இடுகைகள்

பிணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !

படம்
  பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள்  தி லிஸ்டனர் சீன டிவி தொடர்  34 எபிசோடுகள்  சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது.  பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவருக்கு வளர்ப்பு தந்தை பே

ஆதரவற்றோரின் உடல்களை கௌரவமாக அடக்கம் செய்யும் சமூக சேவகர் - உறவுகள் - காலித் முகமது

படம்
  ஆதரவற்றோருக்கு உறவினர் வாழ்க்கையில் பிறப்பு எப்படியோ, இறப்பும் அப்படித்தான். ஆனால் இறப்பு என்பது நிறைய மனிதர்கப் பயப்படுத்துகிறது. பிறப்பில் உள்ள ஆரவார கூச்சல் இறப்பில் ஏற்படுவதில்லை. ஒரு விதமான சுமையான மௌனம் அனைவரின் மனதிலும் உருவாகிறது.   இறந்தவர்களுக்கு உறவினர்கள் பலம். ஏராளமான உறவினர்கள் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல்களை எளிதாக தகனம் செய்துவிட முடியும். ஆனால் ஆதரவற்றோருக்கு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு   இறப்பு மிகவும் அவலமாகவே உள்ளது. இறந்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படபோவதில்லை. ஆனாலும் இறந்த உடல்களை முறையாக எடுத்ததுச்சென்று குறிப்பிட்ட இடத்தில் எரிப்பது, அல்லது புதைப்பது சிறந்தது.   இந்த சமூகப்பணியை 2017ஆம் ஆண்டு தொடங்கி   சென்னையைச் சேர்ந்த காலித் முகமது செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளில் காலித் முகமது தனது தொண்டு நிறுவனம் மூலம் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிணங்களை கௌரவமான முறையில் தகனம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக உடல்கள் வந்திருக்கின்றன. காலித் முகமது முதலில் தனியாக இப்பணியைச் செய்தாலும் இப்போது, ஐநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். ச

குற்றவுணர்ச்சியால் கொலைகளை ஒப்புக்கொண்டவர் - எட்வர்ட்ஸ்

படம்
  எட்வர்ட்ஸ், மேக் ரே 1919ஆம் ஆண்டு அமெரிக்காவின் அர்கான்சாவில் பிறந்தவர். 1941ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இடம்பெயர்ந்தார். கனரக வாகனங்களை இயக்கும் தொழிலாளி. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கிய சாலைப் பணிகளை செய்த தொழிலாளர்களில் இவரும் ஒருவர். திருமணமாகி இரு குழந்தைகள் உண்டு. எட்வர்டுக்கு பதினாறு ஆண்டுகள் குற்ற வரலாறு உண்டு.இதை உலகம் பின்னாளில்தான் அறிந்தது.   22 உடல்களைக் கண்டெடுத்த காவல்துறையிடம் ‘’நான் செய்த கொலைகள் ஆறு மட்டும்தான்’’ என சாதித்தவர். நீதிபதியிடம் மின்சார நாற்காலியில் அமர வைக்கவேண்டும்   என்று கோரினார். கேட்டதை கொடுப்பதற்காக நீதிமன்றம் உள்ளது? சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, எட்வர்ட்ஸ் தற்கொலை செய்துகொண்டார். 1970ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புறநகரப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அதில் கொள்ளைக்காரர்கள் கொள்ளைப் பொருட்களோடு இரு சிறுமிகளையும் கடத்திக்கொண்டு வந்தனர். அதில் இரு சிறுமிகள், தங்களை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்தனர். ஆனால், ஒரு சிறுமியைக் காணவில்லை. அங்குதான் எட்வர்ட் வருகிறார். காவல்நிலையத்திற்கு வந்த எட்வர்ட், தான்தான் அந்த இன்னொரு சிற

