இடுகைகள்

கைது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரஷ்யாவின் கிரெம்ளினுக்கு பணிந்து மக்களைக் காட்டிக்கொடுக்கும் டெலிகிராம் ஆப்!

படம்
  டெலிகிராம் ஆப் - ரஷ்யா அரசின் உறவு டெலிகிராமை வளைக்கும் ரஷ்யா ரஷ்யாவுக்கு பணிந்துபோகும் டெலிகிராம் நிறுவனம்! டெலிகிராம் என்றில்லை. எந்த ஒரு டெக் நிறுவனமும் குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள அரசுகளின் விருப்பத்திற்கு, விதிகளுக்கு பணிய வில்லை என்றால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அதை தடை செய்வார்கள். வருமான இழப்பை டெக் நிறுவனத்தை நிலைகுலைய வைக்கும். இந்த நிலையில் நிறுவனம் அரசுடன் பரஸ்பர சகாய ஒப்பந்தத்திற்கு வந்தே ஆக வேண்டும். டெலிகிராம் கூட பரவாயில்லை. நெருக்கடி கொடுத்து அதை கீழே வீழ்த்தினார்கள். ஆனால், மெட்டாவின் குறுஞ்செய்தி, சமூக வலைத்தள நிறுவனங்கள் உலகமெங்கும் சர்வாதிகார அரசுகளிடம் மண்டியிட்டு காசு வாங்கிக்கொண்டு இயங்கி வருகிறார்கள். மெட்டா அதிக பயனர்களைக் கொண்டுள்ள நாடுகளில் கலவரம், போராட்டம், இனவெறி என அமைதி இல்லாத நிலையே நிலவுகிறது. இதை எந்த ஊடகங்களும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.   ரஷ்யாவில் உள்ள அரசியல் சமநிலை குலைவைப் பற்றிய செய்திகளை நாளிதழில் படித்திருப்பீர்கள். டிவி சேனல்களில் செய்தித்தொகுப்புகளையும் பார்த்திருப்பீர்கள். அங்குள்ள தனியார் கூ லிப்படை ராணுவமே, அரசின் நகரங்க

இந்தியர்களின் மரபணுக்களில் உள்ள ஜனநாயகம்!

படம்
  பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிர்ப்பு நமது மரபணுக்களில் ஜனநாயகம் உள்ளதா? இந்திய பிரதமர், அண்மையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். அங்கு சென்று உரையாற்றியதில் அவர் ஒரு விஷயத்தை மட்டும் தவறவிட்டுவிட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மனித உரிமைகள் இந்தியாவில் எப்படி நசுக்கப்பட்டன என்பதைக் கூறவில்லை. அமெரிக்க அதிபர்   மனித உரிமை பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம். வெள்ளை மாளிகையில் மோடியின் வருகையொட்டி பூக்களின் அலங்காரம் செய்யப்ப்பட்டிருந்தது. மேசையில் சைவ உணவு பரிமாறப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி பங்கேற்ற முதல் ஊடக சந்திப்பில் அமெரிக்க நிருபர் மனித உரிமைகள் பற்றி கேள்வியைக் கேட்டார். உடனே   மோடி மறைமுகமாக ‘’ஜனநாயகம் எங்கள் மரபணுக்களில் உள்ளது. அதுதான் எங்கள் ஆன்மா. எங்கள் ரத்த நாளங்களில்   ஓடுகிறது’’ என்று உரையாற்றினார். பிரதமர் கூறியதில் சற்றும் உண்மை இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பசுக்களை வளர்க்கும் முஸ்லீம்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கண்காணிக்கப்பட்டு தொடர்ச்சியாக தாக்கப்பட்டனர். அல்லது திட்டமிட்டு மதவாத கும்பல்களால் கொல்லப்பட்டனர். பிரதமர் மோட

பிரேசிலில் பெருகும் வறுமையை, வெறுப்பை போக்குவாரா புதிய அதிபர் லுலா!

