இடுகைகள்

தீமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு

படம்
  நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு மிஸ்டர் ஹெகல் அண்ட் மிஸ்டர் ஹைட் லூயிஸ் ஸ்டீவன்சன் நாவல்  மொழிபெயர்ப்பு - ரகுநாதன் ஒருவரின் மனதிற்குள் நன்மை, தீமை என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை தனியாக பிரித்து அதற்கென உருவம் கொடுத்தால் இரண்டு இயல்புமே சந்தோஷமாக இருக்குமே என மருத்துவர் யோசிக்கிறார். இதற்காக அவர் செய்த ஆய்வு விபரீதமான திசையில் செல்கிறது. அதன் விளைவுகள் என்னவென்பதே கதை.  ஒருவரின் மனதில் இருக்கும நன்மை, தீமைக்கெதிரான போர் நிற்காத ஒன்று. காலம்தோறும் நடந்துகொண்டு இருக்கிற ஒன்று. இதை ஒருவர் தனித்தனியே பிரித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அது எப்படியொரு மோசமான தீர்வை நோக்கிச் செல்கிறது என்பதே கதை.  வக்கீல் அட்வன்சன், அவரது நண்பர் என்பீல்ட், டாக்டர் ஜெகில், டாக்டர் லான்சன், ஜெகிலின் வேலைக்காரன் பூல் ஆகியோர்தான் நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள். ஒரு மனிதனின் மனதிலுள்ள நன்மை, தீமை ஆகிய இரு இயல்புகளுக்கான போராட்டம் அவனை எப்படியான நெருக்கடியில் தள்ளுகிறது என்பதே கதை. இதை கடிதம் வழியாக டாக்டர் ஜெகில் சொல்லும்போது யாருக்கும் மயிர்க்கூச்செரியும். அந்தளவு நம்ப முடியாத ஒரு க

பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி தப்பிக்கும் சமூக மனநிலை - மெல்வின் லெர்னர்

படம்
  மனிதர்கள் தங்களுடைய பாதுகாப்பை அதிகம் விரும்புபவர்கள். அவர்களுடைய சொகுசு குறையாமல் இருக்கவேண்டுமென நினைப்பவர்கள். இதன் எதிரொலியாக, அவர்கள் எதை நம்புகிறார்கள். எதை மறுக்கிறார்கள் என்று பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். ஒருவருக்கு தனது வாழ்க்கை மீது கட்டுப்பாடு இருந்தாலே, மனதில் நிம்மதியை உணர்வார். கெட்டவர்களுக்குச் செய்த தவறான செயல்களின் அடிப்படையில், தண்டனை கிடைக்கும். நல்லவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என பலரும் நம்புகிறார்கள். இப்படி நடக்கிறதோ இல்லையோ நம்புவதன் மூலம் தன்னைச் சுற்றி நடைபெறும் செயல்பாடுகளின் மேல் கட்டுப்பாடு உள்ளதாக ஒருவர் நம்புகிறார்.  இதை 'ஜஸ்ட் வேர்ல்ட்' எனும் கருத்தாக உளவியலாளர் மெல்வின் லெர்னர் வரையறுக்கிறார். மக்கள், தங்கள் வாழ்க்கையை கட்டுப்பாட்டுடன் வாழ்வதாக நினைத்து, மக்களுக்கு அவர்களின் தகுதியைப் பொறுத்தே அனைத்தும் கிடைக்கும் எனும் இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். மெல்வின், மக்கள் இப்படி தவறான நம்பிக்கையை உறுதியாக நம்புவதால், உண்மையான தகவல்களை புறக்கணிக்கிறார்கள் என்று கூறினார். ஒருவர் தனது சுயநலனுக்காக உண்மையை புறக்கணிப்பது என்று கூறலாம்.  ஒருவர

4 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்க உலகிற்கு வரும் வாள் போராளி!

