இடுகைகள்

இந்தியா- பழங்குடிகளின் எழுச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடி மக்களின் அரசியல் எழுச்சி!

படம்
பழங்குடிகளின் எழுச்சி ! மகாராஷ்டிரா பழங்குடிகளின் எண்ணிக்கை 9 சதவிகிதம் .  சர்வஹாரா ஜன் அந்தோலன் கிராம சபைகளை கட்டுப்படுத்தி வளர்ச்சிப்பணிக்கான அரசின் நில ஆக்கிரமிப்பை தடுக்கிறது . மேற்குவங்கம் பழங்குடிகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் . இங்கு ஆதிக்கம் செலுத்துவது பாரத் ஜகத் மஜ்ஹி பர்கானா மஹால் எனும் அரசியல் இயக்கம் . திரிணாமூல் காங்கிரஸை அதிதீவிரமாக எதிர்க்கும் இவ்வமைப்பு 60 சந்தாலி மொழிப்   பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறது . சத்தீஸ்கர் இந்தியாவிலேயே உச்சமாக 31% பழங்குடிகள் வாழும் மாநிலம் இது . பதல்கடி பழங்குடிகள் சூரஜ்பூர் மற்றும் ஜஸ்பூரில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் . அண்மையில் ஜஸ்பூர் அரசு அதிகாரிகளையே கலியா கிராமத்தில் நுழையாமல் தடுக்கும் அளவு துணிச்சலானவர்கள் . ஜார்க்கண்ட் 26 சதவிகித பழங்குடிகள் வாழும் இங்கு பதல்கடி ஆதிக்கம் அதிகம் . 3 மாவட்டங்களில் 100 கிராமங்களில் அரசின் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக புரட்சிக்குரல்கள் எழுந்துள்ளன . மத்தியப்பிரதேசம் ஜெய் ஆதிவாசி யுவசக்தி என்ற அரசியல் இயக்கம் தீவிர இயக்கத்திலுள்ளது . இங்குள்ள