படம்
  பிரேசில் நாட்டில் ஏற்பட்ட புதிய மாற்றம்!   இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிபராக தேர்வாகியிருக்கிறார். இதற்கு முன்னர் இருமுறை தொடர்ந்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்திருக்கிறார். தனது 77 வயதில் மீண்டும் அதிபராக லுலா தேர்ந்தெடுக்கப்பட என்ன காரணம் இருக்கப்பட முடியும்? என்று பார்ப்போம். தேர்தலில் வெற்றி பெற்ற சதவீதம் பெரிதாக உள்ளது என்று சொல்ல முடியாது. வலதுசாரி பிரதமரான பொல்சனாரோ 49.1 சதவீதம் பெற்றுள்ளார் எனில் லுலா பெற்றுள்ள வாக்குகளின் அளவு 50.9% ஆகும். லுலாவும் பொல்சனாரோவும் கொள்கை, செயல்பாடு அளவிலும் மிகவும் வேறுபட்டவர்கள். பொல்சனாரோ எப்படிப்பட்டவர் என்ன அமேசான் காடுகளை அழியவிட்டதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இவரது ஆட்சிக்காலத்தில் பழங்குடிகளின் வாழிடங்கள் வேகமாக அழிக்கப்பட்டன. நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளே உருவாக்கப்பட்டன.  77 வயதான லுலா தொழிற்சங்க தலைவராக இருந்தவர். இவர் நாட்டின் அதிபராக 2002, 2010ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். லுலா அதிபராக இருந்தபோது   பல லட்சம் மக்களை வறுமை

ஜென் இசட் இளைஞர்களை மத்திய அரசு பிரச்னைக்குரியவர்களாக கருதுகிறது! - திஷா ரவி, சூழல் போராட்டக்காரர்

படம்
                ஐந்து மாதங்களுக்கு முன்னர் சூழலுக்காக போராடும் இளைஞர்களை மத்திய அரசு இளம்பெண் ஒருவரை கைது செய்து மிரட்டியது . அவர்தான் பெஙுகளூருவைச் சேர்ந்த திஷா ரவி . விவசாயிகள் போராட்டத்திற்கான இணைய டூல் கிட்டை இவரே வெளியிட்டார் என வழக்கு பதிவு செய்தனர் . டீசல் செலவையும் கூட பொருட்படுத்தால் டெல்லியிலிருந்து போலீசார் பெங்களூருவுக்கு சென்று சூழல் பயங்கரவாதியான திஷா ரவியை வலை விரித்து பிடித்தனர் . பிறகு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தேடிக்கொண்டிருக்கிற நிலையில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது . இந்தியாவின் புதிய தேச துரோகி , பயங்கரவாதி என ஊடகங்கள் அலறிய திஷாவுக்கு வயது 22 தான் . அவரிடம் பேசினோம் . கடந்த பிப்ரவரியில் உங்களை கைது செய்தார்கள் . இப்போதும் உங்களுக்கு வெளிப்படையாக அரசுக்கு எதிராக பேச பயமாக இருக்கிறதா ? தவறுகள் நடந்தால் நான் அதைப்பற்றி வெளிப்படையாக பேசுவேன் . நான் உள்ளுக்குள் பின்விளைவுகளை எண்ணி பயந்தாலும் எப்போதும் மனதுக்கு சரி என்று படுவதை பேசுவேன் . எனது வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே எளிதாக கிடைத்துவிடவில்லை . எனவே வெளிப்படையாக பேசும் தன்மைக்கு

