இடுகைகள்

ஷிரியா சரண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாலை விபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன்!

படம்
      எலா செப்பனு - தருண், ஷிரியா       எலா செப்பனு தருண் , ஷிரியா சரண் ஜெர்மனி , இந்தியாவில் ஆந்திரம் என இரு நாடுகளில் பயணிக்கிற கதை . தற்செயலாக நடைபெறும் விபத்தால் நாயகி மணம் செய்துகொள்ளப்போகும் அவளது காதலன் இறந்துபோக , நாயகன் காதலனின் இழப்பை எப்படி ஈடுகட்டுகிறான் என்பதே கதை . இறந்துபோனவர் நடத்தும் தொழில் , குடும்பம் , சமூகம் என அனைத்து இடங்களிலும் தன்னை நாயகன் பொருத்திக்கொண்டு சாப விமோசனம் தேடுகிறார் . இந்த நேரத்தில் தன்னால் வாழ்க்கை இழந்த நாயகியையும் சந்தித்து , அடையாளம் மறைத்து அவரைத் தேற்றுகிறார் . தொழிலை மேலே மீட்டு கொண்டுவருகிறார் . இந்த நேரத்தில் அவர் மெல்ல நாயகியை காதலிக்கத் தொடங்குகிறார் . நாயகியும் அப்படித்தான் . இவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா , நாயகன் பற்றிய உண்மை நாயகிக்கு தெரிந்ததா , காவல்துறை அதிகாரி நாயகனின் தற்செயல் விபத்துக்காக அவரை கைது செய்தாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி . படத்தில் ஷிரியா சரணுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது . ஆனால் அவரோ எங்கோ பராக்கு பார்ப்பது போல நிற்கிறார் . ஒரு நிறுவனத்தை தனது காதலனோடு சேர்ந்து நடத்தியவர