இடுகைகள்

பெர்னி சாண்டர்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயநலம் கொண்ட பணக்கார குழுக்களால் ஏற்படும் பேராபத்து!

படம்
அமெரிக்கா, முன்பு போல வலிமையான நாடு கிடையாது. அங்கு 85 மில்லியன் மக்களுக்கு மருத்துவ காப்பீடு கிடையாது. அரசு பள்ளிகள் பலவீனமாகி வருகின்றன. அரசு தொழிலாளர் உரிமை காக்கும் அமைப்பு மூடப்பட்டு விட்டது. இனவெறி, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போலி வதந்திகள் உருவாக்கப்பட்டு பரவி வருகின்றன. முதலாளிகளுக்கு ஆதரவான அமெரிக்க அதிபர், பணக்காரர்களுக்கு சரக்கு வாகன ஓட்டுநர், செவிலியர் ஆகியோரை விட குறைந்த வரியை விதிக்கிறார். இதற்கு காரணம் என்ன, சர்வாதிகாரம் எப்படி பணக்கார தொழிலதிபர்களால் நடைமுறைப்படுத்தப் படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் விளக்கி எழுதியிருக்கிறார். வலதுசாரி இன மதவாதம் வளருவது பற்றி கவலை கொள்கிறீர்களா? இந்த நூல் உங்களுக்காகவே!

இந்தியாவில் அதிகரிக்கும் பெரும் பணக்காரர்கள்... தீவிர வறுமையில் அழுத்தப்படும் 95 சதவீத மக்கள்!

படம்
  பெர்னி சாண்டர்ஸ் பார்வையில் இந்தியா... இந்தியா, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. மொத்தம் 1.46 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு மொத்தம் 200 பெரும் பணக்காரர்கள்.இவர்கள், 2025ஆம் ஆண்டில் 941 பில்லியன் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  இந்தியாவில் 75 மில்லியன் மக்கள் தீவிரமான வறுமையில் வாடி வருகிறார்கள். இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள கௌதம் அதானி, பிரதமருக்கு நெருக்கமானவர்.இவர் நிலக்கரி, அடிப்படை கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரதமரின் நெருக்கமான நட்பை பயன்படுத்தி பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட அரசு ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறார். கூடுதலாக பெரும் வரி விலக்கு, தனது நிலக்கரி நிறுவனத்திற்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு, தொழிலாளர் சங்கங்களை அழுத்தி செயலிழக்கச் செய்வது, ஆதரவான நீதித்துறையினர் மூலம் விசாரணைகளை தாமதப்படுத்தி நிறுவனங்களை காப்பாற்றுதல் என நிறைய விஷயங்களை சாதித்து வருகிறார்.  பல கோடி மக்கள் அடிப்படையான சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்தான உணவு, வேலை கிடைக்காமல் வறுமையில் தடுமாறி வருகிறார்கள்.  இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுக...