இடுகைகள்

ஊசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊசி மூலம் புதிய உறவு அமைப்போம்!

 நல்ல சேதி ஊசி மூலம் உறவுகளை இணைப்போம்! நம் அன்புக்கு உரியவர்கள், தையல்காரர்களாக, தச்சு வேலை செய்பவர்களாக, மண்பாண்டங்களில் ஏதேனும் பொருட்களை சுயமாக உருவாக்குபவர்களாக இருக்கலாம். இப்படியானவர்கள் பலரும் நோய் காரணமாக, வயது மூப்பு காரணமாக தாங்கள் பொழுதுபோக்காக அல்லது தொழிலாக செய்து வந்த வேலைகளை செய்யமுடியாமல் போவதுண்டு. தீவிரமாக இயங்குபவர்கள் திடீரென தங்கள் செயல்பாட்டை முடக்கிக்கொண்டு சக்கர நாற்காலியில் வலம் வந்தால்... அல்லது மரணமடைந்து விட்டால் அவர்களுடைய குடு்ம்பத்தினருக்கு எப்படியிருக்கும்? அதுபோன்ற அதிர்ச்சியைக் குறைக்க லூஸ் எண்ட்ஸ் என்ற தன்னார்வ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தொண்டூழிய நிறுவனம், துணிகளை தைப்பவர்கள் யாராவது முடிக்காமல் விட்ட துணிகள் பற்றி தகவல் கொடுத்தால், அவற்றை வாங்கி தைப்பவர்களிடம் கொடுத்து அதை நிறைவு செய்து வழங்குகிறது. இதில், நிறைவு செய்யாத துணிகள், அதை நிறைவு செய்து கொடுப்பவர்கள் என யாரும் யாருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம். இதில் இணைபவர்கள் அனைவரும் மறைந்த தம் அன்புக்குரியவர்களின் நினைவாக, துணிகளைத் தைக்கிறார்கள். தைக்கும் கோரிக்கையை...

தனது வாழ்க்கையை அழித்த தொழிலதிபரை பழிவாங்கும் மருத்துவரின் கதை! - டாக்டர் ப்ரீஸனர் 2019

படம்
  டாக்டர் ப்ரீஸனர் 2019 தென்கொரிய டிவி தொடர் நா யீ ஜே என்ற மருத்துவர், தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எமர்ஜென்சி பிரிவு மருத்துவராக இருந்து காப்பாற்றுகிறார். இதன் விளைவாக, அவரது வேலை பறிபோகிறது. மருத்துவர் உரிமம் தடை செய்யப்பட சிறைக்குச் செல்கிறார்.  அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அவரது அம்மா, கைவிடப்பட்ட நிலையில் இறக்கிறார். மருத்துவர் அரசியலால் பாதிக்கப்பட, மெல்ல அவரும் செல்வாக்கான ஆட்களின் உதவியைப் பெற்று தனது வாழ்க்கையை அழித்தவர்களை பழிவாங்கத் தொடங்க ஆட்டம் ஆரம்பம். அதுதான் டிவி தொடரின் பதினாறு எபிசோடுகள்.  தொடர் புனைவு என்றாலும் தென்கொரியா முழுக்கவே சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால்தான் இருக்கிறது என காட்டுகிறார்கள். இது எந்தளவு நம்பகத்தன்மையானது என்று தெரியவில்லை.  எமர்ஜென்சி ஸ்பெஷலிஸ்டான நா யீ ஜே, தனது வாழ்க்கை அழிய காரணமான லீ ஜே ஜூன், வெஸ்டர்ன் சியோல் சிறை மருத்துவர் ஜூன் மின் சிக் ஆகியோரை எப்படி பழிவாங்கி ஓட ஓட விரட்டுகிறார் என்பதே கதை.  தொடரில் நீதி நேர்மை என்பதெல்லாம் நா யீ ஜே, எமர்ஜென்சி மருத்துவராக இருக்கும் வரைதான். மாற்றுத்திறனாளிய...

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை சாத்தியமா?-

படம்
              இவற்றின் முக்கியமான பணி . எதிர்ப்பாலினத்தைக் கண்டுபிடித்து உறவு கொள்வதுதான் . அதற்கு ஏற்ப தன்னை தயாராக வைத்திருக்கிறது . பெண்ணின் உடல் மாத த்திற்கு ஒரு கருமுட்டையை தயாரிக்கிறது என்றால் , ஆணின் உடலில் இதற்கு ஏற்ப நொடிக்கு 1500 விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன . இதில் உடலுறவின்போது எது வெல்கிறதோ அது கருமுட்டையை அடைகிறது . பிற விந்தணுக்கள் கருமுட்டையில் உள்ள அமிலத்தில் அழிகின்றன . கருத்தடைக்கு ஆணுறைகளைப் பயன்படுத்தினால் கூட அவற்றில் 15 சதவீதம் சரியாக வேலை செய்வது இல்லை . இதன் அர்த்தம் , கரு உண்டாகிவிடுகிறது என்பதுதான் . கருத்தடை என்று வரும்போது அதில் பெண்களுக்கான பொருட்களே அதிகம் , மாத்திரை , கருவிகள் , க்ரீம்கள் என ஏராளம் உ்ண்டு . பெண்களால் கருவை தடுக்க முடியும் என்ற சொன்னால் ஆண்களால் முடியாதா ? அவர்களுக்கும் கருவை தடுக்கும் மாத்திரைகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது . 1960 இல் பெண்களின் ஹார்மோன் கருத்தடை மாத்திரை உருவாக்கப்பட்டது . அதன் பெயர் ஈனோவிட் . இந்த மாத்திரை உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது...