இடுகைகள்

கே.வி.சைலஜா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்துபோன அப்பாவை நினைவுகூரும் நான்கு மகன்களின் நினைவுக்குறிப்புகள்! - இறுதி யாத்திரை - எம்.டி. வாசுதேவன் நாயர்

படம்
                  இறுதியாத்திரை எம் . டி . வாசுதேவன் நாயர் கேரளத்தில் சிறிய கிராமத்தில் வேலை செய்து வரும் ஒருவர் , திருமணம் முடிக்கிறார் . தனது வியாபாரம் சார்ந்து இலங்கை வரை செல்கிறார் . அங்கும் சென்று தொழில் செய்து முன்னேறுகிறார் . அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறக்கின்றனர் . அதோடு அவருக்கு இலங்கையிலும் மனைவி , மகள் உண்டு . இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுகிறார் . அவரது பிள்ளைகளுக்கு இறப்புச்செய்தி சொல்லப்பட்டு விட நால்வரும் அப்பா பற்றிய நினைவுகளுடன் கிராமத்திற்கு வந்து சேர்கின்றனர் . இதில் அப்பு , குட்டேட்டன் , ராஜேட்டன் , உண்ணி ஆகியோர் தங்கள் தந்தை பற்றிய நினைவுகூர்தலே 130 பக்க நாவல் . தந்தை பற்றிய தகவல்கள் அனைத்துமே மகன்களின் நினைவுப்பூர்வமாகவே சொல்லப்படுகிறது . எதுவுமே நேரடியாக கூறப்படுவதில்லை என்பதுதான் நாவலின் முக்கியமான சிறப்பம்சம் . பல்வேறு நினைவுக்குறிப்புகளை நினைத்தால் அவர்களது தந்தை பற்றிய சித்திரம் உருவாகிறது . அம்மா இறந்துபோனதற்கு அவர் ஏன் அழவில்லை . மகனுக்கு இலங்கையில் ஏன் வேலை வாங்கித்தரவில்லை , ஒரு ரூபாய் இருந்தால் பத்து ரூபாய் போல பிறருக