இடுகைகள்

தமிழ்வலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாக்கியப்பிழையை திருத்திக்கொள்வது எப்படி?-தமிழ்வலம்

படம்
தமிழ்வலம்  - இளங்கோ சென்றவாரம் கேட்ட கேள்வி : அது ஓர் அழகிய கிராமம் ராமன் என்றோர் மானுடன் ’ இந்த இரண்டு வாக்கியங்களில் எதுசரி எதுதவறு ?’ என்று கேட்டிருந்தோம் . உண்மையில் இந்த வாக்கியங்களின் கருத்திலும் எந்தப்பிழையும் இல்லை . ஆனால் , எழுத்தில் பிழையுள்ளது . தமிழில் எந்த இடத்தில் ’ ஒரு ’ என்றசொல்லைப் பயன்படுத்த வேண்டும் . எந்த இடத்தில் ‘ ஓர் ’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு விதிமுறை உள்ளது . பொதுவாக , உயிர் எழுத்துகளில் தொடங்கும் ஒருமைச்சொற்கள் வரும்போது ’ ஓர் ’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள் . ஓர் அரசன் , ஓர் ஆடு , ஓர் இலை போன்றவை உதாரணங்கள் . உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் ஒருமைச் சொற்களுக்கு ’ ஒரு ’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள் . எ . கா : ஒருநாடு , ஒருவிலங்கு . ’ அது ஓர் அழகியகிராமம் ‘ என்பதுசரி . அதுபோலவே ’ ராமன்என்று ஒரு மானுடன் ’ என்பதே சரி .