நீதிபதியிடம் பிணத்தின் இடதுகாலை ஸ்னாக்ஸாக சாப்பிடக் கேட்ட குற்றவாளி

படம்
  மனித இறைச்சியை உண்பது என்பது டெலிகிராம், டெய்லி புஷ்பம் நாளிதழ்களில் கலோக்கியலாக எழுதப்படுவதாக் பரபரப்பாகிறது. ஆனால் இதெல்லாம் வரலாற்றுக்கு புதிதல்ல. பல்வேறு மக்களின்   இனக்குழுக்களில் கன்னிபாலிசம் எனும் மனித இறைச்சி உண்ணும் பழக்கம் உண்டு. தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரை பாலியல் ரீதியாக, செக்ஸ் ரீதியாக தீவிரம் கொண்டவர்களுக்கு மனித இறைச்சி உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை குற்றம் சார்ந்த செய்திகளில் எளிதில் பார்க்கலாம்.   மெக்ஸிகோ நாட்டில், ஆஸ்டெக் இனக்குழுவினர் பதினைந்தாயிரம் மக்களுக்கும் மேல் பலியிட்டு, அதை உணவாக உண்டிருக்கிறார்கள். பேரரசர் மாக்டெஸூம்பா தான் தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்ட சிறுவர்களைக் கொன்று உணவாக்கி சாப்பிட்டிருக்கிறார்.அதை விருந்தாக படைத்திருக்கிறார். இப்படி இறந்தவர்களை தியாகிகளாக அந்த மக்கள் கருதினர். சங்க காலத்தில் கூட போரில் வெற்றி பெறுவதற்காக கழுத்தை அறுத்து கொன்று கொல்வதை உறுதிமொழியாக ஏற்கும் வீரர்கள்   தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றனர். மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்டில் கூட தலைவருக்காக வீரமரணம் என ஒரு கூட்டம் நாயகனை கொல்வதற்காக வரும். த

பெண்களைக் கொன்று தோட்டத்திலும், வீட்டிலும் புதைத்து வைத்த கொலைகாரர்!

படம்
  கிறிஸ்டி - ஜான் ரெஜினால்டு ஹாலிடே 1898ஆம் ஆண்டு யார்க்‌ஷையரில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே பெற்றோரின் அன்பு கிடைக்காதவர். வீட்டில் பெற்றோரால் தண்டனை மட்டுமே அளிக்கப்பட்டவர். இதனால் அடிக்கடி குற்றங்கள் செய்து சிறை சென்று வர தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போது, போலீஸ்துறையில் கிளர்க் ஆவதுதான் கனவு. ஆனால், அங்கு செய்த திருட்டு காரணமாக பள்ளியை விட்டு விலக்கப்பட்டார். பிறகு அப்பாவின் கார்பெட் தொழிற்சாலையில் வேலைசெய்தார். ஆனால் அங்கும் திருட்டை தொடர்ந்த காரணத்தால், வீட்டை விட்டே அடித்து விரட்டப்பட்டார். பிறகு ராணுவத்தில் சேர்ந்தவர், முதல் உலகப்போரில் பங்கேற்று காயம்பட்டு   ஐந்து மாதங்கள் கண் பார்வையை இழந்திருந்தார். பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு சரியாக வரவில்லை. 1920ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பிறகு ஒரு விபத்தில் சிக்கி தலையில் கடுமையாக அடிபட்டது. தற்காலிக பணியாக அஞ்சலகத்தில் வேலை செய்தார். அங்கும் மனிதர் சும்மாயிருக்கவில்லை. ஏராளமான பணவிடைகளை திருடினார். இதற்காக குற்றம்சாட்டி புகார் கொடுக்கப்பட, ஏழு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.ஜானின்   வாழ்க்கை முழுக்க துக்க

தனிமைத் துயரைப் போக்கும் பிணங்கள் - ஜெப்ரி டாமர்

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெப்ரி டாமர் பெயரை குற்ற உலக வரலாறு எப்போதும் மறந்திருக்காது. இவரது பெயரில் ஓடிடியில் தொடரைக் கூட வெளியிட்டு வருகிறார்கள்.   1991ஆம் ஆண்டில் பதினேழு பேர்களை வெட்டி கொலை செய்திருந்தார். இவர் கொலை செய்ய திட்டமிட்டவர்களில் ஒருவர் மட்டும்   தப்பிப் போய் காவல்துறைக்கு தகவல் கொடுத்து கொலைத் திருவிழாவை தடுத்துவிட்டார். இல்லையென்றால் கொலைகள் ஒருவழியாக ரவுண்ட் ஃபிகராக வந்திருக்கும். கொலை செய்தவர்களின் உடல்களை, வெட்டியெடுத்த உடல் பாகங்களை தடய அறிவியல் துறையை விட தெளிவாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தார் டாமர். அதெல்லாம் காவல்துறைக்கு அவரது குற்றத்தைப் புரிந்துகொள்ள உதவின. குளிர்பதனப் பெட்டியில் குடல், குண்டாமணி, இதயம், நுரையீரல் என அனைத்தையும் பங்கு பாகம் பிரித்து வைத்திருந்தார். உடல்களை கரைக்க, பதப்படுத்தவென பேரல் நிறைய அமிலங்களும் இருந்தன.   காவல்துறை சேகரித்தது பதினொரு ஆண்களின் உடல் பாகங்களைத்தான். அதற்கும் மேல் ஆறு பேர் உண்டு என கூடுதல் தந்து உதவினார் டாமர். பின்னே இதெல்லாம் சாதனைதானே? பதினெட்டு வயதில் ஸ்டீவ் ஹிக்ஸ் என்பவரைக் கொலை செய்து ரத்த ருசி கண்டார்.

பிணங்களோடு வாழ்வதே இன்பம் - நீல்சனின் வாழ்க்கை முறை

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 ஜெஃப்ரி டாமர், நீல்சன் ஆகிய இருவரும் அமைதியாக இருக்கும் நபர்கள்தான். ஆனால் செய்த கொலைகள் எல்லாமே பீதியூட்டும் ரகத்தைச் சேர்ந்தவை. டாமரைப் பொறுத்தவரை உடலுறவில் ஈடுபடவென தனி ஜோம்பி போன்ற உடல் தேவைப்பட்டது. அதை உருவாக்க முடியும் என நம்பினார். நீல்சனைப் பொறுத்தவரை தன் ஆயுளுக்கும் தன்னை விட்டு நீங்காத ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். இவர்கள் மட்டுமல்ல கொலைகளை செய்யும் பலரும் மக்களை உயிருள்ளவர்களாக பார்க்கவில்லை. அவர்கள், பொருட்களை எப்படி தேவைக்கு எடுத்து பயன்படுத்துகிறோம். அதுபோல நினைத்து பயன்படுத்தினார்கள். நீல்சன் தனக்கு தேவையான இரைகளை   பப்களில் கண்டுபிடித்தார்.   இவருக்கு பிறரை தனக்கு வேண்டிய விஷயங்களைச் செய்யச் சொல்லி கேட்பது அவமானமாக இருந்தது. எனவே தன்னைத் தானே இறந்துபோனது போல மாற்றிக் கொண்டு   கண்ணாடி முன்னே சரி பார்த்துக்கொள்வார். ஆனால் இதெல்லாம் கூட அவருக்கு மனதில் நினைத்த மகிழ்ச்சியைத் தரவில்லை. 78களில் நீல்சன்,   பப் ஒன்றுக்குச் சென்றார். அங்குள்ளவரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் சில பீர்களை குடித்தார்கள். என்னதா

குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம், கொலை செஞ்சிருக்க கூடாது! - முப்பிடாதி

படம்
எனக்கு முதன்முதலில் கிணத்துல இருந்து எடுத்த பிணம் பத்தி ஞாபகம் இல்லை. ஆனால் மறக்கமுடியாத சம்பவம் ஒண்ணு இருக்கு. திருமணமாகாத பொண்ணு தனக்கு பொறந்த குழந்தை கிணத்துக்குள்ள வீசிட்டு போயிருச்சி. அந்த குழந்தை பொறந்து ஒரு நாள்தான் ஆயிருக்கும். கிணத்தில் நாற்பது அடிக்கு கீழே இருந்து. அதை கையில் எடுத்துட்டு வந்தேன். துணியில வெச்சு வெளியே கொண்டு வந்தாங்க. அந்த குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம். கிணத்தில் வீசிக் கொன்னது சங்கடமாக இருந்தது என்றார் முப்பிடாதி. தென்காசி வட்டாரத்தில் யாராவது நீர்நிலையில் இறந்துபோனால் கூப்பிடு முப்பிடாதியை என்றுதான் சொல்லுவார்கள். அந்தளவு பிரபலம். பிணங்களை மூச்சு தம் கட்டி கீழேயிருந்தே மேலே கொண்டு வந்து விடுகிறார். இப்போது 83 வயதாகும் மனிதர். பிணங்களை மீட்பதை 20 வயதிலிருந்து செய்து வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண், ஒரு பெண். இவர்கள் யாருக்குமே அப்பா பிணத்தை தூக்குவது பிடிக்கவில்லை. ஆனால் முப்பிடாதி காவல்துறையினர் கூப்பிட்டால் உடனே அந்த குரலுக்கு செவிசாய்த்து தனது பணியை செய்து தருகிறார். போலீசாரும் இவருக்கு இப்போதுதான் முதியோர் பெ