எது எப்படியோ அப்படியே.... நடந்தது - மா ஆனந்த் ஷீலா -

படம்
         மா ஷீலா   இந்தியாவிலுள்ள புனேவில் பிறந்த ரஜ்னீஷ் எனும் ஓஷோவை யாரும் மறக்க முடியாது . அவர் 1981 இல் அமெரிக்காவின் ஒரேகான் நகருக்கு செல்ல விரும்பினார் . இதற்கு பின்னணியில் அவரது உதவியாளர் மா ஆனந்த் ஷீலா இருந்தார் . இவர் அங்கு ரஜ்னீஷ்புரத்தை உருவாக்கினார் . பின்னாளில் பல்வேறு புகார்கள் குவிய , ஷீலாவுக்கு சிறைதண்டனை கிடைத்தது . அதிலிருந்து மீண்டு தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார் . இவரைப் பற்றி நெட்பிளிக்சில் சர்ச்சிங் ஷீலா என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது . இதற்காக 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறார் ஷீலா . அவரிடம் பேசினோம் . இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வரும் நோக்கம் என்ன ? இறைவனின் விருப்பம் என்று கூறலாம் . இதற்கு முன்னரும் நான் நிறைய முறை இந்தியாவுக்கு வர விரு்ம்பினேன் . குஜராத் அல்லது பரோடாவுக்கு செல்ல மட்டும் விரும்பவில்லை . எனது வேருக்கு நான் செல்ல விரும்பினேன் . இதை சொல்வது வேடிக்கையாக இருக்கலாம் . இதனை நீங்கள் ஆவணப்படத்தில் பார்ப்பீர்கள் . இங்கு சந்தித்த மனிதர்கள் சுவிட்சர்லாந்தில் சந்தித்த மனிதர்களை விட வேறுபட்

குடியுரிமை சட்டத்தை விரிவு செய்யும் முதல் மாநிலம் நாங்கள்தான்!

படம்
நேர்காணல் உத்தரப்பிரதேச சிறுகுறுதொழில்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் அரசின் சிஏஏ சட்ட திருத்தத்தை அமல் செய்யவுள்ளது. சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?  இச்சட்டம் இங்கு அடிப்படை அளவில் அமலாக உள்ளது. பின்னர் முழுமையாக பின்பற்றப்படும். மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதிகள் தேவை. நாம் காற்றில் சட்டத்ததை அமல் செய்ய முடியாது. மாவட்ட நீதிபதிகள், மாவட்டங்களிலுள்ள சட்டப்பூர்வமற்ற முறையில் தங்கியுள்ள அகதிகளை அடையாளம்  காணச்சொல்லி இருக்கிறார்களே? அப்படி எந்த அரசு ஆணையும் எங்களுக்கு வரவில்லையே. இதுபோன்ற ஏராளமான பொய் தகவல்களை மக்களுக்கு சிலர் அனுப்புகிறார்கள். இதனை தீர்க்கும் கடமை எங்களுக்கு உள்ளது. குடியுரிமை திட்ட சட்டத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளீர்களா? அதனை மத்திய அரசுதான் எங்களுக்கு கூற வேண்டும். நாட்டிலேயே  பெரிய மாநிலமாக எங்கள் மாநிலம் இச்சட்டத்தை பெரிய அளவில் மேம்படுத்த உள்ளது. உங்கள் மாநில மக்களுக்கு இச்சட்டம் பற்றி சரியானபடி விளக்கிவிட்டீர்களா? நாம் மக்களிடம் ஒவ்வொரு முறையும் ஆதரவு மனநிலையை எதிர்பார்க

எழுத்தாளரை சிறைப்படுத்திய சீனா!

படம்
எழுத்தாளரும், இணைய விமர்சகருமான யாங் ஹெங்ஜூன் என்பவரை. சீன அரசு சிறையில் ஆறு மாதமாக அடைத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று குவாங்ஜூ விமானநிலையத்தில் சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டார். யாங் ஹெங்ஜூன் தன் குடும்பத்துடன் ஷாங்காய் செல்லும் முயற்சியில் அங்கு இருந்தார். அமெரிக்காவில் பணியாற்றிய யாங், நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலையில் வருகைதரும் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் சீனாவுக்கு அடிக்கடி வந்து செல்வதை தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தாக உளவுத்துறை சந்தேகப்பட்டது. மேலும் யாங் கைது செய்யப்படுவது முதல்முறை கிடையாது. 2011 ஆம் ஆண்டு கூட சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விசாரிக்கப்படும்போது அவரின் நடவடிக்கைகளை சொல்லுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் குடிமகனாக யாங் இருந்து வருகிறார். 1980 களில் சீனா வெளியுறவுத்துறையில் பணியாற்றியுள்ளார். ஆனாலும் கூட ஆஸ்திரேலியா அரசு கைதுக்கு கண்டனம் தெரிவித்து உதவிக்கு வரவில்லை. இவரின் கைது குறித்து அரசியல் எழுத்தாளர் கிரிஸ் உஹிமன் போன்றவர்தான் இணையத்தில் இப்பிரச்னை