படம்
  கிரேட் மேக் ரிடர்ன் 4000 இயர்ஸ் எகோ காமிக்ஸ் ரீட்மங்காபேட்.காம்  தொன்மைக்கால வீரர்களின் தலைவன் லூகாஸ் ட்ராமன். இவர் தலைமையில் ஐந்து வீரர்கள் இணைந்து வேலை செய்து தீயசக்திகளை அழிக்க முயல்கிறார்கள். ஒரு சண்டையில், டெமிகாடின் தலைவரான லார்ட் மூலம் லூகாஸ் சிறைபிடிக்கப்படுகிறார். 4 ஆயிரம் ஆண்டுகள் சிறைவாசம் கழித்து விடுவிக்கப்படுகிறார். அவரது ஆன்மா, பிளாக் குடும்ப மூன்றாவது பிள்ளையான ஃபிரே பிளாக்கின் உடலில் புகுகிறது.  ஃபிரே பிளாக், மந்திரவாதம் கற்க முயன்று அதில் தோற்று, பள்ளி நண்பர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். அவனது குடும்பத்தாரால் ஊதாசீனம் செய்யப்படுகிறான். அவன் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தபிறகே, லூகாஸின் ஆன்மா அவனது உடலில் புகுகிறது. அதற்குப் பிறகு நடைபெறும் பரபர சம்பவங்கள்தான் கதை.  இந்த காமிக்ஸ் கதையில் சுவாரசியம் என்னவென்றால், ஃபிரே பிளாக் உடலில் லூகாஸ் புகுந்தபிறகு செய்யும் நகைச்சுவைதான். பள்ளி செல்லும் சம்பவங்களில் இந்த நகைச்சுவை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக, ஃபிரே பிளாக் தனது பெண் ஆசிரியை மீது காதல் கொள்ளும் சம்பவம். ஃபிரே பிளாக், வகுப்பில் உள்ள இசபெல்லா என்ற நன

நடைபெறும் அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது!

படம்
  கிரேக்க தத்துவவாதியான எபிக்டெட்டஸ், மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களால் பாதிக்கப்படுவதில்லை. அதைபற்றிய பார்வைகளால் கோணங்களால்தான் துயரத்தை சந்திக்க நேருகிறது என்று கூறினார். அதே சிந்தனையை அப்படியே உளவியலுக்கு மாற்றி கூறியவர் உளவியலாளர் ஆல்பெர்ட் எல்லிஸ். இவர். 1955ஆம்ஆண்டு ரெப்ட் என்ற சிகிச்சையை தான் நம்பிய கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார். ஒரு மனிதர் சந்திக்கும அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது. ஆனால், மனிதர்கள் அதை எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அதன்படி அனுபவம் அமைகிறது.  நாற்பது, ஐம்பதுகளில் எல்லிஸ் தனது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆய்வு செய்தார். அவர்கள், தங்களுக்கு இருக்கும் பிரச்னை ஒன்று தீர்ந்தால் இன்னொன்றை அதே இடத்திற்கு கொண்டு வந்து வருந்திக்கொண்டு இருந்தனர். எனவே,இதற்கு சிகிச்சை என்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பதுதான் என எல்லிஸ் முடிவு செய்தார். இதற்கு ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம். ஒருவரை திடீரென வேலையில் இருந்து நீக்குகிறார்கள். இதற்கு அலுவலக குழு அரசியல், ஒருபக்க சார்ப

இருத்தலியல் உளவியலின் தந்தை ரோலோ மே!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்ட்டின் ஹெய்டெகர், ஃபிரடெரிக் நீட்சே, சோரன் கியர்கெகார்ட் ஆகியோர் அன்றை சமூக நிலைக்கு எதிராக புதிய கருத்துகளை கூறினர். இதன் வழியாக மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வழி கிடைக்கும் என நம்பிக்கை உருவாகியது. இதை இருத்தலியம் என்று கூறலாம். தன்னம்பிக்கை, தனிப்பட்ட பொறுப்பு, அனுபவங்களை எப்படி புரிந்துகொள்வது, வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கேள்வி ஆகியவை இருத்தலிய கொள்கையில் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டன. 1950ஆம் ஆண்டு, உளவியலாளர் ரோலோ மே  தி மீனிங் ஆஃப் ஆன்க்சைட்டி என்ற நூலை எழுதினார். அதில், மனிதர்களை மையப்படுத்திய உளவியல் முறையை விளக்கியிருந்தார். இதன் காரணமாக ரோலோ மே இருத்தலியல் உளவியலின் தந்தை என பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.  வாழ்க்கை என்பது முழுக்க அனுபவங்களால் நிறைந்தது. அதில் வலி, வேதனை என்பது கூட இயல்பான அனுபவங்களின் பகுதிதான். பல்வேறு அனுபவங்களை தேடுவதன் வழியாக ஒருவர். தன்னை சமநிலையுடன் வைத்துக்கொள்ள முடியும். பழக்கமான சூழலில், இலகுமான அனுபவங்களை எதிர்கொள்வதன் மூலம் உடல், மனம் என இரண்டையும் ஒருவர் சமநிலையில் வைத்துக்கொள்ளமுடியும். இப்படி பழக்கப்