இறந்துபோன பிணங்கள் வெடிக்குமா?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ!? பிணங்கள் வெடிப்பது சாத்தியமா? இறந்துபோனவரின் உடலில் ஏதாவது பேஸ்மேக்கர், அல்லது வேறு பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தால் அப்படி வெடிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி உடலை எரிக்கும்போது நீர்ச்சத்து குறைந்து தசைகள் இறுக்கமாகின்றன. அதனால் எழுந்து உட்கார வாய்ப்புகள் அதிகம். பிணத்தை தகனம் செய்பவர்கள் ராஸ்கோல் என தடியாலேயே நெஞ்சில் ஒரு போடு போட்டு அடக்குவார்கள். பிணம் படுத்துவிடும். மற்றபடி உடலிலுள்ள வாயுக்கள் காரணமாக உடல் வெடிக்கும் என்பது அரிதாகவே நடக்கம். அந்தளவு அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் கிடையாது.  உடல் அழுகிப்போகும் நிலையை பதப்படுத்தும் செயல் மட்டுப்படுத்துகிறது. இதனால் உடலிலுள்ள நுண்ணுயிரிகள் இறந்துபோன செல்களை தின்னும் செயல் தடைபடுகிறது. தசைகள் இறுக்கமடைந்தாலும் உடல் முழுக்க அழுகிப்போவதை தள்ளிப்போடலாம். அழுகும் உடலிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா ஆகிய வாயுக்கள் வெளியே வருகின்றன.  ஐஸால் படகு செய்து பயணிக்க முடியுமா? கேட்க நன்றாக இருந்தாலும் சாத்தியம் குறைவு. கடல் வெப்பநிலை அதிகரித்தால் ஐஸ் படகில் அல்லது கப்பலில் பயணிக்கும் பயணிகளின் கதி என்ன? இங்கிலாந்

பிணத்துடன் உறவுகொள்வதும், உடலை துண்டாக வெட்டுவதும் எதற்காக?

படம்
பிணத்துடன் உடலுறவு நான் அவளது பிராவையும் பேண்டீசையும் அகற்றி அவளுடன் உறவுகொண்டேன். எனது வாழ்க்கையில் பிணத்துடன் உறவுகொண்ட இந்த நிகழ்ச்சி முக்கியமானது என்று சீரியல் கொலைகாரர் ஹென்றி லூகாஸ் கூறியிருக்கிறார்.  இது ஒருவகையில் உடலை அவமானப்படுத்துவது என தியரியாக சொல்லலாம். இறந்த உடலை உடனே புதைத்து அல்லது எரித்துவிடுவது என்பதே மரபு. அப்படியல்லாமல் அதனை தலையை வெட்டுவது, உடல் உறுப்புகளை வெட்டுவது, நிர்வாணப்படுத்தி கழுகுகளுக்கு இரையாக்குவது என்பது குரூரமான புத்திக்கு உதாரணமாக கூறலாம்.  சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை பிணங்களுடன் உறவு கொள்வது என்பது ஒருவகைப் பிரிவினர் மட்டுமே. இவர்கள் ஒருவரை சித்திரவதை செய்து கொல்வதை உடலுறவுக்கு முன்னர் ஆண், பெண் இருவரும் செய்யும் முன்விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றனர். மற்றொரு காரணம், இறந்தவர்கள் எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். எனவே, விரும்பியதை செய்யலாம். இதனால்தான் இறந்து உடல் நாறாதவர்களிடம் சீரியல் கொலைகார ர்கள் உடலுறவு கொள்கிறார்கள். சிலர் செத்து நாறிய உடலை எடுத்து பாதுகாத்து வேண்டியபோது உறவு கொள்வார்கள். எப்படி ப்ரோ சாத்தியம் என கேட்காதீர்கள். கனவை நினைவாக்க

அனாதைப் பிணத்தை வைத்து ஐஐடி மாணவர் ஆடும் பரமபத ஆட்டம்! - ஐஐடி கிருஷ்ணமூர்த்தி 2020

படம்
        ஐஐடி கிருஷ்ணமூர்த்தி   தனது சித்தப்பா காணவில்லை என கிருஷ்ணமூர்த்தி மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து நாளிதழில் விளம்பரம் கொடுக்கிறார் . அதைப் பார்த்து உதவி கமிஷனர் வினர் வர்மா , அவனை புகார் கொடுக்க அழைக்கிறார் . அவன் சொல்வது உண்மையா என அவருக்கு சந்தேகம் வருகிறது . உண்மையில் கிருஷ்ணமூர்த்தி யார் ? அவன் உண்மையில் தேடுவது அவன் சித்தப்பாவைத்தானா ? அவனது நோக்கம் என்ன என்பதை உதவி கமிஷனரோடு சேர்ந்து பார்வையாளர்களும் அறிவதுதான் படத்தின் மையப்பகுதி . படத்தில் மசாலா அம்சங்கள் ஏதுமில்லை . மைரோ தோஷி வரும் காட்சிகள் கூட இறுக்கமான கதையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யவேண்டுமே என்பதுதான் .    படத்தின் நாயகன் நல்ல ஓங்குதாங்கான உடல்கட்டோடு இருக்கிறார் . இதனால் படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கலாமே என தோன்றுகிறது . ஆனால் படத்தில் அதற்கான தேவைகள் மிகவும் குறைவு . ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டுமே உள்ளது . பள்ளியொன்றை நடத்தி வரும் ஶ்னிவாசன் என்பவரின் மீது சுமத்தப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டும் அதைப்பற்றிய சர்ச்சைகளும்தான் பின்பாதி கதையை நகர்த்த உதவுகிறது . உண்மையில் ஶ்னிவாசன்

மனிதநேயத்தை ஒட்டியதே கலை! - அனாதைப் பிணங்களை எரிக்கும் திண்ணைநிலாவாசிகள் நாடககுழு தலைவர் பக்ருதீன்

படம்
            அனாதைப் பிணங்களை எரிக்கும் தியேட்டர் குழு ! சென்னையைச் சேர்ந்த திண்ணை நிலாவாசிகள் எனும் நாடக குழு , தங்களது செயல்பாடு தாண்டி சமூகப்பணிக்காக பாராட்டப்பட்டு வருகிறது . இக்குழுவினர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அனாதைப் பிணங்களை பெற்று அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர் . இதனை செய்யும் குழுவின் தலைவர் எம் . பக்ருதீன் . சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கலைஞர்களுக்கு தெரிவது அவசியம் . அதோடு சமூகத்திற்கான பணிகளிலும் அவர்கள் பங்களிக்கவேண்டும் என்று கொள்கையுடையவர் பக்ருதீன் . இங்கு யாரும் அனாதைகள் இல்லை . நாங்கள் எந்த சடங்குகளையும் பின்பற்றவில்லை . உடல்களை முறையாக பெற்று அதனை முறைப்படி அடக்கம் செய்கிறோம் என்றார் பக்ருதீன் . பொதுமுடக்க காலத்திலும் கூட நாறு பிணங்களை அடக்கம் செய்திருக்கிறது இந்த நாடக குழு . கோவில்படியில் செயல்படும் முருகபூபதியின் மணல் மகுடி நாடக குழுவில் நடிப்பு பயிற்சி பெற்றவர் பக்ருதீன் . 2015 ஆம்ஆண்டு சமூக செயல்பாட்டாளர் ஆனந்தி அம்மாளின் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறார் . ஆனந்தி அம்மாள் , அனாதைப் பிணங்களை பெற்று நல்லடக்கம் செய்து வந்தார் .