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறமதிப்பீடுகளை பின்பற்றும் பழக்கம் எப்படி தொடங்குகிறது?

படம்
  லாரன்ஸ் கோஹ்ல்பர்க்  lawrence kohlberg ஒருவரிடம் அறம் சார்ந்த மதிப்பீடுகள் எப்படி உள்ளன என்பதை லாரன்ஸ் அறிய நினைத்தார். இதற்கென 72 சிறுவர்களை பங்கேற்க வைத்து இருபது ஆண்டுகளாக சோதித்தார். இவர்களின் வயது வரம்பு 10 முதல் 16 வரை. இதை எளிமையாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒருவரிடம் காசு இல்லை. ஆனால் அவரது நோயுற்ற மனைவிக்கு மருந்துகள் தேவை. அதை மருந்தகத்தில் இருந்து திருடவேண்டும் அல்லவா?  இப்படி திருடுவதில் மூன்று அம்சங்கள் உள்ளன. பரிசு, தண்டனை, பழிக்குப்பழியாக கிடைக்கும் தண்டனைகள் என அம்சங்களை ஒருவர் யோசித்துப் பார்க்கலாம்.  மக்கள் நிறையப் பேர் ஏன் திருட்டுகளில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்? அதற்கு முக்கியக் காரணம், அரசின் கடுமையான சட்டங்கள், அதிகாரத்தின் மீது கொண்ட பயம் காரணமாக வரும் கீழ்ப்படிதல். இதன் காரணமாக குற்றங்கள் குறைவாகவே ஏற்படுகின்றன. இதற்கு அடுத்ததாக, சரி, தவறு என்பதற்கு கிடைக்கும் பரிசுகள் வருகின்றன. மூன்றாவது நிலையாக ஒருவர் என்னை அடித்தால், நான் அவரைத் திருப்பி அடிப்பேன் என்று கூறுவது வருகிறது. இந்த நிலை பின்விளைவுகளை/எதிர்வினையை அடிப்படையாக கொண்டது. மேற்சொன்ன

பத்திரிகையாளர்களுக்கான கொள்கை கையேடு - டியர் ரிப்போர்டர் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  உலகளவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் தமிழ் நாளிதழ் குழுமத்தில், சிறு வார இதழ் ஒன்றில் வேலை செய்யும்போது, பத்திரிகையாளர்களுக்கான கொள்கை, கோட்பாடு பற்றி எழுத நினைத்தேன். ஆனால் வேலை நெருக்கடி காரணமாக,  தமிழாக்க நூல் செய்யவேண்டுமென நினைத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. ஆனால் இப்போது  நேரம் கிடைக்க, டியர் ரிப்போர்டர் எனும்  சிறுநூல் எழுதி தொகுத்து தயாராகிவிட்டது.  டியர் ரிப்போர்டர் நூலில் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய  அடிப்படை கொள்கை என்ன, சவாலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது, செய்தியை எழுதும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் பற்றிய கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.  அச்சு, காட்சி ஊடகம் என இரண்டிற்குமான அடிப்படைக் கொள்கைகள் ஒன்றுதான். இதில், குறிப்பிட்ட ஊடக நிறுவனம் கடைபிடிக்கும் கொள்கைகள் சற்று மாறுபடக்கூடியவை. ஆனால், அதைப்பற்றி பொதுவான பரப்பில் ஒருவர் எதையும் கூறிவிட முடியாது. ஆனால் பத்திரிகையாளர் எப்படி இருக்கவேண்டும், அரசியல், பொருளாதார, சமூக பரப்பில் நடைபெறும் விஷயங்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்பதை நாம் கூறமுடியும். அதைத்தான்

பொது விவகாரங்களில் பிரபலங்களின் கருத்து!

படம்
  வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குற்றச்செயல்களை செய்த இளையோர் ஆகியோரைப் பற்றிய செய்திகளை எழுதும்போது கவனம் தேவை. சிறுவர்களைப் பற்றிய செய்தியை எழுதுகிறீர்கள் என்றால் முறையாக பெற்றோர், ஆசிரியர், சட்டரீதியான பாதுகாவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்கலாம். சில குற்ற வழக்குகளில் இளையோர் தொடர்பு இருந்தால் அதில் நீதிமன்றத் தலையீடுகள் இருக்கலாம். எனவே, செய்திக்காக அவர்களின் புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்க கூடாது. அப்படி பிரசுரம் செய்தால், தொடர்புடைய இளையோருக்கு பாதிப்பு நேரிடலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சினிமா பிரபலங்களை, அவர்களின் கருத்துகளை   வெளியிட்டு சம்பாதிக்கும் நிறைய வார, மாத இதழ்கள் உண்டு. இந்த வகையில்   செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அடையாளமே குறிப்பிட்ட பிரபலங்களை தேடிப்பிடித்து பேசியதால் கிடைத்த புகழ்தான். எனவே, இதுபற்றிய செய்தியில்   ஜாக்கிரதை தேவை.   பிரபலங்களைப் பற்றிய தொழில் சார்ந்த செய்திகளால் இதழ் வளரலாம். அதேசமயம் பிரபலங்களின் குடும்பம் பற்றி எழுதும்போது, கவனமாக இருப்பது நல்லது. பொது விவகாரங்

செய்திகளில் தகவல் துல்லியம், தெளிவு அவசியம்!

படம்
  மாநகரில் ஓரிடத்தில் வன்முறை சம்பவம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களை அணுகி கட்டுரை ஒன்றை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொளவோம். அப்படி எழுதும்போது ஒருவர் அனுபவித்த துயரத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது. அதேசமயம் தேவையான கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெற்று எழுத வேண்டும். பெறும் தகவல்களில் தெளிவு, துல்லியம் அவசியம். சிலர் பேசும்போது முக்கியமான நபர்கள், சம்பவங்களைத் தவிர்த்துவிட்டு சில விஷயங்களைப் பெரிதுபடுத்தி பேசுவார்கள். இதைக் கவனித்து கட்டுரையில் செம்மை செய்வது முக்கியம். பெறும் செய்திகளை நடுநிலையாக எழுத முயல வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு, அரசு தரப்பு, எதிர்தரப்பு, என தகவல்களைத் தேடி கேட்டு தொகுத்து கட்டுரையாக செய்தியாக எழுத வேண்டும். வன்முறை சம்பவம் வழக்காக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தால், அதைபற்றி முன்முடிவாக எந்த கருத்தையும் கூறக்கூடாது. இப்படி கூறும் கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பத்திரிகையாளருக்கும், வெளியீட்டு நிறுவனத்திற்கும் சட்டச் சிக்கலைக் கொண்டு வரலாம். பாதிக்கப்பட்ட சம்பவத்தில் பத்திரிகையாளரான நீங்கள் மையமாக இருந்தால், அதாவது பாதிக்கப்பட்டவராக இரு

வன்முறைச் சம்பவங்களை எழுதுவது எப்படி?

படம்
  இன்று உலகம் முழுக்க பத்திரிகையாளர்கள் பல்வேறு செய்திகளை எழுதுகிறார்கள். அதில் அதிகம் கவனம் பெறுவது மனிதர்களைப் பற்றிய செய்திகள்தான். வெற்றி, தோல்வி, மீண்டு வந்த கதைகள் என வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி எழுதுவது என பார்ப்போம். ஜாதி, மதம், இனக்குழு, நிறம், பாலியல் என பல்வேறு வகையாக குறிப்பிடப்பட்டு மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்படி தாக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்திகளை எழுதும்போது, பெயர்களை வெளியிடவேண்டாம் என தொடர்புடையவர் கூறினால் அதன்படியே செய்தியை எழுத வேண்டும். ஏனெனில் செய்தி வெளியாகி அவரின் மீதமுள்ள வாழ்க்கை, மரியாதை பாதிக்கப்படக்கூடாது. முற்றிலும் அழிந்துவிடக்கூடாது.   பாலியல் வல்லுறவு, சீண்டல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டால் முடிந்தளவு அவர்களின் பெயர், புகைப்படத்தை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட நினைத்தால் பாதிக்கப்பட தரப்பிடம் உரிய அனுமதி வாங்கவேண்டும். இல்லையெனில் இந்த சம்பவம், பத்திரிகையாளருக்கு தண்டனை அளிக்கும் குற்றமாகவும் மாறலாம். வன்முறை சம்பவத்தை பதிவு செய்யும்போது எழுதும் மொழி, நடை என்பது சற்று மத்திய நிலையில் இருக்கவேண்டும். எந்த தரப்பிற்கும் ஆதரவாக அம

உண்மையை வெளிப்படுத்த புலனாய்வு செய்தி முறை! - எதிர்கொள்ளும் விளைவுகள்

படம்
  பத்திரிகையாளர் அவர் நாட்டில் உள்ள சட்டங்களைப் பின்பற்றித்தான் செய்தி சேகரிக்க வேண்டும். ஒருவேளை நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை. மக்களுக்கு தெரிய வேண்டிய செய்திகளை அரசு மறைக்கிறது என்றால் அப்போது அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து செய்தி சேகரிக்கலாம். இந்த ஒரு சூழ்நிலையைத் தவிர்த்து வேறு எந்த வழியிலும் ஒருவர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் சென்று செய்தி சேகரிக்கக்கூடாது. அப்படி சேகரித்து வெளியிடுவது மக்களின் நலனுக்காக என்றால் ஏற்றுக்கொள்ளலாம். மற்ற வகையில் பத்திரிகையாளர், வெளியிடும் நாளிதழ், ஊடக நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் செயல்பாடு என்பது சட்டத்திற்கு உட்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த முறையிலும் பத்திரிகையாளர், நிறுவனம்   வழக்குகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. செய்திகளை சேகரிப்பதில் விதிவிலக்கான நேரங்களைத் தவிர்த்து பிற சமயங்களில் சட்டத்திற்கு உட்பட்டு செய்தி சேகரிப்பதே நல்லது. அரசு அமைப்பு, அல்லது தனியார் அமைப்பு, அதிகாரிகள், தனிநபரின் போனை ஒட்டுக்கேட்பது, கணினியில் உள்ள தகவல்களைத் திருடுவது ஆகியவற்றைச் செய்து ச

செய்தியில் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம்

படம்
  பொதுவாக   நிறைய பிரபலங்கள் / அரசியல்வாதிகள் பேட்டி எடுக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.   பிறகு, பத்திரிகையாளரை அழைத்து செய்தியை எழுதிய உடனே அல்லது அதை வெளியிடும் முன்னர் இறுதி வடிவத்தை ஒருமுறை அவர்களுக்கு அனுப்பித் தரும்படி கேட்பார்கள். பேசிய வார்த்தை, அர்த்தம் மாறியிருக்கிறதா என்று சரி பார்க்கத்தான் இந்த சோதனை. இந்த முறை இப்போது ஊடகங்களில் பழக்கமாகிவிட்டது. பத்திரிக்கைகள் செய்தி ஆதார மனிதர்களிடம் அச்சேறாத செய்தியை அனுப்பி, அவர்களின் திருத்தங்களைக் கேட்டு பிறகு அதைச் செய்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். அனைத்து கட்டுரைகளுக்கும், இதுபோல திருத்தங்கள் செய்து கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது சரியானதல்ல. முடிந்தவரை பத்திரிகையாளர்கள் இம்முறையைத் தவிர்க்கவேண்டும். தவறுகள் ஏற்படாமல் இருக்க, பேசும்போது முறையாக அதை ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுவிட்டு கட்டுரையை எழுதலாம்.இப்படி எழுதப் பழகினால் கட்டுரைகளில் திருத்தங்கள் குறையும். நாளடைவில்   தகவல் பிழைகள் இருக்காது.   செய்திகளை, பேட்டி எடுப்பவர்களிடம் காட்டிவிட்டு பிரசுரிப்பது என்றால் அதை செம்மை

பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சில சவாலான சூழல்கள்!

படம்
  இப்போது சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். அதைப் பத்திரிகையாளர்களாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என ஆராய்வோம். இதற்கான பதில்கள் ஒன்றுக்கும் மேலாக இருக்கலாம். இதை நீங்கள் உங்கள் சக நண்பர்கள், வழிகாட்டிகளுடன் ஆராய்ந்து பதில் கூறலாம். அல்லது உங்கள் அனுபவத்தை வைத்து மட்டுமே பதில் கண்டுபிடிக்கலாம். நாட்டின் மத்திய நிதியமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு பற்றிய செய்தியை நீங்கள் பதிவு செய்யவிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நிதியமைச்சர் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குச் செல்கிறீர்கள். அறை வாசலில் அன்றைய மாநாடு தொடர்பான தகவல்களைக் கொண்ட தாள்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பார்ப்பீர்களா? நீங்கள் வேலை செய்யும் நாளிதழ், செய்திக்காக எவரிடமிருந்தும் அன்பளிப்புகள், பரிசுகள், பணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. விதியாகவும் மாற்றியுள்ளது. அந்த நேரத்தில் உங்களது சக நண்பரும், தோழியுமான ஒருவர் போனில் பெருநிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் பேசுகிறார்.   தனக்கு ஒரு நகை ஒன்றை பரிசாக பெற்று வீட்டு முகவரியைக் கொடுத்து அனுப்பி வைக்க சொல்கிறார். இந்த செய்தியைக் கேட்கும் நீங்கள், இதைப் பற்

செய்திகளை எழுதுவதில் எந்தப்பக்கம் நிற்பது? - எது சரி, எது தவறு?

படம்
  கொள்கை ரீதியான சவால்கள் இதழியலைப் பொறுத்தவரை நவீன காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு ஊடகம் கடந்து காட்சி ஊடகங்கள் சக்தி பெற்றுள்ளன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தனி ஒரு ஊடகமாக செயல்படத் தொடங்கிவிட்ட காலமிது. எப்படி இயங்கினாலும் செய்திகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அதுவும் இதழியலில்தான் சேரும். இதழியலைப் பொறுத்தவரை நிருபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் பெரும் சவால். ஒரு விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடு ஒரு சூழலில் சரியாக இருக்கும். மற்றொரு சூழலில் தவறாக இருக்கும். அதை முட்டாள்தனம் என்று கூட பிறர் கருதலாம். செய்தி தொடர்பாக முடிவெடுக்கும்போது தொழில் சார்ந்த கொள்கைளை அடிப்படையாக கொள்ளவேண்டும். ஆசிரியர் குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் நாம் அதற்கு சரியான பதிலைக் கண்டுபிடித்தால்தான் முன்னே நகர முடியும். இரண்டு இடங்களில் நாம் என்ன முடிவெடுப்பது என தடுமாறி நின்றுவிடுகிறோம். ஒன்று. எது சரி அல்லது எது தவறு என குழம்புவது. அடுத்து நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு. ஒரே முடிவால் நாம் செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் சரியான ப

சமூகத்தில் பத்திரிகையாளரின் பணி என்ன?

படம்
  ஒரு சமூகத்தில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நேர்மையாக செயல்படும் நிருபர்கள், செய்தியாளர்கள் முக்கியம். அவர்கள் அரசியல், நிதி, வணிக, சமூக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை கவனமாக கண்காணித்து வருகிறார்கள். இவர்களின் முக்கியமான பணி, மோசடி முறைகேடுகளை வெளிப்படுத்துவதும், அதன் வழியாக மக்களுக்கு கல்வியை அளிப்பதும்தான். பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான பாலம் போன்றவர்கள். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் அரசின் கொள்கைகளை மக்களுக்கு விளக்குகிறார்கள். பின்னர், அதுபற்றிய அவர்களின் கருத்துகளை எதிர்வினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் சமூகத்தின் மதிப்பைக் காப்பாற்றுவதோடு, இதழியல் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் சமூகத்தில் நிருபர் / செய்தியாளர்களின் பணிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூக, பொருளாதார நாகரிகங்களை விளக்குவது அரசு, நீதிமன்றம், வணிகம் ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடிகள், வெற்றிகள், தோல்விகளை விமர்சிப்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் ஆதார மையங்களை வெளிப்படுத்துவது முறை

மனமுதிர்ச்சி அடைந்தவர்களால் குற்றங்களைச் செய்யமுடியாது!

படம்
  குறிப்பிட்ட இடைவெளியில் ஒருவர் பிறருக்கு தெரியாதபடி குற்றங்களை செய்து வரலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவர் வேறு வாழ்க்கையை வாழலாம். அவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கலாம். விடுமுறை என்றால் காரை எடுத்துக்கொண்டு முருகன் கோவிலுக்கு போகலாம். புனித தலங்களுக்கு செல்லலாம். ஆனால் தான் செய்யும் குற்றச்செயல்கள் என்பது பாதிக்கப்படாதபடி தனியாக வைத்துக்கொண்டு இயங்குபவர்களாக இருப்பார்கள். வெளியில் உள்ள பல்வேறு அழுத்தங்களுக்கு பணிந்துவிடாதபடி குற்றவாளிகளின் செயல்பாடு இருக்கும். இவர்கள் தங்களின் இரக்கமில்லாத இயல்பு, கொலை செய்யும் பண்பு ஆகியவற்றை மறைத்து தனிப்பட்ட ஒழுக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதற்கு மூளையில் அவர்களுக்கென தனி கட்டுப்பாடு இருக்கிறது என விசாரணையில் கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை 1966ஆம் ஆண்டு ரோட்டர் என்ற உளவியலாளர் லோகஸ் ஆஃப் கன்ட்ரோல் என்ற வார்த்தை மூலம் குறிப்பிட்டு வரையறை செய்தார். வெளி உலகத்தில் ஏற்படும் தாக்கத்திலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதில் குற்றவாளிகள் திறமையாக செயல்பட்டனர் என்பது உண்மை. குற்றவாளிகள், குற்றவாளிகள் அல்லாதோரை விட உள்மன ஆற்ற

வலியுடன் அறம் பேசும் உண்மை மனிதர்களின் கதை! அறம் - ஜெயமோகன்- வம்சி

படம்
  அறம் ஜெயமோகன் வம்சி பதிப்பகம்   நூலில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன. ஒவ்வொன்றுமே முக்கியமானவைதான்.   வாசிப்பவர்களுக்கு அவை சிறப்பான அனுபவங்களை தருகின்றன. நான் இங்கு குறிப்பிடவிருப்பது சில கதைகளை மட்டுமே. கோட்டி   சிறுகதை, இன்றைய நவீன அரசியலை கேலி செய்யும் காந்தியவாதியின்   கதையைக் கூறுகிறது. குறைகளை சொன்னாலும் கூட அனைத்து ஊர்களிலும் இப்படி தன் வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்த மனிதர்கள் உண்டு. இவர்கள் போன்றவர்களால்தான் ஊரிலுள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்வு காணப்படும். கதையில் வரும் பூமேடை அப்படிப்பட்டவர். அவர் நோட்டீஸ் ஒட்டும் இடமும், ஏன் ஒட்டுகிறீர்கள் என கேட்கும்போது சொல்லும் பதிலும் அட்டகாசமாக அவரது மனதை வெளிக்காட்டுகிறது.   பிறரது சந்தர்ப்பவாதங்களை அனைத்து இடங்களிலும் உரித்துக்காட்டும் மனிதராக முகத்தை உள்ளபடியே காட்டும் மனிதராக பூமேடை இருக்கிறார். இதனால் அவரை கோட்டி என ஊரே சற்று தள்ளி நின்று பார்க்கிறது. அவர் தலித் மக்களுக்கான தோட்டி வேலை பற்றி ஆவேசமாக பேசும் காட்சி எவ்வளவு ஆழமான பொருள் கொண்டது. பெண் பார்க்க செல்லும் வழக்குரைஞரின் நிலையில்தான் நாம் பூமேடையை பார்க்கிறோம

நீதிகளைப் பேசும் சீனச்சிறுகதைகள்! - குறிதவறிய அம்பு - வானதி

படம்
  குறி தவறிய அம்பு சீன சிறுகதைகள் தமிழ் மொழிபெயர்ப்பு வானதி சீன பழமொழிகளை ஒட்டிய ஏராளமான சிறுகதைகள் உள்ளன. இவை அனைத்துமே பொதுவாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நன்னெறிகளைக் கொண்டவை. குழந்தைகள் வாசிக்க ஏற்றவை என்பதையும் புரிந்துகொள்ளலாம்.  சகோதரர்களுக்கு உள்ள அபூர்வ சக்தியால் ஒருவரையொருவர் காப்பாற்ற முயலும் கதை அருமையானது. இரும்பினால் வெட்டப்பட முடியாத, கடலில் மூழ்கினாலும் சாகாத, நெருப்பும் எரிக்க முடியாத அபூர்வ சக்திகளை கொண்ட சகோதர ர்களின் கதை அவர்களின் பாசத்தை காட்டுவதோடு, சமயோசிதமாக யோசித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் புத்திசாலித்தனத்தையும் பேசுகிறது.  நீதியை கையில் எடுத்து தண்டிக்கும் பெண்ணின் கதை. இதன்படி, கணவனைக் கொன்றவரை இரண்டாவது கணவனாக ஏற்றுக்கொண்டு குழந்தை பெற்றாலும் முதல் கணவனின் இறப்புக்கு பழிவாங்கும்  வேகம் ஆச்சரியப்படுத்தியது. நீதிநோக்கில் பார்த்தால் இது சரியா என்று தோன்றும். ஆனால் நீதிக்கு உணர்ச்சிகளை விட சாட்சிகளே முக்கியம் என்பதால் இரண்டாவது கணவன் செய்தது கொலை என நிரூபிக்கப்பட முடியாது. எனவே சட்டத்தை தன் கையில் எடுத்து இரண்டாவது கணவனைக் கொல்கிறாள் மனைவி. கொலைக்கு கொலை

சைக்கோபாத் என்றால் என்ன? அதனை சோதித்து அறியும் சோதனைகள் இதோ!

படம்
                  சைக்கோபாத் என்றால் என்ன என மருத்துவர்கள் பலருக்குமே தெரியாது . எதனால் இப்படி கூறுகிறார்கள் எ்ன்பதை அவர்கள் அறிய மாட்டார்கள் . தொடக்கத்தில் பதற்றத்தின் உடைப்பு என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள் . உண்மையில் ஒருவரை சைக்கோபாத் என்று கூறுவதற்கு எந்த சோதனைகளும் இல்லை என்று தெரியவந்தது . இதனை ஆளுமை பிறழ்வு , சமூக ஆளுமை பிறழ்வு என்று கூறலாம் ஆனால் இதனை முடிவாக கூற முடியாது என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் . டையக்னாஸ்டிக் அண்ட் ஸ்டாடிஸ்டிகல் மானுவல் ஆப் மென்டல் டிஸார்ட ர் எனும் நூல் உள்ளது . இதைத்தான் சுருக்கமாக டிஎஎஸ்எம் என மருத்துவ வட்டாரத்தில் குறிப்பிடுகின்றனர் . இதில் உளவியல் சார்ந்த ஏராளமான குறைபாடுகளை வகைப்படுத்தியுள்ளனர் . அனோரெக்சியா , ஸிஸோபெரேனியா ஆகிய நோய்களைக் குறிப்பிட்டாலும் சைக்கோபதிக்கு இதில் இடமில்லை . ஆன்டிசோஷியல் பர்சனாலிட்டி டிஸார்டர் என்பதை வேண்டுமானால் சில விதிகளை வைத்து வரையறுக்கலாம் . சமூக விதிகளுக்கு உட்பட மறுப்பது , சுயநலம் , எரிச்சல் அடைவது , ஆக்ரோஷ கோபம் கொள்வது , பிறரின் உணர்ச்சிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது என சில வரையறைகளை கூற

திருமணம் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்! புத்தக அறிமுகம்

படம்
                புத்தகம் புதுசு ! பியாண்ட் பேட் கிறிஸ்பே ஹாசெட் ரூ .699 அறம் என்பது நமது வாழ்க்கையில் எந்த விதமான பங்கை வகிக்கிறது , நாம் பேசுவதில் செயல்படுவதில் ஆற்றும் பங்கை இந்த நூல் விவரிக்கிறது . அலுவலக வேலை , தனிப்பட்ட வாழ்க்கை , சமூக வலைத்தளங்களில் எழுதுகிற பதிவுகள் என அனைத்திலும் அறத்தின் பங்கு உண்டு . இது ஒரு வகையில் கண்ணாடி போலத்தான் . நாம் பார்க்கிறதைவிட நம்மை நம்முடைய கருத்துகள் பிறருக்கு அடையாளம் காட்டும் நூலைப் படித்தால் நீங்கள் அதனை உணரலாம் .                  ஃபோர்த் லயன் வேணு மாதவ் , கோவிந்த் ஶ்ரீநாத் ஆலெப் ப .312 ரூ .699 எழுத்தாளர் கோபால கிருஷ்ண காந்தியின் அருமை பெருமைகளை பல்வேறு கட்டுரையாளர்கள் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள் . மொத்தம் 26 கட்டுரைகள் உள்ளன . இதன்மூலம் அவரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளமுடியும் . ஏஜ் ஆப் ஆங்க்சைட்டி அம்ரிதா திரிபாதி , காம்னா சிப்பர் சைமன் ஸ்ஹஸ்டர் ரூ 139 கொரோனா காலத்தில் அனைவருக்குள்ளும் வேலை , குடும்பம் , எதிர்கால